நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!

 

கோவிந் நிகலானி இயக்கிய த்ரோஹால் என்ற திரைப்படம் தமிழில் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ம் ஆண்டு குருதிப்புனல்என்ற படமாகியது. இந்தியை விட தமிழில் அதிக வரேவற்பு கிடைத்த படம் இது. இப்படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் அத்துடன் தீவிரவாதக்குழுவாக அடையாளப்படுத்தப்பட்ட குழு அரசு இயந்திரத்திற்குள் ஊடுறுவி செய்யும் குள்ளநரித்தனங்கள், இயக்கத்தின் பெண் உறுப்பினர்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குவது உட்பட பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நடைமுறையில் இப்படியொரு மோசமான இயக்கம் இருக்க முடியுமா, இவ்வளவு வன்முறை என்பது அதீத கற்பனை என்ற முடிவுடன் தான் அந்த படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ஆனால் சுதீஷ் மின்னி எழுதிய இந்த நூலைப் படித்ததும் குருதிப்புனல் சித்தரிக்கும் அந்த மோசமான இயக்கத்தைவிட கூடுதல் மோசமான இயக்கம் நடைமுறையில் சாத்தியம் என்பதையும் அது இந்து தர்மத்தை நிலைநாட்டுகிறேன் என்ற போர்வையில் இயங்கும் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கம் என்பதையும் அறிந்துகொண்டேன். கமலஹாசனும் பிசி ஸ்ரீராமும் படத்தை எடுப்பதற்குமுன் இந்நூலை படித்திருந்தால் அவர்கள் அந்த தீவிரவாத இயக்கத்தின தன்மையை இப்படத்தில் காட்சிப்படுத்தியதை விட கூடுதலான காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சாகாவிற்கு ஐந்துவயதிலே அவரது தாயாரால் தூக்கிக் கொண்டு விடப்பட்ட குழந்தை சுதீஷ் மின்னி. அவ்வியக்கத்துடன் வளர்ந்து இருபத்தைந்து ஆண்டு காலம் அதில் செலவிட்ட அவர் அவ்வியக்கத்தின் முக்கியமான பல ரகசிய நடவடிக்கைகளில் பங்கெடுத்து அவர்களின் மக்கள் விரோத, சட்ட விரோத, மானுட விரோத, அறத்தை மறுக்கும் நடவடிக்கைகளினால் மனம் நொந்து வெளியேறி அதன் எதிர் இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வந்துசேர்கிறார். அவரது இருபத்தைந்து ஆண்டுகால அனுபவத்தின் ஒரு சிறிய பகுதியை நூலாகியிருக்கிறார். மலையாளத்தில் எழுதப்பட்ட இந்நூலை நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிகிறார் தோழர் சதாசிவம். அத்துடன் மூலநூலாசிரியரை சந்தித்து அவருடன் ஒரு நேர்காணல் நடத்தி அதையும் இந்நூலில் இணைத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் ராணுவம் போல் கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அதன் உள்கட்டமைப்புகள் பற்றிய ஒரு சித்திரம் நமக்கு இந்நூலைப் படித்தால் கிடைக்கும். ராணுவத்தில் மேல் மட்ட அமைப்பில் உள்ளவர்களை கீழ்மட்டத்திலுள்ளவர்கள் கேள்வி கேட்க முடியாதோ அதேபோல் இங்கேயும் முடியாது. ராணுவம் போல் சீருடை, தண்டா என்ற ஆயுதம் ஆகியவை ஆர்எஸ்எஸ் ஊழியரை அடையாளப்படுத்துபவவை. ராணுவ கிளை அமைப்பு ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியுடன் அவ்வமைப்பின் நோக்கத்தில் அதன் உறுப்பினர்களை ஒன்றியிருக்க செய்யும் நோக்கங் கொண்ட வகுப்புகளை எடுப்பது போல் ஆர்எஸ்ஸிலும் தினமும் நடக்கும். அதன் பெயர் சாகா.ராணுவத்தில் உயர் அமைப்பிலிருந்து அடிமட்ட அமைப்புக்கு ஒருவர் பார்வையிட வந்தால் அங்கே Guard of Honour என்ற மரியாதை செலுத்தும் சடங்கு நடப்பது போல் இங்கும் பிரணாம் என்ற சடங்கு உண்டு. ராணுவ உடற்பயிற்சியில் விரைப்பாக நில், தளர்வாக நில் போன்ற கட்டளைகள் இருப்பது போல் ஆர்எஸ்எஸ் சாகாவிலும் சமதபத சஞ்சலம் எனப்படும் கட்டளைகள் உண்டு. எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள். இதற்கிடையில் குணா படத்தில் கமலஹாசன் கூறும் கவிதையில், நடுவில நடுவில மானே தேனே என்று போட்டுக் கொள் என்று கூறுவது போல் அவ்வப்போது தெய்வ வழிபாட்டு ஸ்லோகங்கள் போன்றவையும் சாகாக்களில் உண்டு. இவையெல்லாம் தேசபக்தி என்ற போர்வையில் ஆரம்ப கட்டத்தில் உள்ளே நுழைபவர்களுக்கு மட்டுமே. உள்ளே வந்த ஒருவர் இயக்கத்திற்கு கட்டுண்டவர் என்ற நிலையை அடைந்ததும் கொடுக்கப்படும் சிகிச்சைகள் வேறு.

