இளையான்குடியில் உருது மக்கள்
(இவர்கள் பூர்வீகமாக உருதுவினை தாய்மொழியாக கொண்டவர்களா அல்லது இடையில் நவாபுகளுக்கு பணியெடுக்க சென்றவர்களா என தெளிவாக தெரியவில்லை)
முன்பொருமுறை அத்தா கூறியது
"பரமக்குடி செட்டியார் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த போது ஆங்கில வாத்தியார் ஒருத்தர் இருந்தார், நம்ம தென்பாங்கு தமிழை நம்மைவிட படுஅழகாக பேசுவார், ஒருமுறை பள்ளியில் அவர் அவரது மகன்களை அழைத்து இந்தியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார் (அவரது மகனில் ஒருவர் எனக்கு நண்பன்), அப்போது அவர் பேசியதை கேட்டு எங்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது. என்ன சார் இந்தி பேசுறீங்க என கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே இது இந்தி இல்லை, உருது என்றார். அவர் கூறுவது வரை எங்களுக்கு அவரது தாய்மொழி உருது என்றே தெரியாது. அவரது மகன்களும் சக மாணவர்களுக்கு இதுபற்றி ஒருமுறை கூட கூறியதில்லை" என்றார் அத்தா.
அந்த உருதுக்கார வாத்தியாருக்கு இருப்பிடம் இளையான்குடி என்பதும், அவர் ஆசிரியப்பணி நிமித்தமாக பரமக்குடியில் இருப்பது வசித்ததும் அத்தா சொல்ல கேள்விப்பட்டேன். அதேபோல முன்பொருமுறை இளையான்குடியில் 'பட்டாணி' விறகு கடை என இருந்த ஒரு பெயர் பலகையை குறித்து என் கணவர் கூறியதையும் கேட்டுக்கொண்டேன் . இப்போது தற்காலிகமாக இளையான்குடி, புதூரில் நான் இருந்துவருவதால் , புதூர் பெண்கள் மதரஸாவிற்கு அரபு பாடங்களின் சிலபஸ் தயார் செய்யும் உஸ்தாத் , உருது மொழி வாயிலாக அரபிலக்கணம் போதிப்பதாகவும், தற்போது உருது மொழியினை மதரஸா பாடதிட்டத்தில் சேர்த்துள்ளதாகவும் அந்த மதரஸாவை சேர்ந்த ஆலிமா ஒருவர் கூறியதை வைத்து, இளையான்குடி, பரமக்குடி ஆகிய
இந்த வட்டத்தில் உருது பேசும் மக்கள் இங்கே இருப்பார்களா என்ற தேடலோடு சிலரை அணுகிய போது
அதில் ஒருவர் இளையான்குடி "உதயம் எலக்ட்ரானிக்ஸ்" எதிரே "சிங்கப்பூர் ஷாப்பிங் சென்டர்" என்ற பெயரில் (அத்தர் மற்றும் சிங்கப்பூர் பொருட்களை விற்பனை செய்கிறார்) கடை நடத்தும் உரிமையாளரை சந்தித்து விசாரித்தோம். அதற்கு அவர், அவரது வீட்டிற்கு மேலே வாடகைக்கு குடியிருந்தவர்கள் பட்டாணிகள் (உருது முஸ்லிம்) என்றும், அவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்றும் தற்போது கொரனா காரணமாக பிள்ளைகளது வீட்டிற்கு (மதுரைக்கு) சென்றுவிட்டதாக கூறினார். மேலும் ஒரு ஐந்து குடும்பத்தார் இங்கே தலைமுறைகளாக இருந்துவருவதாகவும் கூறினார். அவர்களின் மூத்தோர் யாருமில்லை, இளையவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் கூறினார். எனக்கு தகவல் கொடுத்த கடை உரிமையாளருக்கு வயது 84, அவர் தன்னுடைய சிறிய வயது தொட்டு உருது முஸ்லிம்களை இளையான்குடியில் காண்பதாகவும் கூறினார்.
