தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)

இரண்டாவது பகுதி:

உயிர் வாங்குமுன் ஷைத்தானோடு ஏற்படுகின்ற சந்திப்பு மற்றும் உயிர் வெளியேறுகிற அமைப்பு:

கடுமையான வலியை எனக்குள் உணர்ந்தேன் மேலும் ஏதோ ஒரு விதமான பயங்கரத்தையும் அறிந்தேன் ஏதோ நடக்கப்போகிறது என்பது எனக்கு பட்டது, இதுதான் எனது முடிவா? எனது மனதில் கூறியவாறு சிந்திக்க ஆரம்பித்தேன்.

சுப்ஹானல்லாஹ்!!

இதன் பின்  கைசேதப்பட ஆரம்பித்தேன் என் வாழ்நாளில் வீனாகக் கழிந்த ஒவ்வொரு வினாடிகளும் என்மூலம் ஏற்பட்ட ஒவ்வொரு குறைபாடுகளும் என்னை வெட்கிக்க வைத்தது !!

இப்பொழுது தப்பிக்க முடியாத ஒரு உண்மையிற்கு முன்னிலையில் நான் இருக்கிறேன்.

என்னைச் சுற்றியுள்ள சப்தங்களெல்லாம் மறைய ஆரம்பித்தது, என் கண்களுக்கு முன்னிலையில் இருள் சூழ ஆரம்பித்து, கத்தியை வைத்து வெட்டுகிற மாதிரி உடம்பிலே வலி, ஏதோ ஒன்று கழுத்தை நெறிக்கிற மாதிரி உணர்வு, என் கிட்னிக்கு  ஆக்ஸிஜன் போகவில்லை, தலையிலே ஒரு வலி குறிப்பாக அடி விழுந்த இடத்திலே நெருப்பு எரிகிற மாதிரி வேதனை,

எனக்கு முன் உள்ள இருளில் ஒரு வெண்ணிற தாடியுடைய மனிதர் தோன்றி என்னிடம் சொன்னார் : மகனே! இது உனது கடைசி வினாடிகள், உன் ரப்பை சந்திப்பதற்கு முன் உனக்கு உபதேசம் செய்ய வந்துள்ளேன், நீ நல்லதை விரும்புகின்ற புத்திசாலி என எனக்கு நன்கு தெரியும், அல்லாஹ் என்னை அனுப்பியிருக்கிறான் எனவே உனக்கு ஒரு உபதேசம் செய்கிறேன்,

நான் : உனக்கு என்ன வேண்டும் என கேட்டேன் ?

அவர் : சிலுவை வாழ்க! என சொல், சத்தியமாக! அதுவே உனக்கு ஜெயம்!!  என்றான், இதை நீ ஈமான் கொண்டால் உன்னை உனது குடும்பத்தினரிடமும் உன் குழந்தைகளிடமும்  திருப்பி அனுப்பி, உன் உயிரையும் உனக்கே திருப்பி கொடுத்து விடுவேன். சீக்கிரம் சொல்லு! சந்தேகப்படுறதுக்கோ, தாமதப்படுத்துறதுக்கோ இது நேரமில்லை என்றான்

நான் : அவன்தான் ஷைத்தான் என்று தெரிந்து கொண்டேன்.

நான் எவ்வளவுதான் வலி (வேதனையிலே) கஷ்டப்பட்டாலும் என் ரப்பு இன்னும்  நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்; மீது ரொம்பவே நம்பிக்கை இருந்தது,

நான் : ச்சீ அல்லாஹ்வின் விரோதியே! நான் முஸ்லிமாகவே வாழ்ந்தேன், அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அதன் மீதே இறப்பேன் என்று அவனிடம் சொன்னேன்,

அவனது (ஷைத்தானது) முகம் மாறிவிட்டது அதோடு சொன்னான் :  நல்லா கேட்டுக்கே! நீ கிரிஸ்தவனாகவோ யூதனாகவோ மரணித்தால்தான் உனக்கு நிச்சயம் ஜெயம், இல்லையெனில் வலி (வேதனை)யை கூட்டிடுவேன், உயிரையும் வாங்கிடுவேன் என்றான்,

நான் : மௌத்து, ஹயாத்து எல்லாம் அல்லாஹ் கையிலே இருக்கு, உன் கையிலே இல்லை, நான் முஸ்லிமாகவே மரணிப்பேன் என்றேன்,

