Tamil Islamic Media ::: PRINT
பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
அபூ உமாமா அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் அல்லாஹ்வுக்காக பிரியம் கொள்கிறாறோ , அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வானோ, அல்லாஹ்வுக்காக கொடுப்பானோ, அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருப்பனோ அவர் பரிபூரண ஈமானை பெற்றுக்கொண்டவராவர்
 
 
விளக்கம்: இந்த ஹதீஸின் மூலம் நாம் பெறும் பாடம் எவ்விதமான செயல்களை நாம் செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல எந்த நோக்கத்தில் செய்கிறோம் என்பது தான் முக்கிய அம்சமாகும். ஆகவே தான் புஹாரியில் முதல் ஹதீஸ் இன்னமல் அஃமாலு பின்நிய்யாத் ( செயல்கள் எண்ணங்களைப்பொறுத்தே அமைகின்றன) இதன் கருத்து கொடுக்காமல் இருப்பது கொண்டு உலகம் நம்மை கெட்டவன் என்று சொல்லலாம் ஆனால் நாம் இறைவனுக்கென்று நாட்டம் கொண்டு (உண்மையான காரணத்தோடு) செயல் பட்டால் அது போற்றுதலுக்குரியதாக ஆகும் . இன்னும் அது போன்ற ஒரு செயலை நாம் செய்து அதற்காக உலகம் பழித்தாலும் நாம் கவலை அடையவேண்டியது இல்லை. (இதன் முழுமையான பொருளை அல்லாஹ்வும்,அவன் தூதரும் தாம் மிக்க அறிந்தவர்கள்)
The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.