Tamil Islamic Media ::: PRINT
இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்

(2007ஆம் ஆண்டு இம்ரானா விவகாரத்தில் நாடே கொந்தளித்து தேவ்பந்த பத்வாவிற்கு கடுமையான மறுப்பு தெரிவித்த நேரத்தில், மவ்லவி அப்துல் அஜீஜ் பாகவி அவர்களால் எழுதப்பட்ட ஒரு அற்புதமான இந்த கட்டுரை தமிழகத்தில் அது பற்றி ஒரு தெளிவையும், பார்வயையும் கொடுத்து, தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கட்டுரை.
இன்றும் அதே பிரச்சனையை காரணம் காட்டி தான். ஷரியத் நீதிமன்றங்களுக்கு சட்டரீதியான அங்கிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

அந்த கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு)

http://covaiazeez.blogspot.in/2007/12/blog-post.html

நன்றி : மவ்லவி அஜீஜ் பாகவி

 

இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்

இம்ரானா! இந்தப் பெயர் இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு இருபது நாட்கள் உறங்க விடாமல் உலுக்கி எடுத்து விட்டது।

முன்னர் ஒரு சமயம் படித்தது ஞாபகம் வருகிறது। அதிபர் புஷ் கிணற்றில் விழுந்து விட்டார் என்றால் அது செய்தி. விழுந்தவர் உயிருடன் எழுந்து விட்டார் எனில் அது திடுக்கிடும் பரபரப்புச் செய்தி என செய்திக்கும் பரபரப்புச் செய்திக்கும் ஒரு உதாரணம் சொல்லப்பட்டிருந்தது. அந்த உதாரணத்தில் அப்போது ஏதோ ஒரு ஆஸ்திரேலிய பிரதமரின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. நான் இன்றைய தேதியின் சவுகரியத்திற்காக புஷ்ஷின் பெயரை பயன்படுத்தியுள்ளேaன்.

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருபத்திநான்கு மணிநேரமும் பரப்பான செய்திகளை தருவதற்கான செய்திச் சேனல்கள் பல உருவாகிவிட்ட பிறகு எந்த ஒரு செய்தியும் சாதாராணச் செய்தியாக இல்லாமல் எல்லாச் செய்திகளும் BREAKING NEWS ஆகிவிட்டது।

சமீபத்தில் ஸ்டார் நியூஸ் சானல், ஷில்பா ஷெட்டியும் அவரது தங்கையும் பரீப் திரைப்படத்தில் இணைந்து நடித்த பிறகு அவர்களுக்குpடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு ஸ்கூப் வெளியிட்டது। விவரமான தகவலுக்கு இரவு பத்து முப்பதுக்கு 'போல் கோல்' பார்க்கத் தவறாதீர்கள் என்ற விளம்பரம் வேறு. நிலவரம் இப்படி இருக்கையில் இம்ரானா விவகாரம் விசுவரூபம் எடுத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.

ஸர்தாவால் என்பது தில்லியிலிருந்து நூற்று முப்பது கீ।மீ தொலைவில், உத்தரப்பிரதேச மாநிலம் முஸப்பர் நகரக்கு உட்பட்ட ஒரு கிரமமாகும்। அங்கு வசிக்கும் நூர் இலாஹி ஒரு ரிக்ஷா தொழிலாளி। அவருடைய இருபத்து எட்டு வயது மனைவி இம்ரானவை ஐம்பத்து ஒன்பது வயதுடைய மாமனார் அலிமுஹம்மது கற்பழித்து விட்டார் என்பது செய்தி. அது மட்டுமே செய்தியாக இருந்திருந்தால் உள்ளுர் பத்ரிககைளில் சிறு செய்தியாக அன்று மாலைப் பொழுதுக்குள் அது முடிந்து போயிருக்கும். இப்பிரச்சினையை விசாரித்த ஊர்ப் பஞ்சாயத்து யாரும் எதிர்பார்க்காத ஒரு தீர்ப்பை சென்னது. இம்ரானா மாமானாரால் கறபழிக்கப்பட்டது உண்மையானால் அவருக்கும் அலிமுஹம்மதுவின் மகன் நூர் இலாஹிக்கும் இடையே உள்ள திருமண உறவு முறிந்து விடும் என்று பஞ்சாயத்தார் அறிவித்த போது அது மீடியாகளுக்ளுக்கு தீனி போடும் விசயமாகிவிட்டது. அந்த அளவிலே கூட விசயம் நின்று விடவில்லை. தேவ்பந்த தாரூல் உலூம் கல்விக் கூடம் உள்ளுர் பஞ்சாயத்தாரால் சொல்லப்பட்ட சில விசயங்களை நிராகரித்த போதும் திருமண உறவை தொடர முடியாது என்பது சரிதான் என்று தெரிவித்த போது அது BRAKING NEWS ஆகிவிட்டது।

சமீபத்தில் ஸ்டார் நியூஸ் சானல், ஷில்பா ஷெட்டியும் அவரது தங்கையும் பரீப் திரைப்படத்தில்
இணைந்து நடித்த பிறகு அவர்களுக்குpடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு ஸ்கூப்
வெளியிட்டது। விவரமான தகவலுக்கு இரவு பத்து முப்பதுக்கு 'போல் கோல்' பார்க்கத் தவறாதீர்கள் என்ற
விளம்பரம் வேறு. நிலவரம் இப்படி இருக்கையில் இம்ரானா விவகாரம் விசுவரூபம் எடுத்ததில் ஆச்சரியம்
எதுவுமில்லை.

ஸர்தாவால் என்பது தில்லியிலிருந்து நூற்று முப்பது கீ।மீ தொலைவில், உத்தரப்பிரதேச மாநிலம்
முஸப்பர் நகரக்கு உட்பட்ட ஒரு கிரமமாகும்। அங்கு வசிக்கும் நூர் இலாஹி ஒரு ரிக்ஷா தொழிலாளி।
அவருடைய இருபத்து எட்டு வயது மனைவி இம்ரானவை ஐம்பத்து ஒன்பது வயதுடைய மாமனார்
அலிமுஹம்மது கற்பழித்து விட்டார் என்பது செய்தி. அது மட்டுமே செய்தியாக இருந்திருந்தால் உள்ளுர்
பத்ரிககைளில் சிறு செய்தியாக அன்று மாலைப் பொழுதுக்குள் அது முடிந்து போயிருக்கும்.
இப்பிரச்சினையை விசாரித்த ஊர்ப் பஞ்சாயத்து யாரும் எதிர்பார்க்காத ஒரு தீர்ப்பை சென்னது. இம்ரானா
மாமானாரால் கறபழிக்கப்பட்டது உண்மையானால் அவருக்கும் அலிமுஹம்மதுவின் மகன் நூர்
இலாஹிக்கும் இடையே உள்ள திருமண உறவு முறிந்து விடும் என்று பஞ்சாயத்தார் அறிவித்த போது
அது மீடியாகளுக்ளுக்கு தீனி போடும் விசயமாகிவிட்டது. அந்த அளவிலே கூட விசயம் நின்று
விடவில்லை. தேவ்பந்த தாரூல் உலூம் கல்விக் கூடம் உள்ளுர் பஞ்சாயத்தாரால் சொல்லப்பட்ட சில
விசயங்களை நிராகரித்த போதும் திருமண உறவை தொடர முடியாது என்பது சரிதான் என்று தெரிவித்த
போது அது BRAKING NEWS ஆகிவிட்டது।

அதன் பிறகு இந்தியச் செய்தி ஊடகங்களும் மகளிர் அமைப்புக்களும் சும்ம இருந்த வாய்க்கு அவல்
கிடைத்தது போல் சவைத்து மென்று துப்பிவிட்டன. எரிகிற வீட்டில் கிடைப்பது லாபம் என்கிற கதையாக
அரசியல் கட்சிகள் சில ஆதாயம் பார்க்கத் துடித்தன. முஸ்லிம் சமூகத்தின் மனே திடத்தையும்
மார்க்கப்பற்றையும் அசைத்துப் பார்க்க முயன்ற அவர்களது முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை.
சந்தடி சாக்கில் தங்களது சாகசக் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்க முயன்ற முஸ்லிம் 'நக்ஸல்' களின்
திட்டமும் வெற்றி பெறவில்லை.
இப்போது இந்த விசயம், இம்ரானா கற்பழிக்கப்பட்ட பிரச்சினை, ஷரீஅத்தின் தீர்ப்பு, மீடியாக்கள் அதை
கையாண்ட விதம், முஸ்லிம்களின் ரியாக்ஷன் என்ற நாற்கர பிரச்சினையாக உருவெடுத்து விட்டது.