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி
அமைப்பு முறைகளில் செங்குத்தான (Verticals) வடிவத்திலிருந்து அணி (Matrix) வடிவத்திற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் 1990களில் மாறிச் சென்றதைப் போல், ஆர்எஸ்எஸ்ஸும் மாறிச் சென்றிருக்கிறது. அணிவடிவத்தில் செங்குத்து மற்றும் கிடைநிலை (Horizontal) அதிகார மையங்களும் இரண்டும் சந்திக்கும் புள்ளிகளும் (Matrix Point) உண்டு. ஆர்எஸ்எஸ்ஸில் உள்ள செங்குத்து படிநிலைகள்: சாகா, மண்டல், தாலுக், விபாக், பிராந்தம், ஷேத்ர, தேஷ் (தமிழில்: கிளை, ஊர், தாலுகா, மாவட்டம், மாநிலம், மண்டலம், தேசம்) கிடைமட்டங்கள்: பௌதிக் (அடிமட்ட கருத்தியல்), தத்துவம் (உயர்மட்ட கருத்தியல்), சேவா (சேவைகள்), சம்பர்க் (தொடர்பாடல்), வியவஸ்தா (நிதி), சாணக்யா (உளவு), பிரசாரக் (ஐஏஎஸ் போன்ற நிர்வாகப் பொறுப்பு) இன்னும் பல. பிரசாரக் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது. கிடைமட்டத்தில் குறிப்பிடப்படும் வேலைகளைச் செய்பவர் எந்த செங்குத்துப்பிரிவிலும் எந்த மட்டத்திலும் நேரடித் தொடர்புகொள்ள முடியும். ஆனால் தனிப்பட்ட கிடைமட்டங்கள் தங்களுக்குள் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது. அதேபோல் ஒவ்வொரு செங்குத்துப் படிநிலைகளில் பணியாற்றுபவர்களுக்கு விசேடப் பயிற்சிகள் உண்டு. அந்தந்த மட்ட பயிற்சி இல்லாமல் அந்தந்த மட்ட பொறுப்புக்கு வரமுடியாது. அதே நேரத்தில், கிடைமட்டப் பணிகளை கவனிப்பவர்கள் தேசமட்ட பயிற்சியை கட்டாயம் பெறவேண்டும். சுதீஷ்மின்னி சாணக்கியா பிரிவில் பணியாற்றியதால் அவர் தேசிய மட்ட பயிற்சி பெற்றவர். எனவே அவர் தேசம் முழுவதும் சென்று பணியாற்றும் தகுதிபடைத்தவர். இப்படி திட்டமிடப்பட்டு ராணுவ ஒழுங்குமுறையுடன் கூடிய அமைப்புமுறையே ஆர்எஸ்எஸ் அமைப்பு. இதை இப்புத்தகம் வாசிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் சங்பரிவாரம் என்று கூறப்படும் எண்ணற்ற துணை அமைப்புகள் பற்றிய சித்திரமும் இந்நூலைப் படிப்பவர்களுக்கு கிடைக்கும்.

