கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி

கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் Unsung Heroes-தொடர்-1
-காஞ்சி அப்துல் ரவூப் பாகவி-

முதல் ஆளுமை ....ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி


இந்தத் தொடரில் நான் மிகுந்த திறமைகளையும் ஆற்றல்களையும் தமக்குள் கொண்டிருந்தும் அவற்றால் தமிழ்ச் சமூகம் பயன் அடைய வேண்டியிருந்தும் நம் சமூகத்தால் கண்டு கொள்ளப்படாத Unsung Heroes – கொண்டாடப்பட வேண்டியவர்களாய் இருந்தும் கொண்டாடப் படாத ஆளுமைகளைக் குறித்து மட்டுமே எழுதவிருக்கின்றேன்.

தமிழ்த் திண்ணை தளத்தை முகநூலில் உருவாக்கி நடத்தி வரும் ஊடக நிபுணர் நாடறிந்த ஆவணப் பட இயக்குனர் கோம்பை அன்வர் போன்றோரின் நன்னோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் இதில் வரும் கட்டுரைகளைக் கண்ட பின்பே எனக்கு இப்படியொரு தொடரைத் தொடங்கி முகநூலில் குறிப்பாக “தமிழ்த் திண்ணை” யில் வெளியிட்டால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது.
நினைவில் கொள்ளுங்கள் , இதில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஆளுமைகள் பற்றியதல்ல இந்தத் தொடர். எனவே, முன்பே பொதுவெளியில் பிரபலமானவர்களைப் பற்றியதல்ல இந்தத் தொடர். தகுதியும் திறமையும் இருந்தும் நம் சமுதாயத்தால் தொடர்ந்து அறியாமை அல்லது மாச்சரியம் போன்ற காரணங்களால் தக்க அங்கீகாரம் பெறாமல் இருந்து வருகின்ற, இருட்டடிப்புக்கு ஆளாகி வருகின்ற அல்லது நம் சமுதாயத்திற்கே உரிய மெத்தனப் போக்கால் சரிவரப் பயன் படுத்தப் படாமல் இருக்கின்ற அல்லது பொதுவெளியில் சுமாரான அறிமுகம் மட்டுமே பெற்றுள்ள ஆளுமைகளைப் பற்றியதே இந்தத் தொடர்!

இதனை மனத்தில் வைத்துக் கொண்டு இந்தத் தொடரைப் படிக்கும் படி என் முகநூல் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்குத் தெரிந்த இத்தகைய தமிழ் முஸ்லிம் ஆளுமைகள் அல்லது பொதுவான தமிழ் ஆளுமைகள் எவராக இருப்பினும் எந்த சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் தமிழராய் இருப்பின் எனக்கு அவரைக் குறித்த சரியான தகவல்களை நீங்கள் தயவு கூர்ந்து அனுப்பித் தந்தால் இந்த தளத்தில் எழுதிப் பதிவிடத் தயாராக உள்ளேன்.


கலை மற்றும் அறிவு சார்ந்த துறைகளில் அறிஞர்களை யும் திறமையாளர்களையும் ஊக்கப்படுத்தும் இயல்பு நம் சகோதரர்களான மலையாளிகளுக்கு வாய்க்கப் பெற்றிருப்பது போன்று தமிழர்களான நமக்கு வாய்க்கப் பெறாததால் இந்த நிலை தமிழகத்தில் நிலவுகின்றது.


தமிழர்களான நாம் குறிப்பாக தமிழ் முஸ்லிம்களான நாம் நமக்கே உரித்தான மெத்தனப் போக்கின் காரணத்தால் நல்ல திறமையாளர்களைப் பயன்படுத்தாமல் நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொண்டிருக்கின்றோம்.


வியக்கத்தக்க மூளை வளங்களுக்குச் சொந்தக்காரர்களாக நம் சமுதாயத்தில் பலர் இருந்தும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நமக்கு நாமே செய்துகொள்ளும் அநீதியே ஆகும்.
அத்தகைய குன்றிலிட்ட விளக்காய்ப் பிரகசிக்க்வேண்டியவரை இருந்தும் குடத்திலிலிட்ட விளக்காய் இருக்கும் ஆளுமைகளில் முதலாமவராக நான் பதிவு செய்ய விரும்புவது அறிஞர்
ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்களைத்தான் .


