தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!

தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!


By பழ. கருப்பையா

அரசியல் நிருணய சபை தேசிய மொழி குறித்து விவாதிக்கிறது. பல்வேறு வகையான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒருவர் சமக்கிருதத்தைத் தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்றுகூடச் சொல்கிறார்.
ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்று சொல்கிறவர்களும் இருந்தார்கள். ஆயினும் இந்தியின் குரலே கனமான குரலாக இருந்தது.

பக்குவமடைந்த பூரணத்துவம் இல்லாத இந்தியை ஆட்சி மொழியாக ஆக்குவது பயனற்றது என்றொரு குரல் இடைமறித்து ஒலிக்கிறது. எந்த ஒன்றையும் அதன் தகுதி அடிப்படையில் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய, எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது என்று அந்தக் குரலுக்குரியவர் ஆணித்தரமாக இந்திக்கு எதிரான வாதங்களை அடுக்கி மொழிகிறார். இந்திக்காரர்கள் உறைந்து போய் விடுகின்றனர்.

ஆங்கிலத்திற்காகப் பரிந்து பேசுவோர் கூட்டத்தில் இவரும் ஒருவராக இருப்பார் போலும் என்று அவர்கள் கருதிக் கொண்டிருக்கும்போது, விடுதலை அடைந்த இந்தியாவின் ஆட்சி மொழியாக ஓர் இந்திய மொழியே இருக்க வேண்டும் என்று அந்தக் குரலுக்குரியவரின் வாதம் தொடர்கின்றது. அவை குழப்பமடைகிறது. இவர் யார், என்ன சொல்வதற்கு அடித்தளமிடுகிறார்?
குரலுக்குரியவரின் பெயர், அவருடைய நீண்ட உடை, தொப்பி, அவர் முகத்தை அலங்கரிக்கும் தாடி இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, இவர் உருது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறவராக இருப்பார் என்று எண்ணிக் கொள்கிறது அவை.

காந்தியே உருதுவை ஒதுக்கி விட்டு இந்தியா நிலை கொள்ள முடியாது என்று கருதினார். அதனால், அவர் இந்துத்தானி என்றொரு கலப்பு மொழியை முன்மொழிந்து பேசிக் கொண்டிருந்தார்.

ஈசுவர அல்லா தேரே நாம் என்றவர் காந்தி. ஈசுவரன் என்று சொன்னால் என்ன அல்லா என்று சொன்னால் என்ன என்று கேட்ட காந்தி, அவர்கள் இருவரின் மொழியையும் இணைத்து ஒரு கலவை மொழியை உருவாக்கி அதற்கு இந்துத்தானி என்று பெயரிட்டார். மொழிகளை இணைத்தால் மனிதர்கள் இணைந்து விடுவார்கள் என்று நம்பினார், பேரறிவுடைய பெம்மான் காந்தி.
இந்துத்தானி எடுபடவில்லை. அது இந்துவுக்கும் பிடிக்கவில்லை; முசுலீமுக்கும் பிடிக்கவில்லை.

பேசுகிறவர் தொடர்கிறார்: இந்தியா பெரிய நாடு. அதன் அலுவல் மொழியாகத் திகழத்தக்க மொழி சொல்வளம் மிக்க மொழியாக இருக்க வேண்டும். புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும்.
இலக்கண இலக்கிய வளமுடையதாக இருக்க வேண்டும்.

தொன்மையானதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழிதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்.

இவர் எதைச் சொல்ல வருகிறார்? உருதுவுக்கு அவ்வளவு தொன்மை இல்லை. ஒருவேளை மிகவும் தொன்மை என்பதால் சமக்கிருதமாக இருக்குமோ? அது தொன்மையும் எல்லாச் சிறப்புகளும் உடைய மொழிதான். அவை மேலும் குழம்புகிறது.

வாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அவர் அழுத்தந் திருத்தமாக ஆணித்தரமாக மொழிகிறார்: இந்தியாவின் ஆட்சி மொழியாவதற்குக் தகுதியுடைய மொழி தமிழ்தான்!  அவர் அத்தோடு முடிக்கவில்லை, அதுதான் என் தாய்மொழியும்கூட என்று சொல்லி முடிக்கிறார்.