இப்படி ராணுவம் போன்ற அமைப்பு இருப்பதால்தான் அமைப்பானது கொலை, கொள்ளை, பொது நிதி மோசடி, வன்புணர்ச்சி, பலிதானிகளின் (இயக்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள்) மனைவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற அறத்தை மீறிய செயல்களை செய்துவிட்டு எல்லாவற்றையும் மூடி மறைக்க முடிகிறது. இவ்வமைப்பில் சேர்ந்து அடிநிலைலிருந்து வளர்ந்து வருபவர்களுக்கு இவர்களின் அறத்தை மீறிய செயல்கள் உறுத்தலாகி பலநேரங்களில் மேல்மட்ட ஊழியர்களிடம் கேள்விகளை எழுப்பும் சூழ்நிலை உண்டு. மாவட்ட மட்டத்திலிருந்து மாநில மட்டம் வரை நடக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டங்களில் அடிதடி சட்டை கிழிப்பு நடக்கும்போது கலந்து கொள்ளும் மேலிடப்பார்வையாளர் கலவரத்தை அடக்குவதற்கு மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷத்தை எழுப்புவது போல், இவர்களும் இப்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பாரத மாதாக்கீ ஜே என்று உரத்த கோஷம் எழுப்பியோ, பகவத் கீதையின் ஒரு தத்துவப்பாடலைப் பாடியோ, இதற்கென்று சாணக்கியா பிரிவு தயாரித்து வைத்துள்ள சமஸ்கிருத ஸ்லோகத்தைக் கூறியோ கேள்விகளை அடக்கிவிடுவர். சங்கின் அறத்தை மீறிய செயல்களால் சுதீஷ் மின்னிக்கு உறுத்தல் ஏற்பட்டு அது மன உளைச்சலாகி அவற்றின் மீது கேள்விகள் எழுப்பிய போதெல்லாம் எதைக் கூறி சமாளித்தார்கள் என்பதை பல சம்பவங்களின் உதாரணத்தின் மூலம் இந்த நூலில் விளக்குகிறார்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது எதிரிகளாக சித்தரிப்பது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்ட்கள். இவர்கள் எல்லாரும் அவர்களைப் பொருத்தவரை தேசத் துரோகிகள். எனவே இந்த மூன்று பிரிவினரிடமும் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்ளலாம். அவர்களை அடிக்கலாம் உதைக்கலாம், வன்புணர்ச்சி செய்யலாம், கொலை செய்யலாம், அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தலாம், திருடலாம், சூறையாடலாம். இச்செயல்களை எந்தளவுக்கு ஆக்ரோஷமாக ஒருவன் செய்கிறானோ அந்தளவுக்கு இயக்கத்தில் அவனுக்கு மதிப்பு உண்டு. அவர்கள் நடத்தும் பயிற்சிமுகாம்களில் இவர்கள் சித்தரிக்கும் எதிரிகளை துன்புறுத்திய, மோசடி செய்து ஏமாற்றிய சம்பவங்களைச் சாகசச் செயல்களாக பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் கூற வேண்டும். மனிதனை அநாகரிக கட்டத்திற்கு இழுத்துச் செல்லும் இந்நடவடிக்கைகளை“தர்மயுத்தம்”என்ற சொல் கொண்டு நியாயப்படுத்த முடியும். ஆனால் சட்ட விதிமுறைகளின் படி இயங்கும் நமது நாகரீக சமூகத்தில் இவற்றிற்கெல்லாம் இடமில்லை. எனவேதான் இவற்றை அமல்படுத்துவதற்கு தேவைப்படுவது ரகசிய திட்டங்கள். ஒருவருக்கு மட்டுமே தெரிந்ததால்தான் அது ரகசியம் என்றொரு பழமொழி உண்டு. எனவே ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடி சட்டத்துக்கு புறம்பான அநாகரீகச் செயல்களில் ஈடுபடும் நடவடிக்கைகளை ரகசிய முடிவெடுத்தால் என்ன நடக்கும்? ஒவ்வொருவர் மீதும் மற்றவர்களுக்கு எப்போதும் சந்தேகம். விளைவு இறுக்கமான நிலை, இதுதான் சுதீஷ் மின்னி இந்நூலில் கூறும் ஸ்தாபன அனுபவங்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் அணிவகுப்பில் சுதீஷ் மின்னி
ஆர்எஸ்எஸ்ஸின் ஆணிவேர் சாதியத்தை கட்டிக்காப்பதில் அடங்கியிருக்கிறது என்பதையும் இந்நூல் வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். தலித்வகுப்பைச் சேர்ந்த சுதீஷ்மின்னியை வட இந்தியப் பணிகளுக்கு அனுப்பும் போதெல்லாம் பூணூல் அணிவித்து ஷத்ரியன் என்று வர்ணமாற்றம் செய்து அனுப்புவார்கள். அங்கே மாநில, மாவட்ட அலுவலக கட்டடங்களின்மேல்தளங்களில் எப்பொழுதுமே உயர்சாதியினர் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். அங்கே பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. உயர்சாதியினரின் கொடூர நிலப்பிரபுத்துவ மனோநிலையினை சுதீஷ்மின்னி கண்கூடாக பார்த்திருக்கிறார். இயக்கத்துக்குள் நடக்கும் நிதி மோசடி, இதன்விளைவாக நடத்தப்படும் கொலைகள், கொலைகள் செய்தது யார் என்று யாருக்குமே தெரியாமல் எதிரிகளாக சித்தரித்தவர்கள் மீது போட்டு கலவரத்தைநடத்துவது போன்ற சம்பவங்களையும் இந்நூல் வாசிப்பவர்கள் காணலாம். சென்னையில் இயங்கிய/இயங்கும் வட்டார ரவுடிகளான வெள்ளை ரவி, பாக்ஸர் வடிவேலு, வெல்டிங் குமார், பல்லு மதன், காதுகுத்து ரவி, பினு, கல்வெட்டு ரவி, காக்காதோப்பு பாலாஜி, டாக் ரவி, தாம்பரம் சூர்யா, அடைக்கலராஜ், கனகு, மைலாப்பூர் சிவக்குமார் போன்ற கேங்ஸ்டர்களிடம் கூட கொஞ்சம் நாணயத்தை எதிர்பார்க்க முடியும் ஆனால் சங் அமைப்பின் உள்மட்ட நிர்வாகிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பதையும் இந்நூல் வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இதற்கு சிறந்த உதாரணம்தான் தடகளவீரர் சத்யனின் கொலை. இவர் காலைநேர ஓட்டப்பயிற்சியின் போது ஒரு சங் ஊழியரின் மனைவியுடன் வேறொரு சங் ஊழியர் சல்லாபத்திலிருப்பதை பார்த்துவிட்டார்என்பது அந்த பெண்ணுக்கு தெரிந்துவிட்டது. இதை அந்தப்பெண் அந்த சங் ஊழியரிடம் கூற அவருடைய ஏற்பாட்டின் பேரில் நடந்ததுதான் சத்யனின் கொலை என்பது வாசிப்பவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவமாகும்.

