ஈமானே-உன் விலையென்ன?

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி. பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)

  1. ஒரு மதம் மூன்று  முக்கிய மாற்றங்களினை ஏற்படுத்த வேண்டும்:
  2. மூடநம்பிக்கை என்ற திக்குத் தெரியாக்காட்டில் திண்டாடிக் கொண்டிருப்பவனை நேர் வழிகாட்டி நேர்மைப் படுத்த வேண்டும்.
  3. சமுதாயத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்த வேண்டும்
    தனி மனித அடையாளத்திலிருந்து சர்வதேசம் என்ற விசாலமான உலகத்தில் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும்.
     
            அந்த மூன்று தகுதிகளும் இஸ்லாத்திற்கு இருக்கிறதா என்று         பார்க்கலாம்.
    அஞ்ஞான அரபு உலகமான �அய்யாமே ஜாகிலியா� என்ற இருண்ட சூழ்நிலையில் ஒளியேற்றி வைத்த என்பெருமானார் முகம்மது நபி ஸல்லல்லாஹ்   அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட வஹி மூலம் மனிதனை புனிதமாக்க  இறக்கப்பட்டது குர்ஆன் ஆகும். பல உருவங்களில் கடவுள் என்ற பெயரில் வழிபட்டும், நெறிகெட்டும்  இருந்தவர்களை ஏக இறை தத்துவத்தினை ஆணித்தரமாக எடுத்துறைத்தது இஸ்லாம். வான�ம்,பூமி,கடல்,அண்டத்திலுள்ள அத்தனை ரகசியங்களையும்-அவைகளின் மாற்றங்களையும் அறிந்தவன் எடுத்துரைத்து, அவனிடமே உங்கள் உதவியினை தேடுங்கள் என்று சொல்லி மூட நம்பிக்கைக்கு சாவு மணியடித்தது இஸ்லாம் என்பதை ஈமானுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.
     
    இரண்டாவது தனி மனித சுதந்திரத்திற்கு வித்திட்டது இஸ்லாம். ஆண்டான்-அடிமை என்ற வித்தியாசத்தினை களைந்தெடுத்து, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளுக்கு உரிமை ஸாசனம் அளித்தது இஸ்லாம் தானே. கறுப்பினராக இருந்தாலும் தொழுனைக்கு அழைக்கும் முன்னுரிமையினை ஹஸரத் பிலாலுக்கு வழங்கி கவுரவித்த பெருமை ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைச் சாரும். உலகத்தில் நாங்கள் தான் முதல் ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா கூட 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அடிமைகளுக்கு ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனால் சுதந்திரம் வழங்கப்பட்டது. பெண்சிசுக்களை பிறந்த உடனேயே உயிருடன் புதைக்கும் வழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பாலை-ஊமத்தழை சாரினை வாயில் ஊற்றி சாகடித்த பழக்கத்திற்கு பதிலாக பெண்குழந்தைகளை காப்பாற்றும் தொட்டில் குழந்தை திட்டம் 21ஆம் நூற்றாண்டில் தானே தமிழகத்தில் வந்தது. அத்தோடு இல்லாமல் ஒரு படி மேலாக பெண்களுக்கு சொத்தில் பங்கு என்றும் நிலைநாட்டியது.
    திருமணம் சாட்சிகளோடு நடக்க வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் பதிவும் செய்து பெண்களுக்கு உத்திரவாதமும் அளித்தது. அந்தச் சட்டம் தற்போது தான் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் எவ்வளவு தொலை நோக்குப் பார்வை கொண்டுள்ளது என அறியலாம். இனப் படுகொலைகளை தடுத்து நிறுத்தி இன ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்தது.
    மூன்றாவதாக தனி மனித நலனை விரட்டி பொது நலனுக்கும்-சர்வதேச நலனுக்கும் வித்திட்டது. ஈகைக்காகவே வறியவர்களுக்கு பொருளை ஜக்காத், சதக்கா என்று வாரி வழங்குவதிற்காக ஒரு ஈகைப் பெருநாளை ஏற்படுத்தித் தந்தது கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடமை தத்துவத்திற்கு முன்னோடி இஸ்லாம். ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் மக்காவில் மதீனாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் வராமல் மாறாக புன்னகையுடன் வரும்போது குரைசியர்களுடன் செய்து கொண்ட ஹ_தைபியா அமைதி உடன்பாடு 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் ஏற்பட்ட ஐ.நா. உடண்படிக்கைக்கு முன்னோடி என்றால் மிகையாகுமா? ஆனால் அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஏதோ ஒரு பொய் காரணத்திற்காக இராக்கினை சின்னா பின்னமாக்கியது போல் அப்போது நடந்ததுண்டா? சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கூட இராக் மீது அமெரிக்காவுடன் கைகோர்த்து இங்கிலாந்து முன்னால் பிரதமர் டோனி பிளேயர் இங்கிலாந்தினை இராக் போருக்குள் நுழைத்தது தவறு என்றும், ஜார்ஜ் புஷ் இராக் ஜனாதிபதி சதாம் ஹுசேன் மீது ஏற்பட்ட பயத்தில் அவர் போர் தொடுத்து விட்டார் என்றும் கூறுகிறார். செய்த தவறுகள் மீண்டும் நிலை நிறுத்த முடியுமா? யாராலும். ஆகவே தான் குர்ஆனுடைய போதனைகளும் சர்வத்திற்கும் பொருத்தமானதாகும் என்பது வெள்ளிடைமலை.
     