மேசைகள் தட்டப்படவில்லை. ஆரவார முழக்கங்கள் எழவில்லை. அந்த அரசியல் நிருணய சபையில் இன்னும் பல தமிழர்கள் இருந்தார்கள். அவர்களில் யாரும் இவரை வழிமொழிந்து பேசவில்லை.
அவ்வாறு பேசியவர் முகம்மது இசுமாயில் சாகிபு அவர்கள். அதுதான் அவருடைய இயற்பெயர். அவர் திருநெல்வேலி பேட்டையில் பிறந்தவர். பின்னாளில் இயற்பெயர் முற்றாக மறைந்து காயிதேமில்லத் என்ற புகழ்ப் பெயராலேயே அறியப்பட்டவர்.

காயிதேமில்லத் அரசியல் நிருணய சபையில் வைத்த வாதத்தால் இந்திய அளவில் இந்தி குறித்த நிலையில் மாற்றமோ, தமிழுக்கு ஏற்றமோ வந்துவிடவில்லை என்றாலும், தமிழ்நாட்டு உணர்வுப் போக்கில் அவருடைய அழுத்தமான சிந்தனைப் போக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது
அரசியல் நிருணய சபையில் மும்மது இசுமாயில் சாயுபு பேசியது 1949 செப்டம்பர் 14-இல். அந்த காலகட்டம் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முளைவிட்டிருந்த காலம். பெரியார் ஒரு பக்கம். அண்ணா இன்னொரு பக்கம்.

பாணினி சமக்கிருதத்திற்கு வரைந்த மொழி இலக்கணம் என்பதற்கு மேலே பல படிகள் சென்று, தமிழுக்கு எழுத்து, சொல் ஆகியவற்றிற்கான இலக்கண வரையறைகளோடு, பொருளிலக்கணமும் வரைந்தான் தொல்காப்பியன். உலக மொழிகளிலேயே பொருளிலக்கணம் பெற்ற ஒரே மொழி தமிழ்தான்.
மொழி, இன உணர்வில் திராவிட இயக்கத்தோடு, காயிதேமில்லத் கைகோத்து நின்றது திராவிட இயக்கம் வலிமை பெறவும், தமிழன் என்னும் இன உணர்வு கெட்டிப்படவும் மிகப் பெரிய அளவுக்குக் காரணமானது.

முகம்மது இசுமாயில் சாயுபு காயிதேமில்லத் என்று அழைக்கப்பட்டது போல, முகம்மது அலி சின்னா காயிதே ஆசாம் என்று அழைக்கப்பட்டார்.
பாகித்தானின் தந்தையான முகம்மது அலி சின்னாவோடு காயிதேமில்லத்திற்கு நல்ல உறவு இருந்தது. அவருடைய கராச்சி மாநாட்டுக்கெல்லாம் முற்காலங்களில் சென்று வந்தாலும் கூட, முசுலிம் என்பதை காயிதேமில்லத் தன்னுடைய நாட்டுப் பற்றுக்கும் மொழிப்பற்றுக்கும் குறுக்கே வர அனுமதிக்கவில்லை.