மானுடவிரோத, சமூக விரோத, தேச விரோத நடவடிக்கைகளை திட்டமிட்டு அமைப்புரீதியாக நீண்டகாலமாக நடத்தமுடியும் என்றால் அதற்கு இரண்டு விஷயங்கள் அடிப்படையானவை. ஒன்று அவர்கள் ஏற்றுக்கொண்ட கருத்தியல் மற்றொன்று இக்கருத்தியலை அமல்படுத்தும் வலுவான அமைப்பு, அதுவும் ராணுவரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட, அமைப்பின் மூலமே சாத்தியமாகும், ஒவ்வொரு மட்டத்திலும் எடுக்கும் முடிவு அடுத்த மட்டத்துக்கு தெரியாது. குறிப்பாக, குள்ளநரித்தனத்துடன் இயங்கும் சாணக்கியா என்ற உளவுப்பிரிவானது, கொலைகளை எப்படி திட்டமிடுவது, கவலரங்களை எப்படி திட்டமிடுவது, ஆட்சியைக் கவிழ்ப்பது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது போன்றவற்றில் சிஐஏ போன்ற உளவு அமைப்புகளுக்கு இணையாக கைதேர்ந்த அமைப்பாக உருவெடுத்திருக்கிறது. நிதியைப் பொருத்தவரை இவர்களுக்கு பிரச்சனையே இல்லை. கோடிக்கோடியாக உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் கொட்டுகிறது. அதை “சரிவரப்” பயன்படுத்தி அமைப்பின் நடவடிக்கைகளை இந்தியாவின் மூலைமுடுக்கிற்கெல்லாம் கொண்டு செல்ல முடிந்திருக்கிறத. அரசு நிர்வாகத்தில் எந்தளவுக்கு ஊடுறுவியிருக்கிறது, தேசியஅளவில் நடக்கும் பயிற்சிகளில்உயர்மட்ட அரசு அதிகாரிகள்எந்தளவில் கலந்துகொள்கிறார்கள் என்ற தகவல் இந்நூலில் உள்ளது. எனவேதான் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை ஏனென்றால் சட்ட நிர்வாக விஷயங்களில் முடிவெடுக்கும் உயர் மட்ட அதிகாரிகள் இவ்வமைப்புடன் நீண்டகாலம் தொடர்பில் இருக்கிறார்கள். அப்படியென்றால் இதுபோன்ற விஷவிருட்சத்தை துடைத்தெறிவது எப்படி என்ற பயம் கலந்த கேள்வியை வாசகனுக்கு இந்நூல் உண்டாக்குகிறது.