அவன் மூஞ்சு (கோபத்திலே) சிவந்துடுச்சி,

அவன் : இதுக்கு முன்னாடி பல பேரை வழி கெடுத்து அவங்கலெல்லாம் வழி கெட்டுப்போவலையா? சரி.. எப்படியோ உன்னை அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைச்சு, அதுவும் தைரியமா அந்த பாவத்தை செய்ய வைக்க என்னாலே முடிஞ்சுது, அதுவே எனக்கு போதும் என்றான் திடீரென ஏதோ பயப்படுகிறமாதிரி ஒன்றை மேலே பார்த்தான், அதோடு வேகமா ஓடிட்டான், வேகமாக திரும்பி ஓடிப்போனது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, அவன் ஓடி விடுவதற்கு அப்படி என்ன வந்தது என்று விடை தெரியாமல் இருந்தேன், திடீரென அறிமுகமற்ற மற்றும் மிகப்பெரிய உடல்களைக் கொண்ட  சில முகங்களை அங்கே கண்டேன், அவர்கள் இறங்கி: 

அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்

நான்: வஅலைக்குமுஸ்ஸலாம் என்றேன்

அவர்கள் : அமைதி காத்தனர், ஒரு வார்த்தைகூட பேசவில்லை, அவர்களிடம் கஃபன் துணிகள் இருந்தன,

நான் : இறுதியாக: நிச்சயம் அவர்கள் மிகப்பெரிய மலக்குகள்தான் இறங்கியிருக்கிறார்கள்  என நான் தெரிந்து கொண்டேன்

அவர்களில் ஒருவர் : அமைதியடைந்த ஆத்மாவே!  இறைவனது மன்னிப்பு மற்றும் திருப்பொருத்தத்தை நோக்கி வெளியேறி வா என சொன்னார், இவ்வார்த்தைகளை செவியுற்றபின் வர்ணிக்க முடியாத நற்பாக்கியத்தை உணர்ந்தேன் மேலும் அவரிடம் : அல்லாஹ்வின் மலக்கே! மிக சிறந்த நற்செய்தி என்றேன்.

அவர் என் உயிரை உருவிக் கொண்டார்

தற்பொழுது நினைவிற்கும் கனவிற்கும் இடையில் இருப்பது போன்று உணர்ந்தேன், மேலும் என் உடலுடன் எழுந்திருப்பதுபோலும் கீழே திரும்பிப்பார்த்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வது போன்றும் எனக்குத் தெரிந்தது, இந்நிலையில் என் உடலைக்கண்டேன் பலர் (மனிதர்கள்) என் அருகில் கூடி என் உடலை முழுமையாக மூடி விட்டாhர்கள் அவர்களில் சிலர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொல்வதையும் செவியுற்றேன்.

இரு வானவர்களைக் கண்டேன், என் உடலை பெற்றுக்கொண்டு தான் கொண்டுவந்த கஃபனில் அவசரம் அவசரமாக வைத்து என்னை வான்(மேல்) நோக்கி  கொண்டு செல்வதுபோல தெரிந்தது, அங்குமிங்கும் திரும்பி பார்த்தேன், மிகத் தொலைவில் உள்ள ஆகாயத்தைப் பார்த்தேன், என் உயரம் அதிகரித்துக் கொண்டே சென்றது, மேகத்தைக் கிழித்துக் கொண்டு செல்கிறேன், நான் விமானத்தில் செல்வது போல எனக்கு கீழே உள்ளவை யாவும் மிகச் சிறியதாக தென்படுகிறது, இன்னும் உயரம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே சென்றது, என் கீழே பூமியைப் பார்த்தேன் ஒரு சிறிய பந்து போன்று காட்சியளித்தது.

நான்: பின்னர் அவ்விரண்டு வானவர்களிடமும் : அல்லாஹ் என்னை சுவர்க்கத்தில் நுழையவிடுவானா? என்றேன்

வானவர்கள் : இதைப்பற்றி அல்லாஹ்விற்கு மட்டும் தான் தெரியும், நாங்கள் உயிர்களை பெற்றுவருவதற்காக மட்டுமே அனுப்பப்பட்டுள்ளோம், நாங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டவர்கள் என்றனர்.

என் பேச்சை நிறுத்திக்கொள்ள:

இந்நேரத்தில் சில வானவர்கள் எங்களை கடந்து மிக வேகமாக சென்றனர், அவர்களோடு ஆச்சரியமான ஓர் உயிர் இருந்தது அதன் நறுமணம் என்றுமே நுகர்ந்திராத ஒரு கஸ்தூரி போன்று கமழ்ந்தது,

நான் :ஆச்சரியப்பட்டு அந்த வானவர்களிடம் இது யார்? நபி முஹம்;மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்தான் இறுதி நபி என எனக்கு  தெரியாமல் இருந்திருந்தால் இது எனது நபியவர்களின் உயிர் என சொல்லியிருப்பேன் என நான் அவர்களிடம் சொன்னேன்.

