Tamil Islamic Media ::: PRINT
மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்

எந்த குடும்பத்தில் அமைதி,ஒழுக்கம்,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பெரியோர்களை மதிக்கும் பண்புகள் இருக்கிறதோ?அந்த குடும்பமே மன மகிழ் குடும்பமாகும்.

 

மேலே கண்ட பண்புகள் இல்லாத குடும்பத்தில் அமைதி இல்லா நிலையும் குழப்பமுமே மிஞ்சியிருக்கும்.

 

நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் என்ற வார்த்தைக்குரிய விசயத்தை இஸ்லாம் எவ்வளவு அழகாக சொல்கிறது பாருங்கள்.  

 

ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால்? முதலில் குடும்பத் தலைவர் ஒழுக்கமுள்ளவராகவும்,5 நேரத்தொழுகையை தொடர்ந்து தொழுது வரக்கூடியவராகவும் இருப்பது அவசியம்.

 

இது தான் ஒவ்வொரு குடும்பத்தலைவரின் முதல் கடமை என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.

 

இதை பற்றி திருமறையில் அல்லாஹ்வே சொல்கிறான் கேளுங்கள்,

 

நபியே,உமது குடும்பத்தினரை தொழும்படி ஏவுவீராக!நீரும் அதில் நிலைத்திருப்பீராக!நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை.உமக்கு வேண்டிய எல்லாவற்றையும் நாமே கொடுக்கிறோம்.நல்ல முடிவு பயபக்தி உள்ளவர்களுக்கே!(அத்தியாயம்- 20,வசனம்- 132).  

 

இந்த வசனம் குடும்பத் தலைவரும் தொழுது,குடும்பத்தினரையும் தொழும்படி ஏவவேண்டும் என வலியுறுத்துகிறது.

 

  ஒரு குடும்பத்தலைவர் மட்டும் சரியாக இருந்தால் போதாது!அவர்தம் மனைவி,மக்களும் தொழுகை விசயத்தில் பேணுதலாக இருக்கவேண்டும்.  

 

தாம் எதிர்பார்ப்பதை போல தம் மனைவி மக்கள் அமைய வேண்டுமென விரும்பும் ஒவ்வொரு குடும்பத்தலைவரும் இவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டுமென அல்லாஹ் சொல்லித்தருகிறான் பாருங்கள்!

 

மேலும் அவர்கள் எத்தகையோரென்றால்,எங்களுடைய ரப்பே!எங்களுடைய மனைவியர்களிலிருந்தும்,எங்களுடைய சந்ததிகளிலிருந்தும் எங்களின் கண்களுக்கு குளிர்ச்சியை வழங்குவாயாக!இன்னும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன் மாதிரியாக ஆக்குவாயாக!எனக்கூறுவார்கள்.(அத்தியாயம்- 25,வசனம்- 74).  

 

ஒவ்வொரு குடும்பத்தலைவரும் தொடர்ந்து இந்த துஆ வை கேட்பதின் மூலமே மனதிற்கு பிடித்த மனைவி,மக்களாக அல்லாஹ் மாற்றிக் கொடுக்கிறான்.குடும்பத்தலைவராக இருக்கும் நம்மில் எத்தனை பேர் இந்த துஆ வை கேட்டிருப்போம்?அல்லது வாழ்க்கையில் ஒரு முறையாவது நாம் கேட்டிருப்போமா?  

 

பிரார்த்தனை செய்யாத தவறை நம் மீது வைத்துக்கொண்டு மனைவி,மக்கள் சரியில்லை,அதனால் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போய் விட்டது என புலம்புவது எவ்வகையில் நியாயம்?

 

உங்களில் மிகச்சிறந்தவர்கள் அழகான குணமுடையவர்களே!எனஒரு குடும்பத்தலைவரின் நற்குணத்தைப்பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(நூல்-புகாரி,முஸ்லிம்).  

 

அழகிய குணமுடைய மனிதர்களைப் பற்றி அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்,

 

 அவர்கள் எத்தகையோர்களென்றால் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள்,மனிதர்களின் தவறுகளை மன்னிப்பவர்கள்.அல்லாஹ் இவ்வாறு நன்மை செய்கிறவர்களை நேசிக்கிறான்(அத்தியாயம்- 3,வசனம்- 134).

 

ஆம்!தனது மனைவி மக்களின் மீதான கோபங்களை மென்று விழுங்கி அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களின் மீது அன்பு பாராட்டும் நல்ல குடும்பத்தலைவர்களையே அல்லாஹ் பெரிதும் நேசிக்கிறான் என்பதையே மேற்கண்ட வசனம் நமக்கு உணர்த்துகிறது.  

 

ஒரு நல்ல குடும்பத்தலைவருக்குரிய லட்சணத்தைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறியிருப்பதை பாருங்கள்!

 

 முஃமீன்களில்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.