இதில் இம்ரானா கற்பழிக்கப்பட்டது ஒரு குற்றவியல் வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து
கொண்டிருக்கிறது. பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள் குறித்த வழக்குகளிலும் வரதட்சணை
வழக்குகளிலும் காவல் துறையினர் அதிக கண்காணிப்பு செலத்துகின்றனர் என்பதால் மாமனார் அலி
முஹம்மது உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதிலும் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் ஊண்டு। ஜுன் மூன்றாம் தேதி இரவு கற்பழிப்பு நடந்ததாக
சொல்லப்படுகிறது। இம்ரானாவே அவாரது கணவர் நூர் இலாஹியோ காவல் நிலையத்தில் எந்த
புகாரையும் தரவில்லை. ஆயினும் பத்ரிகை தகவலின் அடிப்படையில் இம்ரானாவிடம் ஒரு
ஸ்டேட்மென்ட் பெற்றுக் கொண்ட காவல் துறை ஜுன் ப்தினாராம் தேதி மாமனார் அலி முஹம்மதுவை
கைது செய்துள்ளது। அலிமுஹம்மது கைது செய்யப்பட்டு நான்கு நாட்கள் கழித்து ஜுன் 20 ம் தேதி தான்
இம்ரானா சார்பில் கம்ப்ளயின்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஜுன் இருபத்தி மூன்றாம் தேதி இம்ரானா முஸ்லிம் பொலிட்டிக்கல் கவன்சில் உறுப்பினர்களுக்கு அளித்த
வீடியோ பேட்டியில் தான், தவறிழைத்து விட்டதாக(ஜியததீ ஹுயீ ஹே!) ஒப்புக் கொண்டுள்ளார்।
தேவ்பந்த் பத்வா ஜுன் இருபத்தி ஐந்தாம் தேதி வெளிவந்துள்ளது।

இது விசயத்ததை ஆய்வு செய்ய, பல முஸ்லிம் அமைப்புக்களும் நேரடியாக சர்தாவால் மற்றும் இம்ரானா
தற்போது வசித்து வரும்; குக்ரா கிராமங்களுக்குச் சென்று வந்துள்ளனர். டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி
தலைமையிலான முஸ்லிம் பொலிடிக்கல் கவுன்சில் சார்பிலான ஒரு குழு, காஸிம் ரஸுல் இல்யாஸ்
தலைமையில் முஸ்லிம் பர்சனல் லா போர்டு சார்பிலான ஒரு குழு, மௌலானா நுஸ்ரத் அலி
தலைமையிலான ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த அமைப்பின் சார்பாக ஒரு குழு, மௌலானா குல்ஸார்
மஜாஹிரி தலைமையில் மில்லி கவுன்ஸிலின் சார்பாக ஒரு குழு மற்றும் பல் வேறு முஸ்லிம்
குழக்களும் தனிமனிதர்கள் சிலரும் இது விசயத்தை நேரில் ஆய்வு செய்த பிறகு அத்தனை பேரும் இது
ஒரு பொய்க் குற்றச் சாட்டு என ஒரே மாதிரி கருத்து வெளியிட்டுள்ளனர்.சொத்துத் தகறாரில் மாமனாரை
மாட்டவைக்க மருமகள் திட்டமிட்டதில் விசயம் அவருக்கே விபரீதமாகிவிட்டது என உள்ளூர் வாசிகள்
கூறுவதை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். கற்பழிப்பை உறுதி செய்ய முடியவில்லை என
மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது என்பதையும் அவர்கள் சான்றாக கூறுகின்றனர்.
ஆனாலும் எத்தகைய அச்சுறுத்தல் அல்லது மறைமுக நிர்பந்தங்ளாலும் ஒரு பெண்ணுக்கு நீதி
மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதே முஸ்லிம்கள் அனைவருடைய அவாவும் துஆவுமாகும்। எனவே எந்த
ஒரு முஸ்லிம் அமைப்பும் காவல் துறையின் விசாரணையில் குறிக்கிட வில்லை। கற்பழிப்பு சம்பவம்
உண்மையாக இருக்கும் எனில் மாமனார் அலிமுஹம்மதுமுவுக்கு அதிகபட்ச தண்டனை
வழங்கப்படவேண்டும் என்பதே முஸ்லிம்கள் அனைவருடைய கோரிக்கையுமாகும். ஆதே நேரத்தில் நீதி
விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும். அத்தோடு நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது காவல்
துறையின் பூர்வாங்க விசாரண அறிக்கை வரும் வரை இது ஒரு வழக்காக மட்டுமே பார்க்கப்பட
வேண்டும். அது வரை அனைவரும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காப்பதே நியாயம்.

ஆனால் ஊடகங்களை யார் கட்டுப்படுத்த முடியும்? எந்த நியதிக்கும் அப்பாற்பட்டு, பரபரப்பை பரப்புவது
என்ற அமெரிக்க மனோபாவத்தை மட்டுமே செயல்திட்டமாக கொண்ட ஊடகங்களுக்கு இம்ரானா
விவகாரம் மாமனார் அலிமுஹம்மதுவின் கைது விவகாரத்தோடு முடித்து கொள்ள விருப்பமில்லை.
ஷரீஅத்தின் தீர்ப்பை விமர்ச்சிக்கிற சாக்கில் முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்புக்குள் ஊடுறுவ 'எல்லை
தாண்டி' முயற்சி செய்தன.

இம்ரானா விசயத்தில் சொல்லப்பட்ட ஷரீஅத்தின் தீர்ப்பு விவாதிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அது
விவகாரமாக்கப்பட்டது. அத்தீர்ப்பு விவாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு சிக்கலான பிரச்சினைக்கும்
எவ்வளவு துல்லியமானதொரு தீர்ப்பை முஸ்லிம் சமூகம் பன்னூறு ஆண்டுகளாக தன்னுள்
வைத்திருக்கிறது என்ற பெருமை புலப்பட்டிருக்கும். அது வெளிப்படாமல் போனதிலும் விசயம்
சர்ச்சையானதிலும் சில முந்திரிக் கொட்டை முஸ்லிம்களின் மூட மேதாவித்தனமும் காரணமாகிவிட்டது.
இது விசயம் தொலைக்காட்சியில் செய்தியானவுடனேயே ஒரு பெண்மணி பதறிய படி என்னங்க.. இது..
இப்படிச் சொல்லியிருக்கிறாங்க.. என்று கேட்டுக் கொண்டு வந்தார்.நீங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக
அமர்ந்தால் இது என்ன என்று பேசலாம் என்று சொன்னேன்.

நடந்தது என்ன என்ற முழுவிவரமும் எனக்கு தெரியாது. ஆனால் மாமனாரால் கற்பழிக்கப்பட்ட பெண்
விசயத்தில் அவர் கற்பழித்தவருடைய மகனுடன் தொடர்ந்து வாழ முடியாது என்ற சட்டம் பழைய சட்டம்
தான். இதில் புதிதாக எதுவும் இல்லை என்று சொன்னேன். திருக்குர்ஆனின் வசனத்திற்கு ஹனபீ சட்ட
அறிஞர்கள் சொல்லும் வாதத்தை விளக்கி அதிலுள்ள நியாயத்தை தெளிவு படுத்தினேன். கடைசியாக
இப்படி முடித்தேன் . மாமனார் கற்பழித்த விவகாரத்தை நாம்மில் யாரும் யாரும் சந்தோஷத்தோடு
வரவேற்கமாட்டார்கள். இப்படி ஒரு பெண் பாதிக்கப்பட்டதற்காக அதிகம் வருத்தப்படவே செய்வோம்.
ஆனாலும் இது ஒரு விபத்து. ஒரு விபத்து நடப்பதை நாம் விரும்பாவிட்டாலும் அதனால் ஏற்படும்
விளைவை நாம் தடுக்க முடியாது அல்லவா? அந்த விளைவை நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக
வேண்டும். அந்த அடிப்படையில் இந்த தீர்ப்பையும் நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். பாதிக்கப்பட்ட
பெண்ணை ஆதரவுடன் அரவணைக்க வேண்டிய கடமை சமுதாயத்தைச் சேர்ந்தது। மாமனார்
கற்பழித்தால் அந்த பெண் கர்ப்பம் தறிக்க மாட்டாளா? கற்பழிப்பினால் ஒரு பெண் கருத்தறித்து விட்டால்
அந்த கருவை கலைத்துவிடுவதற்கு சட்ட அனுமதி உண்டு என்றாலும் அப்படி கர்ப்பம் தறித்து விட்டால்
அந்த கர்ப்பத்தை கலைத்து விடும்படி நீதிமன்றம் சொல்லுமா? அப்படி ஒரு கரு உண்டாகி விட்டால்
அந்தக் கருவுக்கும் கணவனுக்கும் உள்ள உறவு என்ன? என்று கேட்டேன். அந்தப் பெண்மணி யோசிக்க
ஆரம்பித்தார். இம்ரானா விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம் கற்பழிப்பு நடந்து எட்டு நாள் கழித்து
விசயம் வெளியே தெரிந்திருக்கிறது। இதுவே எட்டு மாதம் கழித்து கரு வளர்ந்த நிலையில் குற்றம்
வெளியே தெரிந்திருந்தால் அப்போது கருவை கலைக்கும் வாய்ப்புக் கூட இருக்காதே அப்போது என்ன
செய்வது? ஒரு பெண் தந்தைக்கு குழந்தை பெற்ற பிறகு மகனுடன் சேர்ந்து வாழ்வது எப்படி? என்று
தொடர்ந்து கேட்டேன். விசயத்தின் விபரீதம் புரியத் தொடங்கிய போது அந்தப் பெண்மணி கடைசியாக
சொன்னது என்ன தெரியுமா? அது.. சரிதான்.. தந்தையோடு தொடர்பு ஏற்பட்ட பிறகு மகனுடன் சேர்ந்து
வாழ்வது சிரமமான விசயம் தான். இஸ்லாம் எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைக்கும் நுட்பமாக தீர்ப்பு
சொல்லியிருக்கிறது பார்த்தீர்களா? என்று என்னிடமே சொல்லி விட்டு எழுந்து சென்றார்.

