ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!



              மவ்லவி S.N.R. ஷவ்கத் அலி மஸ்லஹி,

                       98658-04000

லப்பைக் … அல்லாஹும்ம லப்பைக்…
லப்பைக் … லாஷரீக்க லக லப்பைக்…

இந்த தெருக்குரலுக்கு சொந்தக்காரன் யார்…? நம்மை நிம்மதியாக இருக்கவே விட மாட்டார்களா…? இன்றைக்கு கட்டாயம் அவனது தலையை வெட்டி எடுத்து விட வேண்டும்…ஒரே எண்ணத்தோடு ஓர் இளைஞர் படை ஓடி வரத்துவங்கியது. கையில் அரிவாள்களுடன்.

நல்லவேளை அத்திருக்குரலுக்கு “யார் சொந்தக்காரர்” என்பதை ஊர் பெரியவர்கள் உடனடியாக புரிந்து கொண்டு நிகழவிருந்த கொலை வைராக்கியத்தை எப்படியோ தடுத்து நிறுத்தி விட்டார்கள். அவசர புத்திக்காரர்களே… இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா…?

  ”இவர்தான் எமாமா மாகாண மன்னர்” இவர் வழியாகத்தான் நமக்கான தானியப்பொருட்கள் தாராளமாக நம்மூருக்கு வந்து கொண்டிருக்கின்றன. திகைத்து நின்றார்கள். மக்கத்து இளைஞர்கள் மன்னரே… நீங்கள் எப்போது மதம் மாறினீர்கள்…? இஸ்லாமியக் கோலத்தில் இங்கு நிற்கிறீர்கள்…? உங்களது மூதாதையர்களின் மார்க்கத்தை விட்டுவிட உங்களுக்கு எப்படி துணிவு வந்தது…?

ச்சே…! நான் மதம் மாறவில்லை மார்க்கங்களிலேயே மிக அற்புதமான மார்க்கமான இஸ்லாமை நான் தழுவி இருக்கிறேன்… மனிதர்களிலேயே மிக அற்புதமான மனிதரான நபி முஹம்மதை நான் பின்பற்றத் தொடங்கி இருக்கிறேன். இச்சொற்களை கேட்கக் கேட்க தேகக் குருதிகள் கொதிக்கத் தொடங்கின என்றாலும் என்ன செய்வது… பொருளாதாரத்திற்கான ஒரே வாசல் இந்த எமாமா தான் அதுவும் அடைபட்டுப் போனால்… நமது நிலை என்ன… பஞ்ச கால பயங்கரங்கள் பயமுறுத்தின.

இரத்தக் கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கியது. அந்தவேளை சற்றும் எதிர்பாராத நிலை எமாமா மன்னர் சொன்னார். “இனிமேல் ஒருபோதும் உங்களுக்கு என் மாகாணத்திலிருந்து எந்த வித தானியமும் வராது இது இறைவன் மீது சத்தியம்… உங்களில் கடைசி நபர் இஸ்லாமை ஏற்கும் வரை இதே நிலை தான் தொடரும்…’ மீண்டும் சொல்லத் தொடங்கினார் …லப்பைக்… அல்லாஹும்ம லப்பைக்… லப்பைக்… லாஷரீக்க லக லப்பைக்…


ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு…

இஸ்லாமை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்த வேண்டும்… இனி என்ன செய்யலாம்… யோசித்த வேளை திடீர் என அந்த யோசனை அண்ணலாருக்கு வரத் தொடங்கியது…

திசை எட்டும் எட்டட்டும்… எழுதத் தொடங்கினார்கள். எட்டுக்கடிதங்கள் இதுவரை எவரும் அவ்வளவு தைரியத்துடன் செய்திராத செயல் அது. பெரும் பெரும் மாகாணப்பிரபுகளுக்கு “இஸ்லாமிய அழைப்பிதழ்” அனுப்புவது என்பது அவ்வளவு சாதாரணமானதா என்ன… அக்கடித அழைப்பிதழ்களுல் ஒன்று “எமாமா” மன்னருக்கும் பறந்தது எதிர்பார்த்தது போலவே அவரது “எதிர்வினை” செயல்படத் தொடங்கியது.