உருது மக்கள் தான் ஷாபி பள்ளிவாசல் கட்டினார்களா ? என்பது பற்றி கேட்டபோது, இல்லை... அது நம்ம ஆளுங்களும் தொழுவாங்க, ஆனால் நம்ம தென்னாட்டில் ஹனபி மதுஹபுதான் பிரதானம், வடக்கத்திய தொடர்புள்ளவர்களுக்கு தான் ஷாபி மதுஹபு தொடர்பிருக்கும்... அவர்களுடைய படிப்படியான வருகைக்கு பிறகு இங்கும் ஷாபி மதுஹபு வந்திருக்கலாம்...இங்குள்ள ஷாபி பள்ளியில் பெரும்பாலும் நம்ம தமிழ் முஸ்லிம் ஆட்கள் தான் தொழுவுவாங்க என்றார். நன்னாவிடமிருந்து தகவல் பெறுவது சற்று கடினமாக இருந்தது, பத்து வேள்வியில் ஒன்றுக்கு மட்டுமே ஆர்வமாக பதிலளித்தார் (ஒருவேளை அவருக்கு விபரம் அதிகம் தெரியாமல் இருக்கலாம் அல்லது கொரனா காலத்தில் வந்து நம்மை அநாவசிய கேள்வி கேட்டு தொல்லை செய்கிறாரே என நினைத்திருக்கலாம்).
உருது முஸ்லிம் என ஒருவரை எப்படி பார்த்தவுடன் தெரிந்து கொள்வது என சிலரிடம் கேட்டதற்கு...
#பர்தா
****
கொஞ்ச காலத்துக்கு முன்ன பட்டாணி முஸ்லிம் பொம்பளைங்க தான் படுதா (புர்கா என்பது தற்போது உச்சரிக்கப்படும் சொல்) போடுவாங்க, முகத்தையும் மூடிக்குவாங்க, நம்ம பொம்பளைங்க சேலை முக்காடு தான் போடுவாங்க, கண்களில் கட்டாயம் சுருமா போடுக்குவாங்க... ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயசு வரை கண்ணில் சுருமா தீட்டுவாங்க, அவர்களில் வயசான ஆண்களும் சுருமா போட விரும்புவாங்க... (எங்க கடையில் சௌதி சுருமா கட்டி, அது தீட்ட பளிங்கு/கண்ணாடி குச்சி வைத்து விற்போம், அதை அவங்க தான் விரும்பி வந்து வாங்குறது வழக்கம் - என்ற தகவலும் கொடுத்தார்).
#பையத்து மோதிரம்
********
ஆண்களில் விரல்களில் பல வண்ண கற்கள் அல்லது சூடம் வைத்து வெள்ளி மோதிரம் அணிவார்கள், அப்படி நம்மவர்கள் யாரும் அணிய நான் கண்டதில்லை, இப்போது எல்லாரும் அந்த மாதிரி வெள்ளி மோதிரம் போட்டுக்கொள்கிறார்கள் என்றார். (இவ்வளவு தான் இளையான்குடி உருது மக்கள் குறித்த எனது தரவு - மேலும் தேட வேண்டும்)
#சேலைக்கட்டும்_தாலியும்
*********
நம் தமிழகத்து பெண்கள் இடப்புறமாக மாறாப்பு போட்டு சேலை கட்டுவதை போல வடநாட்டு பெண்கள் குறிப்பாக மார்வாடிகள் , குஜராத்தி,ராஜஸ்த்தானி பெண்கள் வலப்புறம் மாராப்பு போட்டு ,பாவாடை தாவணி (லெஹங்கா ச்சோலி) அல்லது சேலை அணிவார்கள். அதே பழக்கத்தை இங்கும் சில முஸ்லிம் பெண்கள் கையண்டுள்ளாள்கள், இளையான்குடி, புதூர் ஸ்டைலில் பத்தை கைலி தாவணி உடுத்தினாலும் தாவணியை வலப்புற மாறாப்பாக போட்டுக்கொள்கிறார்கள்.
தமிழ் முஸ்லிம் பெண்களுடைய தாலியில் கர்சமணி-பவளம் மற்றும் மஞ்சள் கட்டி போல ஒரு தங்கத்திலான துண்டு அலங்கரிப்பதை போல, இளையான்குடி உருது பெண்கள் தாலியில் இரண்டு மெல்லிய வரிசையில் பொடிசான கர்சமணியும் பட்டையான பிறை-நட்சத்திர (மூன்று முதல் ஐந்து ) வடிவமும் அலங்காரமாக கோர்க்கப்பட்டிருக்குமாம்.
