வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது. 
	ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), தம் தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த போது, ஒரு மனிதர் அங்கு வந்து, "உங்களில் யார் முஹம்மது?" என்று கேட்டார்.
பாடம் முடிந்தது!
பணிவு குறித்து படுவேகமாக நடந்து முடிந்த பாடம் அந்நிகழ்வு தான்.
அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களிடம், "இறையில்லம் கஅபாவுக்கு பட்டுப்போர்வை அணிவிக்கக் கூடாதா?" என்று கேட்கப் பட்டது.
"முஸ்லிம்களின் வயிறு தான் முதன்மையானது!" என்று பதிலளித்தார்கள்.
ஆட்சி மாட்சிமை பெற்றது.
ஹஸனுல் பஸரீ (ரஹ்), பள்ளிவாசலில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு மனிதர் வந்து, அவர்களின் ஏதோ இரண்டு வார்த்தைகள் கிசுகிசுத்தார்.
தொடர்ந்து பாடத்தை முழுமையாக நடத்தி முடித்த ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்களின் முக நிறம் மாறியிருந்தது.
பிறகு மக்களை நோக்கி, "முஸ்லிம் சகோதரர்களே! என் மகனுக்கு மரணம் ரிஜ்காக- அருள்வளமாக இப்போது வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அவரைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவருக்கு ஜனாஸா தொழ வைக்கும் வரை காத்திருங்கள்!" என்றார்கள்.
வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
..
1960- ம் ஆண்டு...
சூடானிய அறிஞர் ஷைக் அப்துல் பாகீ முகாஷிஃபி ஆற்றிய வரலாற்றின் மிகச் சிறிய உரை:
"முஸ்லிம்களே! ஆயிரம் பள்ளிவாசல்கள் கட்டுவதை விட பசித்தவனின் வயிற்றுக்கு ஒரு கவளம் உணவு வழங்குவது சிறந்தது; தொழுகைக்கு எழுந்து நில்லுங்கள்!"
அவ்வளவு தான்; உரை முடிந்து மக்கள் தொழுகைக்கு எழுந்தனர்.
துனீஷியா ஸைத்தூனா பள்ளிவாசலில் தாஹிர் பின் ஆஷூர் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்:
"உங்கள் பெண்கள் நிர்வாணிகளாக இருக்கும் நிலையில் உங்கள் தொழுகையால் எந்த நன்மையுமில்லை; தொழுகைக்கு எழுந்து நில்லுங்கள்" என்றார்.
நவீனகால வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட 
மிகச்சுருக்கமான பொருட்செரிவுடன் நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ உரை இதுவும் ஒன்று.
நம் காலத்து உரையாளர்கள் மணிக்கணக்கில் நிகழ்த்தும் உரைகளின் பலன் பெரும்பாலும் கேள்விக்குறிதானே!
..
நாட்டுப்புற அரபியொருவர் புனித கஃபாவை தவாஃப்- வலம் வந்தபின் இரண்டு ரகஅத் தொழுதார். எழுந்து சென்று விட்டார்.
"அல்லாஹ்விடம் உனக்கு எந்தத் தேவையுமில்லையா?" என்று அவரிடம் கேட்டார்கள்.
"இருக்கிறதே, அவனிடம் கேட்டுவிட்டேனே!" என்றார்.
"என்ன கேட்டாய்?"
"அல்லாஹ்... நீ என் பாவங்களைக் கணக்கெடுத்து வைத்துள்ளாய்; அவற்றை மன்னித்து விடு! என் தேவைகளை அறிந்து வைத்துள்ளாய்; நிறைவேற்றிக் கொடு! என்று கேட்டேன்."
துஆவிலும் தான் எவ்வளவு நேர்த்தி!
உன் இறைவனிடம் நீ அழகாக துஆ- பிரார்த்தனை செய்வாயாமே? என்று மற்றொரு நாட்டாரிடம் கேட்டார்கள்.
'ஆமாம்!' என்றார்.
"கேள்... பார்க்கலாம்!"
"அல்லாஹ்... நாங்கள் கேட்காமலே எங்களுக்கு இஸ்லாத்தை வழங்கினாய்... நாங்கள் சொர்க்கத்தைக் கேட்கிறோம்; கொடுக்காமல் விட்டு விடாதே!"
..