தமிழாற்றல் மிக்கவர் என்பது மட்டுமல்லாது, அரபு நாட்டிற்கு செல்லும் முன்பே அரபு மொழியில் சரளமாக உரையாடவும் நவீன அரபியில் அரபிகளே வியக்கும் வண்ணம் பேசவும் எழுதவும் அறிந்திருந்தவர்.


அந்தக் காலத்தில் ஆங்கிலம் அறிந்த மார்க்க அறிஞர்கள் ஒரு சிலரைத் தவிர வேறெவரும் இல்லை எனலாம். அத்தகைய சரளமான ஆங்கிலம் அறிந்த ஆலிம்ளில் ஒருவர்.
குறிப்பாக, சென்னை ஜமாலியா அரபுக் கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்த போது புதுக்கல்லூரியின் மேனோள் முதல்வர் பேரறிஞர் செய்யித் அப்துல் வஹ்ஹாப் புகாரி(ரஹ்) அவர்களின் என்கிற பிரியத்துக்குரியர்.


பாக்கியாத்தில் எனக்குப் பல படிகள் சீனியராக இருந்தவர். மதரஸா ஜமாலியா , மதரஸா தவூதிய்யா போன்ற மார்க்க கலா பீடங்களில் பயின்று முடித்து விட்டு, அரபுக் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றி விட்டு, தம்முடைய தந்தை மீரா ஹுசைன் பாகவி (ரஹ்) அவர்களைப் போல் தாமும் ஒரு பாகவியாக ஆக வேண்டும் என்று விரும்பி பாக்கியாத்தில் வந்து ஓதியவர்!


எல்லாவற்றுக்கும் மேலாக தமது இளவலைத் தமது சொந்த செலவில் மருத்துவப் படிப்பு (எம். பி.பி. எஸ்) படிக்க வைத்தவர். அவர் தான் .... இஸ்லாமிய அறிஞர் கிபாயத்துல்லாஹ் பாகவி!


இந்தப் பெயருக்குரியவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருவது தமிழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்குமே கிடைத்தற்கரிய ஒரு நற்பேறு என்று தான் கூற வேண்டும்!
அண்ணன் கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்களும் அண்ணன் சதக்கத்துல்லாஹ் பாகவி அவர்களும் இணைந்து தெள்ளு தமிழ் நடையில் எழுதிய, தென்னகத்தின் தாய்க் கல்லூரி அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் வான்புகழ் வெளியீடான “ஜவாஹிருத் தப்சீர்” இப் புவியுள்ள வரையும் அவர்களின் அரும்பணியைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும், அது மட்டுமன்றி, என்றென்றைக்குமாக அவர்களுக்கு மறுமைப் பேறுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும்.
அவரது தமழாற்றலுக்கு எடுத்துக் காட்டாக அவரது கவிதை ஒன்றை இங்கே பதிவிட்டுள்ளேன் .
கவிதை முடிந்த பின்பும் அவரைக் குறித்து பல அரிய தகவல்கள் பதியப்பட்டுள்ளன . எனவே தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்,


கனவுத் துயரங்கள்! கண்ணீர்த் துளிகள்!!
அரபு மூலம்: ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்
தமிழாக்கம்: ஈரோடு மீ. கிஃபாயத்துல்லாஹ் பாகவீ

நாங்கள் விணணிலிருந்து சரம்சரமாக விடப்படும் வெள்ளிநாண்கள்!
இயற்கையன்னை வாரியெடுத்து அணைத்து இன்புறுவதால்,
சின்னஞ்சிறு நீரோடைகள் எங்களால் அழகு மீக்குறும்!

