Tamil Islamic Media

தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!

தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!


By பழ. கருப்பையா

அரசியல் நிருணய சபை தேசிய மொழி குறித்து விவாதிக்கிறது. பல்வேறு வகையான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒருவர் சமக்கிருதத்தைத் தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்றுகூடச் சொல்கிறார்.
ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்று சொல்கிறவர்களும் இருந்தார்கள். ஆயினும் இந்தியின் குரலே கனமான குரலாக இருந்தது.

பக்குவமடைந்த பூரணத்துவம் இல்லாத இந்தியை ஆட்சி மொழியாக ஆக்குவது பயனற்றது என்றொரு குரல் இடைமறித்து ஒலிக்கிறது. எந்த ஒன்றையும் அதன் தகுதி அடிப்படையில் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய, எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது என்று அந்தக் குரலுக்குரியவர் ஆணித்தரமாக இந்திக்கு எதிரான வாதங்களை அடுக்கி மொழிகிறார். இந்திக்காரர்கள் உறைந்து போய் விடுகின்றனர்.

ஆங்கிலத்திற்காகப் பரிந்து பேசுவோர் கூட்டத்தில் இவரும் ஒருவராக இருப்பார் போலும் என்று அவர்கள் கருதிக் கொண்டிருக்கும்போது, விடுதலை அடைந்த இந்தியாவின் ஆட்சி மொழியாக ஓர் இந்திய மொழியே இருக்க வேண்டும் என்று அந்தக் குரலுக்குரியவரின் வாதம் தொடர்கின்றது. அவை குழப்பமடைகிறது. இவர் யார், என்ன சொல்வதற்கு அடித்தளமிடுகிறார்?
குரலுக்குரியவரின் பெயர், அவருடைய நீண்ட உடை, தொப்பி, அவர் முகத்தை அலங்கரிக்கும் தாடி இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, இவர் உருது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறவராக இருப்பார் என்று எண்ணிக் கொள்கிறது அவை.

காந்தியே உருதுவை ஒதுக்கி விட்டு இந்தியா நிலை கொள்ள முடியாது என்று கருதினார். அதனால், அவர் இந்துத்தானி என்றொரு கலப்பு மொழியை முன்மொழிந்து பேசிக் கொண்டிருந்தார்.

ஈசுவர அல்லா தேரே நாம் என்றவர் காந்தி. ஈசுவரன் என்று சொன்னால் என்ன அல்லா என்று சொன்னால் என்ன என்று கேட்ட காந்தி, அவர்கள் இருவரின் மொழியையும் இணைத்து ஒரு கலவை மொழியை உருவாக்கி அதற்கு இந்துத்தானி என்று பெயரிட்டார். மொழிகளை இணைத்தால் மனிதர்கள் இணைந்து விடுவார்கள் என்று நம்பினார், பேரறிவுடைய பெம்மான் காந்தி.
இந்துத்தானி எடுபடவில்லை. அது இந்துவுக்கும் பிடிக்கவில்லை; முசுலீமுக்கும் பிடிக்கவில்லை.

பேசுகிறவர் தொடர்கிறார்: இந்தியா பெரிய நாடு. அதன் அலுவல் மொழியாகத் திகழத்தக்க மொழி சொல்வளம் மிக்க மொழியாக இருக்க வேண்டும். புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும்.
இலக்கண இலக்கிய வளமுடையதாக இருக்க வேண்டும்.

தொன்மையானதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழிதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்.

இவர் எதைச் சொல்ல வருகிறார்? உருதுவுக்கு அவ்வளவு தொன்மை இல்லை. ஒருவேளை மிகவும் தொன்மை என்பதால் சமக்கிருதமாக இருக்குமோ? அது தொன்மையும் எல்லாச் சிறப்புகளும் உடைய மொழிதான். அவை மேலும் குழம்புகிறது.

வாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அவர் அழுத்தந் திருத்தமாக ஆணித்தரமாக மொழிகிறார்: இந்தியாவின் ஆட்சி மொழியாவதற்குக் தகுதியுடைய மொழி தமிழ்தான்!  அவர் அத்தோடு முடிக்கவில்லை, அதுதான் என் தாய்மொழியும்கூட என்று சொல்லி முடிக்கிறார்.