#மெட்டியும்_மூக்குப்பொட்டும்
**********
அவர்களில் திருமணத்திற்கு பிறகு வெள்ளி மெட்டி அணிவார்களாம், வயதிற்கு வந்த பெண்களுக்கு மூக்கு குத்திவிடுவார்களாம் (வலப்புறம்) , மூக்குத்தி என்பதை இங்கு "மூக்குப்பொட்டு" என்கிறார்கள். மூக்குப்பொட்டு போடுதல் தமிழ் முஸ்லிம் பெண்களிடையே அப்போது இல்லை, காதில் வரிசையாக வாளி மாட்டுதல் மட்டுமே இருந்தது. உருது மக்கள் பச்சிரிசி சோறு உண்பவர்களாக அறியப்படுகிறார்கள், தமிழகத்தில் பெரும்பாலும் (பிராமணர்கள் தவிர ) அனைவரும் புழுங்கல் அரிசியையே சோறு ஆக்க பயன்படுத்துகிறோம். பரமக்குடி , இளையான்குடி பகுதிகளில் சௌராஷ்டிரியர்களும் செட்டியார்களும் அதிகம், அவர்களில் தெலுங்கு செட்டியார்கள் பச்சரிசி சோறு உண்பார்கள் எனப்பட்டது.
திருமணங்களில் முதல் நாள் தான் மங்னி எனும் நிச்சயதார்த்தம் செய்கின்றனர். திருமணத்தன்று மணமகன்களுக்கும் ,மணமகள்களுக்கும் தலையில் பூச்சரம் போட்டு மூடூவார்கள், தமிழ் முஸ்லிம் திருமணங்களில் அப்படி பரவலாக பூச்சரம் போட்டு மூடுவதில்லை என்கின்றனர்.
"இந்திய சுதந்திர போரில் முஸ்லிம் பெண்களின் பங்கு" -- என்ற எனது தொகுப்பில் இளையான்குடி பகுதியில் இருந்த ஒரு பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை பற்றி எழுத நேர்ந்தது, இப்போது வரை அவருடைய படமோ அல்லது எதுவும் கல்வெட்டோ கிடைக்குமா என்று தான் தேடித்திரிகிறேன். (அந்த புத்தகத்தில் அடுத்த எடிஷனில் கீழுள்ள தரவுகளை சேர்க்க வேண்டும், முன்னர் தகவல் கிடைக்காமல் விடுபட்டுள்ளது).
முஹம்மதலி - சௌக்கத்தலி எனப்படும் அலி சகோதரர்களின் தாயான ஆபிதா பீவி அவர்கள், காந்தியடிகளின் வேண்டுகோளினை ஏற்று இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்து நிதி சேகரித்தார்கள், அவர்களது பிரயாணத்தில் அவர் இளையான்குடிக்கும் வருகை தந்துள்ளார். இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளை பிரயாணக்குறிப்பில் எடுத்து கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த முர்தஸா சாஹிப் எனும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். அப்படி அவர்கள் இளையான்குடி வந்தபோது அப்போது இளையான்குடியில் "பங்களாக்காரர்" என அழைக்கப்பட்ட ஏ.எஸ்.டி.இபுராம்ஷா என்பவருடைய மனைவி பல்கீஸ் பீவி அவர்கள் தான் ,ஆபிதா பீவி அவர்கள் செய்த உருது பிரச்சாரத்தை தமிழில் மொழிப்பெயர்த்து மக்களுக்கு அறிவித்துள்ளார். இபுராம்ஷா பங்களாவில் தான் அவர் தங்கியும் உள்ளார். (இளையான்குடி அலங்காரத்தோப்பு எனுமிடத்தில் இருந்த இபுராம்ஷா அவர்களின் பிரம்மாண்ட பங்களா இருந்த இடம், அவரது குடும்பத்தாரால் அரசின் காவலர்கள் குடியிருப்பு கட்டிக்கொள்ள தானம் கொடுக்கப்பட்டுவிட்டது, தற்போது அங்கு இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட அனகத்து கிராமங்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்ய பெரிய பிரம்மாண்ட தண்ணீர் தொட்டி கட்டி பயன்பாட்டில் உள்ளது.)