இம்ரானா விசயத்தில் சர்சையில் இழுக்கப்பட்ட தாருல் ஊலூம் தேவ்பந்த் அரபுக்கல்லூரி சுமார் நூற்று
ஐம்பது ஆண்டுகள் பழமையான, உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிற ஒரு நிறுவனமாகும்।
இந்தியாவின் கடைசி சுதேசி அரசரான பகதூர் ஷா ஜாபர் இறந்த பிறகு ஏற்பட்ட ஒரு இருள் மயமான
சூழ்நிலையில் தேசத்திற்கு வெளிச்சமூட்ட திட்டமிட்ட பெருந்தலைவர்களின் முதல் முயற்சியாக தாருல்
ஊலூம் அரபுக்கல்லூரி 1866ம் ஆண்டு மே முப்பதாம் தேதி தில்லியிலிருந்து சுமார் நூற்றி நாற்பத்தைந்து
கீமீ தொலைவிலுள்ள தேவ்பந்த் என்ற இடத்தில் துவங்கப்பட்டது. இலவசக் கல்வி முறையில்
கட்டுப்பாடான வாழ்கை அடிப்படையில் உயர்ந்த சித்தனைத்திறனுடன் எளிய வாழ்க்ககை முறை கொண்ட
கல்வியாளர்களை உருவாக்குவதை இலட்சியமாக கொண்டு அந்நிறுவனம் தொடங்கப்பட்டது। அது
தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை முஸ்லிம் உலகிற்கு மதிப்பிட முடியாத சேவையை
செய்துள்ளது. சுமார் இருக்த்தையாயிரம் பட்டதரிகள் அங்கிருந்து வெளியேறி உலகம் முழவதிலும்
சமயப்பணியும் சமுதாயப்பணியும் செய்து வருகின்றனர். அங்கிருந்து வெளியேறியவர்களில்
பெரும்பாலோரிடம் தீர்க்கமான சிந்தணை அர்ப்பணிப்புணர்வுடனான சமயப்பணி எளிய வாழ்வு ஆகிய
குணங்கள் மிலிர்வதை இன்றும் காணலாம். தேவ்பந்தின் அரும் பெரும் சேவையை சுதந்திர இந்தியாவின்
முதல் கல்வியமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத், முன்னாள ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர
பிரசாத், காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாஹ், முன்னாள் எகிப்து அதிபர் அன்வர் சாதாத்,முன்னாள்
ஆப்கான் மன்னர் ஜாகிர் ஷேக் போன்ற பெருமக்கள் பலரும் பெரிதும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அதே
போல இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தேவ்பந்தின் பங்களிப்பு சரித்திரத்தின் சாதனைப் பக்கங்களை
அலங்கரிக்கும் செய்திகளாகும். சர்வதேச அளவில் பாரம்பரிய மதிப்பீட்டில் அல் அஸ்ஹர் பல்கலை
கழகத்திற்கு அடுத்த இடம் தேவ்பந்த் அரபுக்கல்லூரிக்கு உண்டு. தேவ்பந்திலுள்ள பதினைந்துக்கும்
மேற்பட்ட துறைகளில் தாருல் இப்தா என்கிற மார்க்கத் தீர்ப்பு வழங்குகிற துறை முக்கியமானதாகும்।
அந்தத் துறை 1892 ல் நிறுவப்பட்டது। சுமார் நூற்றி பதினைந்து ஆண்டுகளை கடந்த பழுத்த அனுபவம்
கொண்ட அத் துறை இதுவரை சுமார் ஏழு லட்சம் பத்வாக்களை வெளியிட்டிருப்பதாக தேவ்பந்தின்
இணைய தளம் http://www.darululoom-deoband.com/தெரிவிக்கிறது.உலகின் பல
பாகங்களிலிருந்து வந்து குவியும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காகவே இத்துறையில் தேர்ச்சி பெற்ற
பலர் இதற்காக நியமிக்கப்படடுள்ளனர்.ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கின் மீது அமெரிக்கா தொடுத்துள்ள
தாக்குதல் குறித்தும் கூட கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் முறையாக பதில் அளித்துள்ளனர்.
இம்ரானா விவகாரத்தில் பஞ்சாயத்தின் தீர்ப்பு என்ற பெயரில் ஏதேதோ தேவைற்ற கருத்துக்கள்
பரப்பப்படுவதை கண்ட ராஷ்ட்ரீய சஹாரா என்ற உருது பத்ரிகையின் ஆசிரியர் முஹம்மது அஷ்ரப்
உஸ்மானி என்பவர் தேவ்பந்த்திடத்தில் இது குறித்து மார்க்கச் சட்ட விளக்கம் தறும் படி
கேட்டிருக்கிறார்.அந்தக் கேள்விக்குத்தான் தேவ்பந்தின் சார்பில் மௌலானா ஹபீபர் ரஹ்மான் பதில்
கொடுத்திருக்கிறார்.அந்த பதிலை அங்கு பணியாற்றும் மௌலானா கலீபுர் ரஹ்மான், மௌலானா
ஜபீருத்தீன் ஆகியோர் சரிகண்டு சான்று வழங்கியுள்ளனர்.
பிரச்சினையை விட பிரச்சினைக்கு சொல்லப்பட்ட தீர்வு பெரும் பிரச்சினையாக்கப்பட்டு விட்டது. ஓரு
கட்டத்தில் இம்ரானா விவகாரத்தை விட தாருல் உலூம் தேவ்பந்த் வழங்கிய ஃபத்வாதான் அதிகம்
விவாதிக்கப்பட்டது. தேவ்பந்த அவசரப்பட்டு தீர்ப்பு வழங்கிவிட்;டதாக சிலர் விமர்ச்சித்தினர்.

உண்மையில் தேவ்பந்த அவசரப்படவில்லை। புதிதாக தன் சுய விருப்புப்படி எந்தக் கருத்தையும் அது
வெளியிடவில்லை. தேவ்பந்தின் துணை முதல்வர் மௌலானா உஸ்மான் சாஹிபை பத்ரிகையாளர்கள்
தொடர்பு கொண்ட போது அவர் இதையே தெளிவு படுத்தியிருக்கிறார் ("we do not issue fatwas,
we are only copiers of [old] fatwas".)நாங்கள் புதிதாக எந்த தீர்ப்பையும் வெளியிட
வில்லை. பழைய தீர்ப்பைத்தான் பிரதி எடுத்துக் கொடுத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.இம்ரானா
விசயத்திற்கு உள்ளுர் ஷரீஅத் நீதிமன்றத்தை அணுகுமாறு வழிகாட்டியதாகவே செய்திகள்
தெரிவிக்கின்றன.
உத்தரவிடுகிற அதிகாரம் ஷரீஅத் நீதிமன்றங்களையும் ஜமாத் பஞ்சாயத்துகளையும் சார்ந்த விசயமே
தவிர அது அரபுக்கல்லூரிகளின் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல। சட்ட விளக்கம் தறுவது மட்டுமே
அரபுக்கல்ல}ரிகளின் வேலை. அதையே தேவ்பந்த் செய்துள்ளது. ஃபத்வா என்ற வார்த்தைக்கு மார்க்க சட்ட
விளக்கம் என்றே பொருள் கொள்ள வேண்டும். ஆனால் ஃத்வாவுக்கு உத்திரவு என்று மீடியாக்கள் பொருள்
கொள்வதனால் தான் முல்லாக்கள் எல்லாம் ஏதோ கையில் சாட்டையை வைத்தக் கொண்டு அலைவது
போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

இந்த எதார்த்ததை கூட முஸ்லிம்கள் சிலர் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு தேவ்பந்தை விமர்ச்சித்து
விட்டனர்.அது தான் குட்டையை குழப்பி விவகாரமாக்கி விட்டது. ஆர்எஸ்எஸ்ஸும் பாரதீய ஜனதாவும்
உள்ளுக்குள் எப்படி அடித்துக் கொள்கிறார்கள்? ஆனால் வெளியே யாராவது எப்போதாவது ஒருவரை
ஒருவர் விட்டுக் கொடுத்து மரியாதை குறைவை ஏற்படுத்துகிற படி விமர்ச்சிக்கிறார்களா? இல்லையே
மீடியாக்கள் தங்கள் விசயத்தில் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ள முடியாதபடி எவ்வளவு
தந்திரமாக நடந்து கொள்கின்றனர்? முஸ்லிம்கள் அத்தகைய தந்திரத்தை கையாளத் தேவையில்லை தான்
என்றாலும் ஒரு பாரம்பரிய இஸ்லாமிய நிறுவனம்; ஒரு கருத்தை வெளியிடுகிற போது அதுவும் ஒரு
நியாயத்தோடு தான் பேசுகிறது என்ற குறைந்த பட்ச மரியாதை கூட சில முஸ்லிம்களுக்கு தெரியாமல்
போனதென்ன? தேவ்பந்தின் கருத்தோடு முரண்படுபவர்கள், உள்ளுர் ஷரீஅத் கவுன்ஸிலை அணுகுமாறு
சொன்ன தோடு தேவ்பந்த வாளாவிருந்திருக்கலாம். அல்லது வேறு மத்ஹபுகளில் இதற்கு மாற்றமாகவும்
ஒரு கருத்துண்டு என்பதை கவனத்தில் கொணடிருக்கலாம் என்று மட்டுமே கருத்துத் தெரிவித்திருக்
வேண்டும். அதை விடுத்து சற்றும் உண்மையல்லாத அல்லது தன்னுடைய அடிப்படைகளிலிருந்து பிறழ்ந்த
ஒரு தீர்ப்பை தேவ்பந்த் சொல்லி விட்டது போல உணர்ச்சி வசப்பட்டு தேவ்பந்தின் மீது ஆவேசம்
காட்டியது மீடியாக்கள் விரித்த வலையில் சிக்கி விட்ட அப்பாவி முஸல் 'மான்' களாகவே அவர்களை
அடையாளப்படுத்தியது.

