Tamil Islamic Media ::: PRINT
மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?


உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழக. தாருல் ஃபத்வா பிரிவின் விரிவான ஃபத்வா
.


(தமிழில்: மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.,)
.


கேள்வி.
நமது (எகிப்து) பேச்சாளர்களில் சிலர் மீலாது விழா, மீலாது ஊர்வலம், திக்ரு ஹல்கா போன்றவை ஙைரு மஷ்ரூஃ (அல்லாஹ் – ரசூல் இது பற்றி கூறாதவை ) என்று வாதிடுகின்றனர். இது குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன?
.
பதில்:
நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் பிறந்ததை கொண்டாடுவதை அமல்களில் சிறப்பானதாகவும், வணக்கங்களில் மேன்மையானதாகவும் தான் கருதப்படும்.
.
ஏனெனில், அது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் மீதான பிரியம் அவர்களின் பிறப்பினால் உருவான சந்தோஷம் என்றே கூறப்படும்.
.


நிச்சயமாக அது ஈமானின் அடிப்டைகளில் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “ உங்களில் ஒருவர் அவரது தந்தை, குழந்தை மற்றும் எல்லோரையும் விட நான் அவரிடம் பிரியமானவராக ஆகும் வரை உண்மை முஃமின் ஆக முடியாது.” (நூல் – முஸ்லிம்)
.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் பிறப்பை விழாவாக கொண்டாடுவது என்பதில் அது மஷ்ரூஃ ( அல்லாஹ் – ரசூல் இது பற்றி கூறியது ) ஆக இருக்க வேண்டும் என்பதில்லை.
.
ஏனெனில், அண்ணலாரின் பிறப்பு அகிலத்தார்களின் மீது அல்லாஹ் புரிந்த மாபெரும் அருளாகும். அருளுக்கு நன்றி செலுத்துவது புகழுக்குரிய செயல். அதனை செய்பவர் பழிக்கப்பட மாட்டார். மாறாக புகழப்படுவார். நன்றி செலுத்தியவராக கருதப்படுவார்.
.

 

இது விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிகாட்டல் நமக்கு இருக்கவே செய்கின்றது. அவர்கள் தமது பிறந்த நாளில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியுள்ளார்கள்.
.
பின்வரும் ஸஹீஹான நபிமொழி இதற்கு ஆதாரம். திங்கட்கிழமை அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதற்கு இவ்வாறு காரணம் சொன்னார்கள். அந்நாளில் தான் நான் பிறந்தேன். (நூல்: முஸ்லிம்)
.
தாம் அந்நாளில் பிறந்ததற்காக அன்று நோன்பு பிடித்து இறைவனின் அருளுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் நன்றி செலுத்தினார்கள் எனில், அவர்களின் பிறப்புக்கு முஸ்லிம் உம்மத் நன்றி செலுத்திட நிச்சயம் தகுதியானவர்களே..
.


முஸ்லிம்கள் அனுசரிக்கும் மீலாது விழாக்களின் நோக்கம் திக்ரு செய்தல், அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை புகழ்ந்து கவிதை படித்தல், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை பயான் செய்தல், அல்லாஹ்வுக்காக ஏழை, எளிய மக்களுக்கு ஸதகாவாக உணவளித்தல் போன்றவையே.
.


அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் மீதான பிரியம், அவர்கள் இவ்வுலகிற்கு வந்த நாளினால் கிடைக்கும் சந்தோஷம் ஆகியவற்றை வெளிப்படுத்திடவே இந்நற்பணிகள் செய்யப்படுகின்றன.
.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் பிறந்த நாளில் இனிப்பு வழங்குவது ஆகுமான காரியமே. அதனை கூடாது என்று தடுத்திடவோ அல்லது அந்நேரமல்லாத நேரத்தில் மட்டும் இனிப்பு ஹலால் என்று கூறிடவோ ஆதாரம் ஏதுமில்லை.
.
இன்னும் சொல்வதெனில், இதனை உறவினர்களுக்கு கொடுத்தனுப்பும் பொழுது உறவுகள் மலரும், குடும்பத்தார்கள் மகிழ்ச்சியடைவர் எனில் அதனை முஸ்தஹப்பு என்றே கூறலாம். ஸாலிஹான நோக்கமே அதற்கு காரணம்.
.
இதனை ஹராம் என்பதும், தடுப்பதும் ‘தனத்துஃ’ என்று நபிமொழிகளில் கூறப்படும் மார்க்கத்தில் வரம்பு மீறி செயல்படும் பழக்கம். இதனை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
.


மீலாது விழாவை முன்னிட்டு சில இடங்களில் மீலாது ஊர்வலம் நடத்தப்படுகிறது. பேரணியில் மார்க்க சம்மந்தப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட கொடியும் ஏந்திச் செல்லப்படுகிறது. நபி புகழ்பாடும் பைத்துகள், உலக வாழ்க்கையின் மீதான பற்றின்மையை விளக்கும் கவிதைகள் அவற்றில் பாடப்படுகின்றன.
.
அதன் மூலம் மார்க்கத்தின் முக்கிய பணிகளுக்கு பாதிப்பு இல்லை. அத்துடன் மார்க்கம் தடுத்த ஆண் – பெண் இரண்டறக் கலந்தும் அங்கு இல்லையெனில், அதனை செய்வதில் எந்த குற்றமும் இல்லை.
.


அவ்வாறே மீலாது ஊர்வலங்களில் தப் அடித்து மகிழ்வதிலும் குற்றமில்லை தான். ஏனெனில் திருமணங்களில் தப் அடித்திட அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
.
“ திருமணத்தை பிரபலபடுத்துங்கள். அதனை பள்ளிவாசலில் நடத்துங்கள். திருமணத்தில் தப் அடியுங்கள்.” (நூல் : திர்மிதி)
.
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் பிறப்பை தப் அடித்து கொண்டாடி மகிழ்வது திருமணத்தை விட ஏற்றமானதே. எனினும் ஒழுக்கம், கண்ணியம் இவற்றை பேண வேண்டும்.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.