ஏமன் பிரதேசத்திற்கு முஆது (ரழி) அவர்களை ரஸூலுல்லாஹி (ஸல்), அனுப்பி வைத்தபோது, "யா ரஸூலல்லாஹ்! எனக்கு அறிவுரை கூறுங்கள்!" என்று கேட்டுக் கொண்டார்.
"உன் மார்க்க நடைமுறைகளைத் தூய்மையாக அமைத்துக் கொள்; குறைந்தளவு செயல்பாடே உனக்குப் போதுமாகி விடும்!" என்று அறிவுறுத்தினார்கள்.
(தர்ஃகீபு வத்தர்ஹீபு 1/39)
அரபு வணிகர் ஒருவர் இந்தோனேஷியா சென்றார். அவர் குர்ஆனின் 'அல்ஃபாத்திஹா', அல்ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்களை மட்டுமே மனனம் செய்திருந்தார்.
மக்கள் அவரின் முகத்தில் இருந்த ஒளியைப் பார்த்தார்கள்.
உண்மை, நம்பகத்தன்மை கொண்ட அவரின் பண்புகளைப் பார்த்தார்கள்.
பூமியில் நடந்துளவும் குர்ஆனாக அவரின் பொருளாதார பரிவர்த்தனையையும் பார்த்து அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைந்தார்கள்.
வாளுக்கோ, ஈட்டிக்கோ வேலையில்லை; மார்க்கமென்பது நடைமுறை தானே!
..
ஒரு மருத்துவமனையில் இப்படி எழுதி வைத்திருந்தார்கள்:
"எப்டி இருக்கீங்க?" என்று கேட்பவர்களுக்கெல்லாம் உங்கள் சிகிச்சை சிரமங்களை விவரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
அவர்களின் கேள்வியில் தொக்கி நிற்பது நலம் பெறுவதற்கான வாழ்த்துச் செய்திதான்; விசாரணை அல்ல!"
ஆனால் விசாரிப்பவர்களிடம் நம் நிலையைப் பட்டியலிடாமல் விடுவோமா!?
இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம், "இமாம்! எப்போது ஓய்வு கிடைக்கும்? என்று கேட்டார்கள்.
"சொர்க்கத்தில் நீ முதல் அடி எடுத்து வைக்கும் போது..." என்றார்.
நபித்தோழர்களின் மாணவரான 'தாபிஈ' ஒருவரிடம், "நான் எப்பொழுது நிம்மதியடைவேன்?" என்றொருவர் கேட்டார்.
"மறுமையின் சோதனைக்களமான "ஸிராத்துல் முஸ்தகீம்" உனக்குப் பின்னால் இருக்கும் போது..." என்றார்.
இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களிடம், "விடிந்த பொழுது எப்படி இருக்கிறது?" என்று கேட்கப்பட்டது.
"இரண்டு அருட்கொடைகளுடன் விடிந்திருக்கிறது; அவற்றில் எது சிறந்ததென்று எனக்குத் தெரியாது.
ஒன்று, என் பாவங்களை அல்லாஹ் மறைத்திருக்கிறான். அவன் படைப்பினங்களில் யாரும் அதனைக் குறை காணவில்லை.
இரண்டாவது, அடியார்களின் உள்ளங்களில் என் மீது அல்லாஹ் நேசத்தைப் போட்டிருக்கிறான்; என் செயலால் அதனை நான் அடையவில்லை." என்றார்.
விசாரிப்பவர்களுக்கும் கேள்வி கேட்பவர்களுக்கும் மன நிறைவடையும் பதில் கூறுவது ஒரு கலை; அதை அறியாதவர்கள் மௌனம் காப்பது சிறந்தது.
..
சர்க்கார் கிப்லா ஸைய்யது நிஜாமிஷாஹ் நூரி தாமத் பரக்காத்துஹு அவர்களிடம் ஆன்மிக அன்பர்கள் அதிகம் உரையாடுவதில்லை; ஆனால் அவர்களின் உள்ளங்களில் அலையடிக்கும் கேள்விகள் அமைதியடைந்து விடும்.
ஆன்மிகப் பாதையில் "ஸீனா ப ஸீனா- நெஞ்சோடு நெஞ்சம்" என்பார்கள். மனமும் மனமும் பேசிக் கொள்ளும் போது வார்த்தைகளுக்கு என்ன வேலை?!
