இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்

இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்   தமிழில்: கான் பாகவி  

 

இலங்கைத் தீவில் ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு நபித்தோழர் சிலோன் வருகைதந்தார் என்றும் பிறகு அங்கிருந்து சீனா சென்றார் என்றும் இலங்கை முஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதுண்டு. பின்னர் அவர், கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களது காலத்தில் அரேபிய தீபகற்பம் சென்றார் என்று கூறுவர்.

 

அடுத்து அரபியர் வருகை தொடர்ந்தது. அங்கேயே திருமணமும் செய்துகொண்டனர். இஸ்லாம் பரவியது; முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியது. ஆக, தங்களின் மரபுமூலம் அரபுகள்தான் என்று இலங்கை முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர்.  

இலங்கைக்கு அரபியர் வந்ததற்குக் காரணம் இரண்டு. 1. வணிகம். இலங்கையில் உற்பத்தியாகும் மிளகு, நறுமணப் பொருட்கள் வாங்கிச் சென்றனர். 2. முற்காலத்திலிருந்தே முஸ்லிம்களிடம் ஒரு கருத்து நிலவிவருகிறது. ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சிலோனில்தான் இறங்கினார்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை. ‘ஆதம் மலை’ இலங்கையில் உண்டு. இன்றுவரை மக்கள் அதைக் காண வருகிறார்கள். அவ்வாறு அரபியரும் வந்திருக்கலாம்.  


பிறகு இந்தியா, மலாயா, ஜாவா, இந்தோனேஷியா ஆகிய பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் இலங்கை வந்து குடியேறினர். ஆக, இலங்கை முஸ்லிம்கள் என்போர் இவர்கள் எல்லாரும் சேர்ந்தவர்களே. இதனால்தான், இலங்கை முஸ்லிம்கள் பல மரபுவழியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.  

 

மக்கட்தொகை  

 இலங்கையில் 2012ஆம் ஆண்டு நடந்த அதிகாரபூர்வ மக்கட் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது:  

 

கிழக்கு மாகாணம்

  இலங்கையின் மொத்த மக்கட்தொகை 2 கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 723. இவர்களில் பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் ஆகியோர் அடங்குவர். இருப்பினும் பௌத்தர்களே பெரும்பான்மை மக்களாவர். அவர்கள் 1,42,22,844பேர் உள்ளனர். இது மொத்த மக்கட்தொகையில் 70.2 விழுக்காடு ஆகும்.  

 

அடுத்து இந்துக்கள் 25,54,606பேர். இது 12.6 விழுக்காடு. முஸ்லிம்களைப் பொறுத்தவரை 19,67,227 பேர்; சுமார் 2 மில்லியன். இது மொத்த எண்ணிக்கையில் 9.7 விழுக்காடு. இலங்கை முஸ்லிம்களில் 40 சதவீதம் பேர் கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்றனர். ஏனையோர் நாட்டில் பரவலாக வாழ்கின்றனர்.  

 

கல்வி நிலை  

 

இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலையைப் பார்த்தால், முன்பெல்லாம் பள்ளிவாசல்களில் உள்ள ஆரம்ப மதரசாக்களில் (மக்தப்களில்)தான் கல்வி கற்றுவந்தனர். அரசு பள்ளிகளுக்கு அருகிலும் மதரசாக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்நிய காலனியாதிக்கக் காலத்தில், முஸ்லிம்களுக்கென தனியான அரசு பள்ளிகள் நடந்துவந்தன.  

 

தற்போது முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் 780 அரசாங்கப் பள்ளிகள் முஸ்லிம்களுக்காக நடந்துவருகின்றன. இவற்றில் 3 லட்சம் மாணவ மாணவியர் பயில்கின்றனர்; 14 ஆயிரம் முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகள் கல்வி போதிக்கின்றனர்; போதனை மொழி தமிழ்.  

 

இதன்றி, 55 ஆயிரம் முஸ்லிம் மாணவ, மாணவியர் பௌத்தர்கள் பள்ளிகளில் சிங்கள மொழியில் கல்வி கற்றுவருகின்றனர். மொத்த முஸ்லிம் மாணவர்களில் இவர்கள் 17 விழுக்காடு. இவர்களுக்குச் சில பிரச்சினைகளும் உண்டு.  

 

எடுத்துக்காட்டாக, சிங்களப் பள்ளிகள் சிலவற்றில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களால் வெள்ளிக்கிழமைகளில் ஜுமுஆ தொழ முடிவதில்லை. முஸ்லிம் மாணவிகள் தலையை மறைப்பதற்கோ பர்தா அணிவதற்கோ தடை உள்ளது. சில நேரங்களில், பள்ளி வளாகத்தில் நடக்கும் புத்த மத வ


1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்
  கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.
 
2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி
  ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?
 
3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு
  அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.
 
4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி
  அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது.
 
5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
  அல்லாஹ் அலெப்போவின் ஆளுநராக இமாதுத்தீன் ஸெங்கியை ஆக்கி முஸ்லிம்களுக்கு அருள் புரியாமல் இருந்திருந்தால், பரங்கியர்கள் சிரியா முழுவதையும் கபளீகரம் செய்திருப்பார்கள் என்று எழுதியுள்ளார் வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர்.
 
6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
26 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
27 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
32 திருநெல்வேலி வரலாறு...!
33 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
34 அந்த இரண்டணா ......
35 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
36 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
42 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
43 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
44 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
45 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
46 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
47 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
48 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
49 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
50 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
56 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
57 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
58 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
59 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
60 சூஃபிக்களும் புனித போர்களும்
61 யார் தேச விரோதி?
62 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
63 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
64 விடுதலைப்போரில் வீரமங்கையர்
65 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
66 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
67 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
68 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
69 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
70 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
71 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
72 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
73 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
74 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
75 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
76 தமிழகத்தில் முஸ்லீம்கள்
77 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
78 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
79 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
80 பாடலியில் ஒரு புலி
81 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
82 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
83 முதல் சுதந்திரப் பிரகடனம்
84 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
85 காலித் பின் வலீத் (ரலி)
86 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
87 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
88 முதல் வாள்!
89 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
90 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்