அவர்கள் : அதற்கு அவ்விருவரும் : இல்லை (மாறாக) இது பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஒரு தியாகி (ஷஹீத்) வுடைய உயிர்,  யூதன் ஒருவன் சற்று முன் கொன்று விட்டான்,  தன் நாட்டிற்காகவும் தன் மார்க்கத்திற்காகவும் எதிர்த்துப் போராடியவர், அவரது பெயர் அபுல் அப்த் எனப்படுகிறது,  அல்லாஹ் அவரிடம் (ஜிஹாத்) தியாகப் போரையும் வணக்க வழிபாட்டையும் சேர்த்தே கொடுத்திருந்தான் என்றனர்,   நான் : நானும் ஒரு ஷஹீத் ஆக மரணித்திருக்கலாமே! என்றேன் பின்னர் அதே வேளையில்  திடீரென மற்றும் சில வானவர்களைப் பார்த்தேன், அவர்களிடம் ஒரு உயிர் இருந்தது அதிலிருந்து கடுமையான துருவாடை வந்து கொண்டிருந்தது இது யார் என நான் கேட்டேன்? அதற்கவர்கள் : இது மாடு வணங்கியின் உயிர், சற்று நேரத்திற்கு முன் இறைவனால் அனுப்பப்பட்ட புயல் காரணமாக மரணித்தவர் என்றனர். உடனே அல்லாஹ் எனக்கு வழங்கிய இஸ்லாமிய அருட்கொடையின் மீது அல்ஹம்து லில்லாஹ் என சொன்னேன்

நான் : என்ன நடக்கும் என எவ்வளவுதான்; நிறையவே படித்திருந்தாலும்; இந்த அளவுக்கு நடக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.

அவ்விருவர்: நற்செய்தி பெறு இருந்தாலும் உனக்கு முன் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள் என்றனர்.

நான்: ஆச்சரியத்தோடு அப்படி என்ன ? என கேட்டேன்

அவ்விருவர் : விரைவில் அந்த அனைத்தையும் பார்ப்பாய் ஆனால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என அல்லாஹ் விஷயத்தில் நம்பு என்றனர் நாங்கள் மலக்குகளின் கூட்டத்தைக் கடந்து சென்றோம் அவர்களுக்கு சலாமும் சொன்னோம்

அவர்கள்: இது யார் என (என்னைப்பற்றி என்னைக்கொண்டு சென்ற வானவர்களிடம்) விசாரித்தனர்

அவ்விருவர்; : முஸ்லிமான மனிதர், சற்று முன் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது, அவரது உயிரை மலக்குல் மௌத்திடமிருந்து வாங்கி வருமாறு இறைவன் எங்களுக்கு ஆணை பிரப்பித்திருந்தான் என்றனர்

அவர்கள் : அவன் (அல்லாஹ்) முஸ்லிம்களுக்கு மரியாதையையும் மதிப்பையும் வழங்கியுள்ளான் அது அவர்களுக்கு நல்லது மற்றும் அவர்கள் என்றும் நல்லவற்றிலே இருப்பார்கள் என்றனர்.

நான்: இவ்விரு மலக்குகளிடம் இவர்கள் யார் என கேட்டேன்

அவ்விருவர் : இவர்கள் தான் வான்-காவலர்கள், ஷைத்தானின் மீது நெருப்புக் கங்குகளை வீசுகின்றனர் என்றனர்.

நான்: இவர்கள்தான் படைப்பால் மிகப் பெரியவர்களா!! என்றேன்

அவ்விருவர்;: இவர்களைவிட மிகப்பெரிய மலக்குகள் இருக்கிறார்கள் என்றனர்

நான் : யார் அது என்றேன்

அவ்விருவர்;: ஜிப்ரயீல் மற்றும் அர்ஷை சுமப்பவர்கள், அவர்கள்  அல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒருவர், அவர்கள் இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்யவே மாட்டார்கள், அவர்களுக்கு ஆனை பிறப்பிக்கப்பட்;டதை அப்படியே செய்வார்கள் என்றனர்

நான் : சுப்ஹானக்  ரப்பே! எந்த அளவுக்கு வணங்கவேண்டுமோ அந்த அளவுக்கு உன்னை நான் வணங்கவில்லையே! என்றேன்.   பின்னர் :  உலக வானம் வரை போய்ச் சேர்ந்தோம்

நான் : ஆச்சர்யம் மற்றும் ஆர்வத்துடன் எதைப்பார்த்துக் கொண்டிருக்கிறேனோ அதையும், எது இனிமேல் நடக்க இருக்கிறதோ அதைப்பற்றி எனக்குள்ள அச்சத்தையும் பீதியையும்  உங்களிடம் நான் மறைக்கவில்லை. உலக  வானத்தை மிகப்பெரியதாக பார்த்தேன், அதன் வாயில்கள் பூட்டப்பட்டிருந்தன, ஒவ்வொரு வாயலிலும்; மிகப்பெரிய வானவர்கள் நின்றிருந்தனர்.

