• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 33/1 (6-Oct-2019)
    24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

    குறிப்பு:

    -> திருமண பந்தத்தில் கணவன் மனைவி இருவரின் பங்களிப்பு என்ன?
    -> இஸ்லாம் கற்றுத்தரும் கற்பை பாதுகாக்கும் வழிமுறைகள்!
    -> அல்லாஹ்வின் உதவி கண்டிப்பாக கிடைக்கபெறும் 3 வகையான மனிதர்கள்!
    -> நபித்தோழர் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க உரையாடல்
    -> டீன்-ஏஜ் (Teen-Age) பிள்ளைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?
    -> படிப்படியாக டீன்-ஏஜ் (Teen-Age) பிள்ளைகளை பக்குவபடுத்துவதும் முறைகள்!