இது ஒருவகையான கட்டுப்பாட்டுப் பயிற்சி; நினைத்ததையெல்லாம் பேசி மற்றவரின் மனத்தைப் புண்படுத்தி, தன் வாழ்க்கையை சீரழிவில் தள்ளுவதிலிருந்து இதனால் காத்துக் கொள்ளலாம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளதா(ன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளதா(ன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்."
(ஸஹீஹ் புகாரி 6474)
..
ஆன்மிகப் பயிற்சிகள், புனிதவேதம் குர்ஆனுடன் நமக்கு இணைப்பை ஏற்படுத்தி, குர்ஆனிய கட்டமைப்புக்கு நம்மைப் பழக்கப்படுத்தி விடுகின்றன.
وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا 
"மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்." (அல்குர்ஆன் : 17:37) 
என்று நம் நடையையும்,
وَاغْضُضْ مِنْ صَوْتِكَ
"உன் குரலையும் தாழ்த்திக் கொள்."
(அல்குர்ஆன் : 31:19) என்று நம் குரலையும்,
لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ 
"நீர் உமது கண்களை நீட்டாதீர்." 
(அல்குர்ஆன் : 15:88) என்று நம் கண்களையும்,
وَّلَا تَجَسَّسُوْا 
"(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்."
(அல்குர்ஆன் : 49:12) என்று நம் செவிப் புலனையும்,
وَلَا تُسْرِفُوْا 
"எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 7:31) என்று நம் உண்ணுதலையும்,
وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا 
"மனிதர்களிடம் அழகானதைப்
பேசுங்கள்." (அல்குர்ஆன் : 2:83) என்று 
நம் வார்த்தைகளையும்,
وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا
"அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்."
(அல்குர்ஆன் : 49:12) என்று நம் சபைகளையும் குர்ஆன் கட்டுப் படுத்துகிறது.
குர்ஆன் நம் வாழ்க்கைக் கோட்பாடு என்பது வெற்று முழக்கமாகி விடாமல் நம் வாழ்க்கை நடைமுறையாக வேண்டாமா; அப்படியானால் நாம் கொஞ்சம் பயிலவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் தான் வேண்டும்.
#முஸ்தஃபா_காசிமி
#குர்ஆனின்_நிழலில்...- 28
                
                
          
                            
                            
                               |   1   | அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது? | 
|     |   பிறகு நான் கருதினேன்: "நான் இன்னும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குத் தேடலை நிறுத்திவிட்டு, என் நற்காரியங்களைப் பார்த்தேன், அவைகளில் பெரும்பாலும் சோம்பல், பொடுபோக்கு, குறைபாடுகள் மற்றும் பாவங்கள் கலந்திருப்பதைக் கண்டேன். |  
|     |  
 |   2   | எல்லா பிரச்சனைக்கும்  தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் - | 
|     |   பாலஸ்தீன மக்களின் அசைக்க முடியாத உறுதிக்கு காரணம் அவர்கள் குர்ஆனின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என அண்மையில் The Guardian என்ற பத்திரிக்கையின் ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. இன்றைய உலகின் அதிகளவு குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களின் பட்டியலில் பாலஸ்தீன காஸாவும் உள்ளது என்பது மற்றுமொரு புள்ளிவிவரம். |  
|     |  
 |   3   | காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது | 
|     |   போர் நிறுத்தம் வந்ததும் தனது பச்சிளம் பாலகனை தனது கைகளில் சுமந்து கொண்டு வடக்கு திரும்பினாள். தன்னை வரவேற்க கணவன் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. குழந்தையைப் பராமரிக்க தந்தை இல்லையே என்ற சோகம் அவளை தழுவி இருந்தது. |  
|     |  
 |   4   | தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை. | 
|     |   ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது? |  
|     |  
 |   5   | ︎நேர்மை என்பது... | 
|     |   நேர்மையால் நீங்கள் நிரந்தரமாக பலரை இழக்கலாம். ஆனால், ஒருபோதும் உங்களது நிம்மதியை இழக்க மாட்டீர்கள். பொய்யுரைத்து பலபேரால் நீங்கள் பகட்டு இன்பம் பெறலாம். ஆனால், ஒருபோதும் உங்களால் நிம்மதியைப் பெறமுடியாது. |  
|     |  
 |   6   | செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் | 
 |   7   | போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர் | 
 |   8   | பாலஸ்தீனத்தின் பெருமை | 
 |   9   | திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் | 
 |   10   | இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! | 
 |   11   | உணரப் படாத தீமை சினிமா | 
 |   12   | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! | 
 |   13   | ஆறுதல் சொல்லச் சென்றோர்  ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! | 
 |   14   | விரக்தி விஷத்தை விட கொடியது | 
 |   15   | பொறுத்தோம்!  ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! | 
 |   16   | நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! | 
 |   17   | இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள் | 
 |   18   | அந்தப் பெண்களாக நாம்... | 
 |   19   | தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில் | 
 |   20   | 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்: | 
 |   21   | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் | 
 |   22   | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், | 
 |   23   | நோன்பும் மனக்கட்டுப்பாடும் | 
 |   24   | இவ்வளவு முரண்பாடுகளுடன்  இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? | 
 |   25   | ஐரோப்பாவின் பிரபல்யமான  அறிவுத் திருட்டுகள்..... | 
 |   26   | திருமணப் பதிவேடு எழுதுவதில்    அக்கறையின்மை......! | 
 |   27   | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை | 
 |   28   | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் | 
 |   29   | இளையான்குடியில் உருது மக்கள் | 
 |   30   | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி | 
 |   31   | மரணம் நோக்கி... | 
 |   32   | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் | 
 |   33   | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி | 
 |   34   | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் | 
 |   35   | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? | 
 |   36   | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? | 
 |   37   | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். | 
 |   38   | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! | 
 |   39   | பாரதியும் இஸ்லாமும் - மாலன் | 
 |   40   | பயணியின் வாழ்க்கை  - பேரா. ஹஸனீ | 
 |   41   | கண்ணாடி வாழ்கை  -  பேரா. ஹஸனீ | 
 |   42   | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... | 
 |   43   | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) | 