     
    மேற்கூறிய மூன்று தாரகை மந்திரங்களையும்-அதனை வஹி மூலம் ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் குர் ஆனாக இறக்கிய அல்லாவையும்-கடைசி நபி ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் என்று ஏற்றுக் கொண்டவர்கள் தான் உண்மையான முஸ்லிம் என சொல்லலாம். ஆனால் 28.12.09 ஆம் அன்று முகரம் பத்தாம் நாள் என்று அனைவரும் அறிவர். அன்று மாலை டி.வியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒருவர் கொடுத்த பேட்டி அதிர்ச்சியாக இருந்தது. சென்னை வாசிகளுக்கும், மற்றும் சில ஊர்களிலும் துன்பமான முகரத்தினை பெரும் திருவிழா போன்று தீ மிதித்தும், கோசாப் பெண்கள் மார்களில் கைகளால் அடித்துக் கதரியும், ஆண்கள் கூரிய கத்திகளால் உடலில் குருதியினை ஏற்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அறிந்ததே. அதே போன்ற நிகழ்ச்சியினை முதன் முதலாக நான் 1966 ஆம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது தான் பார்த்தேன். அப்போது அது எனக்கு எங்களூரில் இல்லாத நிகழ்ச்சியாக இருந்ததால் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் இஸ்லாமியர்களா என்று கூட எனக்கு ஐயப்பாடு ஏற்பட்டது. ஆனால் 28.12.09 அன்று முகரம் விழாவினை திருவல்லிக்கேணியில் ஏற்பாடு செய்தவர் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, �அலி ரஸுலுல்லாஹ் அவர்கள் மகன்களான ஹசன் � ஹுசைன் ஆகியோரை வழிபடுவதிற்காக கொண்டாடப்படும் பண்டிகை என சொன்னது என்னைத் தூக்கி வாரிப்போட்டது.
    எல்லா முஸ்லிம்களுக்கும் ரஸுலுல்லா என்பது நபிமார்களை குறிக்கும் என்பதினையும், ரலியல்லாஹ் என்றால் நபித்தோழர்களைக் குறிக்கும் என்பதினையும் அறிவர். அலி ரலியல்லாஹ்அன்கு அவர்கள் பெருமானார் அவர்களின் அருமை மகள் பாத்திமாவை மணந்து மருமகனாகவும்-வெற்றிக்கு பெயரெடுத்த வீரத்தளபதியாகவும் திகழ்ந்தவர் என்பதினை அனைத்து முஸ்லிம்களுக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அவருடைய மகன்கள் ஹசன்,ஹுசைன் ஆகியோர் பெருமானார் நெஞ்சில் ஏறிதவழ்ந்தவர்கள் என்பதினையும் அனைவரும் அறிந்ததே. ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் உயிருடன் இருந்தபோது தலை தூக்காத இனபோர்கள் அவர்கள் மறைந்த பின்பு தலைதூக்கியது. முவாவியாவின் வழித்தோன்றல் யசீதால் ஹசனும், ஹ_சைனும் அவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர் என்பது நெஞ்சில் நீங்கா வடுவாக உள்ளது. அல்லாஹ் இபுறாகிம் நபி அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வயதான காலத்திலும் இஸ்மாயில் அலைஹி வஸல்லம் என்ற மகனைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய ஈமானைச் சோதிப்பதிற்காக இஸ்மாயில் அலைஹி வஸல்லம் என்ற பாலகனை அறுத்துப் பலியிட ஆணையிட்டு அதற்கும் இபுறாகிம் நபி அலைஹி வஸல்லம் அவர்களையும் அவருடைய அருமை மகனார் அவர்களையும் வழிகெடுக்க சாத்தான் முற்பட்ட போதும் கூட மனந்தளராது அது இறைவன் கட்டளையென அறுக்க முற்படும் போது இறைவன் தன் வஹி மூலம் அவர்கள் ஈமானை சோதிப்பதிற்காகவே அந்த ஆணை பிறப்பித்ததாகவும்-இறைவன் சதையையோ, குருதி சிந்துவதையோ விரும்புவதில்லை என்று கூறி தடுத்து நிறுத்தினான் என்பது அல் குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மை.
     