இவ்விருவர் : இவ்விரு வானவர்களும் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றனர், நானும் அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.

அந்த வானவர்கள் : வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு என்று சொல்லியவாறு, ரஹ்மத்தின் மலக்குகளே! வாருங்கள், என்றவாறு அவர்கள் சற்று கூர்ந்து பார்த்துவிட்டு  இவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் ? என்றனர்

அவ்விருவர் : ஆம் என்றனர்

அந்த வானவர்கள் : வருக! வருக! ஏனெனில் இவ்வானம் முஸ்லிம்களுக்கு மட்டுமே திறக்கப்படுகின்றன ஏனெனில் அல்லாஹ் : இறைநிராகரிப்பாளர்களின் விஷயத்தில் : لاَتُفْتَحُ لَهُمْ اَبْوَابُ السَّمَاءِ (லா-துஃப்தஹு லஹும் அப்வாபுஸ் ஸமாயி) அவர்களுக்காக வானின் கதவுகள் திறக்கப்பட மாட்டாது (அல் குர்ஆன் 7:40) என கூறியுள்ளான் என்றனர். நாங்கள் நுழைந்தோம்

அங்கு கண்ட பல ஆச்சரியங்களில் ஒன்று : கஃபா போன்று மிகப்பெரிய ஒன்றை பார்த்தேன் அதை ஏராளமான வானவர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர், இது நிச்சயம் ''பைத்துல் மஃமூர்' தான் என உடனே சொன்னேன்,

இருவானவர்கள் : இருவரும் புன்முறுவலிட்டனர் மேலும் சொன்னார்கள் : அல்ஹம்து லில்லாஹ், இங்கு நாங்கள் கொண்டுவருகின்ற முஸ்லிம்களில் பலர் இது பற்றி அறிந்திருக்கின்றனர், இது அல்லாஹ்வின் அருள் மற்றும் அந்த நல்ல மனிதர் உங்களது திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களில் சிறப்பின் காரணமாகத்தான் ஏற்பட்டுள்ளது ஏனெனில் அவர்கள் எதையும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் விடவில்லை என்றனர்.

நான் : அவர்களிடம் எத்தனை வானவர்கள் இதில் நாள்தோறும் நுழைகின்றனர் என்றேன்

அவ்விருவர்: 70 ஆயிரம் ஆனால் அவர்கள் வலமிட்டு வெளியேறிவிட்டால் வலமிட திரும்ப வரமாட்டார்கள் என்றனர்

பின்னர் வேகமாக  உயர்ந்து இரண்டாவது வானத்தை சென்றடைந்தோம் இவ்வாறாக ஏழாவது வானத்தை சென்றடைந்தோம், அது மிகப்பெரிய வானமாக இருந்தது, அங்கே மிகப்பெரிய கடல் போன்று கண்டேன், வானவர்கள் அனைவரும் தன் சிரங்களைப் பணித்தனர் மேலும் அவ்விரு வானவர்களும் : اللّهُمَّ اَنْتَ السّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ وَ تَبَارَكْتَ ياَذاَ الْجَلاَلِ وَ الْاِكْرَامِ (அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வ மின்கஸ்ஸலாம் வ தபாரக்த்த யா-தல்ஜலாலி வல்இக்ராம்) இறைவா! நீயே அமைதி தருபவன் மேலும் உன்னிடமிருந்தே அமைதி உருவாகின்றது மேலும் கம்பீரமும் மகிமையும் உரியவனே! நீயே அபிவிருத்தி நிறைந்தவன் என்றனர்

நான் : ஒரு வித மரியாதை கலந்த பயத்தை உணர்ந்தேன் மேலும் நானும் என் சிரத்தை பணித்தேன் என் கண்கள் கண்ணீர் விட்டன

அல்லாஹு: (ரப்புல் இஜ்ஜத்- அல்-அஜீஜ் அல்-ஜப்பார்) சொன்னான் எனது அடியானுடைய பதிவேட்டை இல்லிய்யீனிலே எழுதுங்கள் மேலும் அவனை பூமியின் பக்கம் திரும்ப கொண்டு செல்லுங்கள் ஏனெனில்  நிச்சயமாக நான் அவர்களை அதிலிருந்தே படைத்தேன் மேலும் அதிலேயே அவர்களை திருப்பி அனுப்புவேன் மேலும் அதிலிருந்தே அவர்களை அடுத்த முறையும் வெளியாக்குவேன் (அல் குர்ஆன் 20:55) என்றான்.