 |   44   | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 | 
 |   45   | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 | 
 |   46   | பெண்களிடம்  மாற்றம் வேண்டும் | 
 |   47   | எம் சமூகம் இந்த உலகை ஆளும் | 
 |   48   | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... | 
 |   49   | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! | 
 |   50   | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி | 
 |   51   | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் | 
 |   52   | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ | 
 |   53   | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! | 
 |   54   | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் | 
 |   55   | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! | 
 |   56   | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! | 
 |   57   | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு | 
 |   58   | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை | 
 |   59   | எது வணக்கம்..? | 
 |   60   | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! | 
 |   61   | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! | 
 |   62   | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். | 
 |   63   | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) | 
 |   64   | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்?  (பாகம் 5) | 
 |   65   | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்?  (பாகம் 4) | 
 |   66   | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்?  (பாகம் 3) | 
 |   67   | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்?  (பாகம் 2) | 
 |   68   | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்?  (பாகம் 1) | 
 |   69   | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் | 
 |   70   | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? | 
 |   71   | இஸ்லாத்தில்  பெண்களின்  சிறப்பு: | 
 |   72   | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் | 
 |   73   | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் | 
 |   74   | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான்  கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு | 
 |   75   | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! | 
 |   76   | மனைவியை_நேசிங்கள்.. | 
 |   77   | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! | 
 |   78   | அம்மா! அம்மா! | 
 |   79   | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! | 
 |   80   | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் | 
 |   81   | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் | 
 |   82   | இமாம்களும் மத்கபுகளும். | 
 |   83   | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். | 
 |   84   | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! | 
 |   85   | பராஅத் இரவின் சிறப்புகள் | 
 |   86   | வாப்பா! | 
 |   87   | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! | 
 |   88   | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது | 
 |   89   | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! | 
 |   90   | என் கேள்விக்கு இறைவனின் பதில்! | 
 |   91   | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு | 
 |   92   | இதிலென்ன வெட்கம்? | 
 |   93   | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) | 
 |   94   | பழையன கழிதலும் புதியன புகுதலும் | 
 |   95   | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! | 
 |   96   | கற்பில் கவனம் தேவை | 
 |   97   | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? | 
 |   98   | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் | 
 |   99   | இஸ்திஃகாராவின் சிறப்பு | 
 |   100   | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். | 
 |   101   | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! | 
 |   102   | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! | 
 |   103   | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) | 
 |   104   | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) | 
 |   105   | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) | 
 |   106   | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்!  நிம்மதி பெறுங்கள்! | 
 |   107   | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். | 
 |   108   | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் | 
 |   109   | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். | 
 |   110   | இறுக்கமும் இரக்கமும் | 
 |   111   | இஷா தொழுகையும் இரவு உணவும் | 
 |   112   | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது | 
 |   113   | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது | 
 |   114   | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' | 
 |   115   | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) | 
 |   116   | மரணம் நம் கண்களை தழுவட்டுமே | 
 |   117   | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி | 
 |   118   | பெயர்களை நினைவில் வைப்போம் | 
 |   119   | ஊடகங்கள்  பரப்பிவரும்  முன்ஜென்மபித்தலாட்டம் | 
 |   120   | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ | 
 |   121   | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு | 
 |   122   | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் | 
 |   123   | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் | 
 |   124   | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) | 
 |   125   | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... | 
 |   126   | ஒரு 2.5 கதை | 
 |   127   | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) | 
 |   128   | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் | 
 |   129   | உலகத்தில் யாருமே ஏழை இல்லை | 
 |   130   | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் | 
 |   131   | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? | 
 |   132   | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? | 
 |   133   | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! | 
 |   134   | குறைகளை மறைத்தல் | 
 |   135   | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! | 