புதிய மார்க்கத்தை முஹம்மது தானே அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்… இன்றைக்கு என் அரசவைக்கே அஞ்சலா? அவரது தலையை கொய்துவிட்டால்… இனி என்றைக்குமே இல்லையல்லவா இன்னொரு அஞ்சல்… சைத்தானிய மனம் கொலை வானில் வட்டமடிக்கத் தொடங்கியது… முஹம்மதியத் தோழர்களில் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து “ஷஹீத் வீரத்தியாகி” என்ற பட்டமளிப்பு விழாவும் நடத்தவே செய்தார் என்றாலும் இறைவனின் விதி வேறு ஒன்றாக இருந்தது.

  இம்மஸ்ஜிதின் தூணில் இவரை கட்டி வைத்தது யார்…?

  “இறைத்தூர்: இவர் யார் என்று தெரியுமா…?

  “இறைத்தூதரே … எங்களுக்குத் தெரியாது.

  “இவர் தான் ஃசுமாமா பின் ஆஸால் அல் ஹனஃபீ” இவரை கனிவுடன் கவனித்துக் கொள்ளுங்கள்… முறையான உணவும், சரியான உடையும் கொடுங்கள்”

உலகிலேயே கைதியை பெயர் சொல்லி அழைத்த ஒப்பற்ற ஒரே தலைவர் இவராகத் தான் இருக்க முடியும் அதுவும் “கனிவுடன்” கவனித்துக்கொள்ளுங்கள் (அஹ்சினூ…) என்று சொன்ன தலைவர்/ அதிபதி/மன்னர்/ இராணுவத்தளபதி இவரைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்…?


ஃசுமாமாவுக்கு ஒன்றுமே புரியவில்லை நான் எப்படி இங்கு வந்தேன்… நான் என் நாட்டிலிருந்து இறை ஆலயத்தை தரிசித்து இறைவனுக்காக அவனை நினைவூட்டும் திருச்சிலைகளின் பொற்பாதங்களில் திருப்பலி கொடுக்க வேண்டும் என்று எண்ணித்தானே மக்கா நோக்கி புறப்பட்டேன்… எனக்கு என்ன ஆனது… இப்படி நான் மதீனத்து மஸ்ஜிதின் தூணில் கட்டுண்டு கிடக்கிறேனே… எண்ண ஓட்டம் அலை அலையாய் அலைக்கழித்தது.

ஃசுமாமா… அவர் முன்நாட்களில் செய்திருந்த கொலைகளுக்காக தேடப்படும் நபராக இருந்தார். அவர் மக்கா நோக்கிச் செல்லும் வழியில் எங்கிருந்தோ வந்த “குதிரைப்படை” ஒன்று அவரை மதீனப்பள்ளித் தூணில் கட்டிப்போட்டுச் சென்றுவிட்டது. இறைவனின் திருவிளையாடல் என்பது இதுதானோ… நாட்கள் நகர்ந்தன… ஃசுமாமா எதிர்பார்க்கவில்லை. யாருடைய தலை கொய்யப்பட வேண்டும் என்று இதுவரை கங்கணம் கட்டிக்கொண்டிருக்கப்பட்டதோ, யாருடைய முகம் பார்க்கப்படக்கூடாது என எண்ணப்பட்டதோ இதோ… அவரே அங்கு வந்து விட்டார். நடு நடுங்கிப் போனார் ஃசுமாமா.

ஃசுமாமா உன்னிடம் என்ன அபிப்ராயம் இருக்கிறது? “முஹம்மதே ! நீங்கள் நினைத்தால் என்னை “கொலை” செய்துவிடலாம்… நீங்கள் நினைத்தால் எனக்கு “உயிர்ப்பிச்சை” கொடுக்கலாம்… நீங்கள் விரும்பினால் உங்களுக்கான பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

 “நபி ஒன்றும் சொல்லவில்லை நபி ஒன்றுமே சொல்லவில்லை” இன்னும் இரண்டு நாள் உருண்டோடியது மீண்டும் அவரிடம் அதே கேள்வி ஃசுமாமா உன்னிடம் என்ன அபிப்ராயம் இருக்கிறது? அதே பதில்… இறைத்தூதரின் இனிய எதிர்பார்ப்பு வேறு ஒன்றல்லவா… ஆனால் அவருக்கு அது எங்கே தெரியப்போகிறது?

அடுத்தநாள்… அதே கேள்வி… அதே பதில் என்ன நடக்கும்… யாருமே எதிர்பார்க்கவில்லை “ஃபக்கூ…வ – அத்லிகூ…” அவரை விட்டு விடுங்கள்! அவிழ்த்து விடுங்கள் !! திகைத்துப் போனார் ஃசுமாமா.