நாங்கள் சுடர்விடும் வைரக்கற்கள்!
வெண்ணிறக் கிரீடத்திலிருந்து உதிரும் எங்களை
வைகறை வஞ்சிகள் வாரியெடுத்துப் பசும்புற்களின் மேல் அலட்சியமாகத் தூவிவிடுவர்!

நாங்கள் அழுதுகொண்டிருக்கிறோம்!
இந்த மணற்குன்றுகளோ
எங்களைப் பரிகசித்துக் குறுநகை புரிந்துகொண்டிருக்கின்றன!

நாங்கள் வெட்கத்தால் தலைதாழ்த்தும்போது
நறுமணப் பூக்கள் தலைநிமிர்த்தி எஙகளைத் தழுவத் துடிக்கும்!

நாங்கள் முகிலும் வயலுமான இளங்காதலர்களிடையே
தூதர்களாகப் பணியாற்றும் அடிமைகள்!
குளிர்ந்த முகிலின் காதற் கவிதைகளைச் சுமந்து வந்து
வயலின் தகிக்கும் உளத்திற்கு உரமாகக் காணிக்கை வழங்குவோம்!

இடியின் முழக்கமும்’ மின்வாட்களின் ஒளிக் கீற்றுகளும் எங்கள் வருகையைக் கூறும் கட்டியங்காரர்கள்.
வானவில்லின் வர்ண ஜாலங்கள் தாம் எங்களின் ஓய்விற்கான சமிக்ஞைகள்!
ஆழ்கடலில் ஓய்வாகத் துயிலச் செல்லும் எங்களைக் காற்றுப் புறாக்கள் தங்கள் படபடக்கும் சிறகுகளால் கட்டியணைத்துப் பறந்து சென்று,
பசுங்கனிச் சோலைகளில் இறக்கி விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கும்!
ஆங்கு...
நாங்கள் பன்னீர்ப் பூக்களின் மெல்லிதழ்களை முத்தமிட்டுக் கொண்டும்
நடுங்கும் சின்னஞ்சிறு கிளைகளைச் சீண்டிக் கொண்டும் இருப்போம்!
சனனல்களில் தொங்குகின்ற திரை யாழ்களின் ஸ்வரக் கம்பிகளை எங்கள் மென்விரல்களால் மீட்டுவோம்.
அவை எழுப்பும் இனிய கீதங்கள் இல்லத்தாரின் இனிய நெஞ்சங்களில் இன்ப உணர்வுகளை நினைவுறுத்தும்!
எங்களை ...
காற்றில் மறைந்திருக்கும் கானல்தான் உருப் பெறச்செய்கின்றது.
நாங்களோ....
மழை என்ற நற்பெயரால் உருவாகிக் காற்றின் விரும்பத் தகாத தொடர்பால் சூறாவளியாகிக் கானலை அழித்து விடுகிறோம்.
அதனால் நாங்கள் .....
கடல் மங்கையின் கனவுத் துயரங்கள்! வானக் காதலனின் கண்ணீர்த் துளிகள்!

தமிழில் இந்தக் கவிதை உருவான பின்னணி
45 ஆண்டுகளுக்கு முன்பு 1975 ஆம் ஆண்டு தென்னகத்தின் தாய்க்கல்லூரி அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி லஜ்னத்துல் இர்ஷாத் சொற்பயிற்சி மன்றம் சார்பாக ஓர் ஆண்டு மலரை அப்போதைய மாணவர்களான நாங்கள் அச்சில் வெளியிட்டோம். அப்போது நான் மூன்றாவது ஜும்ரா ஓதிக் கொண்டிருந்தேன்.