          ஆனால் இன்று கூட ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தி இறந்தார் என்பதிற்கு அடையாளமாக மெக்சிகோ-தாய்லாந்து போன்ற நாடுகளில் மனிதர்களை சிலுவையில் அடித்தும், தீ மிதித்தும் வழிபாடுகள் நடக்கின்றன. அதுபோன்ற செயல்களால் இறைவன் திருப்திபடுகிறானா? என்பதினை ஏன் சிந்திக்க மறுக்கிறார் முகரத்தினை திருவிழாவாகக் கொண்டாடுபவரகள்? அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதால் மாற்று மதத்தினர் கேலிப்பேச்சுக்கு இடம் முஸ்லிம்கள் கொடுக்கலாமா?
     
          அல்லாவிஹ்வின் இடைத்தரகர்கள் என்று சிலர் கிளம்பி அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை உங்களுடம் பகிர்ந்து கொண்டால் தவறில்லை. சில மாதங்களுக்கு முன்னர் ஐமான் இனைய தளத்தில் திண்டுக்கல்லைச் சார்ந்த சகோதரர் சபீயுல்லா எனபவர் �சிலோன் மவுலானா� என்பவர் எப்படியெல்லாம் அவருடைய குடும்பத்தில் நுழைந்து குழப்பத்தினை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்-சகோதர யுத்தத்திற்கும் வழிவகுக்குகிறார் என்றும்- அவருடைய காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கவும் கொடுமை செய்திருக்கிறார் என்று அழாத குறையாக முறையிட்டு இருந்தார். அதபோன்ற என் நண்பர் சொன்ன இன்னொரு உண்மைச் சம்பவத்தினையும் உங்களுடன் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சென்னையில் குடியிருக்கும் கடற்கரையோர செல்வக் செழிப்பான முஸ்லிம் ஊரைச்சார்ந்த ஒரு குடும்பத்தில் பண்ருட்டியினைச்சார்ந்த வருங்காலத்தினை கணிக்கும் இமாம் என்ற போர்வையில் ஒரு மவுலான நுழைந்த தாயை வசியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் திருமணம் நடந்த சில நாட்களிலேயே தோசம் இருக்கிறது என்ற மகளையும் அவள் கணவனிடமிருந்து பிரித்ததோடு நில்லாமல்-அந்தப் புதுப்பெண்ணுக்கு ஆபாச செல்போன் எஸ்.எம்.எஸ் தொந்தரவும் கொடுப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.
     