கடந்த சில நாட்களாக மதீனப்பள்ளியில் நடந்தவற்றை எல்லாம் கண்கூடாக பார்த்துப் பார்த்து பரவசப்பட்டுப் போயிருந்தார். அணு ஆயுதங்கள் இல்லை, சண்டை சச்சரவுகள் இல்லை. அமைதி… அமைதி… அமைதியைத்தவிர அங்கு வேறொன்றும் இல்லை. அங்கு பேதங்கள் இல்லை கறுப்பு / வெள்ளை கலர் பேதங்கள் இல்லை அரபு/ அஜமி மொழி பேதங்கள் இல்லை உயர்வு/ தாழ்வு குல பேதங்கள் இல்லை வர்க்க பேதங்கள் இல்லை, வர்த்தக பேதங்களும் இல்லை. அடடே… எங்கு பார்த்தாலும் அணி அணியாய் பணிவும் குனிவும் தான் அதைத்தவிர வேறொன்றுமே அங்கு இல்லை.

ஒரே இறைவன், ஒரே இறைத்தூதர், ஒரே வேதம், ஒரே நடைமுறை ஆஹா… எவ்வளவு அற்புதம்… ஆஹா என்னே அதிசயம்…ச்சை… இந்த மார்க்கத்தையா நாம் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று எண்ணினேன்… தன்னைத்தானே நொந்து கொண்டார்… தான் போட்ட கொலைத்திட்டத்திற்கு பரிகாரம் என்ன… அதிருப்தி மனம் அசைபோடத் தொடங்கியது. திடீரென்று அவரது இதய வானில் மின்னல் வெட்டத்தொடங்கியது.

வேக வேகமாக மஸ்ஜிதை விட்டு வெளியேறினார். நேராக கிணற்றுக்குச் சென்றார் (நல்லவேளை உள்ளே குதித்து தற்கொலை ஒன்றும் செய்து கொள்ளவில்லை) குளித்தார், புத்தாடை அணிந்தார், நறுமணம் பூசினார் மீண்டும் மதீனப்பள்ளிக்கு ஓடோடி வந்தார் அப்போது அவரது உதடுகள் உச்சரிக்கத் தொடங்கின… “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வ – அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ – ரசூலுஹு” அடடே… இதைதானே இறைத்தூதர் “ஃசுமாமா… உன்னிடம் என்ன அபிப்ராயம் இருக்கிறது” என்று அடிக்கடி கேட்டதின் சூட்சுமம் என்பது அன்று அவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்…

திருக்கலிமாச்சொற்களை மொழிந்த அவரது திரு உதடுகள் இதையும் சொல்லத் தொடங்கின… தூதரே… (முன்பு முஹம்மதே… என்று பெயர் சொல்லி அழைத்தவர் இப்போது “ரசூலே…” என்று எவ்வளவு அமைதியாய் அழைக்கிறார்… ஆ…இதுவல்லவா… உண்மையான உயர்மாற்றம்…,

இந்த பூமியிலேயே மிக மிக வெறுப்புக்குறிய பூமியாக இந்த மதீனா இருந்தது. இந்த பூமியிலேயே மிக மிக வெறுப்புக்குறிய மார்க்கமாக இந்த இஸ்லாம் இருந்தது. இந்த பூமியிலே மிகமிக வெறுப்புக்குறிய முகமாக உங்கள் முகம் இருந்தது. ஆனால் இவை யாவுமே இப்போது முழுவதுமாக அப்படியே மிகமிக பிரியத்திற்குறிய, பிரிந்தும் இருந்துவிட முடியாத ஒன்றாக எனக்குள் மாறிப்போய்விட்டது… உண்மையிலேயே இதயங்களை ஆள்பவன் இறைவன்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லவேயில்லை ஆனந்தக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார் சுதந்திரமிகு ஃசுமாமா.

 “தூதரே…! கொலைகள் சில செய்திருக்கிறேனே… என்ன தண்டனை எனக்கு”?