வலைக்குள் சிக்கிய ';மான்' களில முஸ்லிம் லீக் மகளிர் அணித்தலைவி ஃபாத்திமா முஸப்பர், த.மு.மு.க
தலைவர் ஜவாஹிருல்லாஹ், வக்பு போர்டு தலைவி பதர் சயீத் உள்ளிட்டோரும் அடக்கம். இது
விசயத்தில் தங்களது தகுதிக்கும் தரத்தற்கும் மீறிய வார்த்தைகளை அவர்கள் உதிர்த்துள்ளனர். முஸ்லிம்
லீக் தலைவர்களுக்கு வேறு சிலர், 'பெரிய மௌலானா' ஆகிவிட்டதனால் ஃபாத்திமா முஸப்பரின் கருத்து
பக்குவத்தை மீறிவிட்டது போலும். ஃபத்வா இஸ்லாத்திற்கு புறம்பானது என்று அவர் எப்படிச் சொன்னார்?
என்று தெரியவில்ல. அவரது பாட்டனாரின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்புக்கு நற்சான்று வழங்கிய
பாகியத் அரபுக்கல்லூரியும் அதே ஃபத்வாவை வழங்கியுள்ளதே! அதே பார்வை பாகியத்திற்கும்
பொருந்துமா?
தேவ்பந்தின் மௌலவிகளை அறிவீனமானவர்கள் என்று த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ்
அடையாளம் கண்டுள்ளார். தேவ்பந்தின் தீர்ப்பை ஒத்துக் கொள்ளும் மௌலவிகள் அத்தனை பேரும்
அறிவீனமானவர்கள் என்று ஜவாஹிருல்லாஹ் பகிரங்கமாக அவரது பத்ரிகையில் விளம்புவாரா? என்று
தெரியவில்ல. உரிமைக்குரல் இது விசயத்தில் ஒடுங்கிப் போகுமா? அல்லது உரத்துப் பேசுமா? என்பதை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மதரஸாக்களை குறிவைக்கிற இதழ்களுக்கு மதரஸாக்களை
குறிவைக்க வய்ப்புக் கொடுத்த ஜவாஹிருல்லாக்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.ஏனெனில்
மதரஸாக்களின் மீது 'குறி' மீடியாக்களுக்கு மட்டுமல்ல வேறு சிலருக்கும் இருக்கிறது என்பதை அது
புலப்படுத்தி விட்டது. ஷரீஅத்தின் மீதும், பெண்களின் மீதும், சமுதாயத்தின் மீதும் ஷரீபாக்களை விடவும்
ஜவாஹிருல்லாக்களை விடவும் தேவ்பந்துக்கும் அது சார்ந்த உலமாக்களுக்கும் அதிக அக்கறை உண்டு
என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.இஸ்லாத்தில் இப்படி ஒரு தீர்ப்புக்கு இடமில்லை என வக்பு
போர்ட் தலைவி 'பளீரெ'ன பேட்டியளித்துள்ளார். கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் ...
என்ற பழ மொழியை ஞாபகப் படுத்திக் கொண்டு தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்
போங்கள். தேவ்பந்தை குறை சொல்வது, எய்தவனைவிட்டு விட்டு அம்பை நோவும் கதை தான்.வீரம்
சொரிந்த நபர்கள் ஹனபி சிந்தனைப்பிரிவின் தீர்ப்பு தவறானது என்று தான் சொல்லியிருக்க வேண்டும்.

தேவ்பந்த் செய்தது என்ன?

இம்ரானா விசயத்தில் உள்ளுர் பஞ்சாயத்தினர், அவர் ஏழு மாதம் பத்து நாட்கள் தனித்திருக்க
வேண்டும்।நூர் இலாஹியுடனான அவருடைய திருமண உறவு முறிந்து விட்டது. அவர் மாமனார் அலி
முஹம்மதுவுக்கு மனைவி ஆகிவிட்டார்.அவரது ஐந்து குழந்தைகளும் நூர் இலாஹிக்கு சகோதரர்களாகி
விட்டனர் என்றெல்லாம் சில தீர்மாணங்களைச் சொன்னதாக செய்தி பரவியது। இந்த விசயங்ககைளை
ஒருவர் கேள்வியாக எழுதி பதில் கேட்க அவருக்கு விளக்கம் அளித்த தேவ்பந்த் அரபுக்கல்ல}ரி
பஞ்சாயத்தார் சொன்னதாக கூறும் விசயங்கள் சரியல்ல என்றும். அதே நேரத்தில் மாமனாரால் ஒரு
பெண் கற்பழிக்கப்பட்டது சட்டப்படி நிரூபணமாகிவிட்டால் அந்தப் பெண்ணை மகன் தனது மனைவியாக
வைத்திருக்க முடியாது என்று மட்டுமே விளக்கம் சொன்னது.

இது புதிய தீர்ப்பு அல்ல। பன்னூறு ஆண்டுகள் பழமையான ஒரு தீர்ப்பே। தந்தை ஒரு பெண்ணுடன் உறவு
கொண்டு விட்டால் அவனது மகன்ககளுக்கு அவள் ஹராம் தடுக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள் என்ற
ஹனபி மத்ஹபின் தீர்ப்பை தேவ்பந்த் எடுத்துச் சொன்னது அவ்வளவ

ஹனபி மத்ஹபின் இந்தத் தீர்ப்பு திருக்குர்ஆனின்ன நான்காவதுவது அத்தியாயத்தின் இருபத்தி
இரண்டாவது வசனத்திற்கு பொருள் கொள்வதின் அடிப்படையில் அமைந்தது। இந்த வசனத்திற்கு
உங்களது தந்தை உறவு கொண்ட பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று
ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் பொருள் கொள்கின்றனர்। பெருமானாரின் தோழர்கள் பலரும்
தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும் ஹனபி மதஹபைச் சார்ந்த இமாம்கள் குர்ஆனை அணுகுவதற்கு
வகுத்துக் கொண்ட வழிமுறையின் அடிப்படையிலும் இந்தப் பொருள் வழங்கப் படுகிறது। இந்த
வசனத்திற்கு விளக்கம் கூறுகிற பிரபல விரிவுரையாளர் இப்னு கஸீர் தந்தை ஒரு பெண்ணிடம்
சட்டப்படியோ அல்லது சந்தேகத்தின் அடிப்படையிலே உறவு கொண்டுவிட்டால் அந்தப் பெணமணி
மகனுக்கு ஹராமாகி (திருமணம் செய்ய தடுக்கப்ட்ட பெண்ணாகி) விடுவாள் என்ற கருத்து அறிஞர்களின்
ஏகோபித்த கருத்து என்று கூறுகிறார். இது பற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்தக் கட்டுரை தாங்காது
என்றாலும் ஒரு விசயம் உறுதியானது. ஹனபி மத்ஹபின் தீர்ப்பு திருக்குர்ஆனிய வசனத்தை ஆய்வு
செய்ததின் அடிப்படையிலான கூற்றே அல்லாமல் ஏதோ போகிற போக்கில் போக்கற்றவன் எவனோ
சொல்லிவைத்த சொந்தச் சரக்கல்ல.இந்த அடிப்படையில் தேவ்பந்தின் தீர்ப்பு தவறு என்றால் அது ஹனபி
மதஹபை தவறானது என்று சித்தரித்தாகவும் அந்தக் கருத்துக் கொண்ட மார்க்கத்தின் முன்னொடிகளை
தவறுசெய்து விட்டார்கள் என்று விமர்சிசிப்பதாகவுமே அமையும்।

தாருல் உலூம் தேவ்பந்தின் பத்வா முஸ்லிம்களுக்கிடையே ஒரு ஆச்சரிய வினாவை எழுப்பியது
உண்மைதன்। இம்ரானாவிற்கும் அவரத ஐந்து குழந்தைகளும் என்னாவது என்ற கருணையுணர்வுதான்
முதல் கேள்வி. இந்த கருணையுணர்வின் விளைவாகவே தாருல் உலூம்தேவ்பந்தின் பத்வா உண்மை
தானா? அது உண்மை என்றால் அதற்கான நியாயம் என்ன என்று அறிந்து கொள்ள மக்கள் பலரும்
ஆர்வம் காட்டினர். சுற்றேரக்குறைய நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் இமாம்களும் இது குறித்து
விசாரிக்கப்பட்டனர். தேவ்பந்தின் தீர்ப்பு என்பது பெரும்பான்மையான முஸ்லிம் சமுதாயத்தை யோசிக்க
வைத்தது. சட்டென்று ஒரு கருத்துச் சொல்ல பொது மக்கள் கூட தயாராக இல்லை.
சில ஆதிகப்பிரசங்கிககள் மட்டுமே தேவ்பந்தின் பத்வா தவறானது என எடுத்த எடுப்பில் சுய விருப்பின்
அடிப்படையில் கருத்து வெளியிட்டனர்।வழக்கம் போல திரு பி.ஜே மூளையுள்ளவன் சொல்வானா?
இவங்க சகோதரிகள் பாதிக்ககப் பட்டிருந்தா இப்படிச் சொல்லுவானுங்களா? என பொரிந்து தள்ளினார்.
நமது பெண்மணிகள் அணிகிற புர்கா எனும் மேலங்கி இஸ்லாமிய உடையல்ல என்று கருத்து சொன்னது
போலவே தேவ்பந்தின் தீர்ப்பு இஸ்லாமல்ல என அறை(?)கூவினார். அது அவரது அபிமானிகளுக்கு
வேதவாக்காக அமைந்த போதும் முஸ்லிம் சமூகம் அதை புறந்தள்ளி விட்டது.

