Tamil Islamic Media

இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.

ஒரு ஜனாஸா கப்ரை நோக்கி சுமந்து செல்லப்படும் காட்சியைக் கண்ட இமாம் ஹஸன் அல்பஸரி அவர்கள் தன் பக்கத்திலிருந்த மனிதரிடத்தில்

”மரணித்த இந்த மனிதருக்கு மறுபடி வாழ இறைவன் சந்தர்ப்பம் கொடுத்தால் பழையபடி பாவங்கள் செய்வானா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு அந்த மனிதர் ”நிச்சயமாக இல்லை. பாவமன்னிப்புக் கேட்டு சிறந்த ஒரு வாழ்க்கை வாழுவார்” என பதில் சொன்னார்.

அதற்கு ஹஸன் அல்பஸரி அவர்கள் ”அவ்வாறு மறுபடி வாழ இறைவன் அவருக்கு சந்தர்ப்பம் கொடுப்பானா?” என அந்த மனிதரைக் கேட்டார்.

”இல்லையே” என அந்த மனிதர் கவலையுடன் சொன்னார்.

அதற்கு இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் ”இந்த ஜனாஸாவிற்கு அந்த சந்தர்ப்பத்தை இறைவன் வழங்காது விட்டாலும் இப்பொழுது உனக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறான் அதனைப் பயன்படுத்திக்கொள்” எனச் சொன்னார்கள்.






No articles in this category...