இஸ்லாமுக்கு முன் செய்தவை யாவும் முன் செய்தவையே ! அவற்றிற்காக பழி வாங்கல் என்பதெல்லாம் இனி இல்லை. இனி நீ செல்லலாம்…! என்றார்கள். மீண்டும் அங்கிருந்து இறை ஆலயத்தை தரிசிக்க புறப்பட்டுச் சென்றார் ஆனால் இப்போது அவரது இதயத்திலிருந்து திரு உருவச்சிலைகள் முழுப்பிம்பங்கள் யாவும் முற்றிலுமாக மூர்ச்சையாகிப் போய் இருந்தன.

இஸ்லாமிய இனிமை மிகு ஆடையான இஹ்ராமிய ஆடை அணிந்து கொண்டு அடியெடுத்து வைக்கத் தொடங்கினார் அவரது உதடுகள் உச்சரிக்கத் தொடங்கின. லப்பைக்… அல்லாஹும்ம லப்பைக் பிறகு நடந்த வரலாறுதான் உங்களுக்குத் தெரியுமே…!

மக்கத்து மக்கள் மாநபிக்கு எமாமாவின் “பொருளாதாரத்தடை” குறித்து உருக்கமாய் ஒரு கடிதம் எழுத… மீண்டும் கருணைமிகு கன்னல் நபி ஃசுமாமாவுக்கு “தானியத்தடை நீக்கம்” குறித்து கடிதம் எழுத அதன்பிறகுதான் “மக்கத்துப்பஞ்சம்” நீங்கியது என்கிறது இஸ்லாமிய இன் சுவை வரலாறு. ஆதாரம்: ஹயாதுஸ்ஸஹாபா அரபு நூல்

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப வள்ளல் நபியின் வாழ்வியலை அறிந்து கொள்ள இந்த ஒரே ஒரு நிகழ்வு நமக்குப் போதுமானதுதான்.

இன்றைக்கு கலகங்களும், கலவரங்களும், கொலைகளும், கொள்ளைகளும் பெருகப் பெருக கைதிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் பெருகிக் கொண்டே தான் வருகிறது. சிறைச்சாலைகளே கைதிகளின் நெருக்கடிகளால் சிரமப்பட்டு தனது சுதந்திரங்களை முழுமையாக இழக்கத் தொடங்கிவிட்டன.

கைதிகளுக்கான தீர்வு என்ன? சர்வதேசமெங்கும் இதற்கான விடையைத் தேடித்தான் விழிபிதுங்கி நிற்கிறது. இதற்கான விடை மிக எளிதானது என்றாலும் நடைமுறை வாழ்வு சிக்கல் படுத்தி வைத்திருக்கிறது எனினும் “முடியாதது” என்று உலகில் எதுவுமே இல்லை” என்பதுதான் உண்மை.

ஃசுமாமாவை ஈகை நபி கட்டிப்போட்டது ஈச்சமரக்கயிறுகளால் அல்ல ஈகைமிகு இஸ்லாமியக் கயிறுகளால் தான் என்பதை எவ்வளவு எளிதாய் அவரது “மனமாற்ற இஸ்லாமியத் தழுவல்” ஒரு பேருண்மையை நிரூபித்துச் சென்று விடுகிறது. மதபோதகங்கள் நின்று நிதானித்து அசை போட்டுப்பார்த்துச் செல்ல வேண்டிய நேரம் இது.

உங்களிலிருந்தே ஒரு தூதர் திட்டமாக உங்களிடம் வந்துவிட்டார். நீங்கள் வருத்தப்படுவது அவருக்கு கஷ்டமாக இருக்கும். உங்களின் மீது பேராசை கொண்டவர்.

இறை நம்பிக்கையாளர்களின் மீது கருணையும், கிருபையும் உள்ளவர் (அல்குர்ஆன் 9:128)  இந்த ஒற்றை வசனம் ஒன்றே போதும் நபிகள் நாயகத்தின் நற்பண்பை நல்லபடி எடுத்தியம்ப…

நபிகளார் தீனுல் இஸ்லாமை திக்கெங்கும் பரப்பும் நோக்கில் அருகேயுள்ள “தாயிஃப்” நகருக்குச்சென்றபோது அவ்வூர் மக்கள் கடும் சொற்களாலும், கடும் கற்களாலும் அடிக்கத் தொடங்கினார்கள். அவ்வேளை மலைகளின் அதிபதி மீக்காயீல் (அலை) அவர்கள் “நபியே…! சொல்லுங்கள் இவர்களை இவ்விரு மலைகளுக்கிடையே வைத்து, அழுத்தி அழித்து விடுகிறேன்” என்று சொன்னபோது சொர்க்கத்து நபி என்ன சொன்னார்கள் தெரியுமா… வேண்டாம் ! எவரையும் அழிப்பதற்காக நான் அனுப்பப்படவில்லை. அனைவருக்கும் அருள்பாலிப்பதற்காகத்தான். நான் இப்பூவுலகிற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன். இவர்கள் திருந்தாவிட்டாலும் இவர்களது “சந்ததிகள்” நிச்சயம் திருந்தக்கூடும்” என்றார்கள்.

