• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35/2 (24-Nov-2019)
    24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

    குறிப்பு:
    -> உளத்தூய்மையும் இறையச்சமும் ஒரு முஃமீனுக்கு கடமையாக்கப்பட்ட மனநிலைகளாகும்!
    -> தொழுகை அங்கீகரிக்கப்படுவதற்கு அடிப்படையான மனநிலைகள்!
    -> உள்ளம் குருடானதற்கு அடையாளம்!
    -> ஹிதாய‌த் எனும் நேர்வழி எப்படி எப்படி எல்லாம் கிடைக்கிறது?
    -> ஒளிரும் உள்ளம் கொண்ட முஃமீன்!
    -> பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறையே ஒரு முஃமீனின் ஒளி!
    -> ஜைதூன் எனும் ஆலிவ் மரத்தின் பலன்கள்!
    -> தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு கிளம்பும் போது ஓதும் துஆ!