ஆனால் ஊன்றிப்படிக்கும் வாசகன் இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்வான். ஆம், ஒரு ஸ்தாபனம் பின்பற்றும் கருத்தியலே அந்த ஸ்தாபனத்தை தீர்மானிக்கிறது என்ற உண்மையை இந்த அமைப்புக்கு பொருத்திப் பார்த்தால், மானுட விரோத கருத்தியல் அடிப்படையில் இயங்கும் இவ்வமைப்பு ரகசிய அமைப்பாகவும் ஜனநாயகத்தன்மையற்ற அமைப்பாகவும் மட்டுமே இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜனநாயகத் தன்மையற்ற ஒரு அமைப்பிற்குள் உள்முரண்பாடு தோன்றி, அது முற்றி, அதன் அடிப்படை இருத்தலுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதையும் இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். இயக்கத்திற்காக கொலைகள் செய்வது என்று சமூகம் ஏற்றுக்கொண்ட அறத்தை மீறும் செயலானது, தனக்காக கொலை செய்வது என்று அதில் ஈடுபடும் தனிநபர்கள் முடிவெடுக்க வெகுகாலமாகாது. இதற்கு சிறந்த உதாரணம் தடகளவீரர் சத்யனின் கொலை. இது இயக்கத்திற்காக செய்யப்பட்ட கொலையல்ல. ஆனால் இயக்கத்திற்காக கொலை முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனைக்காக செய்யப்பட்ட கொலையிது. சட்டதிட்டங்களுக்கு உட்படாமல்தான் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான நிதியை கையாள முடியும். எனவே கணக்கு வழக்கு முறையில்லாமல் இயக்கத்திற்காக நிதியைச் செலவிடுபவர் தனக்காகவும் நிதியைச் செலவிட முடியும். யாரும் கேள்வி கேட்க முடியாது. சில நேரங்களில் பிரச்சனை வெடித்தால் இந்நூலில் கூறியதுபோல் இன்னாருக்கு கொடுத்த தொகை டேஷ் என்றுதான் எழுத முடியும்.

சட்டவிரோதமான செயல்களுக்கு செலவிடப்படும் போது இன்னார் யார்டேஷ் தொகை எவ்வளவு என்று எழுத்து பூர்வமாகவெளிப்படையாக அறிவிக்க முடியாது. தணிக்கை செய்ய முற்படும் யாரும் மனம் நொந்துபோனால் கவுண்டமணியின் வசனமான “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்பதை ஒற்றை சமஸ்கிருத வார்த்தையான “தர்மயுத்தம்” என்று கூறிவிட்டு சென்றுவிட முடியும். தணிக்கைப் பணி ஒப்படைக்கப்பட்டு அதை செய்த சுதீஷ்மின்னிக்கும் இதுதான் பதிலாக கிடைத்தது. அமைப்புக்குள் அதிக அதிகாரம் படைத்தவர்களாக இருக்கும் பிரசாரக்கள் இல்லறவாழ்வில் ஈடுபட முடியாது என்ற இயற்கைக்கு விரோதமான விதியானது அவர்கள் பாலியல் குற்றஞ்செய்வதற்கு இட்டுச் செல்கிறது. குறிப்பாக இயக்கத்திற்காக உயிர்பலி கொடுத்தவர்களின் மனைவிகளை பெண்டாள வைக்கிறது. இவையெல்லாம்தான் அங்கே உள்முரண்பாடுகள் தோன்றுவதற்கு காரணமாகும். இம்முரண்பாடுகள் முற்றி வெடித்து அமைப்பை பலகீனமடையச் செய்யும். அதன் ஒரு அறிகுறியே சுதீஷ்மின்னியின் வெறியேறல், அதனைத் தொடர்ந்து வெளிவந்த இந்த நூல். சமூக நீதிக்காக, சமூக மாற்றத்திற்காக, சமத்துவத்திற்காக போராடும் ஒவ்வொருவரும் தங்கள் செயல்பாட்டை கூர்மைப்படுத்திக்கொள்ள இவற்றிக்கு எதிரானமுக்கியமான எதிரியினைப் பற்றிய ஞானம்பெற இந்நூலை வாசிக்க வேண்டும். மொழியாக்கம் செய்த தோழர் சதாசிவத்திற்கு எனது பாராட்டுதல்கள்.