ஆஹா… என்னே அற்புதமான வைரவரிகள்… வாழ்வியல் வழிகள்… இதைக்கேட்டவுடன் மீக்காயீல் (அலை) அவர்கள் சொன்னார்களாம்.

 “நபியே… நிச்சயமாக நீங்கள் அல்லாஹ் தங்களை தனது அருள் மறையில் குறிப்பிட்டுள்ளது போலவே ரஊஃப் (கருணையாளர்) ஆகவும் ரஹீம் (கிருபையாளர்) ஆகவும் இருக்கிறீர்கள்” என்றார்களாம்.

(நூல் : தப்சீர் ரூஹுல் பயான் பாகம் 3 –பக்-691)

ஆங்காங்கு வெகு ஜோராக (?) மீலாது விழாக்களை தொன்று தொட்டு, விட்டுவிடாது கொண்டாடி வரும் “இறைக் காதலர்கள்” மீண்டும் ஒரு முறை தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும் மீலாதுவிழா என்பது அன்று ஒரு நாள் மட்டுமா? என்று.

“நீங்கள் இறைவனை நேசிக்கிறீர்களா (அப்படியானால்…) இறைத்தூதரையே பின்பற்றுங்கள்” என்கிறது எழில் மறைக்குர்ஆன்.

இன்றைக்கு “நபியின் சுன்னத்” நம்மிடம் எவ்வளவுக்கு எவ்வளவு அமலில் உள்ளது…? பிள்ளைச் செல்வங்கள் மீது பெற்றோர்கள் காட்டும் பாசத்தைவிட நபிகளார் இச்சமுதாயத்தின் மீது காட்டிய பரிவும் பாசமும் மிகமிக அதிகம் என்பது எல்லோரும் புரிந்த ஒன்றுதான் ஆனாலும் நாம் அவர் மீது “ஸலவாத்” சொல்ல யோசிக்கிறோம்… ஏன் நம்முடைய பெயரில் “முஹம்மத்” என்று முழுமையாக எழுதிச்சேர்க்கவோ வாயால் சொல்லவோ கூட யோசிக்கிறோம் என்றால் நாம் என்ன முஸ்லிம்கள்? அவர் இன்றி நாம் இல்லை என்பது மடும் சர்வ நிச்சயம்!.

ஒளிரட்டும் பன்மைமிகு மீலாது விழாக்கள் !

ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!

 

நன்றி : ரஹ்மத் – ஜனவரி 2014




1 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
  சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.
 
2 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
  உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
 
3 உணரப் படாத தீமை சினிமா
  தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.
 
4 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
  நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது.
 
5 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
  செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
 