மேசைகள் தட்டப்படவில்லை. ஆரவார முழக்கங்கள் எழவில்லை. அந்த அரசியல் நிருணய சபையில் இன்னும் பல தமிழர்கள் இருந்தார்கள். அவர்களில் யாரும் இவரை வழிமொழிந்து பேசவில்லை.
அவ்வாறு பேசியவர் முகம்மது இசுமாயில் சாகிபு அவர்கள். அதுதான் அவருடைய இயற்பெயர். அவர் திருநெல்வேலி பேட்டையில் பிறந்தவர். பின்னாளில் இயற்பெயர் முற்றாக மறைந்து காயிதேமில்லத் என்ற புகழ்ப் பெயராலேயே அறியப்பட்டவர்.

காயிதேமில்லத் அரசியல் நிருணய சபையில் வைத்த வாதத்தால் இந்திய அளவில் இந்தி குறித்த நிலையில் மாற்றமோ, தமிழுக்கு ஏற்றமோ வந்துவிடவில்லை என்றாலும், தமிழ்நாட்டு உணர்வுப் போக்கில் அவருடைய அழுத்தமான சிந்தனைப் போக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது
அரசியல் நிருணய சபையில் மும்மது இசுமாயில் சாயுபு பேசியது 1949 செப்டம்பர் 14-இல். அந்த காலகட்டம் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முளைவிட்டிருந்த காலம். பெரியார் ஒரு பக்கம். அண்ணா இன்னொரு பக்கம்.

பாணினி சமக்கிருதத்திற்கு வரைந்த மொழி இலக்கணம் என்பதற்கு மேலே பல படிகள் சென்று, தமிழுக்கு எழுத்து, சொல் ஆகியவற்றிற்கான இலக்கண வரையறைகளோடு, பொருளிலக்கணமும் வரைந்தான் தொல்காப்பியன். உலக மொழிகளிலேயே பொருளிலக்கணம் பெற்ற ஒரே மொழி தமிழ்தான்.
மொழி, இன உணர்வில் திராவிட இயக்கத்தோடு, காயிதேமில்லத் கைகோத்து நின்றது திராவிட இயக்கம் வலிமை பெறவும், தமிழன் என்னும் இன உணர்வு கெட்டிப்படவும் மிகப் பெரிய அளவுக்குக் காரணமானது.

முகம்மது இசுமாயில் சாயுபு காயிதேமில்லத் என்று அழைக்கப்பட்டது போல, முகம்மது அலி சின்னா காயிதே ஆசாம் என்று அழைக்கப்பட்டார்.
பாகித்தானின் தந்தையான முகம்மது அலி சின்னாவோடு காயிதேமில்லத்திற்கு நல்ல உறவு இருந்தது. அவருடைய கராச்சி மாநாட்டுக்கெல்லாம் முற்காலங்களில் சென்று வந்தாலும் கூட, முசுலிம் என்பதை காயிதேமில்லத் தன்னுடைய நாட்டுப் பற்றுக்கும் மொழிப்பற்றுக்கும் குறுக்கே வர அனுமதிக்கவில்லை.

