Tamil Islamic Media
Saturday, May 24, 2025

பெண்களிடம் மாற்றம் வேண்டும்

சமூக இயக்கங்களில் நிலவும் சண்டை சச்சரவுகள் போல உம்மத்தின்  குடும்பங்களிலும் உறவுகள் சிதைந்து அமைதி தொலைந்து வருகிறது

 

கூடி....கூட்டம் கூட்டமாக வாழ்வதையும்... தன் கணவனிடம் கூட பகிராத சில அந்தரங்க ரகசியங்களை சக தோழியிடம் பகிர்ந்து உள்ளத்தின் சுமைகளை இறக்கி  நிம்மதி அடையும் இயல்பை கொண்ட படைப்பு பெண் இனம்.

 

பெண்களாக அடம்பிடித்து அல்லது ஆண்களின் வேலை சூழல் காரணமாக அமைத்துக் கொள்ளும் தனிக்குடித்தனம் என்ற தனிமை சிறை பெண்களின் வாழ்வில் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.

 

கூட்டாக வாழ்வதில் உள்ள சங்கடங்களை காட்டிலும் தனித்து வாழ்வதில் ஆபத்துகள் அதிகம் உள்ளன என்பதை வயதானபிறகு தான் உணர்கின்றனர்.

 

தன் கணவன் தன் கூடவே இருந்து தன்னை முழுமையாக கவனித்துக் கொள்வான் என்று எதார்த்த சூழலை அறியாமல் அப்பாவித்தனமாக.....

 

ஆண்களின் படைப்பு இயல்பு அறியாமல் அதிகப்படியான எதிர்பார்ப்பில்  அவனையே முழுமையாக நம்பி புலம் பெயர்ந்து செல்கின்றனர்.சென்றபிறகு அதிகமான துன்பங்களை சந்திக்கின்றனர். பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர்.தனிமை வாட்டி வதைக்கிறது

சிலருக்கு விரும்பத்தகாத விபரீதங்கள் ஏற்படுகின்றன.

 

அது சந்ததியை பாதித்து சமூகத்தின் கலாச்சார கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது.

காலம் கைமீறி போய்விட்டது. மனதில் சுயநலம் மிகைத்துவிட்டது. இனி கூட்டாக இணைந்து வாழ்வது  இயலாத காரியம்.

 

தனித்தனி வீடுகளில் வாழ்ந்தாலும் குடும்பத்து பெண்கள் குறிப்பிட்ட நேரம் கூடி அமர்ந்து எண்ணங்களை ஏக்கங்களை கலாச்சார மரபுகளை பேசி பகிர்ந்து கொள்வது உள்ளத்திற்கு உயிரூட்டி மன நோய்களிலிருந்து பாதுகாக்கும்

 

மேலும்....

 

கற்றுக்கொள்வது சிந்திப்பது கற்றுக் கொடுப்பது  போன்ற இஸ்லாமிய அறிவுசார் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தி அவர்கள் தனிமை சூழலில் சிக்காத வகையில் அவர்களின் அறிவாற்றலை அல்லாஹ்வுடைய பாதையில் பயன்படுத்திட ஆண்கள் வழிவகை செய்திட வேண்டும்.

 

இப்படிப்பட்ட அமைதியான இயற்கையான எளிமையான இஸ்லாமிய வாழ்வு வேண்டும் என்றால் முதலில் முஸ்லிம்களிடம் மன மாற்றம் ஏற்பட வேண்டும்.....

 

சென்னை போன்ற பெரு நகரங்களின் நரக வாழ்விலிருந்து தப்பித்து பிறந்த மண்ணிற்கு திரும்ப வேண்டும் என்ற உறுதியான முடிவிற்கு வர வேண்டும்.

 

சிக்கிக்கொண்ட சூழலுக்கேற்ற இஸ்லாமிய வழிகாட்டுதலை தேடாமல் இஸ்லாம் வகுத்தளிக்கும் பாதையில் வாழ்வை அமைத்துக் கொள்வது நிரந்தர தீர்வாக அமையும்.

 

குறை நிறைகள் இருந்தாலும் முஹல்லா வாழ்வே அமைதியான ஆன்மீகமான நமது சந்ததிகளுக்கு பாதுகாப்பான வாழ்வாக அமையும்.

 

ஆட்டுப் பண்ணை மாட்டுப் பண்ணை போல மனிதப் பண்ணையான இந்த நகர வாழ்வு நம்மை அடிமைகளாக்கி குடும்பங்களின் அமைதியை குலைத்து ஈமானிற்கு வேட்டு வைக்கும் இயல்பை கொண்டது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

 

- CMN SALEEM






No articles in this category...