Tamil Islamic Media ::: PRINT
இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!

நமது அருமை நண்பர் திரு.நீலகண்டன் அவர்கள் இங்கிலாந்தின் மசூதிகளில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை தமது பதிவில் இட்டிருக்கிறார்.

அந்த வீடியோக்கள் சுட்டிக் காட்டும் சில உண்மைகள்:

1. அங்கு தொழ வருபவர்களிடையே ஜாதி வேறுபாடு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அண்ணல் அம்பேத்கர் எழுதியிருந்தது போல ஷேக், சைய்யது, மொகல், பதான் எல்லோரும் ஒருவரோடொருவர் இணைந்து நின்று தொழுகிறார்கள்.

2. மசூதிக்கு உள்ளே சென்று தொழ ஒரு பிரிவினருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றோ மற்றவர்கள் வெளியில் நின்று தொழ வேண்டும் என்றோ யாரும் கட்டுப்பாடுகள் போட்டிருப்பதாக தெரியவில்லை.

3. மசூதியில் தொழுபவர்கள் அனைவரும் ஒரே முறையில்தான் தொழுகிறார்கள்.

4. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதிக கட்டணம் கொடுப்பவர்களுக்கு முதல் வரிசையில் இடம் என்பது போன்ற சலுகைகளும் இல்லை.

5. இங்கிலாந்து வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நாடாக இருந்தபோதிலும் இங்கு உள்ள மசூதி ஒன்றில் கருப்பின முஸ்லிம் ஒருவர் சொற்பொழிவு நடத்த முடிகிறது. 'இங்கு சொற்பொழிவு நடத்த எங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது' என்று யாரும் காவல்துறையை அழைக்கவில்லை.

6. இங்கு தொழுகை நடத்தும் இமாம் கையில் தட்டேந்தி வந்திருப்பவர்களிடம் காசு கேட்கவில்லை.

7. மசூதிக்கு வந்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் கை கொடுத்து முகமன் சொல்லிக் கொள்ளலாம். தீண்டத்தகாதவர்கள் என்று யாரும் இங்கு இல்லை.

8. மசூதிக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முக்கியஸ்தர்கள் தாமதமாக வந்தாலும் தொழுகை அவர்களுக்காக காத்திருக்காது.

9. ஆண்களெல்லாம் சட்டையை கழட்டிவிட்டு வர வேண்டிய தேவையில்லை.

10. மிக முக்கியமாக, இஸ்லாத்தை வெறுப்பவர்கள் கூட மசூதி உள்ளே சென்று வீடியோ எடுக்க முடியும் என்ற அளவுக்கு இங்கு ரகசியங்கள் எதுவும் இல்லை!

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.