கடுமையான அச்சம் மற்றும் பயம் கலந்த மகிழ்ச்சியின் காரணமாக என்னால் பேச முடியவில்லை மாறாக : சுப்ஹானக (நீ பரிசுத்தமானவன்) எந்த அளவுக்கு வணங்க வேண்டுமோ அந்த அளவுக்கு நான் உன்னை வணங்கவில்லையே! என நான் சொன்னேன்.

என்னை அவ்விரண்டு வானவர்களும் உடனே கீழே இறக்கினார்கள், பல வானவர்களைக் கடந்து வந்தோம், பார்க்கும் யாவருக்கும் சலாம் கூறியவாறு வந்து கொண்டிருந்தோம்

நான்: அவ்விரண்டு மலக்குகளிடமும் என் உடல் மற்றும் குடும்பத்தினர் பற்றி விசாரித்தேன்

அவ்விருவர்: இதோ நீ பார்ப்பது தான் உன் உடல், உன் குடும்பத்தினர்களில் உனக்காக செய்து அனுப்பி வைக்கக்கூடிய செயல்கள் வந்து சேரும் ஆனால் நிச்சயமாக அவர்களை நீ பார்க்க முடியாது என்றனர், என்னை தரையில் இறக்கி விட்டு அவ்விருவரும் சொன்னார்கள்:

உன் உடலுடன் நீ இருப்பாய், எங்களது பணி முடிந்து விட்டது, மற்ற வானவர்கள் கப்ரில் உன்னிடம் வருவார்கள்.

நான் : அவர்களிடம் بَارَكَ اللهُ بِكُمَا وَ جَزَاكُمَا خَيْرَ الْجَزَاءِ (பாரகல்லாஹு பி(க்)குமா வ ஜஸாக்குமா கைரல் ஜஸாயி); அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்யட்டும் மேலும் உங்கள் இருவருக்கும் நல்ல அழகிய கூலியை தரட்டும் என்றேன்

மேலும் அவர்களிடம் : திரும்ப உங்களை சந்திக்க முடியுமா? என்றேன்.

அதற்கவர்கள் : கியாம நாளில் கூடவே நாங்களும் நிற்போம், அது அனைத்தையும் கண் முன் கொண்டுவரும் நாள் என்றனர், கியாம நாள் என்றவுடன் அவர்கள் சப்தங்கள் பயத்தால் தடுமாறிவிட்டது

பின்னர் அவ்விருவரும் : நீ சுவர்க்க வாசியாக இருந்தால், கூடவே நாங்களும் இருப்போம், எங்களை நீ பார்ப்பீர்,

நான்: நான் பார்த்தும் செவியுற்றும் இன்னுமா நான் சுவர்க்கத்தில் நுழைவதில் சந்தேகம் உள்ளது என்றேன்

அவ்விருவர் : நீ சுவர்க்கத்தில் நுழைவது என்பது பற்றி அல்லாஹ் மாத்திரமே அதற்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறான், இம்மரியாதை நீ முஸ்லிமாக மரணித்ததன் காரணமாகத்தான் இன்னும் உன்னுடைய அமல்கள் மற்றும் தராசுப் போன்றவைகள் சமர்க்கிப்பட வேண்டியிருக்கிறது  என்றவுடன் என் முகம் மாறி அழ ஆரம்பித்து விட்டேன் ஏனெனில் மலை போல் உள்ள பாவங்கள் என் ஞாபகத்தில் வர ஆரம்பித்து விட்டன.

அவ்விருவர் என்னிடம் : அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள் மேலும் உன் ரப் எவர் மீதும் அநீதியிழைக்கமாட்டான் என நம்பு என சொல்லி விட்டு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்லியவாறு மேலே உயர்ந்து விட்டனர்.