நன்றி - புக் டே(https://bookday.in/sudheesh-minnis-naraga-maligai-naraka-sakethathile-ullarakal-book-review-by-vijayan-s/)






1 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
  எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் காட்டும் ஒரு சிறு கருணை அல்லது சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
 
2 ரமலானை வரவேற்கும் துஆ
  நோன்பும் இரவுத் தொழுகையும் நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருள்வாயாக. இம்மாதத்தை எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் மாதமாகவும், தவறான எண்ணங்களை அழிக்கும் மாதமாகவும் ஆக்குவாயாக.
 
3 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
  அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். நாம் அனைவரும் இந்த உலகிற்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதற்காக மட்டுமே. இந்த வழிபாடுகளில் மிக உயர்ந்தது, அல்லாஹ் சட்டமாக்கிய கடமைகளை நிறைவேற்றுவதாகும். நோன்பு என்பது ஒரு தனித்துவமான வணக்கம். ஏனெனில், இது 'ஒன்றைச் செய்வதால்' கிடைக்கும் நன்மையல்ல, மாறாக அல்லாஹ்வுக்காக 'சிலவற்றைத் தவிர்ப்பதால்' (உணவு, நீர், இச்சை) கிடைக்கும் நன்மையாகும்.
 
4 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
  அல்குர்ஆன் கூறும் இரண்டு சரிதைகள். இரண்டுமே பேரற்புதம். 1. யூசுஃப் (அலை). 2. மூஸா (அலை). இரண்டு சரிதைகளுக்கும் இடையிலான அற்புதமான ஒப்பீட்டை அல்குர்ஆன் அழகாகச் சொல்லித் தருகிறது.
 
5 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
  பிறகு நான் கருதினேன்: "நான் இன்னும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குத் தேடலை நிறுத்திவிட்டு, என் நற்காரியங்களைப் பார்த்தேன், அவைகளில் பெரும்பாலும் சோம்பல், பொடுபோக்கு, குறைபாடுகள் மற்றும் பாவங்கள் கலந்திருப்பதைக் கண்டேன்.
 