சென்னையிலிருந்து வெளிவருகிற மக்கள் உரிமை ஏடு இந்தப் பிரச்சினையில் தாருல் உலூம் தேவ்பந்தை
பிரதான குற்றவாளியாக சித்தரித்து கட்டாயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய அதிகப்பிரசங்கித்தனமாகும்.
அது கண்டிக்கத்தக்க செயலுமாகும்.

தேவ்பந்தின் தீர்ப்பு ஹனபீ சிந்தனைப் பிரிவின் படி வழங்கப்பட்டது என்று தெளிவாக தெரிந்த பின்னர்
அதை தவறு என்று குறிப்பிடும் துணிச்சல் மக்கள் உரிமைக்கு எப்படி வந்தது? விட்ட குறை தொட்ட
குறையாக தொடரும் அவர்களது பழைய பண்பாட்டின் வெளிப்பாடா? தேவ்பந்தின் அறிவுத்திறனுக்கும்
அனுபவ வலிமைக்கும் அதன் சமூக அக்கறைக்கும் முன்னால் மக்கள் உரிமை இன்னும் கத்துக் குட்டி
தான் என்பதை அவர்கள் உணராமல் போனதென்ன?

பத்வா வழங்கியவர்களும் மீடியாக்களும் தான் இதில் பிரதான குற்றவாளிகள் என்று எந்த 'உணர்'வில்
எழுதினார்களோ தெரியவில்லை. ஒரு நண்பர் கேட்டார்:ஃபத்வா தவறென்றால் மீடியாக்கள் செய்தது
சரிதானே அவற்றையும் எப்படி இவர் குற்றவாளியாக்கலாம் என்று கேட்டார். இது தான் அவர்களது 'தூய
வடிவி' லான தெளிவு என்று நான் சொன்னேன்.
மக்கள் உரிமை ஏடு தேவ்பந்தின் ஃபத்வா குறித்து கருத்துக் கேட்பதென்றால் தமிழ்நாட்டின் பிரதான
அரபுக்கல்லூரியான பாகியாதுஸ்ஸாலிஹாத்திடம்; கேட்டிருக்க வேண்டும்.அவசரத்திற்கு அது சரிப்படாது
என்றால் சென்னையிலேயே உள்ள அரபுக் கல்லூரிகளை அணுகியிருக்கலாம். தேவ்பந்தின் கல்விக்குழு
உறுப்பினர்கள் சென்னையிலேயே இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டு விட்டு சமுதாயத்திற்கு
முன்பின் அறிமுகமற்றவர்களை மேதாவிகளாக்கும் முயற்சியில் அது இறங்கியது ஏன்? தங்களுக்கு
இசைவானதை மட்டும் எடுத்துக்கொள்ளும் போக்கு, சியோனிசத்தின் எச்சமல்லாவா?

தேவ்பந்த் தனது தீர்ப்பை மறு பரீசீலனை செய்யலாம் அல்லது வேறு சிந்தனைப்பிரிவுகளின் படி தீர்ப்பு
வழங்கலாம் என்று கோருவதும், தேவ்பந்தின் தீர்ப்பை ஏற்க முடியாது அது குற்றமிழைத்து விட்டது என்று
கூறுவதும் இரு வேறு தளங்களில் நின்று பேசுவதாக அமையும் என்பதை கற்றறிந்தவர்கள் கவனிக்காமல்
போனதென்ன?

மக்களின் தனித்த மரியாதையை பெற்ற ஆலிம் ஒருவர் தேவ்பந்தின் தீர்ப்பு ஹனபி மத்ஹபின் படியானது
அது ஏற்புடையது அல்ல.அது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்ற மானது என்று கருத்துக் கூறியதாக செய்தி
பரவிய போது அப்படியானால் ஹனபி மதஹபு தவறானதா என்று எவரும் கேட்க வில்லை. அவர்
தவறான முகாமில் இருக்கிறாரா என்று தான் மக்கள் கேட்கத் தலைப்பட்டனர் என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும். அதன் விளைவாக தன்னுடைய கருத்து திரித்து கூறப்பட்தாக அவர் மறுக்க
வேண்டிய சந்தர்ப்பம் உருவானது।

ஓரு சிக்கலான காலகட்டத்தில் முஸ்லிம்களின் சமுதாயப் போராட்டத்திற்கான உரிமைக்குரலாக தன்னை
அடையாளப்படுத்திக் கொள்ளும் மக்கள் உரிமை இதழ் தனது பாதங்களை கவனமாக எடுத்து வைக்க
வேண்டும்। பெரும்பான்மை சமுதயமும் மார்க்க அறிஞர்களும் அவர்களை நெருங்கி வந்து
கொண்டிருக்கும் போது துடுக்குத்தனமான விமர்ச்சனங்களால் சமூகத்தில் மீண்டும் ஒரு ஒவ்வாமையை
ஏற்படுத்தி விடக்கூடாது.

இம்ரானா விவகாரம் இப்படி முஸ்லிம் சமூகத்துக் குள்ளேயே அலையடிக்கச் செய்ததென்றால் மற்றவர்கள்
சும்மா இருப்பார்களா என்ன? தருணத்திற்காக காத்துக் கிடந்தவர்களுக்கு வசமான வாய்ப்பு கிடைத்தது।
நெல்லிக் காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியது போல கருத்துக்களை வாரி இறைத்து விட்டார்கள்.
அரசியல் கட்சிகள் தங்களது பழைய பல்லவியான பொது சிவில் சட்ட கோஷத்தை தூசுதட்டி எடுத்துவர
ஒரு சந்தர்ப்பமும் அமைந்தது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்தாக வேண்டும் என்று திரு லால்கிஷன்
அத்வானி ஆருடம் கூறினார். அவர் இன்னும் ஓரிரு வார்ததை பேசுவதற்குள் கட்சிக்காரர்களே காலை
வாரிவிட்டால் என்ன செய்வது என்ற எச்சரிக்கையால் அத்தோடு பேச்சை நிறுத்தி கொண்டார்.
பி ஜே பி யின் அறிவு முகமான அருன் ஜேட்லீ வெறுக்கததக்க சமய சட்டங்கள் தொடர்ந்து நாட்டில்
வியாபித்திருப்பதையே இது காட்டுகிறது என்று குமுறினார். குஜராத்தில் முஸ்லிம் பெண்களின் மர்ம
இடங்களில் அவருடைய ஆட்கள் திரிசூலங்களைச் சொருகியபோது களிப்படைந்த அவருக்கு இம்ரானா
விவாகரம் எப்படி வெறுப்பூட்டியது என்று தெரியவில்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற எந்த நாகரீக
நாட்டிலும் இது முழுமையாக ஏற்கப்படாது என்று அவர் உறுமிய போது குஜராத்தில் நடை பெற்ற
கொடூரங்களை எந்த நாகரீகத்தில் சேர்க்கலாம் என்று மைக் பிடித்திருந்த எந்தக் கழுதையும் திருப்பிக்
கேட்க வில்லை.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய நட்சத்திரமான திருமதி பிருந்தா காரத் அவர் பங்குக்கு
தேடி எடுத்த வார்த்தைகளை அடுக்கினார். மதத்தை நிறுவுபவர்கள் ஒரு குடிமகனின் அடிப்படை
உரிமைகளை எப்படி தகர்க்க முடியும் என்பதற்கு இது அதிர்ச்சிகரமான ஒரு உதாரணம் என்றார்.

இம்ரானா விசயத்தில் தாருல் உலூம் தேவ்பந்த் வழங்கிய தீர்ப்பை மனித உiரிம மீறலாக பார்க்கும்
கம்யூனிஸ்ட்டுகளுக்கு நாம் விளக்கம் தந்தே ஆக வேண்டும். தீர்ப்பு விசயத்தை கம்யூனிஸ்ட்டுகள்
தயையை கூர்ந்து கவனிக்க வேண்டும் மாமனாரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் திருமண உறவு முறிந்து
விடும் என்று ஷரீஅத் கூறுவதில் உள்ள நியாயம் மற்றும் அதன் உளவியல் காரணம் என்ன என்பதை
ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதே இம்ரானா இப்போது செய்தியை வெளியிடாமல் மாமனாருக்காக ஒரு
குழந்தையை பெற்றெடுத்தபின் அந்தக் குழந்தை மாமனார் கற்பழித்தனால் உண்டான குழந்தை என்று
சொன்னால் கணவனான நூர் இலாஹி தனது சகோதரனுக்கு தந்தையாக வேண்டியது நிர்பந்தம் என்றால்
அது மனித உரிமை மீறிய செயல் அல்லவா? இது யோசிக்க வேண்டிய பிரச்சினையா? அல்லவா?
என்பதை சற்றாவது யோசித்து விட்டு கம்யூனிஸ்ட்கள் கருத்துத் தெரிவிக் வேண்டும். தீம்தரிகிட போன்ற
பத்ரிகை அறிவு ஜீவிகளும் இதை யோசித்த பிறகு முல்லாக்களை திருத்துவது குறித்து அலச வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறோம். இம்ரானாவுக்கு என்ன வழி ? என்ற கேள்வி நியாயமானது. அதை
முஸ்லிம் சமூகம் பார்த்துக் கொள்ளும்.

நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சி இம்ரானா விசயத்தில் வஞ்சக வேடம் போட்டது. பிரதானமாக யாரும்
கருத்துப்பேசவில்லை. காங்கிரஸின் அபிஷேக் சிங்கி; ஃத்வா பொறுத்தமற்றது என்று மட்டும் சுருக்கமாக
கூறினார்.