6 விரக்தி விஷத்தை விட கொடியது
7 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
8 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
9 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
10 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
11 அந்தப் பெண்களாக நாம்...
12 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
13 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
14 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
15 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
16 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
17 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
18 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
19 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
20 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
21 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
22 இளையான்குடியில் உருது மக்கள்
23 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
24 மரணம் நோக்கி...
25 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
26 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
27 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
28 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
29 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
30 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
31 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
32 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
33 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
34 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
35 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
36 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
37 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
38 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
39 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
40 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
41 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
42 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
43 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
44 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
45 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
46 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
47 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
48 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
49 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
50 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
51 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
52 எது வணக்கம்..?
53 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
54 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
55 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
56 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
57 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
58 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
61 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
62 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
63 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
64 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
65 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
66 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
67 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
68 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
69 மனைவியை_நேசிங்கள்..
70 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
71 அம்மா! அம்மா!
72 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
73 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
74 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
75 இமாம்களும் மத்கபுகளும்.
76 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
77 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
78 பராஅத் இரவின் சிறப்புகள்
79 வாப்பா!
80 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
81 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
82 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
83 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
84 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
85 இதிலென்ன வெட்கம்?
86 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
87 பழையன கழிதலும் புதியன புகுதலும்
88 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
89 கற்பில் கவனம் தேவை
90 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
91 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
92 இஸ்திஃகாராவின் சிறப்பு
93 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
94 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
95 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
96 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
97 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
98 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
99 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
100 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
101 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
102 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
103 இறுக்கமும் இரக்கமும்
104 இஷா தொழுகையும் இரவு உணவும்
105 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
106 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
107 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
108 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
109 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
110 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
111 பெயர்களை நினைவில் வைப்போம்
112 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
113 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
114 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
115 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
116 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
117 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
118 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
119 ஒரு 2.5 கதை
120 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
121 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
122 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
123 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
124 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
125 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
126 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
127 குறைகளை மறைத்தல்
128 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
129 நல்ல பெண்மணி
130 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
131 💥 யார் அந்த மாமனிதர்..?
132 ஈர்ப்பை விதைப்போம்!
133 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
134 யார் இந்த துலுக்கன்?
135 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
136 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
137 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
138 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
139 நிம்மதி - சிறுகதை
140 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
141    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
142 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
143 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
144  வாழ்க்கை வாழ்வதற்கே !
145 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
146 விற்கப்படும் மார்க்கம்
147 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
148 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
149 பார்வைகள் பலவிதம் !
150 நேர மேலாண்மை / திட்டமிடல்
151 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
152 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
153 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
154 தந்தைகளே! கவனியுங்கள்
155 வரலாறு புகட்டும் பாடம்
156 அல்குர்ஆன் என்னும் மதுரம்
157 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
158 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
159 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
160 நாம் தான் முயல வேண்டும்.
161 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
162 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
163 கற்பா? கல்லூரியா?
164 கசாப்புத் தொழில் சிறந்தது....
165 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
166 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
167 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
168 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
169 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
170 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
171 என் ஹிஜாப் என் உரிமை!!!
172 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
173 முகமாகும் பெண்கள்!!
174 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
175 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
176 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
177 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
178 செல்போன்கள்... ஜாக்கிரதை!
179 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
180 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
181 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
182 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
183 ஈமானே-உன் விலையென்ன?
184 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
185 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
186 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
187 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
188 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
189 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
190 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
191 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
192 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
193 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
194 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
195 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
196 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
197 அறிவைத் தேடுவோம்!
198 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
199 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
200 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
201 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
202 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
203 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
204 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
205 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
206 “வேர்கள்” வரலாறு!
207 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
208 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
209 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
210 மனிதனின் தேவை ! – மன அமைதி
211 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
212 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
213 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
214 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
215 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
216 பேச்சு,மெளனம்
217 ஜனாஸா - மைய்யத்
218 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
219 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
220 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
221 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
222 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
223 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
224 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
225 வலிமார்கள் என்பவர்கள் யார்?
226 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
227 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
228 மனித குல விரோதி
229 எனது பெயர் ஜனாஸா!
230 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
231 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
232 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
233 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
234 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
235 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
236 தமிழரும் இசுலாமியரும்
237 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
238 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
239 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
240 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
241 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
242 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
243 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
244 கற்பனைகளும் இஸ்லாமும்
245 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
246 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
247 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
248 மது ஒரு பெரும் பாவம்
249 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
250 பெற்றோர்களைப் பேணுவோம்!
251 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
252 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
253 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
254 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
255 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
256 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
257 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
258 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
259 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
260 மறுமை வாழ்வை நேசிப்போம்!
261 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
262 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
263 சுதேசி சிந்தனைகள்.......
264 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
265 கல்வி நல்லோர்களின் சொத்து!
266 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
267 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
268 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
269 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
270 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
271 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
272 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
273 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
274 அறிவைத் தேடுவோம்!
275 ஆக்காதீர் ஆசனங்களாக
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
277 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
279 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
280 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
281 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
282 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
283 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
284 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
285 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
286 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
287 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
288 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
289 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
290 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
291 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
292 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
293 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
294 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
295 விசுவரூபம் ஒரு விளக்கம்
296 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
297 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
298 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
299 கண்ணாடிகள் கவனம்
300 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
301 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
302 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
303 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
304 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
305 கருத்து வேறுபாடுகள்.
306 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
307 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
308 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
309 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
310 ஓ! என் இளைய சமுதாயமே!
311 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
312 வீண் செலவு வேண்டாமே