 |   136   | நல்ல பெண்மணி | 
 |   137   | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் | 
 |   138   | 💥 யார் அந்த மாமனிதர்..? | 
 |   139   | ஈர்ப்பை விதைப்போம்! | 
 |   140   | ஒரே ஒரு கேள்வி  10 விதமான அற்புதமான பதில்கள் | 
 |   141   | யார் இந்த துலுக்கன்? | 
 |   142   | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் | 
 |   143   | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் | 
 |   144   | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? | 
 |   145   | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் | 
 |   146   | நிம்மதி - சிறுகதை | 
 |   147   | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! | 
 |   148   |    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? | 
 |   149   | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! | 
 |   150   | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. | 
 |   151   |  வாழ்க்கை வாழ்வதற்கே ! | 
 |   152   | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு | 
 |   153   | விற்கப்படும் மார்க்கம் | 
 |   154   | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! | 
 |   155   | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! | 
 |   156   | பார்வைகள் பலவிதம் ! | 
 |   157   | நேர மேலாண்மை / திட்டமிடல் | 
 |   158   | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் | 
 |   159   | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி | 
 |   160   | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? | 
 |   161   | தந்தைகளே! கவனியுங்கள் | 
 |   162   | வரலாறு புகட்டும் பாடம் | 
 |   163   | அல்குர்ஆன் என்னும் மதுரம் | 
 |   164   | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? | 
 |   165   | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! | 
 |   166   | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! | 
 |   167   | நாம் தான் முயல வேண்டும். | 
 |   168   | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! | 
 |   169   | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! | 
 |   170   | கற்பா? கல்லூரியா? | 
 |   171   | கசாப்புத் தொழில் சிறந்தது.... | 
 |   172   | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் | 
 |   173   | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? | 
 |   174   | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! | 
 |   175   | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? | 
 |   176   | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) | 
 |   177   | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் | 
 |   178   | என் ஹிஜாப் என் உரிமை!!! | 
 |   179   | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் | 
 |   180   | முகமாகும் பெண்கள்!! | 
 |   181   | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! | 
 |   182   | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் | 
 |   183   | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! | 
 |   184   | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் | 
 |   185   | செல்போன்கள்... ஜாக்கிரதை! | 
 |   186   | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் | 
 |   187   | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! | 
 |   188   | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! | 
 |   189   | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! | 
 |   190   | ஈமானே-உன் விலையென்ன? | 
 |   191   | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் | 
 |   192   | நாளை நமதா?  -  ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) | 
 |   193   | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? | 
 |   194   | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் | 
 |   195   | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? | 
 |   196   | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் !       ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! | 
 |   197   | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை | 
 |   198   | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி | 
 |   199   | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? | 
 |   200   | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு | 
 |   201   | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : | 
 |   202   | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! | 
 |   203   | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை | 
 |   204   | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: | 
 |   205   | அறிவைத் தேடுவோம்! | 
 |   206   | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! | 
 |   207   | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? | 
 |   208   | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? | 
 |   209   | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: | 
 |   210   | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா | 
 |   211   | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? | 
 |   212   | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! | 
 |   213   | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? | 
 |   214   | “வேர்கள்” வரலாறு! | 
 |   215   | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் | 
 |   216   | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! | 
 |   217   | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் | 
 |   218   | மனிதனின் தேவை ! – மன அமைதி | 
 |   219   | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக | 
 |   220   | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். | 
 |   221   | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் | 
 |   222   | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? | 
 |   223   | மஸ்ஜித் (பள்ளிவாசல்) | 
 |   224   | பேச்சு,மெளனம் | 
 |   225   | ஜனாஸா - மைய்யத் | 
 |   226   | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது | 
 |   227   | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! | 
 |   228   | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) | 