நானும், தேனருவி போன்ற தமிழ் நடையில் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற்றிருந்த இன்றும் பாக்கியாத்தின் தஃப்சீர் பிரிவில் கிஃபாயத்துல்லாஹ் பாகவி ஹளரத் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த சதக்கத்துல்லாஹ் பாகவீ ஹளரத் அவர்களும், நாடறிந்த தமிழறிஞர்அதிரை அஹ்மத் காக்கா அவர்களும் அம்மலருக்கான ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தோம். அதிரை அஹ்மத் காக்கா தமிழாசிரியராகவும் அப்போது இயங்கிக் கொண்டிருந்த பாக்கியாத் சென்டினெரி பிரஸ் அச்சகத்தின் மேலாளராகவும் இருந்தார்கள். சதக்கத்துல்லாஹ் பாகவி ஹளரத் அவர்கள் முதவ்வல் ஓதிக் கொண்டிருந்த காலகட்டம் அது. நாங்களே மீண்டும் ஆசிரியர் குழுவினராகத் தெரிவு செய்யப்பட்டு தொடர்ந்து இன்னோர் ஆண்டு மலரும் வெளியிட்டோம். அந்த ஆண்டு மலர்கள் இரண்டிலும் மற்ற கட்டுரைகளை சரிபார்த்து வெளியிட்டது மட்டுமன்றி நானும் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதியிருந்தேன்.


தண்டமிழ் வித்தகர் என்று நான் அழைக்கும் கிஃபாயத்துல்hஹ் பாகவி ஹளரத் அவர்கள் அரபியிலிருந்து அழகு தமிழில் பெயர்த்து எழுதிய புதுக் கவிதை ஒன்றை இன்னமும் என்னால் மறக்க இயலவில்லை. அது தான் நான் இங்கு உங்கள் பார்வைக்காகப் பதிவிட்டிருக்கின்ற உலகப் புகழ்பெற்ற அரபுக் கவிஞர் ஜிப்ரான் கலீல் ஜிப்ரான் அவர்கள் மழைத்துளிகளைப் பற்றி அற்புதக் கற்பனையுடன் எழுதிய கவிதையாகும். நூற்றுக்கணக்கான முறை வாசித்தாலும் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்ற நடையில் அந்தக் கவிதையை கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்கள் எழுதியிருந்தார்கள்.
கலீல் ஜிப்ரானே தமிழராய்ப் பிறந்து எழுதியிருந்தால் இப்படித்தான் துள்ளல் நடையில் எழுதியிருப்பார் என்று எண்ணச் செய்யும் எழில் நடைக்குச் சொந்தக்காரர் தான் மௌலானா கிஃபாயத்துல்லாஹ் பாகவீ அவர்கள்.


இலக்கிய ஜாம்பவான் கி.வா.ஜகந்நாதன் அவர்களாலேயே வியந்து பாராட்டப் பெற்றவர் . திரு கி.வா.ஜ அவர்கள் தமது ‘மஞ்சரி’ இலக்கிய இதழில் இவருக்காகச் சில பக்கங்களையே ஒதுக்கி, இவரது தமிழாக்கங்களை வெளியிட்டு வந்தார். கலீல் ஜிப்ரனின் இந்தக் கவிதையையும் கி.வா.ஜ அவர்கள் வெளியிட்டு மவ்லானா அவர்களை கவுரவித்தார்கள்.


சொல்லப் போனால், அந்தக் காலகட்டத்தில் கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்களின் தமிழ் நடைக்கு கி.வா.ஜ மற்றும் அதிரை அஹ்மத் போன்ற தமிழறிஞர்களே ரசிகர்களாக மாறிவிட்டிருந்தனர்.
கலீல் ஜிப்ரானின் கவிதைகள் மட்டுமல்ல, அரபு இலக்கிய ஆளுமைகளான டாக்டர் ஹுசைன் மூனிஸ், பிரபல அரபு நாவலாசிரியர் நஜீப் கைலானீ போன்றோரின் சிறுகதைகளையும் கூட மனங்கவரும் வகையில் தமிழ் மரபுக்கேற்ப சரளமாகவும் இயல்பாகவும் மொழிபெயர்ப்பதில் கிஃபாயத்துல்லாஹ் பாகவீ அவர்களுக்கு நிகர் அவரே!