    நான் 1983 ஆம் ஆண்டு மலேசியா சென்ற போது எங்களுரைச்சார்ந்த ஒருவரை கோலாலம்பூர் மலேயா மேன்சனில் பார்க்கச் சென்றேன். அப்போது ஒரு வியாபாரி அறையில் கேரளாவினைச்சார்ந்த தங்கள் என்ற பெரியவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி அந்த வியாபாரி, �தங்கள் அருளால் தான் இந்த அளவு தொழில் முன்னேற்றம் அடைந்தேன் என்றும் அவரைக் கேட்காமல் காலையில் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்றும் அந்த தங்கள் மந்திரித்துக் கொடுத்த தாயத்தினை கையிலும், இடுப்பிலும் கட்டியிருப்பதாகவும�; சொல்லி அதனையும் காட்டினார். அந்த வியாபாரிக்கு தன்னுடைய உழைப்பில் நம்பிக்கையில்லாததும்-ஈமானில் பிடிப்பில்லாத பேச்சாக உங்களுக்கு தெரியவில்லையா?
    நான் புனையப்பட்ட வழக்கு ஒன்றில் இழுக்கப் பட்டு சிறை சென்று வந்ததினை கேள்விப்பட்டு எங்களுரைச்சார்ந்த ஒருவர் என்னை சந்திக்க வந்தார். அவர் என்னிடம் உங்களுக்கு நேர்ந்;த கொடுமைக்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் சென்னை ஐஸ்ஹவுசில் வந்துள்ள பைஜி என்ற இமாமைப் பார்த்து அவர் துவா செய்தால் எல்லாத் துன்பங்களும் விலகும் என்று வற்புறுத்தி அழைத்தார். இவ்வளவிற்கும் அவர் படித்தவர்-மேல்நாட்டில் வேலை பார்ப்பவர். அவரிடம் நான் அதில் எனக்கு நம்பிக்கையில்லை என மறுத்துவிட்டேன். அவருக்கு ஈமானில் ஊசலாடல் இருப்பதினை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். 2..1..2010 ஆம் தேதி தினத்தந்திப் பத்திரிக்கையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நாகூர்  தர்காவிற்கு தொழுகை நடத்த வந்தவருக்கு டிரஸ்டி கலிபா பொன்னாடைப்போர்த்தி கவுரப்படுத்தினார் என்ற செய்தி படத்துடன் வெளியாகி இருந்தது. மாற்று மதத்தினர் நாகூர் தர்காவினையும் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் என்று நினைக்க மாட்டார்களா? ஆகவே ஏன் அவர்களுக்கு நாம் தவறான செய்திக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
     
    மறைந்த முன்னால் அமைச்சர் முகம்மது ஆசிப் அவர்கள் அமைச்சராக பதவியேற்றபோது அப்போதைய முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். நான் அந்த சமயத்தில் சென்னை சட்டம் ஒழுங்கு டி.சியாக பணியாற்றினேன். அவரிடம், �உங்களுக்கு 70 வயதிற்கு மேலாகிறது, வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள், அத்துடன் ஒரு முஸ்லிம் ஏன் காலில் விழுந்தீர்கள்� என்ற வினவினேன். அதற்கு அவர், �மற்ற அமைச்சர்கள் எல்லாம் காலில் விழும்போது நான் மட்டும் காலில் விழாமல் இருந்தால் முதல்வர் கோபித்துக் கொள்வார்கள்� என்றார். நான் சொன்னேன், �மற்றவர்களில் கண்டதையெல்லாம்  கடவுள் என்று எண்ணி காலில் விழுவார்கள். ஆனால் முஸ்லிம் சஜ்தா செய்வது அல்லாஹ்வினைத் தொழும் போது தானே என்று நீங்கள் இருந்திருக்கலாமே� என்றேன். நான் அதிகாரியாக இருந்ததால் அதற்குமேல் அவரிடம் வாதம் செய்யவும் அவர் பதில் கூறவும் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் அஹமது அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் குத்த விளக்கு ஏற்ற மறுத்து விட்டார்கள். அதற்காக வேற்று மதத்தினர் அவர் மீது ஏவுகணை தொடுத்தார்களா? இல்லையே! ஏனென்றால் படித்த மாற்று மதத்தினருக்கு அவருடைய இஸ்லாமிய மத வழிபாடுகளை தெரியாமலில்லை..
     
    சமீபத்தில் சென்னை கலைவானர் அரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இப்போது ஒரு பெரிய பதவியில் இருக்கும் பெயரளவிற்கு முஸ்லிமாக இருக்கும் மேதாவி கவிஞர் ஒருவர் அந்த உயர்ந்த பதவியினைப் பெருவதிற்காக புகழ்க்சியில் முக்கிய பிரமுகரை திளைக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பேசும் போது, �பிறை பிச்சைப் பாத்திர வடிவில் உங்களிடம் பிச்சை� கேட்பதாகச் சொன்னதாகவும் அதற்காக சமுதாயம் கண்டனக்குரல் எழுப்பியதினையும் அறியலாம்.
     
    கவிஞர் அல்லாமா இக்பால் தன் கவிதையில், �இளம் பிறையே வருந்தாதே உன்னுடன் பூரணச்சந்திரன் மறைந்து இருக்கிறான்� என்று அவர் கூறிய பூரணச்சந்திரன் வேறு யாருமில்லை. அகிலத்தினைப் படைத்து அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வதிற்கு வழிவகுக்கும் அல்லாஹ்வினைத்தானே அவ்வாறுக் குறிப்பிட்டார். பின் ஏன் ஆண்டவனிடம் படைப்புகளிடம் சில சலுகைகளை தட்டிக் கேட்பதிற்குப் பதிலாக ஏன் மண்டியிட வேண்டும்?
     