இந்தியாவில் இரண்டு வினோதமான மாநிலங்கள் இருந்தன. ஒன்று: காசுமீர் இன்னொன்று: ஐதராபாத்.
காசுமீரில் முசுலிம்களே பெரும்பான்மையினர். அதை ஒரு இந்து மன்னர் ஆண்டார்!
ஐதராபாத்தில் இந்துக்களே பெரும்பான்மையினர். இதை ஒரு முசுலீம் மன்னர் ஆண்டார்!
காசுமீர் இந்து மன்னரால், சேக் அப்துல்லா போன்ற மக்கள் தலைவரின் ஆதரவுடன், இந்தியாவில் இணைக்கப்பட்டது.
ஆனால், ஐதராபாத் நிசாம் இந்தியாவுடன் இணைய மறுத்து முரண்டு பிடித்தார். போலீசு நடவடிக்கையால் சில மணி நேரங்களில் நிசாமை மண்டியிட வைத்தார் இரும்பு மனிதர் வல்லபபாய் படேல்.அந்த நடவடிக்கையை ஆதரித்தார் காயிதேமில்லத்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சீனா 1962-இல் இந்தியா மீது பாய்ந்தபோது, அந்தப் போரில் பங்கு கொள்ள தன்னுடைய ஒரே மகனைப் போர் முனைக்கு அனுப்புவதாக நேருவுக்கு எழுதுகிறார். நெகிழ்ந்து போகிறார் நேரு.
யாருக்கும் எந்தப் பரிந்துரையுமே செய்து பழக்கப்பட்டிராத இராசாசி, காயிதேமில்லத்தின் பேத்திக்கு மருத்துவக் கல்லூரியில் இடமளிக்கச் சொல்லிப் பரிந்துரைத்தபோது, ஒரு தேசபக்தரின் பேத்தி என்று அடையாளப்படுத்துகிறார்.
காயிதேமில்லத் அடிப்படையில் திருநெல்வேலித் தமிழன். அந்த உணர்வு அவருடைய இரத்த அணுக்களில் கலந்திருந்தது. காயிதே ஆசாம் முகம்மது அலி சின்னாவிடமிருந்து வேறுபட்டு நிற்கக் காயிதேமில்லத்தால் முடிந்தது.
காயிதேமில்லத் நல்ல முசுலீமாகவும் இருந்தார். அவர்களுடைய உரிமைகளுக்குப் பாடுபட்டார். குரல் கொடுத்தார்; போராடினார்.
நாங்கள் சரியத் சட்டத்தைக் கடைப்பிடிப்பதிலும், எங்கள் மார்க்க முறைப்படி மணந்து வாழ்வதிலும் உங்களுக்கென்ன சிரமம் இருக்கிறது என்னும் கேள்வியைச் சீற்றத்துடன் எழுப்பும்போது அவர் சிறுபான்மை மக்களின் காவலனாக வெளிப்படுகிறார்.

முகம்மது அலி சின்னாவின் பார்வை முற்றாக மதவழிப் பட்டது. அவருக்கு மதம்தான் நாட்டுக்கான அடிப்படை.

நீங்கள் வேறு, நாங்கள் வேறு வேறு; நாகரிகம்; வேறு வேறு; பண்பாடு வேறு, பழக்கவழக்கங்கள் வேறு வேறு; வாழ்க்கை முறை வேறு வேறு; மொழி வேறு வேறு; இனம் நீங்களும் நாங்களும் ஒன்றாக இருக்க முடியாது என்றார் சின்னா.
எல்லாவற்றினும் முக்கியமானது, இந்துக்களாகிய நீங்கள் பெரும்பான்மையினர். முசுலீம்களாகிய நாங்கள் சிறுபான்மையினர். எங்களை அடித்துத் துவைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவீர்கள். உங்களுக்குக் குற்றேவல் செய்து வாழ நேரிடும். ஆகவே, இந்தியாவை மதவழியாக உடையுங்கள் என்றார் சின்னா.

அவருடைய பேச்சில் பொருளில்லை என்று சொல்ல முடியாது. குடியாட்சி என்பது குறைகளே அற்ற ஆட்சி இல்லை. குறைவான குறைகளை உடையது. அவ்வளவுதான். ஆனால், குடியாட்சியில் பொறுத்துக் கொள்ள முடியாத, மிகவும் கேவலமான தன்மை ஒன்று உண்டென்றால், அது பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களைக் கொத்தடிமைகளாக்கி விட முடியும் என்பதுதான். இதைச் சட்டப்படியே செய்ய முடியும். எண்ணிக்கை வலிமைதானே குடியாட்சி!

மொழி வழிச் சிறுபான்மையரும் (ப்ண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீ ம்ண்ய்ர்ழ்ண்ற்ண்ங்ள்) மதவழிச் சிறுபான்மையினரும் (ழ்ங்ப்ண்ஞ்ண்ர்ன்ள் ம்ண்ய்ர்ழ்ண்ற்ண்ங்ள்) அச்சமின்றி வாழ்ந்தால்தான் இந்தியா ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடாக வரைபடத்தில் எஞ்சும் என்பது எம்மான் காந்திக்கு புரிந்திருந்தது.