இந்தியாவில் இரண்டு வினோதமான மாநிலங்கள் இருந்தன. ஒன்று: காசுமீர் இன்னொன்று: ஐதராபாத்.
காசுமீரில் முசுலிம்களே பெரும்பான்மையினர். அதை ஒரு இந்து மன்னர் ஆண்டார்!
ஐதராபாத்தில் இந்துக்களே பெரும்பான்மையினர். இதை ஒரு முசுலீம் மன்னர் ஆண்டார்!
காசுமீர் இந்து மன்னரால், சேக் அப்துல்லா போன்ற மக்கள் தலைவரின் ஆதரவுடன், இந்தியாவில் இணைக்கப்பட்டது.
ஆனால், ஐதராபாத் நிசாம் இந்தியாவுடன் இணைய மறுத்து முரண்டு பிடித்தார். போலீசு நடவடிக்கையால் சில மணி நேரங்களில் நிசாமை மண்டியிட வைத்தார் இரும்பு மனிதர் வல்லபபாய் படேல்.அந்த நடவடிக்கையை ஆதரித்தார் காயிதேமில்லத்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சீனா 1962-இல் இந்தியா மீது பாய்ந்தபோது, அந்தப் போரில் பங்கு கொள்ள தன்னுடைய ஒரே மகனைப் போர் முனைக்கு அனுப்புவதாக நேருவுக்கு எழுதுகிறார். நெகிழ்ந்து போகிறார் நேரு.
யாருக்கும் எந்தப் பரிந்துரையுமே செய்து பழக்கப்பட்டிராத இராசாசி, காயிதேமில்லத்தின் பேத்திக்கு மருத்துவக் கல்லூரியில் இடமளிக்கச் சொல்லிப் பரிந்துரைத்தபோது, ஒரு தேசபக்தரின் பேத்தி என்று அடையாளப்படுத்துகிறார்.
காயிதேமில்லத் அடிப்படையில் திருநெல்வேலித் தமிழன். அந்த உணர்வு அவருடைய இரத்த அணுக்களில் கலந்திருந்தது. காயிதே ஆசாம் முகம்மது அலி சின்னாவிடமிருந்து வேறுபட்டு நிற்கக் காயிதேமில்லத்தால் முடிந்தது.
காயிதேமில்லத் நல்ல முசுலீமாகவும் இருந்தார். அவர்களுடைய உரிமைகளுக்குப் பாடுபட்டார். குரல் கொடுத்தார்; போராடினார்.
நாங்கள் சரியத் சட்டத்தைக் கடைப்பிடிப்பதிலும், எங்கள் மார்க்க முறைப்படி மணந்து வாழ்வதிலும் உங்களுக்கென்ன சிரமம் இருக்கிறது என்னும் கேள்வியைச் சீற்றத்துடன் எழுப்பும்போது அவர் சிறுபான்மை மக்களின் காவலனாக வெளிப்படுகிறார்.

முகம்மது அலி சின்னாவின் பார்வை முற்றாக மதவழிப் பட்டது. அவருக்கு மதம்தான் நாட்டுக்கான அடிப்படை.

நீங்கள் வேறு, நாங்கள் வேறு வேறு; நாகரிகம்; வேறு வேறு; பண்பாடு வேறு, பழக்கவழக்கங்கள் வேறு வேறு; வாழ்க்கை முறை வேறு வேறு; மொழி வேறு வேறு; இனம் நீங்களும் நாங்களும் ஒன்றாக இருக்க முடியாது என்றார் சின்னா.
எல்லாவற்றினும் முக்கியமானது, இந்துக்களாகிய நீங்கள் பெரும்பான்மையினர். முசுலீம்களாகிய நாங்கள் சிறுபான்மையினர். எங்களை அடித்துத் துவைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவீர்கள். உங்களுக்குக் குற்றேவல் செய்து வாழ நேரிடும். ஆகவே, இந்தியாவை மதவழியாக உடையுங்கள் என்றார் சின்னா.

அவருடைய பேச்சில் பொருளில்லை என்று சொல்ல முடியாது. குடியாட்சி என்பது குறைகளே அற்ற ஆட்சி இல்லை. குறைவான குறைகளை உடையது. அவ்வளவுதான். ஆனால், குடியாட்சியில் பொறுத்துக் கொள்ள முடியாத, மிகவும் கேவலமான தன்மை ஒன்று உண்டென்றால், அது பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களைக் கொத்தடிமைகளாக்கி விட முடியும் என்பதுதான். இதைச் சட்டப்படியே செய்ய முடியும். எண்ணிக்கை வலிமைதானே குடியாட்சி!

மொழி வழிச் சிறுபான்மையரும் (ப்ண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீ ம்ண்ய்ர்ழ்ண்ற்ண்ங்ள்) மதவழிச் சிறுபான்மையினரும் (ழ்ங்ப்ண்ஞ்ண்ர்ன்ள் ம்ண்ய்ர்ழ்ண்ற்ண்ங்ள்) அச்சமின்றி வாழ்ந்தால்தான் இந்தியா ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடாக வரைபடத்தில் எஞ்சும் என்பது எம்மான் காந்திக்கு புரிந்திருந்தது.