இபுராம்ஷா மனைவி பல்கீஸ் பிவி தனது எல்லா நகைகளையும் கழற்றி அவருக்கு கொடுத்து உதவியதாகவும் கூறப்பட்டுள்ளது. (இந்த தகவலை கூறியவர் திரு.யாஸீன் - இவர் பங்களாக்காரர் இபுராம்ஷா அவர்களின் மகன் அபுபக்ரு அவர்களின் மகன். அபுபக்ரு அவர்கள் திமுகவில் நகரமன்ற செயலாளராக இருந்தவர், அபுபக்ரு அவர்களுடைய மனைவி ஆயிஷா அவர்கள் இளையான்குடி சேர்மனாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். பங்களாக்காரர் இபுராம்ஷா அவர்களுடைய பெரும் முயற்சியால் தான் இளையான்குடி கூட்டுறவு வங்கி கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அந்த கூட்டுறவு வங்கி தான் உலக வங்கி போல இன்றும் தடையின்றி சேவையாற்றி வருகிறது)
குறிப்பு : உருதுக்கள் தான் படுதா போடுவார்கள் என்ற அந்த மக்களின் நம்பிக்கை போலவே நம்மிலும் பலர் நினைக்கின்றோம், ஆனால் உருதுக்களில் புர்காவே போடாதவர்களும் உண்டு. இன்றும் கூட தலையில் முக்காடும் போடாத நவீன உருது பெண்களும் உண்டு. சென்னையில் நான் வாழும் பகுதியில் புர்கா போட்ட/ புர்கா போடாத உருதுக்காரர்களும் உண்டு
தார்காவிற்கு போகும்/ தர்காவை வெறுத்த உருத்துக்கள், முஹர்ரம் கொண்டாடும் உருதுக்கள்/ பஞ்சாவை ஹராம் எனும் உருத்துக்கள் ,பச்சரிசி உண்ணும் / மூன்று வேளையும் கோதுமை அல்லது ராகி ரொட்டிஉண்ணும் உருதுக்கள் என அனைவரும் கலந்தே வாழ்கின்றனர். (சென்னையின் எனது அனுபவம் குறித்த மற்றொரு பதிவில் விரிவாக)
பழைய ஞாபகம் :
எனது நன்னி (அம்மாவின் அம்மா) பேசும் போது...
"குர்சியில் இரி" ( நாற்காலியில் உட்காரு)
" கம்சு மாட்டு ( மேல்சட்டை போட்டுக்கொள்)
" சல்வார் மாட்டு " ( கால்சட்டை போடு)
" காசீர் விரி " (பாய் விரி)
" தஸ்தர் விரி" (சாப்பிடுவதற்கு உட்கார தரையில் விரிப்பு போடு)
" கொட்ராவில் ஊற்று" (கிண்ணத்தில் ஊற்று)
"காடி ஓட்டு" (வாகனம் ஒட்டு)
முசீபத்து (ஆபத்து)
பலாய் (சாபம்)
கார்வாரு (தகராறு)
போன்ற சொற்களை உபயோகிப்பார், இது கூட இளையான்குடியில் உருது மக்களின் தாக்கமாக இருக்கலாம்.
இதுபற்றி இன்னும் கூட நிறைய தேட வேண்டும், அடிக்கடி இப்படி எனது தேடுதலுக்காக கூட்டிக்கொண்டு அலையும் எனது கணவர் என்னை கேட்கிறார்..."என்னம்மா போதுமா இல்லை இன்னும் போகணுமா" எனும் போது எனக்கு அவரை காண பாவமாக உள்ளது. மற்றொரு பதிவில் கூடுதல் தகவல்களுடன்..... இன்ஷா அல்லாஹ்.