ஆனால் உத்திரப் பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் முஸ்லிம்களின் மனதில் பால் வார்த்தார்.
அவரை தொடர்ந்து நச்சரித்த ஆஜ்தக் டிவிக்கு அவர் அளித்த பதில் ஒட்டு மொத்த இந்தியச்
சமதாயத்திற்கு தேவ்பந்தின் மேல் உள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருந்தது. அவர் சொன்னார்:
இம்ரானா விசயத்தில் முஸ்லிம் சமய அறிஞர்களின் முடிவு பெருத்த யோசனைக்குப்பின் எடுக்கப்பட்ட
முடிவுதான். அவர்கள் சமயத்தைப் பற்றி அதிகம் படித்தவர்கள். தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்கள்.
தங்களது சமுதாயத்தின் மீதும் அதிக கவலை கொண்டவர்கள் என்று சொன்னார். அவர் அந்த
வார்த்தைகளை உதிர்த்த போது நான் கவனித்தேன். அது வெறும் ஓட்டுப் பிச்சைக்காக நடந்த உதட்டு
நடனமல்ல. உள்ளம் திறந்த பேச்சாக வே எனக்குப்பட்டது. நான் உத்திரப்பிரதேச மாநிலத்தைச்
சார்ந்நதவனாக இருந்திருந்தால்; அந்த வார்த்தைகளுக்காக இன்னும் பத்து தேர்தல்களில் என் ஓட்டு
முலாயமுக்கே!.

தாருல் உலூமின் ஃத்வாவை காட்டி பொது சிவில் சட்டம் வலியுறுத்தப்படுகிறதே என்று சிலர்
கவலையடைந்தனர். ஆனால் அந்தக் கவலை தேவயற்றது என்பதை முஸ்லிம் அறிஞர்ப் பெருமக்கள் பல
தடவை சமுதாத்திற்கு சொல்லியுள்ளனர். இந்தியா முழமைக்குமான பொதுவான ஒரு சிவில் சட்டம்
தேவை என்பது அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறியில் 44 வதாக இடம் பெற்றுள்ளது என்ற போதும்
அதன் சாத்தியக்கூறு பலத்த சந்தேகத்திற்குரியது. பாரதீய ஜனதா உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும்
இயக்கங்களும் இது விசயத்தில் உண்மையான ஆர்வம் கொண்டிருந்தால் முதலில் நாடு முழவதிலுமுள்ள
இந்துக்களுக்கான ஒரு பொதுவான சிவில் சட்டத்தை அமைக்க முயற்சி செய்யட்டும் பார்க்கலாம் என்று
முஸ்லிம் அறிஞர்கள் பல முறை சவால் விடுத்துள்ளனர். என்.டி.டிவி யில் நடைபெற்ற ஒரு விவாதத்தின்
போது முஸ்லிம் பர்சனல் லா போர்ட உறுப்பினா கமால் பரூக்கி பாரதீய ஜனதா எம் பி சிங்காலைப்
பார்தது இதையே தான் கேட்டார்.முதலில் உங்கள் சமூகத்தில் தகப்பன் சொத்தில் பெண்களுக்கும் பங்கு
உண்டு என்று முடிவு செய்துவிடடு வாருங்கள் பிறகு பார்க்கலாம் என்றார்.

பாரதீய ஜனதாவும் அது சார்ந்த இயக்கங்களும் முஸ்லிம்களை கலக்கத்துக்கு உள்ளாக்கவே பொதுசிவில்
சட்ட கோஷத்தை பயன்டுத்துகின்றனர்.எனவே இத்தைகய பிரச்சாரம் முன் வைக்கப்படுகிற போது
முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படாமல் இருப்பதே அவர்களுக்கு தரும் சரியான பதிலடி என மறைந்த சட்ட
அறிஞர் மௌலானா காஜி முஜாஹிதுல் இஸ்லாம் அவர்களும் அவர் போன்ற அறிஞர்களும் பல தடவை
அறிவுறுத்தி உள்ளனர். அதே சமயம் முஸ்லிம்களுக்கு பர்சனல் லா என்ற தனியான ஒரு சட்ட
அமைப்புக்கு அரசீயல் சாசன ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் போது நீதிமன்றங்கள்
அவ்வப்போது எல்லை மீறி தலையிடுகிற விசயத்தை மட்டும் கவனமா கண்காணிக்க வேண்டியிருக்கிறது
என்பதையும் தெளிவு படுத்தியுள்ளனர். இந்த அறிவுரை முஸ்லிம் சமுதாயத்திற்கு போதுமானது. இதற்கு
மேல் யாரும் அதீத அக்கறை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.கவலைப்பட வேண்டிய
அவசியமில்லை.

மீடியாக்களை பொறுத்த வரை இன்னும் முஸ்லிம் சமூகம் மர்மத் திரையிட்ட கோட்டையாகவே
இருக்கிறது. முஸ்லிம்களைப்பற்றி எழுதவும் பேசவும் அச்சமாக இருப்பதாக ஒரு பக்கம் புலம்பிக்
கொண்டே மறுபுறும் தங்களது கற்பனைகளை சிறகடிக்க விட்டு கதையளக்கிற கைங்கர்யத்ததை
மீடியாக்கள் சமர்த்தாக செய்து வருகின்றன.
உண்மை என்ன என்பதை ஆராய்வதில் அவர்களுக்கு அக்கரை இருப்பதில்லை என்பது ஒரு காரணம்
என்றாலும் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைக்கு யாரை அணுகி விடை கேட்பது என்று
மீடியாக்களுக்கு இன்னும் தெரியவில்லை என்பதே எதார்த்தம். அதற்கு இம்ரானா விவகாரமும் ஒரு
உதாரணம்.ஊடகங்கள் இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி ஒரு பரபரப்பை உற்பத்தி செய்யவும்
பார்வையாளர்களை ஈர்க்கவும் நினைத்தனவே தவிர தீர்வு காண முயலவில்லை. அவற்றின் நோக்கமும்
அதுவல்லவே!

இம்ரானா விசயம் கிராமத்தில் அவரது குடும்பத்துக்குள் சிறு பிரச்சசினையாக புகையத் தொடங்கியிருந்த
போது அதை மோப்பம் பிடித்த உள்ளுர் பத்ரிகையான தைனிக் ஜக்ரான் நிருபர் 10.000 ரூபாய் தருவதாகவும்
இதை யாரிடமும் சொல்ல விட வேண்டாம் என்று சொல்லிட்டு அன்றே அவரது பத்ரிகையில் பிரசுரித்து
விட்டார். அவரிடமிருந்து பெற்ற செய்தியை ஜீ தொலைக்காட்சி ஒளி பரபரப்ப பிறகு விசயம் பற்றிக்
கொண்டு விட்டது. ஒரு குற்றச் சாட்டு பெரும் குற்றமாக வடிவெடுத்த பின்னணியில் முழு பொறுப்பும்
மீடியாக்களைச் சார்ந்ததே.
இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பு ரொம்ப சுவையாக 'மானாரால் கற்பழிக்கப்பட்டு தேவ்பந்தினால்
பாதிக்கப்பட்ட' இம்ரானா என்று எழுதியிருந்தது. அது, எழுத்து வேசித்தனம் என்பதில் சந்தேகமில்லை.
(பதரிகை தர்மத்தை அந்தியா டுடே கற்பழித்தற்கு சமமானது.)
இந்தியா டுடே போன்ற மீடியாக்கள் ஏற்படுத்திய பாதிப்பைத் தவிர இன்று வரை இம்ரானாவுக்கு எந்தப்
பாதிப்பும் ஏற்படவில்லை. அவரது கணவர் அவருடன் இருக்கிறார். குழந்தைகள் அவருடன் தான்
இருக்கிறார்கள். பல மகளிர் அமைப்புக்களும் மீடிhயக்களும் அவருக்கு நிதி வழங்குவதாக
அறிவித்ததிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்களது குடும்பம் வசதியாக வாழ்வதற்கு தேவ்பந்த்
உதவியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லாமே தவிர தேவ்பந்தின் ஃத்வாவினால் அவர் எந்த
பாதிப்புக்கும் ஆளக வில்லை. விசயம் விவகாரமாகி மாமனார் கைது செய்யப்பட்டு குற்ற வழக்கு பதி
செய்யப்பட்ட 5 நாட்களுக்கு பின்னரே தேவ்பந்தின் ஃபத்வா வெளிவந்துள்ளது என்ற செய்தியையும்
மீடியாக்கள் வெளியிட்டன என்பது தான் வேடிக்கை.
கற்பழிப்பு நடந்துள்ளது என முஸப்பர் நகர் கோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் உறுதி செய்யும் போது தான்
தேவ்பந்த் ஃத்வாவினால் அவர் பாதிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். அதுவும் இம்ரான அத்தீர்ப்புக்கு
கட்டுப்படுவதாக சொன்னால் மட்டுமே. அந்த சமயத்தில் இம்ரானாவோ அவரது கணவர் நூர் இலாஹியோ
நாங்கள் வேறு சிந்தனைப்பிவுகளின் படி செயல்படுகிறோம் என்று சொல்லி விட்டால் தாருல் உலூம்
தேவ்பந்த், லத்தியை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய தீர்ப்பையா மீறுகிறாய்? உன்னை என்ன
செய்யப் போகிறேன் பார்? என்று மிரட்டப் போவதுமில்லை. எனது கட்டளைக்கு கட்டுப்படாததனால் நீ
முஸ்லிமே அல்ல என்று சபிக்கப்போவதும் இல்லை. விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள் இல்லை
என்றால் எங்களுக்கு எந்த பாதகமும் இல்லை என்பது தான் தேவ்பந்தின நிலை. தேவ்பந்தின் சார்பிலான
ஒரு பேச்சாளர் கூட இதை வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் என்றில்லை இந்தியா முழவதும் முஸ்லிமகளின்; பர்சனல் லா எனப்படும் ஷரீஅத்தின்
அத்தனை சட்டங்களும் இதே நியதியைச் சார்ந்தது தான். எங்கள் மஹல்லாவில் ஒரு கம்ப்யூட்டர்
இன்ஞினியர் கோயிலில் வைத்து தாலி கட்டி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அது
செல்லாது என உள்ளுர் ஜமாத் தீர்ப்புச் சொன்னது. அதனால் அவர்களது இல்லறம் நடக்கவில்லையா
என்ன? பையன் இப்போதும் ஜம்மென்று தான் இருக்கிறான். இஸ்லாத்தில் உள்ள எந்த சிந்தனைப் பிரிவும்
ஒத்துக் கொள்ளாத திருமணம் அது. அதை எதிர்த்து தரப்பட்ட ஃத்வாவே ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த
முடியவில்லை.(இப்போது இந்த விசயம் வெளியான பிறகு ஆ..ஜமாத்துகள் ஒரு பெண்ணுக்கு அநீதி
இழைத்து விட்டன என்று ஷரீபாக்கள் கோஷம் போடாமல் இருக்க இறைவன் அருள்பாலிப்பானாக!)