குசராத் போர்பந்தரில் அந்தப் புத்லிபாய் ஒரு புத்திரனைப் பெற்றிருக்காவிட்டால், இந்தியா ஏது? வெள்ளைக்காரன் பங்கு பிரித்துக் கொடுத்துவிட்டுத்தான் கப்பல் ஏறி இருப்பான்.
காந்தியின் செல்வாக்கும், நேரு போன்றவர்களின் நடைமுறையும், சமயச் சார்பின்மை, மற்றும் மொழிவாரி மாநிலங்களும், மதவழி வெறுப்பும், அதன் வழி எதிர்ப்பும் ஏற்படாதவாறு தடுத்தன.
அதனால்தான் காயிதேமில்லத் இந்துவுக்கு எதிராகக் கச்சை கட்டவில்லை. இந்திக்கு எதிராகக் கச்சை கட்டினார்.
தமிழ்ப் போரில் ஏராளமான கிறித்தவர்கள் பங்கு கொண்டனர். கால்டுவெல்லும், போப்பும், பெசுகி முனிவரும் வளர்த்த தமிழ்தானே.
அதே மொழிப் போரில் இசுலாமியர்கள் பங்கு கொண்டதற்கும், தமிழின உணர்வாளர்களாக அவர்கள் முன்னின்றதற்கும், முசுலீம் லீக் மட்டுமே தங்களின் கட்சியாக இருக்க முடியும் என்று கருதாமல், தமிழன் என்னும் அடிப்படையில், திராவிட இயக்கங்களில் பெரியார் மற்றும் அண்ணாவைப் பின்பற்றுவோராக அவர்கள் திகழ்ந்ததற்கும், மொழிப் போரில் காயிதேமில்லத் போன்றவர்கள் முன்கை எடுத்ததுதானே காரணமாய் இருக்க முடியும்.
மதவழிக் கேள்விகளுக்கு முசுலீமாய் நின்று முடிவு கண்டார் காயிதேமில்லத்.
தமிழா? இந்தியா? என்ற கேள்விக்குத் தமிழனாய் நின்று முடிவு கண்டார்.
வங்கதேசப் போரில் இந்தியாவா பாகித்தானா என்னும் கேள்விக்கு இந்தியனாய் நின்று முடிவு கண்டார்.

மத வழி நாடு கொண்டார் காயிதே ஆசாத் முகம்மது அலி சின்னா. இன வழியாக வங்கதேசம் உடைந்து போனது.
தமிழ் இன வழி அடையாளங் கண்டார் காயிதேமில்லத். தமிழ்மண்ணில் இந்துத்துவா வேர் கொள்ள முடியவில்லை!    

நன்றி ;;;தினமணி






1 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
  நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது.
 
2 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
  காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF)
 
3 பாலஸ்தீனத்தின் பெருமை
  பல நபிமார்கள் வாழ்ந்த இடம். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம்
 
4 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
  சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.
 
5 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
  உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
 