S. Nasarath Rosy
1 | திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் |
| சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். |
|
2 | இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! |
| உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
|
|
3 | உணரப் படாத தீமை சினிமா |
| தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். |
|
4 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
| நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. |
|
5 | ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! |
| செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். |
|
6 | விரக்தி விஷத்தை விட கொடியது |
7 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
8 | வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது. |
9 | நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! |
10 | இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள் |
11 | அந்தப் பெண்களாக நாம்... |
12 | தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில் |
13 | 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்: |
14 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
15 | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், |
16 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் |
17 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? |
18 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... |
19 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! |
20 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை |
21 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் |
22 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
23 | மரணம் நோக்கி... |
24 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
25 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
26 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
27 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
28 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
29 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
30 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
31 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
32 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
33 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
34 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
35 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
36 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
37 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
38 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
39 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
40 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
41 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
42 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
43 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
44 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
45 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
46 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
47 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
48 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
49 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
50 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
51 | எது வணக்கம்..? |
52 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
53 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
54 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
55 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
56 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
57 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
58 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
59 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
60 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
61 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
62 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
63 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
64 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
65 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
66 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
67 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
68 | மனைவியை_நேசிங்கள்.. |
69 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
70 | அம்மா! அம்மா! |
71 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
72 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
73 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
74 | இமாம்களும் மத்கபுகளும். |
75 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
76 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
77 | பராஅத் இரவின் சிறப்புகள் |
78 | வாப்பா! |
79 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
80 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
81 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
82 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
83 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
84 | இதிலென்ன வெட்கம்? |
85 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
86 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
87 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
88 | கற்பில் கவனம் தேவை |
89 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
90 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
91 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
92 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
93 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
94 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
95 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
96 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
97 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
98 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
99 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
100 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
101 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
102 | இறுக்கமும் இரக்கமும் |
103 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
104 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
105 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
106 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
107 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
108 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
109 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
110 | பெயர்களை நினைவில் வைப்போம் |
111 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
112 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
113 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
114 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
115 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
116 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
117 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
118 | ஒரு 2.5 கதை |
119 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
120 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
121 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
122 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
123 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
124 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
125 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
126 | குறைகளை மறைத்தல் |
127 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
128 | நல்ல பெண்மணி |
129 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
130 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
131 | ஈர்ப்பை விதைப்போம்! |
132 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
133 | யார் இந்த துலுக்கன்? |
134 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
135 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
136 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
137 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
138 | நிம்மதி - சிறுகதை |
139 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
140 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
141 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
142 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
143 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
144 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
145 | விற்கப்படும் மார்க்கம் |
146 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
147 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
148 | பார்வைகள் பலவிதம் ! |
149 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
150 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
151 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
152 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
153 | தந்தைகளே! கவனியுங்கள் |
154 | வரலாறு புகட்டும் பாடம் |
155 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
156 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
157 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
158 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
159 | நாம் தான் முயல வேண்டும். |
160 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
161 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
162 | கற்பா? கல்லூரியா? |
163 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
164 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
165 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
166 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
167 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
168 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
169 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
170 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
171 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
172 | முகமாகும் பெண்கள்!! |
173 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
174 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
175 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
176 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
177 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
178 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
179 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
180 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
181 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
182 | ஈமானே-உன் விலையென்ன? |
183 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
184 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
185 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
186 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
187 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
188 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
189 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
190 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
191 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
192 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
193 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
194 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
195 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
196 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
197 | அறிவைத் தேடுவோம்! |
198 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
199 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
200 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
201 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
202 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
203 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
204 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
205 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
206 | “வேர்கள்” வரலாறு! |
207 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
208 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
209 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
210 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
211 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
212 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
213 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
214 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
215 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
216 | பேச்சு,மெளனம் |
217 | ஜனாஸா - மைய்யத் |
218 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
219 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
220 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
221 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
222 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
223 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
224 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
225 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
226 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
227 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
228 | மனித குல விரோதி |
229 | எனது பெயர் ஜனாஸா! |
230 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
231 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
232 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
233 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
234 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
235 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
236 | தமிழரும் இசுலாமியரும் |
237 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
238 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
239 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
240 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
241 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
242 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
243 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
244 | கற்பனைகளும் இஸ்லாமும் |
245 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
246 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
247 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
248 | மது ஒரு பெரும் பாவம் |
249 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
250 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
251 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
252 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
253 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
254 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
255 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
256 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
257 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
258 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
259 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
260 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
261 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
262 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
263 | சுதேசி சிந்தனைகள்....... |
264 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
265 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
266 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
267 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
268 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
269 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
270 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
271 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
272 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
273 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
274 | அறிவைத் தேடுவோம்! |
275 | ஆக்காதீர் ஆசனங்களாக |
276 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
277 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
278 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
279 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
280 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
281 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
282 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
283 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
284 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
285 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
286 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
287 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
288 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
289 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
290 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
291 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
292 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
293 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
294 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
295 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
296 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
297 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
298 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
299 | கண்ணாடிகள் கவனம் |
300 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
301 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
302 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
303 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
304 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
305 | கருத்து வேறுபாடுகள். |
306 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
307 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
308 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
309 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
310 | ஓ! என் இளைய சமுதாயமே! |
311 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
312 | வீண் செலவு வேண்டாமே |