நான் எனது உடலை நீட்டிவிடபட்ட நிலையில் பார்த்தேன், எனது முகத்தை என் பார்வைகள் உயர்ந்த நிலையில் பார்த்தேன், பின்னர் அழும் சப்தத்தை செவியுற்று திசை திரும்பினேன் : அது என் அன்பு மகனின் ஓசை, அவனுடன் என் தம்பியும் இருக்கிறார்,

சுப்ஹானல்லாஹ் : நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்,  என் உடலைப்பார்க்கிறேன், அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது உடனே நான் குளிப்பாட்டப்படுவதாக அறிந்து கொண்டேன், அழும் சப்தம் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, மிகவும் நெருக்கடி கடுமையாகி விட்டது இருப்பினும் ''அல்லாஹ் உன் இடத்தை நிரப்புவானாக! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! என என் தந்தை சொன்னது  என் மீது குளிர்ந்த தண்ணீர் ஊற்றியது போல இருந்தது பின்னர் என் உடலை வெள்ளைத் துணியால் சுருட்டினார்கள்.

என் மனதில் சொல்லிக் கொண்டேன் : அல்லாஹ்வே! நான் என் உடலை அல்லாஹ்வின் பாதையில் சமர்ப்பித்து நான் ஒரு ஷஹீதாக இறந்திருக்கலாமே! என்றும், அல்லாஹ்வின் ஞாபகத்திலே அல்லது தொழுகையிலே அல்லது வணக்க வழிபாட்டிலேயே எல்லா நேரத்தையும் கழித்திருக்கலாமே என்றும், இரவு பகலாக நான் பல தருமங்கள் செய்திருக்கலாமே என்றும் பலவாராக எண்ண ஆரம்பித்துவிட்டேன், என் கவலையெல்லாம் கப்ரில் என்ன நடக்கப் போகிறதோ என்பதைபற்றித்தான்.

குளிப்பாட்டுபவர் : அஸருக்குப்பின் தொழ வைக்கப்போகிறீர்களா? என விசாரிப்பதை நான் செவியுறுகிறேன்

என் தந்தை : அழுது கொண்டே இன்ஷா அல்லாஹ் என சொன்னார்கள், என் உடலை குளிப்பாட்டிவிட்டு எடுத்து  செல்கின்றனர், என் உடலைப் பார்க்கிறேன், ஒதுங்கி விடவோ அல்லது உள்ளே நுழைந்து விடவோ என்னால் முடியவில்லை, ஆச்சர்யமான திகைப்பில் ஆக்கக் கூடிய விஷயம், என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு இடத்தில் என்னை நுழைத்து விட்டனர் ஆனால் அது மய்யித்கள் வைக்கக்கூடிய ஐஸ் பெட்டி என்பதை உணர்ந்தேன், எனக்கு என்ன நடக்கப் போகிறது என்று நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்.

மிகப்பெரிய சப்தம், வந்து தூக்குங்கள் என சொல்வது என் சிந்தனையை முறித்து விட்டது, என்னை உயர்த்தித் தூக்கினார்கள்;, அவர்களின் அழும் சப்தத்தை செவியுற்றுக் கொண்டே இருக்கிறேன், என் தந்தையின் அழும் ஓசை என்னை மிகவும் தர்மசங்கடத்தில் ஆக்கியது, என் தந்தையே! கவலைப்படாதீர்கள் அல்லாஹ்விடம் எதுவுள்ளதோ அதுவே மிக சிறந்தது, தந்தை அவர்களே! நீங்கள் என்னை விரும்புகிறீர்கள், எனக்காக அழாதீர்கள், சத்தியமாக இது என் மனதை புண்படுத்துகிறது, எனக்காக துஆ செய்யுங்கள், இதுவே எனக்குத் தேவை என சொல்லலாம் என நான் ஆசைப்பட்டேன், நான் பல ஓசைகளைக் கேட்கிறேன், என் சகோதரர்களின் ஓசையையும் அவர்கள் அழுவதையும், அதைப்போலவே என் சாச்சா பிள்ளைகளின் ஓசையையும் பிரித்துணர முடிந்தது,   என் நண்பர்களில் ஒருவர் : அல்லாஹ் அவரை மன்னிக்கட்டும், அல்லாஹ் அவர் மீது இரக்கப்படட்டும் என சொல்ல வேண்டுமென பிறருக்கும் அறிவூட்டியது தாகித்தவனுக்கு குளிர்ந்த நீர் கொடுத்தது போன்று இருந்தது.

பள்ளியில் தொழ என்னை இறக்கிவைத்துவிட்டு அவர்கள் தொழும் சப்தத்தை நான் செவியுறுகிறேன், நான் அவர்களோடு தொழ வேண்டும் என ஆசைப்பட்டேன், நீங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் உங்களின் நன்மைகள் அதிகரிக்கின்ற உலகில் இருக்கிறீர்கள், நானோ எல்லா அமல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன என நானே சொல்லிக்கொண்டேன்.