6 உணரப் படாத தீமை சினிமா
7 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
8 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
9 விரக்தி விஷத்தை விட கொடியது
10 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
11 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
12 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
13 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
14 அந்தப் பெண்களாக நாம்...
15 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
16 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
17 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
18 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
19 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
20 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
21 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
22 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
23 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
24 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
25 இளையான்குடியில் உருது மக்கள்
26 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
27 மரணம் நோக்கி...
28 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
29 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
30 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
31 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
32 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
33 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
34 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
35 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
36 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
37 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
38 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
39 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
40 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
41 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
42 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
43 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
44 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
45 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
46 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
47 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
48 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
49 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
50 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
51 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
52 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
53 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
54 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
55 எது வணக்கம்..?
56 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
57 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
58 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
59 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
61 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
62 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
63 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
64 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
65 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
66 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
67 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
68 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
69 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
70 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
71 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
72 மனைவியை_நேசிங்கள்..
73 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
74 அம்மா! அம்மா!
75 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
76 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
77 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
78 இமாம்களும் மத்கபுகளும்.
79 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
80 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
81 பராஅத் இரவின் சிறப்புகள்
82 வாப்பா!
83 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
84 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
85 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
86 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
87 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
88 இதிலென்ன வெட்கம்?
89 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
90 பழையன கழிதலும் புதியன புகுதலும்
91 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
92 கற்பில் கவனம் தேவை
93 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
94 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
95 இஸ்திஃகாராவின் சிறப்பு
96 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
97 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
98 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
99 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
100 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
101 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
102 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
103 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
104 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
105 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
106 இறுக்கமும் இரக்கமும்
107 இஷா தொழுகையும் இரவு உணவும்
108 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
109 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
110 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
111 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
112 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
113 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
114 பெயர்களை நினைவில் வைப்போம்
115 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
116 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
117 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
118 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
119 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
120 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
121 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
122 ஒரு 2.5 கதை
123 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
124 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
125 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
126 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
127 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
128 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
129 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
130 குறைகளை மறைத்தல்
131 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
132 நல்ல பெண்மணி
133 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
134 💥 யார் அந்த மாமனிதர்..?
135 ஈர்ப்பை விதைப்போம்!
136 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
137 யார் இந்த துலுக்கன்?
138 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
139 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
140 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
141 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
142 நிம்மதி - சிறுகதை
143 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
144    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
145 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
146 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
147  வாழ்க்கை வாழ்வதற்கே !
148 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
149 விற்கப்படும் மார்க்கம்
150 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
151 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
152 பார்வைகள் பலவிதம் !
153 நேர மேலாண்மை / திட்டமிடல்
154 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
155 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
156 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
157 தந்தைகளே! கவனியுங்கள்
158 வரலாறு புகட்டும் பாடம்
159 அல்குர்ஆன் என்னும் மதுரம்
160 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
161 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
162 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
163 நாம் தான் முயல வேண்டும்.
164 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
165 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
166 கற்பா? கல்லூரியா?
167 கசாப்புத் தொழில் சிறந்தது....
168 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
169 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
170 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
171 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
172 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
173 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
174 என் ஹிஜாப் என் உரிமை!!!
175 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
176 முகமாகும் பெண்கள்!!
177 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
178 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
179 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
180 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
181 செல்போன்கள்... ஜாக்கிரதை!
182 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
183 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
184 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
185 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
186 ஈமானே-உன் விலையென்ன?
187 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
188 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
189 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
190 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
191 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
192 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
193 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
194 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
195 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
196 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
197 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
198 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
199 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
200 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
201 அறிவைத் தேடுவோம்!
202 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
203 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
204 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
205 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
206 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
207 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
208 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
209 “வேர்கள்” வரலாறு!
210 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
211 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
212 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
213 மனிதனின் தேவை ! – மன அமைதி
214 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
215 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
216 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
217 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
218 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
219 பேச்சு,மெளனம்
220 ஜனாஸா - மைய்யத்
221 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
222 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
223 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
224 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
225 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
226 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
227 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
228 வலிமார்கள் என்பவர்கள் யார்?
229 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
230 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
231 மனித குல விரோதி
232 எனது பெயர் ஜனாஸா!
233 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
234 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
235 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
236 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
237 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
238 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
239 தமிழரும் இசுலாமியரும்
240 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
241 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
242 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
243 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
244 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
245 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
246 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
247 கற்பனைகளும் இஸ்லாமும்
248 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
249 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
250 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
251 மது ஒரு பெரும் பாவம்
252 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
253 பெற்றோர்களைப் பேணுவோம்!
254 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
255 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
256 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
257 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
258 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
259 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
260 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
261 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
262 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
263 மறுமை வாழ்வை நேசிப்போம்!
264 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
265 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
266 சுதேசி சிந்தனைகள்.......
267 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
268 கல்வி நல்லோர்களின் சொத்து!
269 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
270 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
271 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
272 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
273 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
274 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
275 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
276 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
277 அறிவைத் தேடுவோம்!
278 ஆக்காதீர் ஆசனங்களாக
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
280 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
281 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
282 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
283 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
284 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
285 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
286 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
287 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
288 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
289 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
290 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
291 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
292 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
293 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
294 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
295 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
296 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
297 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
298 விசுவரூபம் ஒரு விளக்கம்
299 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
300 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
301 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
302 கண்ணாடிகள் கவனம்
303 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
304 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
305 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
306 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
307 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
308 கருத்து வேறுபாடுகள்.
309 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
310 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
311 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
312 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
313 ஓ! என் இளைய சமுதாயமே!
314 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
315 வீண் செலவு வேண்டாமே