    சிலர் தவறான தகவல்களையும் சென்னையில் பரப்பி வருகின்றனர். அது என்ன தெரியுமா? ஒவ்வொரு வசதியுள்ள முஸ்லிமும் ஹஜ் செல்வது கடமையாகும். அதனைத் தெரிந்த சில வேடதாரிகள், �திருமுல்லை-சப்பைப் பட்டணம் தர்காக்கலுக்கும் சென்றால் ஹஜ் செய்வது வேண்டியதில்லை� என்றும் தவறான செய்தியினை பரப்பி வருகிறார்கள். சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்குக் கூட பழனி சென்று முருகனை வழிபட்டு-நாடிஜோசியம் பார்க்கவும் செல்கின்றனர். இவர்களின் சோரம் போன ஈமானைக் கண்டுதான் சில இமாம்கள்-மவுலானாக்கள்-தங்கள் போன்ற வேடதாரிகள் முரீது கொடுக்கிறேன் என்று அனாச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.இந்த வேதனையினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் என் கட்டுரையின் தலைப்பினை ஈமானே உன் விலை என்ன என்றேன்?
     
          மேலே சொன்ன செய்திகள் எல்லாம் புனையப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல. தினந்தோறும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் தானே. ஈமான் இழந்த சிலர் செய்யும் செயல்களால் படித்த இளைஞரகள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது. ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பும், ஜமாத்தும் இஸ்லாமிய மக்கள் அநாகரியங்கள், அநாச்சாரங்களில் தடம் புரளாது கண்ணை பாதுகாக்கும் இமையாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்.



1 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
  அல்குர்ஆன் கூறும் இரண்டு சரிதைகள். இரண்டுமே பேரற்புதம். 1. யூசுஃப் (அலை). 2. மூஸா (அலை). இரண்டு சரிதைகளுக்கும் இடையிலான அற்புதமான ஒப்பீட்டை அல்குர்ஆன் அழகாகச் சொல்லித் தருகிறது.
 
2 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
  பிறகு நான் கருதினேன்: "நான் இன்னும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குத் தேடலை நிறுத்திவிட்டு, என் நற்காரியங்களைப் பார்த்தேன், அவைகளில் பெரும்பாலும் சோம்பல், பொடுபோக்கு, குறைபாடுகள் மற்றும் பாவங்கள் கலந்திருப்பதைக் கண்டேன்.
 
3 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
  பாலஸ்தீன மக்களின் அசைக்க முடியாத உறுதிக்கு காரணம் அவர்கள் குர்ஆனின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என அண்மையில் The Guardian என்ற பத்திரிக்கையின் ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. இன்றைய உலகின் அதிகளவு குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களின் பட்டியலில் பாலஸ்தீன காஸாவும் உள்ளது என்பது மற்றுமொரு புள்ளிவிவரம்.
 
4 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
  போர் நிறுத்தம் வந்ததும் தனது பச்சிளம் பாலகனை தனது கைகளில் சுமந்து கொண்டு வடக்கு திரும்பினாள். தன்னை வரவேற்க கணவன் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. குழந்தையைப் பராமரிக்க தந்தை இல்லையே என்ற சோகம் அவளை தழுவி இருந்தது.
 
5 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
  ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது?
 
