வரலாறு புகட்டும் பாடம்
உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.
ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.
யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.
அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.
நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.
நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.
என்ன அது?
நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.
அவன் கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.
இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.
எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?
இஸ்லாம் ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.
ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், �உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்� என்றார்.
இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குதயார்.
வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.
சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.
சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.
இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.
எவ்வாறு ?
சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.
குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர்.
எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.
தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.
இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது முடியாது என்று.
எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள் என்று அலறினான்.
சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.
இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?
நிச்சயமாக இல்லை
நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?
அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.
என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கல் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !
கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.
கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.
இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.
வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.� ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள், அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.
உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.
இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்
1 | திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் |
| சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். |
|
2 | இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! |
| உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
|
|
3 | உணரப் படாத தீமை சினிமா |
| தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். |
|
4 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
| நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. |
|
5 | ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! |
| செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். |
|
6 | விரக்தி விஷத்தை விட கொடியது |
7 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
8 | வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது. |
9 | நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! |
10 | இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள் |
11 | அந்தப் பெண்களாக நாம்... |
12 | தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில் |
13 | 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்: |
14 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
15 | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், |
16 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் |
17 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? |
18 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... |
19 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! |
20 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை |
21 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் |
22 | இளையான்குடியில் உருது மக்கள் |
23 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
24 | மரணம் நோக்கி... |
25 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
26 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
27 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
28 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
29 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
30 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
31 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
32 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
33 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
34 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
35 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
36 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
37 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
38 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
39 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
40 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
41 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
42 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
43 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
44 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
45 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
46 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
47 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
48 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
49 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
50 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
51 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
52 | எது வணக்கம்..? |
53 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
54 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
55 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
56 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
57 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
58 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
59 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
60 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
61 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
62 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
63 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
64 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
65 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
66 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
67 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
68 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
69 | மனைவியை_நேசிங்கள்.. |
70 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
71 | அம்மா! அம்மா! |
72 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
73 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
74 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
75 | இமாம்களும் மத்கபுகளும். |
76 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
77 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
78 | பராஅத் இரவின் சிறப்புகள் |
79 | வாப்பா! |
80 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
81 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
82 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
83 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
84 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
85 | இதிலென்ன வெட்கம்? |
86 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
87 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
88 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
89 | கற்பில் கவனம் தேவை |
90 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
91 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
92 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
93 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
94 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
95 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
96 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
97 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
98 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
99 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
100 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
101 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
102 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
103 | இறுக்கமும் இரக்கமும் |
104 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
105 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
106 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
107 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
108 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
109 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
110 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
111 | பெயர்களை நினைவில் வைப்போம் |
112 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
113 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
114 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
115 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
116 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
117 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
118 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
119 | ஒரு 2.5 கதை |
120 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
121 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
122 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
123 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
124 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
125 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
126 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
127 | குறைகளை மறைத்தல் |
128 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
129 | நல்ல பெண்மணி |
130 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
131 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
132 | ஈர்ப்பை விதைப்போம்! |
133 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
134 | யார் இந்த துலுக்கன்? |
135 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
136 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
137 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
138 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
139 | நிம்மதி - சிறுகதை |
140 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
141 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
142 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
143 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
144 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
145 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
146 | விற்கப்படும் மார்க்கம் |
147 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
148 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
149 | பார்வைகள் பலவிதம் ! |
150 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
151 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
152 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
153 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
154 | தந்தைகளே! கவனியுங்கள் |
155 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
156 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
157 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
158 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
159 | நாம் தான் முயல வேண்டும். |
160 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
161 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
162 | கற்பா? கல்லூரியா? |
163 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
164 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
165 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
166 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
167 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
168 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
169 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
170 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
171 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
172 | முகமாகும் பெண்கள்!! |
173 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
174 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
175 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
176 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
177 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
178 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
179 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
180 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
181 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
182 | ஈமானே-உன் விலையென்ன? |
183 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
184 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
185 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
186 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
187 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
188 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
189 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
190 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
191 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
192 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
193 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
194 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
195 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
196 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
197 | அறிவைத் தேடுவோம்! |
198 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
199 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
200 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
201 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
202 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
203 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
204 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
205 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
206 | “வேர்கள்” வரலாறு! |
207 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
208 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
209 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
210 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
211 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
212 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
213 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
214 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
215 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
216 | பேச்சு,மெளனம் |
217 | ஜனாஸா - மைய்யத் |
218 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
219 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
220 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
221 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
222 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
223 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
224 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
225 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
226 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
227 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
228 | மனித குல விரோதி |
229 | எனது பெயர் ஜனாஸா! |
230 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
231 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
232 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
233 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
234 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
235 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
236 | தமிழரும் இசுலாமியரும் |
237 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
238 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
239 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
240 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
241 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
242 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
243 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
244 | கற்பனைகளும் இஸ்லாமும் |
245 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
246 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
247 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
248 | மது ஒரு பெரும் பாவம் |
249 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
250 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
251 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
252 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
253 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
254 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
255 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
256 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
257 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
258 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
259 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
260 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
261 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
262 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
263 | சுதேசி சிந்தனைகள்....... |
264 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
265 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
266 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
267 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
268 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
269 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
270 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
271 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
272 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
273 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
274 | அறிவைத் தேடுவோம்! |
275 | ஆக்காதீர் ஆசனங்களாக |
276 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
277 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
278 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
279 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
280 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
281 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
282 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
283 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
284 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
285 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
286 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
287 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
288 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
289 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
290 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
291 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
292 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
293 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
294 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
295 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
296 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
297 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
298 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
299 | கண்ணாடிகள் கவனம் |
300 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
301 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
302 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
303 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
304 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
305 | கருத்து வேறுபாடுகள். |
306 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
307 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
308 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
309 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
310 | ஓ! என் இளைய சமுதாயமே! |
311 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
312 | வீண் செலவு வேண்டாமே |