மக்கள் தொழ தயாரான பின்னர் முஅத்தின் (மோதினார்) ஒரு ஆண் மையித்திற்காக தொழவைக்கப்படுகிறது, அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக! என்றார், இமாம் தொழவைக்க நெருங்கி தொழுகையும் ஆரம்பித்து விட்டது, தொழுகையின் இடையில், மலக்குகளின் கூட்டம், தொழுகையாளிகளின் எண்ணிக்கையைப்பற்றியும், இதில் எத்தனை பேர் இணைவைக்காமல் ஒரே இறைவனை ஏற்றவர்கள் என்பது பற்றியும் ஒருவர் மற்றொருவருடன் விசாரித்துக் கொள்கின்றனர்,

மூன்றாவது தக்பீர், இதிலேதான் எனக்காக துஆ செய்யும் முறை வருகிறது, வானவர்கள் பல விஷயங்களை எழுதினார்கள் உடனே இவர்கள் மக்களின் துஆவை கணக்கிடுகிறார்கள் என தெரிந்து கொண்டேன், யா அல்லாஹ்! இமாம் இந்த தக்பீரை கொஞ்சம் நீட்டியிருந்தால் நன்றாக இருக்குமே! என ஆசைப்பட்டேன் ஏனெனில் ஒரு வித மன அமைதி, மகிழ்ச்சி, நற்பாக்கியம் மற்றும் ஒரு ஆச்சர்யத்தைப் பார்;த்தேன்,பின்னர் நான்காவது தக்பீர் சொல்லி சலாம் கொடுத்து விட்டார்.

என்னை கப்ரை நோக்கி தூக்கிச் சென்றார்கள், அங்கு பல ஆச்சரியங்களும் பல திகில்களும் இருந்தன.

 

- அபூ யஹ்யா

தமிழில்: மெளலவி இப்ராஹீம் அன்வாரி, தேவ்பந்தி.

 

பார்க்க: தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3)

 

ஜனாஸா தொழுகை எவ்வாறு தொழ வேண்டும்..( நாம் சரியாக தொழுதால் தான் நமக்கு சரியாகத் தொழுவார்கள்.)

 




1 மன அமைதிக்கான மிக முக்கிய காரணங்கள்:
  ஓர் இறைநம்பிக்கையாளரின் மன அமைதி என்பது உண்மையான ஈமான், அல்லாஹ் மீதான உறுதி, அவனது விதியை ஏற்றுக்கொள்ளுதல், அவனை அதிகமாக நினைவுகூருதல் மற்றும் அவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் கனியாகும். உள்ளத்தில் அல்லாஹ்வுடனான தொடர்பு எந்தளவுக்கு வலுப்பெறுகிறதோ, அந்தளவுக்கு மன அமைதி அதிகரித்து கவலைகள் குறையும்.
 
2 இஸ்லாம் என்பது சட்டங்களும் விதிகளும் அல்ல...!
  தண்டனைகள் மட்டுமே குற்றச்செயல்களை ஒழிக்கும் அதிமுக்கிய காரணி என்பது இஸ்லாத்தின் பார்வை அல்ல. குற்றம் உருவாகும் காரணங்களை தடுத்து குற்றங்கள் நிகழாமல் காப்பதே மிக முக்கியம்.
 
3 அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்
  ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்
 
4 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?
  மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"
 
5 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்
  முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அக்காலகட்டத்தில் எகிப்தின் மொழி அறபி அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகே அங்கு அறபு மொழி பரவத் தொடங்கியது.
 