“அல் அரபிய்யா” என்கிற அரபு மாத சஞ்சிகையில் வெளிவந்த, எகிப்தின் இலக்கிய வாதி டாக்டர் ஹுசைன் மூனிஸ் அவர்களின் சிறுகதை ஒன்றை மௌலானா அவர்கள் தமிழாக்கம் செய்து மஞ்சரி இதழுக்கு அனுப்பிய போது அதை மகிழ்வுடன் வெளியிட்ட கி.வா.ஜ அவர்கள் எழுதிய சிறு குறிப்பு ஒன்றே கிஃபாயத்துல்லாஹ் பாகவி அவர்களின் தமிழ் இலக்கியத் திறனை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிடப் போதுமானதாகும்.


தமிழ்ப் பெரியார் கி.வா.ஜ அவர்கள் இத் தமிழாக்கத்தைப் படித்து அதன் எழில்நடையைக் கண்டு வியந்து கிபாயத்துல்லாஹ் பாகவி அவர்களைப் பாராட்டி எழுதிய அந்தக் குறிப்பு இதுதான்:
“’மொழியால், இனத்தால், நிறத்தால், ஏன், நாட்டால் வேறுபட்டிருந்தாலும் கூட, உலகெங்கிலும் மனித உணர்வுகள் ஒன்றுதான் என்பதை இந்தச் சிறுகதை நமக்கு உணர்த்துகின்றது’ என்று எழுதியதோடு நிற்காமல் அதற்கு முத்தாய்ப்பாக, ‘மனித உணர்வுகளைத் தத்ரூபமாக இக்கதையின் ஆசிரியர் எழுத்தில் வடித்துள்ளார். மொழிபெயர்ப்பும் அதற்கு வாங்கல் அல்ல” என்று மனதாரக் குறிப்பிட்டிருந்தார்.


தமது சின்னஞ்சிறு முயற்சிகளுக்குக் கிடைக்கும் சாதாரண ஊக்கச் சொற்களுக்கெல்லாம் மனம் பூரித்துப் போய் பெருமைகொள்வோர் நிறைந்த இவ்வுலகில், இத்தோடு இன்னும் பற்பல சிறப்புகளைப் பெற்றிருந்தும் விளம்பர வெளிச்சமே இல்லாமல் அமைதியாக அறிவுப்புரட்சி நடத்திக் கொண்டிருக்கும் மௌலானா கிஃபாயத்துல்லாஹ் பாகவீ அவர்கள் ஒரு நிகரில்லா நிறைகுடம் என்று துணிந்து கூறலாம்.




1 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
  காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF)
 
2 பாலஸ்தீனத்தின் பெருமை
  பல நபிமார்கள் வாழ்ந்த இடம். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம்
 
3 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
  சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.
 
4 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
  உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
 
5 உணரப் படாத தீமை சினிமா
  தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.
 