 |   229   | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? | 
 |   230   | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! | 
 |   231   | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை | 
 |   232   | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் | 
 |   233   | வலிமார்கள் என்பவர்கள் யார்? | 
 |   234   | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு | 
 |   235   | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? | 
 |   236   | மனித குல விரோதி | 
 |   237   | எனது பெயர் ஜனாஸா! | 
 |   238   | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? | 
 |   239   | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை | 
 |   240   | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? | 
 |   241   | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? | 
 |   242   | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் | 
 |   243   | ஹிந்து -  குறித்து இஸ்லாம்! | 
 |   244   | தமிழரும் இசுலாமியரும் | 
 |   245   | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! | 
 |   246   | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? | 
 |   247   | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் | 
 |   248   | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் | 
 |   249   | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் | 
 |   250   | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து | 
 |   251   | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! | 
 |   252   | கற்பனைகளும் இஸ்லாமும் | 
 |   253   | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. | 
 |   254   | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! | 
 |   255   | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... | 
 |   256   | மது ஒரு பெரும் பாவம் | 
 |   257   | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு | 
 |   258   | பெற்றோர்களைப் பேணுவோம்! | 
 |   259   | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. | 
 |   260   | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) | 
 |   261   | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் | 
 |   262   | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! | 
 |   263   | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) | 
 |   264   | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) | 
 |   265   | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! | 
 |   266   | இமாம்களை கண்ணியம் செய்வோம்! | 
 |   267   | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். | 
 |   268   | மறுமை வாழ்வை நேசிப்போம்! | 
 |   269   | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) | 
 |   270   | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் | 
 |   271   | சுதேசி சிந்தனைகள்....... | 
 |   272   | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! | 
 |   273   | கல்வி நல்லோர்களின் சொத்து! | 
 |   274   | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! | 
 |   275   | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) | 
 |   276   | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) | 
 |   277   | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! | 
 |   278   | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் | 
 |   279   | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! | 
 |   280   | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) | 
 |   281   | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! | 
 |   282   | அறிவைத் தேடுவோம்! | 
 |   283   | ஆக்காதீர் ஆசனங்களாக | 
 |   284   | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) | 
 |   285   | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) | 
 |   286   | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) | 
 |   287   | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் | 
 |   288   | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!  (தொடர் 1) | 
 |   289   | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) | 
 |   290   | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? | 
 |   291   | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! | 
 |   292   | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் | 
 |   293   | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? | 
 |   294   | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! | 
 |   295   | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! | 
 |   296   | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? | 
 |   297   | பெண் குழந்தை ஒரு பாக்கியம் | 
 |   298   | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products | 
 |   299   | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் | 
 |   300   | வெப்கேமிரா...எச்சரிக்கை...! | 
 |   301   | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! | 
 |   302   | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் | 
 |   303   | விசுவரூபம் ஒரு விளக்கம் | 
 |   304   | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். | 
 |   305   | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! | 
 |   306   | வாழ்க்கைக்காக ஒரு மரணம் | 
 |   307   | கண்ணாடிகள் கவனம் | 
 |   308   | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்)  Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) | 
 |   309   | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் | 
 |   310   | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் | 
 |   311   | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? | 
 |   312   | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் | 
 |   313   | கருத்து வேறுபாடுகள். | 
 |   314   | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் | 
 |   315   | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை | 
 |   316   | யூத கிருத்துவ வக்கிரப்படமும்  விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் | 
 |   317   | தஜ்ஜால் Vs டெலிவிஷன் | 
 |   318   | ஓ! என் இளைய சமுதாயமே! | 
 |   319   | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! | 
 |   320   | வீண் செலவு வேண்டாமே |