6 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
7 ரமலானை வரவேற்கும் துஆ
8 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
9 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
10 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
11 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
12 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
13 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
14 ︎நேர்மை என்பது...
15 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
16 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
17 பாலஸ்தீனத்தின் பெருமை
18 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
19 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
20 உணரப் படாத தீமை சினிமா
21 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
22 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
23 விரக்தி விஷத்தை விட கொடியது
24 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
25 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
26 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
27 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
28 அந்தப் பெண்களாக நாம்...
29 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
30 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
31 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
32 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
33 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
34 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
35 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
36 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
37 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
38 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
39 இளையான்குடியில் உருது மக்கள்
40 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
41 மரணம் நோக்கி...
42 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
43 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
44 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
45 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
46 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
47 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
48 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
49 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
50 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
51 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
52 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
53 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
54 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
55 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
56 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
57 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
58 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
59 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
60 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
61 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
62 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
63 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
64 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
65 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
66 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
67 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
68 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
69 எது வணக்கம்..?
70 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
71 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
72 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
73 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
74 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
75 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
76 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
77 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
78 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
79 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
80 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
81 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
82 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
83 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
84 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
85 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
86 மனைவியை_நேசிங்கள்..
87 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
88 அம்மா! அம்மா!
89 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
90 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
91 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
92 இமாம்களும் மத்கபுகளும்.
93 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
94 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
95 பராஅத் இரவின் சிறப்புகள்
96 வாப்பா!
97 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
98 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
99 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
100 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
101 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
102 இதிலென்ன வெட்கம்?
103 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
104 பழையன கழிதலும் புதியன புகுதலும்
105 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
106 கற்பில் கவனம் தேவை
107 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
108 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
109 இஸ்திஃகாராவின் சிறப்பு
110 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
111 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
112 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
113 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
114 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
115 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
116 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
117 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
118 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
119 இறுக்கமும் இரக்கமும்
120 இஷா தொழுகையும் இரவு உணவும்
121 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
122 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
123 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
124 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
125 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
126 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
127 பெயர்களை நினைவில் வைப்போம்
128 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
129 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
130 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
131 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
132 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
133 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
134 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
135 ஒரு 2.5 கதை
136 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
137 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
138 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
139 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
140 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
141 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
142 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
143 குறைகளை மறைத்தல்
144 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
145 நல்ல பெண்மணி
146 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
147 💥 யார் அந்த மாமனிதர்..?
148 ஈர்ப்பை விதைப்போம்!
149 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
150 யார் இந்த துலுக்கன்?
151 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
152 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
153 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
154 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
155 நிம்மதி - சிறுகதை
156 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
157    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
158 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
159 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
160  வாழ்க்கை வாழ்வதற்கே !
161 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
162 விற்கப்படும் மார்க்கம்
163 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
164 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
165 பார்வைகள் பலவிதம் !
166 நேர மேலாண்மை / திட்டமிடல்
167 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
168 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
169 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
170 தந்தைகளே! கவனியுங்கள்
171 வரலாறு புகட்டும் பாடம்
172 அல்குர்ஆன் என்னும் மதுரம்
173 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
174 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
175 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
176 நாம் தான் முயல வேண்டும்.
177 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
178 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
179 கற்பா? கல்லூரியா?
180 கசாப்புத் தொழில் சிறந்தது....
181 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
182 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
183 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
184 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
185 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
186 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
187 என் ஹிஜாப் என் உரிமை!!!
188 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
189 முகமாகும் பெண்கள்!!
190 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
191 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
192 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
193 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
194 செல்போன்கள்... ஜாக்கிரதை!
195 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
196 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
197 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
198 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
199 ஈமானே-உன் விலையென்ன?
200 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
201 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
202 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
203 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
204 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
205 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
206 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
207 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
208 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
209 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
210 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
211 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
212 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
213 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
214 அறிவைத் தேடுவோம்!
215 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
216 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
217 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
218 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
219 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
220 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
221 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
222 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
223 “வேர்கள்” வரலாறு!
224 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
225 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
226 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
227 மனிதனின் தேவை ! – மன அமைதி
228 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
229 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
230 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
231 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
232 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
233 பேச்சு,மெளனம்
234 ஜனாஸா - மைய்யத்
235 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
236 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
237 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
238 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
239 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
240 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
241 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
242 வலிமார்கள் என்பவர்கள் யார்?
243 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
244 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
245 மனித குல விரோதி
246 எனது பெயர் ஜனாஸா!
247 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
248 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
249 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
250 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
251 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
252 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
253 தமிழரும் இசுலாமியரும்
254 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
255 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
256 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
257 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
258 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
259 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
260 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
261 கற்பனைகளும் இஸ்லாமும்
262 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
263 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
264 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
265 மது ஒரு பெரும் பாவம்
266 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
267 பெற்றோர்களைப் பேணுவோம்!
268 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
269 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
270 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
271 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
272 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
273 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
274 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
275 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
276 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
277 மறுமை வாழ்வை நேசிப்போம்!
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
279 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
280 சுதேசி சிந்தனைகள்.......
281 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
282 கல்வி நல்லோர்களின் சொத்து!
283 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
284 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
285 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
286 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
287 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
288 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
290 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
291 அறிவைத் தேடுவோம்!
292 ஆக்காதீர் ஆசனங்களாக
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
294 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
295 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
296 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
297 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
298 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
299 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
300 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
301 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
302 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
303 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
304 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
305 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
306 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
307 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
308 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
309 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
310 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
311 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
312 விசுவரூபம் ஒரு விளக்கம்
313 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
314 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
315 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
316 கண்ணாடிகள் கவனம்
317 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
318 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
319 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
320 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
321 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
322 கருத்து வேறுபாடுகள்.
323 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
324 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
325 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
326 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
327 ஓ! என் இளைய சமுதாயமே!
328 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
329 வீண் செலவு வேண்டாமே