6 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
7 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
8 விரக்தி விஷத்தை விட கொடியது
9 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
10 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
11 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
12 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
13 அந்தப் பெண்களாக நாம்...
14 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
15 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
16 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
17 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
18 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
19 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
20 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
21 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
22 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
23 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
24 இளையான்குடியில் உருது மக்கள்
25 மரணம் நோக்கி...
26 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
27 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
28 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
29 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
30 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
31 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
32 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
33 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
34 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
35 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
36 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
37 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
38 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
39 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
40 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
41 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
42 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
43 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
44 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
45 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
46 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
47 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
48 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
49 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
50 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
51 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
52 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
53 எது வணக்கம்..?
54 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
55 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
56 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
57 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
58 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
61 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
62 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
63 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
64 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
65 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
66 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
67 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
68 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
69 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
70 மனைவியை_நேசிங்கள்..
71 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
72 அம்மா! அம்மா!
73 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
74 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
75 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
76 இமாம்களும் மத்கபுகளும்.
77 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
78 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
79 பராஅத் இரவின் சிறப்புகள்
80 வாப்பா!
81 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
82 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
83 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
84 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
85 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
86 இதிலென்ன வெட்கம்?
87 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
88 பழையன கழிதலும் புதியன புகுதலும்
89 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
90 கற்பில் கவனம் தேவை
91 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
92 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
93 இஸ்திஃகாராவின் சிறப்பு
94 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
95 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
96 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
97 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
98 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
99 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
100 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
101 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
102 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
103 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
104 இறுக்கமும் இரக்கமும்
105 இஷா தொழுகையும் இரவு உணவும்
106 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
107 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
108 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
109 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
110 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
111 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
112 பெயர்களை நினைவில் வைப்போம்
113 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
114 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
115 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
116 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
117 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
118 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
119 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
120 ஒரு 2.5 கதை
121 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
122 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
123 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
124 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
125 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
126 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
127 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
128 குறைகளை மறைத்தல்
129 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
130 நல்ல பெண்மணி
131 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
132 💥 யார் அந்த மாமனிதர்..?
133 ஈர்ப்பை விதைப்போம்!
134 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
135 யார் இந்த துலுக்கன்?
136 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
137 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
138 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
139 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
140 நிம்மதி - சிறுகதை
141 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
142    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
143 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
144 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
145  வாழ்க்கை வாழ்வதற்கே !
146 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
147 விற்கப்படும் மார்க்கம்
148 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
149 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
150 பார்வைகள் பலவிதம் !
151 நேர மேலாண்மை / திட்டமிடல்
152 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
153 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
154 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
155 தந்தைகளே! கவனியுங்கள்
156 வரலாறு புகட்டும் பாடம்
157 அல்குர்ஆன் என்னும் மதுரம்
158 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
159 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
160 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
161 நாம் தான் முயல வேண்டும்.
162 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
163 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
164 கற்பா? கல்லூரியா?
165 கசாப்புத் தொழில் சிறந்தது....
166 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
167 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
168 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
169 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
170 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
171 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
172 என் ஹிஜாப் என் உரிமை!!!
173 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
174 முகமாகும் பெண்கள்!!
175 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
176 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
177 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
178 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
179 செல்போன்கள்... ஜாக்கிரதை!
180 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
181 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
182 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
183 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
184 ஈமானே-உன் விலையென்ன?
185 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
186 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
187 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
188 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
189 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
190 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
191 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
192 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
193 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
194 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
195 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
196 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
197 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
198 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
199 அறிவைத் தேடுவோம்!
200 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
201 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
202 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
203 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
204 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
205 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
206 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
207 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
208 “வேர்கள்” வரலாறு!
209 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
210 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
211 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
212 மனிதனின் தேவை ! – மன அமைதி
213 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
214 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
215 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
216 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
217 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
218 பேச்சு,மெளனம்
219 ஜனாஸா - மைய்யத்
220 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
221 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
222 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
223 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
224 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
225 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
226 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
227 வலிமார்கள் என்பவர்கள் யார்?
228 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
229 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
230 மனித குல விரோதி
231 எனது பெயர் ஜனாஸா!
232 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
233 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
234 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
235 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
236 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
237 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
238 தமிழரும் இசுலாமியரும்
239 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
240 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
241 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
242 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
243 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
244 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
245 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
246 கற்பனைகளும் இஸ்லாமும்
247 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
248 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
249 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
250 மது ஒரு பெரும் பாவம்
251 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
252 பெற்றோர்களைப் பேணுவோம்!
253 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
254 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
255 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
256 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
257 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
258 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
259 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
260 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
261 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
262 மறுமை வாழ்வை நேசிப்போம்!
263 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
264 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
265 சுதேசி சிந்தனைகள்.......
266 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
267 கல்வி நல்லோர்களின் சொத்து!
268 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
269 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
270 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
271 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
272 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
273 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
274 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
275 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
276 அறிவைத் தேடுவோம்!
277 ஆக்காதீர் ஆசனங்களாக
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
280 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
281 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
282 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
283 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
284 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
285 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
286 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
287 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
288 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
289 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
290 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
291 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
292 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
293 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
294 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
295 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
296 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
297 விசுவரூபம் ஒரு விளக்கம்
298 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
299 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
300 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
301 கண்ணாடிகள் கவனம்
302 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
303 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
304 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
305 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
306 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
307 கருத்து வேறுபாடுகள்.
308 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
309 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
310 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
311 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
312 ஓ! என் இளைய சமுதாயமே!
313 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
314 வீண் செலவு வேண்டாமே