6 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
7 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
8 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
9 ︎நேர்மை என்பது...
10 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
11 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
12 பாலஸ்தீனத்தின் பெருமை
13 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
14 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
15 உணரப் படாத தீமை சினிமா
16 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
17 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
18 விரக்தி விஷத்தை விட கொடியது
19 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
20 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
21 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
22 அந்தப் பெண்களாக நாம்...
23 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
24 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
25 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
26 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
27 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
28 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
29 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
30 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
31 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
32 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
33 இளையான்குடியில் உருது மக்கள்
34 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
35 மரணம் நோக்கி...
36 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
37 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
38 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
39 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
40 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
41 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
42 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
43 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
44 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
45 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
46 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
47 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
48 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
49 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
50 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
51 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
52 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
53 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
54 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
55 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
56 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
57 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
58 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
59 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
60 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
61 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
62 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
63 எது வணக்கம்..?
64 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
65 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
66 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
67 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
68 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
69 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
70 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
71 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
72 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
73 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
74 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
75 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
76 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
77 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
78 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
79 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
80 மனைவியை_நேசிங்கள்..
81 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
82 அம்மா! அம்மா!
83 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
84 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
85 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
86 இமாம்களும் மத்கபுகளும்.
87 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
88 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
89 பராஅத் இரவின் சிறப்புகள்
90 வாப்பா!
91 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
92 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
93 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
94 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
95 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
96 இதிலென்ன வெட்கம்?
97 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
98 பழையன கழிதலும் புதியன புகுதலும்
99 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
100 கற்பில் கவனம் தேவை
101 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
102 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
103 இஸ்திஃகாராவின் சிறப்பு
104 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
105 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
106 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
107 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
108 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
109 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
110 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
111 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
112 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
113 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
114 இறுக்கமும் இரக்கமும்
115 இஷா தொழுகையும் இரவு உணவும்
116 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
117 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
118 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
119 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
120 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
121 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
122 பெயர்களை நினைவில் வைப்போம்
123 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
124 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
125 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
126 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
127 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
128 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
129 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
130 ஒரு 2.5 கதை
131 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
132 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
133 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
134 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
135 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
136 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
137 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
138 குறைகளை மறைத்தல்
139 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
140 நல்ல பெண்மணி
141 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
142 💥 யார் அந்த மாமனிதர்..?
143 ஈர்ப்பை விதைப்போம்!
144 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
145 யார் இந்த துலுக்கன்?
146 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
147 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
148 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
149 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
150 நிம்மதி - சிறுகதை
151 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
152    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
153 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
154 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
155  வாழ்க்கை வாழ்வதற்கே !
156 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
157 விற்கப்படும் மார்க்கம்
158 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
159 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
160 பார்வைகள் பலவிதம் !
161 நேர மேலாண்மை / திட்டமிடல்
162 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
163 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
164 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
165 தந்தைகளே! கவனியுங்கள்
166 வரலாறு புகட்டும் பாடம்
167 அல்குர்ஆன் என்னும் மதுரம்
168 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
169 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
170 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
171 நாம் தான் முயல வேண்டும்.
172 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
173 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
174 கற்பா? கல்லூரியா?
175 கசாப்புத் தொழில் சிறந்தது....
176 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
177 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
178 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
179 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
180 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
181 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
182 என் ஹிஜாப் என் உரிமை!!!
183 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
184 முகமாகும் பெண்கள்!!
185 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
186 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
187 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
188 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
189 செல்போன்கள்... ஜாக்கிரதை!
190 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
191 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
192 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
193 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
194 ஈமானே-உன் விலையென்ன?
195 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
196 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
197 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
198 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
199 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
200 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
201 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
202 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
203 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
204 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
205 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
206 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
207 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
208 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
209 அறிவைத் தேடுவோம்!
210 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
211 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
212 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
213 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
214 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
215 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
216 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
217 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
218 “வேர்கள்” வரலாறு!
219 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
220 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
221 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
222 மனிதனின் தேவை ! – மன அமைதி
223 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
224 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
225 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
226 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
227 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
228 பேச்சு,மெளனம்
229 ஜனாஸா - மைய்யத்
230 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
231 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
232 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
233 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
234 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
235 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
236 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
237 வலிமார்கள் என்பவர்கள் யார்?
238 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
239 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
240 மனித குல விரோதி
241 எனது பெயர் ஜனாஸா!
242 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
243 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
244 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
245 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
246 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
247 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
248 தமிழரும் இசுலாமியரும்
249 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
250 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
251 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
252 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
253 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
254 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
255 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
256 கற்பனைகளும் இஸ்லாமும்
257 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
258 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
259 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
260 மது ஒரு பெரும் பாவம்
261 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
262 பெற்றோர்களைப் பேணுவோம்!
263 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
264 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
265 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
266 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
267 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
268 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
269 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
270 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
271 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
272 மறுமை வாழ்வை நேசிப்போம்!
273 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
274 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
275 சுதேசி சிந்தனைகள்.......
276 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
277 கல்வி நல்லோர்களின் சொத்து!
278 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
279 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
280 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
281 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
282 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
283 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
284 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
285 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
286 அறிவைத் தேடுவோம்!
287 ஆக்காதீர் ஆசனங்களாக
288 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
290 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
291 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
292 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
294 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
295 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
296 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
297 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
298 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
299 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
300 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
301 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
302 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
303 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
304 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
305 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
306 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
307 விசுவரூபம் ஒரு விளக்கம்
308 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
309 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
310 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
311 கண்ணாடிகள் கவனம்
312 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
313 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
314 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
315 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
316 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
317 கருத்து வேறுபாடுகள்.
318 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
319 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
320 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
321 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
322 ஓ! என் இளைய சமுதாயமே!
323 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
324 வீண் செலவு வேண்டாமே