குசராத் போர்பந்தரில் அந்தப் புத்லிபாய் ஒரு புத்திரனைப் பெற்றிருக்காவிட்டால், இந்தியா ஏது? வெள்ளைக்காரன் பங்கு பிரித்துக் கொடுத்துவிட்டுத்தான் கப்பல் ஏறி இருப்பான்.
காந்தியின் செல்வாக்கும், நேரு போன்றவர்களின் நடைமுறையும், சமயச் சார்பின்மை, மற்றும் மொழிவாரி மாநிலங்களும், மதவழி வெறுப்பும், அதன் வழி எதிர்ப்பும் ஏற்படாதவாறு தடுத்தன.
அதனால்தான் காயிதேமில்லத் இந்துவுக்கு எதிராகக் கச்சை கட்டவில்லை. இந்திக்கு எதிராகக் கச்சை கட்டினார்.
தமிழ்ப் போரில் ஏராளமான கிறித்தவர்கள் பங்கு கொண்டனர். கால்டுவெல்லும், போப்பும், பெசுகி முனிவரும் வளர்த்த தமிழ்தானே.
அதே மொழிப் போரில் இசுலாமியர்கள் பங்கு கொண்டதற்கும், தமிழின உணர்வாளர்களாக அவர்கள் முன்னின்றதற்கும், முசுலீம் லீக் மட்டுமே தங்களின் கட்சியாக இருக்க முடியும் என்று கருதாமல், தமிழன் என்னும் அடிப்படையில், திராவிட இயக்கங்களில் பெரியார் மற்றும் அண்ணாவைப் பின்பற்றுவோராக அவர்கள் திகழ்ந்ததற்கும், மொழிப் போரில் காயிதேமில்லத் போன்றவர்கள் முன்கை எடுத்ததுதானே காரணமாய் இருக்க முடியும்.
மதவழிக் கேள்விகளுக்கு முசுலீமாய் நின்று முடிவு கண்டார் காயிதேமில்லத்.
தமிழா? இந்தியா? என்ற கேள்விக்குத் தமிழனாய் நின்று முடிவு கண்டார்.
வங்கதேசப் போரில் இந்தியாவா பாகித்தானா என்னும் கேள்விக்கு இந்தியனாய் நின்று முடிவு கண்டார்.

மத வழி நாடு கொண்டார் காயிதே ஆசாத் முகம்மது அலி சின்னா. இன வழியாக வங்கதேசம் உடைந்து போனது.
தமிழ் இன வழி அடையாளங் கண்டார் காயிதேமில்லத். தமிழ்மண்ணில் இந்துத்துவா வேர் கொள்ள முடியவில்லை!    

நன்றி ;;;தினமணி








1 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்

அல்குர்ஆன் கூறும் இரண்டு சரிதைகள். இரண்டுமே பேரற்புதம். 1. யூசுஃப் (அலை). 2. மூஸா (அலை). இரண்டு சரிதைகளுக்கும் இடையிலான அற்புதமான ஒப்பீட்டை அல்குர்ஆன் அழகாகச் சொல்லித் தருகிறது.

2 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?

பிறகு நான் கருதினேன்: "நான் இன்னும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குத் தேடலை நிறுத்திவிட்டு, என் நற்காரியங்களைப் பார்த்தேன், அவைகளில் பெரும்பாலும் சோம்பல், பொடுபோக்கு, குறைபாடுகள் மற்றும் பாவங்கள் கலந்திருப்பதைக் கண்டேன்.

3 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -

பாலஸ்தீன மக்களின் அசைக்க முடியாத உறுதிக்கு காரணம் அவர்கள் குர்ஆனின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என அண்மையில் The Guardian என்ற பத்திரிக்கையின் ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. இன்றைய உலகின் அதிகளவு குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களின் பட்டியலில் பாலஸ்தீன காஸாவும் உள்ளது என்பது மற்றுமொரு புள்ளிவிவரம்.

4 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது

போர் நிறுத்தம் வந்ததும் தனது பச்சிளம் பாலகனை தனது கைகளில் சுமந்து கொண்டு வடக்கு திரும்பினாள். தன்னை வரவேற்க கணவன் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. குழந்தையைப் பராமரிக்க தந்தை இல்லையே என்ற சோகம் அவளை தழுவி இருந்தது.