6 ︎நேர்மை என்பது...
7 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
8 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
9 பாலஸ்தீனத்தின் பெருமை
10 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
11 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
12 உணரப் படாத தீமை சினிமா
13 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
14 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
15 விரக்தி விஷத்தை விட கொடியது
16 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
17 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
18 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
19 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
20 அந்தப் பெண்களாக நாம்...
21 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
22 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
23 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
24 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
25 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
26 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
27 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
28 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
29 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
30 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
31 இளையான்குடியில் உருது மக்கள்
32 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
33 மரணம் நோக்கி...
34 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
35 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
36 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
37 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
38 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
39 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
40 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
41 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
42 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
43 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
44 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
45 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
46 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
47 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
48 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
49 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
50 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
51 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
52 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
53 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
54 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
55 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
56 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
57 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
58 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
59 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
60 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
61 எது வணக்கம்..?
62 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
63 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
64 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
65 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
66 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
67 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
68 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
69 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
70 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
71 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
72 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
73 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
74 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
75 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
76 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
77 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
78 மனைவியை_நேசிங்கள்..
79 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
80 அம்மா! அம்மா!
81 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
82 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
83 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
84 இமாம்களும் மத்கபுகளும்.
85 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
86 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
87 பராஅத் இரவின் சிறப்புகள்
88 வாப்பா!
89 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
90 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
91 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
92 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
93 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
94 இதிலென்ன வெட்கம்?
95 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
96 பழையன கழிதலும் புதியன புகுதலும்
97 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
98 கற்பில் கவனம் தேவை
99 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
100 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
101 இஸ்திஃகாராவின் சிறப்பு
102 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
103 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
104 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
105 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
106 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
107 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
108 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
109 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
110 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
111 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
112 இறுக்கமும் இரக்கமும்
113 இஷா தொழுகையும் இரவு உணவும்
114 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
115 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
116 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
117 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
118 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
119 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
120 பெயர்களை நினைவில் வைப்போம்
121 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
122 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
123 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
124 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
125 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
126 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
127 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
128 ஒரு 2.5 கதை
129 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
130 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
131 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
132 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
133 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
134 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
135 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
136 குறைகளை மறைத்தல்
137 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
138 நல்ல பெண்மணி
139 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
140 💥 யார் அந்த மாமனிதர்..?
141 ஈர்ப்பை விதைப்போம்!
142 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
143 யார் இந்த துலுக்கன்?
144 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
145 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
146 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
147 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
148 நிம்மதி - சிறுகதை
149 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
150    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
151 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
152 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
153  வாழ்க்கை வாழ்வதற்கே !
154 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
155 விற்கப்படும் மார்க்கம்
156 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
157 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
158 பார்வைகள் பலவிதம் !
159 நேர மேலாண்மை / திட்டமிடல்
160 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
161 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
162 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
163 தந்தைகளே! கவனியுங்கள்
164 வரலாறு புகட்டும் பாடம்
165 அல்குர்ஆன் என்னும் மதுரம்
166 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
167 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
168 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
169 நாம் தான் முயல வேண்டும்.
170 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
171 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
172 கற்பா? கல்லூரியா?
173 கசாப்புத் தொழில் சிறந்தது....
174 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
175 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
176 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
177 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
178 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
179 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
180 என் ஹிஜாப் என் உரிமை!!!
181 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
182 முகமாகும் பெண்கள்!!
183 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
184 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
185 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
186 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
187 செல்போன்கள்... ஜாக்கிரதை!
188 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
189 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
190 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
191 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
192 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
193 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
194 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
195 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
196 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
197 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
198 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
199 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
200 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
201 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
202 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
203 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
204 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
205 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
206 அறிவைத் தேடுவோம்!
207 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
208 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
209 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
210 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
211 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
212 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
213 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
214 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
215 “வேர்கள்” வரலாறு!
216 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
217 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
218 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
219 மனிதனின் தேவை ! – மன அமைதி
220 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
221 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
222 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
223 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
224 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
225 பேச்சு,மெளனம்
226 ஜனாஸா - மைய்யத்
227 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
228 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
229 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
230 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
231 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
232 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
233 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
234 வலிமார்கள் என்பவர்கள் யார்?
235 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
236 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
237 மனித குல விரோதி
238 எனது பெயர் ஜனாஸா!
239 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
240 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
241 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
242 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
243 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
244 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
245 தமிழரும் இசுலாமியரும்
246 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
247 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
248 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
249 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
250 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
251 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
252 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
253 கற்பனைகளும் இஸ்லாமும்
254 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
255 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
256 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
257 மது ஒரு பெரும் பாவம்
258 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
259 பெற்றோர்களைப் பேணுவோம்!
260 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
261 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
262 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
263 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
264 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
265 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
266 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
267 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
268 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
269 மறுமை வாழ்வை நேசிப்போம்!
270 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
271 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
272 சுதேசி சிந்தனைகள்.......
273 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
274 கல்வி நல்லோர்களின் சொத்து!
275 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
276 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
277 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
278 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
279 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
280 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
281 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
282 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
283 அறிவைத் தேடுவோம்!
284 ஆக்காதீர் ஆசனங்களாக
285 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
286 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
287 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
288 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
290 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
291 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
292 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
293 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
294 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
295 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
296 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
297 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
298 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
299 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
300 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
301 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
302 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
303 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
304 விசுவரூபம் ஒரு விளக்கம்
305 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
306 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
307 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
308 கண்ணாடிகள் கவனம்
309 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
310 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
311 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
312 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
313 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
314 கருத்து வேறுபாடுகள்.
315 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
316 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
317 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
318 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
319 ஓ! என் இளைய சமுதாயமே!
320 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
321 வீண் செலவு வேண்டாமே