நிலமை இப்படி இருக்க ஒரு சிந்தணைப்பிரிவு ஏற்படுத்திய ஃபத்வா என்ன பாதிப்பை ஏற்படுத்தப்
போகிறது? இதையெல்லாம் புரிந்து கொள்ள இந்தியா டுடேவுக்கு ஏது நேரம்? அவர்களது முக்கால்
பொழுதும் பாகிஸத்தான் பாடரில் கழிந்து விடுகிறதே! சல்மான ருஷ்டியை மட்டுமல்ல இந்திய டுடே
போன்ற மீடியாக்களையும் தான் ஃத்வா பேய் வாட்டுகிறது.
இந்நிலையில் இந்தியா டுடேவும்; அதன் சிந்தனையை ஒட்டத்திற்கு ஈடுகொடுத்து கருத்து வெளியிட்ட
அறிவு ஜீவிகளும் கருத்து வெளியிடும் தர்மத்தை கேவலப்படுத்தி விட்டனர் என்று தான் சொல்ல
வேண்டும். .இந்தியா டுடே, பத்ரிகை டல் லடிக்கிற போது தமிழுக்த்தில் பரவும் செக்ஸ் வக்கிரம் என்ற
தலைப்பில் சூடாக ஒரு கவர் ஸ்டோரி வெளியிடும். பதட்டத்டோடு இந்தியா டுடேவை புரடடினீர்கள்
என்றால் செக்ஸ் வக்கிரம் யாருக்கு என்பது தெரியவரும்.ஒரு நீலப்பத்திரிகையை விட ஆமாசமான
புகைப்படங்கள் அதில இடம் பெறும். சர்குலேசன் ஜிவ்வென்று உயர்த்த இந்தியா டுடே கையாளும்
மலிவான உத்தி அது.அதே மலிவான உத்தியைத்தான் 'தேவ்பந்தினால் பாதிக்கப்பட்ட' இம்ரானாவிலும்
காட்டியிருக்கிறது.

பரபரப்பான பிரச்சினைகளை தலைப்புச் செய்தியாக முதலில் தரவேண்டும் என்பதற்காக மீடியாக்களே
படுகொலைகளை செய்வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் தான் நடக்கும் என்றில்லை நிஜத்திலும்
நடக்கும் என்ற அதிர்hச்சி கரமான மீடியாக்களின் வன்முறைக்கு இம்ரானா விவகாரம் ஒரு உதாரணம்.
அவசரத்தில் ஏதோ கோபத்தில் சொல்லப்பட்ட கற்பழிப்பு புகாரை நிஜத்தில் நிரூபிக்கப்பட்ட ஒரு
கற்பழிப்பாக மீடியாக்கள் சித்தரித்து சில நாட்களை ஓட்டிவிட்டன. அதே நேரத்தில் செய்தி ஊடகங்கள்
இந்தப்பிரச்சினையை அலசும் போர்வையில் முஸ்லிம் ஷரீஅத் சட்டத்தின் மீது சகதி பூச முயன்ற
ஒவ்வொரு சமயத்திலும் அந்த ஊடகங்களின் வழியாகவே அவற்றின் கருத்து வழிமறித்து
முடக்கப்பட்டது। அவைகளின் பெரும் முயற்சி தடுக்கப்பட்டதை உடகங்களை கவனமாக
கண்காணித்தவர்கள் அறிந்து கொண்டிருப்பர்।

ஜுலை 2 ம் தேதி சனிக்கிழமை NDTV ல் The Big Fight நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின்
எம்.பி சிங்கால், முஸ்லிம் பர்சனல் லா போர்டு உறுப்பினர்; கமால் பரூக்கி, பிரபல பெண்ணியவாதி
சுபாஷினி அலி ஆகியோருடன் பொதுமக்களும் சூடாக விவாதத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்சித்தலைப்பு பொது சிவில்சட்டம் முஸ்லிம் பெண்களை பாதுகாக்குமா?
இம்ரானா விசயத்தை விவாதிக்க இப்படி ஒரு தலைப்பை சூட்டியிருப்பது இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்
சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கருத்தியல் வன்முறைக்கு அப்பட்டமான சாட்சி என்ற போதும்
முஸ்லிம் சமூகத்தின் மனோ வலிவையும் சிந்தனை தெளிவையும் அது எந்த வகையிலும் பாதித்து
விடவில்லை என்பதற்கு அந்த நிகழ்ச்சியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்தது. முஸ்லிம்
பெண்களை பாதுகாப்பதற்கு பொது சிவில் சட்டம் தேவை என்ற ரீதியிலேயே பலரும் பேசிக்
கொண்டிருந்த போது முழு புர்கா அணிந்திருந்த ஒரு இளம் பெண் துணிச்சலாகவும் தெளிவாகவும்
கணீரென்ற குரலில் பேசினார் : நான் படித்த முஸ்லிம் இளைஞி. நல்லது கெட்டதை அறியும் திறன்
எனக்கு உண்டு. நான் இஸ்லாமிய சமயத்தை பின்பற்றுகிறேன். எனது சமயமே சிறந்தது என நம்புகிறேன்.
நான் என் மதச்சட்டங்களை பின்பற்றும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது எனது உரிமையில் தலையிட
மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? என்று கேட்டார். அதுவரை என்ன பேசிக்
கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட்டு அத்தனை பேரும் ஓரு சேர கைத்தட்டினார்கள்.அந்தப்
பெண்மணியின் பேச்சு அந்நிகழ்சிசியின் போக்கையே மாற்றி விட்டது என்பது மட்டுமல்ல இஸ்லாமிய
ஷரீஅத் சட்ட அமைப்பு குறிப்பாக தேவ்பந்த வழங்கிய பத்வாவால் முஸ்லிம் பெண்கள்
பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முனை மழுங்கச் செய்து விட்டது.

இதே போல இன்னொரு விவாதம் ஸ்டார் நியூஸ் இந்தி சானலில் நடை பெற்றது। ஒரு அறை முழக்க
பெண்களாக உட்கார்ந்து காச் மூச்சென்று விவாதித்துக் கொண்டனர். ஷபானா ஆஸ்மி , இந்திய மகளிர்
ஆணையத் தலைவி கிரிஜா வியாஸ் உள்ளிட்ட சில மகளிர் பிரதிநிதகள் பங்கேற்றனர். பெண்கள்
ஆவேசமாக இம்ரானாவுக்கு சுhர்பாக பேசினர். ஆரசாங்கத்தை குறை கூறினர் கிரிஜா வியாiஸைத்
துலைத்தெடுத்தனர். அதில் கலந்து கொண்ட 69 சதவீதம் பேர் இம்ரானாவுக்கு நீதி கிடைக்காது என்று
கவலைப்பட்டனர்.நாம் தில்லியிலிருந்து கொண்டு அவருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று
கழிவிரக்கம் கொண்டனர். அந்த விவாதத்தை முடித்து வைக்கiயில் திருமதி கரிஜா வியாஸ் கூறினார்.
மீடியாக்களே தயவு செய்து இம்ரானாவை விட்டு விடுங்கள். உங்களது விhவதங்கள் அவருக்கு ஆறதல்
தருவதை விட கஷ்டத்தையே தருகின்றன். அவர் விசயத்தில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.
அவரை நான் நேரில் சந்தித்தேன் தன்னுடைய சமயத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அவர்
வாழவிரும்புகிறார். ஏனவே அவரது சமய நம்பிக்கையோடு அவரை விட்டு விடுங்கள். அவருக்கு தகுந்த
நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதில் தான் நாங்கள் அக்கறை கொண்டிருக்கிறோம்
என்றார்.மீடியாக்களின் முகத்தில் கரி பூசுவது போல இருந்தத அவரது பேச்சு.

மீடியாக்களின் எல்லை மீறிய ஊடுறுவலையும் சில மகளிர் அமைப்புக்களின் நியாயமற்ற
நடவடிக்கைகளயும் முஸ்லிம் பொலிடிகல் கவுன்ஸிலின் தலைவர் தஸ்லீம் ரஹ்மானி வன்மையாக
கண்டித்துள்ளார்। அவர் தில்லியில் நடைபெற்ற நடை பெற்ற நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சுமார்
மூன்றுமணிநேரம் ஓடும் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார்। அதில் கற்பழிப்பு நடைபெறவில்லை
என இம்ரானாவும், தன்னுடைய தந்தை அப்படிச் செய்யக் கூடும் என்று தான் நம்பவில்லை என்று நூர்
இலாஹியும் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன। தில்லியை தலைமையாக
கொண்ட ஒரு முஸ்லிம் அமைப்பு ((Muslim Womens Forum) எனும் அமைப்பு இம்ரானாவுக்கு
ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முஸ்லிம் ஷரீஅத் சட்டத்தை ஒத்துக் கொள்ள முடியாது சவில்
கோர்ட்டில் மட்டுமே பிரச்சினையை அணுகுவேன் என்று கூறுமாறு இம்ரானாவை தூண்டிவிட்டுள்ளதும்
அந்த வாக்கு மூலத்தில் இடம் பெற்றுள்ளது। பத்ரிகைகளும் சேனல்களும் பொறுப்பற்ற முறையில் நடந்து
கொண்டது குறித்து இந்திய பத்ரிகை கவன்ஸிலில் புகார் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.

இம்ரானா கற்பழிக்கப்பட்டாரோ இல்லையோ இம்ரானா விசயத்தை மீடியாக்கள் கற்பழித்து விட்டன
என்பது தான் உண்மை.
இம்ரானா விவாகரம் உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் அது பல நல்ல அனுபவத்தை
முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
நம்மிடமிருந்து கசிகிற எந்த ஒரு சிறு செய்தியையும் ஊதிப் பெரிதாக்கி விகாரப்படுத்திவிட பலர் காத்துக்
கிடக்கின்றனர்.அதன் மூலம் நமது சுய மரியாதையை காயப்படுத்தி வம்புக்கிழுக்க முயற்சி செய்கின்றன.
எனவே நாம் அதிக எச்சரிக்கையோடு நடந்து கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம். அதே சமயம்
மீடியாக்களின் வக்கிர ஆசைக்கு நாம் பலியாகி விடவும் கூடாது.
ஷரீஅத்தின் தீர்ப்புகள் குறித்து கவனமாக ஆராய வேண்டும். அதன் நியாயங்களை புரிந்து கொள்வதில்
நிதானம் காட்ட வேண்டும். பெருமானார் (ஸல்)அவர்கள் காலத்திலேயும் சட்ட விதிகள் சில சலசலப்பை
ஏற்படுத்தியதுண்டு. அப்போதெல்லாம் முஸ்லிம்கள் உறுதியான நம்பிக்கையோடு அதை பொறுமையாக
அணுகியதன் மூலமே நன்மை அடைந்துள்ளனர். லிஆன்,ழிஹார் உள்ளிட்ட சில சட்டங்கள்
அமுல்படுத்தபட்டதன் பின்னணிகளை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.இன்னொரு உதாரணமும்
உண்டு.

உக்பா பின் ஹாரிஸ் என்ற இளைஞர் அபுஇஹாபுடைய மகளை திருமணம் செய்திருந்தார். இளம்
தம்பதிகள் இன்பமாக வாழ்வை நடத்திக் கொண்டிருந்த போது ஒரு கிழவியின் வடிவில் அவர்களது
வாழ்வில் புயல்வந்து தாக்கியது. உங்கள் இருவருக்மே நான் பால் கொடுத்திருக்கிறேனே என்று அந்தப்
பெண் சொன்னாள். குழந்தைப் பருவத்தில் ஒரே பெண்ணிடம் பால் அருந்தியிருக்கிறார்கள் என்றால்
இருவரும் அண்ணன் தங்கை உறவாயிற்றே இடி விழுந்தது போல இருந்தது உக்பாவுக்கு நீ எனக்கு
பாலூட்டியதாக நான் அறியவில்லையே என அவர் அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பினார். இருந்த
போதும் பெருமானார்(ஸல்)அவர்களிடம் கேட்டு விடலாம் என்று நினைத்த அவர் பெருமானாரை அணுகி
விசயத்தை சொல்லி அந்தப் பெண் எனக்கு பாலூட்டியதாக ஞாபகம் இல்லை நான் என் மனைவியுடன்
சேர்ந்து வாழ முடியுமா என்று கேட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அதெப்படி அவள் அப்படிச் சொன்ன
பிறகு எப்படிநீங்கள் சேர்ந்து வாழ முடியும் ? ஏன்று கேட்டார்கள். உக்பா தனது மனைவியை பிரிந்தார்.
அந்தப் பெண் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். (அறிவிப்பாளர் : உக்பா பின் ஹாரிஸ்,
நூல்:புகாரி)
ஒரு பெண்மணியின் வாக்கு மூலத்தை ஒட்டி ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் ஒரு குடும்பம் பிரிகிற
சந்தர்ப்பம் ஏற்பட்ட போதும் அதனுடைய நியாயத்தை புரிந்து கொண்டு தனக்கு வகுத்தளிக்கப்பட்ட
நியதிப்படி பொறுமையுடன் முஸ்லிம் சமூகம் நடந்து கொண்டுள்ளது என்பது தான் வரலாறாகும். அந்த
வரலாறுதான் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகும்.
இம்ரானா விவகாரம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிற சந்தர்ப்பங்களில், உத்தரவு போடுவது மட்டுமே
ஜமாத்துக்களின் பணியல்ல. இத்தகைய விபத்துக்களால் நிலை குலைந்து விடுபவர்களை, ஆதரவற்று
நிறகும் பெண்களை காப்பாற்றுவதும் கரை சேர்ப்பதும் கூட ஜமாத்துகளின் கடமை தான். ஷாபானு
வழக்கு பிரச்சினையான போது சில அறிவு ஜீவிகள் முஸ்லிம் சமுதாயத்தைப் பார்த்து நியாயமான ஒரு
கேள்வியை கேட்டார்கள். கணவனால் கைவிடப் பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக நீங்கள் என்ன
ஏற்பாட்டை செய்துள்ளீர்கள்? நமது மார்க்கம் பைத்துல் மால் அமைப்பை நிறுவி அதிலிருந்து அவளுக்கு
உதவி செய்ய வேண்டும் என்று கட்டையிட்டிருப்பதாக கூறுகிறீர்களே எத்தனை ஊர்களில் பைத்துல்மால்
வைத்திருக்கிறீர்கள்? குறைந் பட்சம் எத்தனை ஜமாத்துகள் இத்தைகைய கடமை நமக்கிருக்கிறது என்று
உண்ர்ந்து கொண்டிருக்கிறது என்று கேட்டார்கள். அந்க் கோள்வி நியாயமானது தான்.இந்த கேள்வியின்
அடிப்படையில் முஸ்லிம் ஜமாத் ஒவ்வொன்றும் தங்களது நடவடிக்கையை பரிசீலனை செய்து கொள்ள
வேண்டும். இம்ரானா விவகாரம் அதற்கும் ஒரு வாய்ப்பை தந்துள்ளதாக முஸ்லிம்கள் எடுத்துக் கொள்ள
வேண்டும்.

தேவ்பந்தின் ஃத்வா விவகாரமாக்கப்பட்டதிலும் அது முஸ்லிம் சமுதாயத்தை சிலநாட்கள்
அலைகழித்ததிலும் மார்க்க அறிஞர்களுக்கும் ஒரு மறைமுக பங்கு உண்டு என்று சொன்னால் அது
மிகையல்ல. மீடியாக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளி கிழக்கையும் மேற்கையும் இணைத்து
வைக்க போதுமாக இருந்தது. இத்தனை பிரச்சினைகள் நடந்த போதும் ஒரு மௌலவி கூட
தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் தரவில்லை. தேவ்பந்த் அரபுக்கல்லூரியின் இணைய தளம் அரபி
உருது ஹிந்தி ஆங்கிலம் என் நான்கு மொழிகளில் அற்புதமான ஒரு வலைத் தளமாக இருந்த போதும்
இந்த விவகாரம் குறித்து எதையும் அதில் காண முடியவில்லை. சர்ச்சை பெரிதான சமயத்தில் தேவ்பந்த்
தாருல் ஊலூம் ஒரு பிரஸ் மீட் நடத்தியிருந்தால் முஸ்லிம்களை அது முன்னதாகவே சிக்கலிலிருந்து
மீட்டிருக்க முடியும்.

இம்ரானா விவகாரத்திற்கு பிறகு ஜுலைஐந்தாம்தேதி நடந்த அயோத்தி அட்டாக்கிலும் ஜுலை தேதி நடந்த
லண்டன் அட்டாக்கிலும் ஒரு தேதி குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் அன்றாடம் தொடரும் அத்வானி
v/s RSS விவாகரத்திலும் மீடியாக்கள் முழ்கிவிட்டன। இம்ரானா மீடியாக்ளால் கைவிடப்பட்டு விட்டார்।
ஆல்இந்தியா வுமன் காங்கிரஸ் இம்ரானாவக்கு தருவதாக சொன்ன 50 ஆயிரம் ரூபாய் அவருக்கு
கிடைத்து விட்டதா? உத்தரப்பிரதேச அரசாங்கம் அவருக்கு 5 லட்சம் தர வேண்டும் என்று கேட்போம்
என்று அந்த அமைப்பின் பிரதிநிதி ரீதா பகுகுனா ஜோஷி தம்பட்டம் அடித்தாரே அவர் அரசுக்கு ஒரு
கடிதமாவது எழுதினாரா எதுவும் தெரியவில்லை। தாருல் உலூம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் தான்.
ஆனாலும் இனியும் ஒரு புயல் எந்த நிமிடமும் திரும்ப வரலாம். அப்போதாவது அந்தக் காற்றின்
வேகத்தில் வெளிப்படும்; மீடியாக்களின் கோரமுகத்தை எதிர் கொள்ளும் திறனும் முறியடிக்கும்
ஆற்றலும் முஸ்லிம்களுக்கு வரவேண்டும்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.