5 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது?

6 ︎நேர்மை என்பது...
7 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
8 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
9 பாலஸ்தீனத்தின் பெருமை
10 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
11 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
12 உணரப் படாத தீமை சினிமா
13 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
14 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
15 விரக்தி விஷத்தை விட கொடியது
16 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
17 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
18 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
19 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
20 அந்தப் பெண்களாக நாம்...
21 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
22 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
23 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
24 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
25 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
26 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
27 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
28 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
29 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
30 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
31 இளையான்குடியில் உருது மக்கள்
32 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
33 மரணம் நோக்கி...
34 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
35 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
36 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
37 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
38 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
39 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
40 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
41 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
42 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
43 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
44 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
45 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
46 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
47 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
48 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
49 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
50 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
51 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
52 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
53 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
54 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
55 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
56 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
57 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
58 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
59 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
60 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
61 எது வணக்கம்..?
62 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
63 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
64 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
65 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
66 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
67 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
68 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
69 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
70 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
71 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
72 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
73 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
74 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
75 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
76 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
77 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
78 மனைவியை_நேசிங்கள்..
79 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
80 அம்மா! அம்மா!
81 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
82 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
83 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
84 இமாம்களும் மத்கபுகளும்.
85 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
86 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
87 பராஅத் இரவின் சிறப்புகள்
88 வாப்பா!
89 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
90 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
91 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
92 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
93 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
94 இதிலென்ன வெட்கம்?
95 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
96 பழையன கழிதலும் புதியன புகுதலும்
97 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
98 கற்பில் கவனம் தேவை
99 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
100 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
101 இஸ்திஃகாராவின் சிறப்பு
102 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
103 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
104 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
105 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
106 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
107 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
108 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
109 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
110 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
111 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
112 இறுக்கமும் இரக்கமும்
113 இஷா தொழுகையும் இரவு உணவும்
114 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
115 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
116 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
117 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
118 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
119 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
120 பெயர்களை நினைவில் வைப்போம்
121 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
122 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
123 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
124 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
125 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
126 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
127 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
128 ஒரு 2.5 கதை
129 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
130 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
131 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
132 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
133 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
134 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
135 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
136 குறைகளை மறைத்தல்
137 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
138 நல்ல பெண்மணி
139 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
140 💥 யார் அந்த மாமனிதர்..?
141 ஈர்ப்பை விதைப்போம்!
142 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
143 யார் இந்த துலுக்கன்?
144 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
145 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
146 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
147 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
148 நிம்மதி - சிறுகதை
149 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
150    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
151 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
152 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
153  வாழ்க்கை வாழ்வதற்கே !
154 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
155 விற்கப்படும் மார்க்கம்
156 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
157 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
158 பார்வைகள் பலவிதம் !
159 நேர மேலாண்மை / திட்டமிடல்
160 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
161 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
162 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
163 தந்தைகளே! கவனியுங்கள்
164 வரலாறு புகட்டும் பாடம்
165 அல்குர்ஆன் என்னும் மதுரம்
166 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
167 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
168 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
169 நாம் தான் முயல வேண்டும்.
170 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
171 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
172 கற்பா? கல்லூரியா?
173 கசாப்புத் தொழில் சிறந்தது....
174 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
175 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
176 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
177 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
178 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
179 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
180 என் ஹிஜாப் என் உரிமை!!!
181 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
182 முகமாகும் பெண்கள்!!
183 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
184 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
185 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
186 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
187 செல்போன்கள்... ஜாக்கிரதை!
188 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
189 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
190 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
191 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
192 ஈமானே-உன் விலையென்ன?
193 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
194 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
195 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
196 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
197 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
198 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
199 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
200 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
201 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
202 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
203 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
204 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
205 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
206 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
207 அறிவைத் தேடுவோம்!
208 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
209 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
210 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
211 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
212 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
213 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
214 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
215 “வேர்கள்” வரலாறு!
216 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
217 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
218 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
219 மனிதனின் தேவை ! – மன அமைதி
220 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
221 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
222 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
223 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
224 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
225 பேச்சு,மெளனம்
226 ஜனாஸா - மைய்யத்
227 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
228 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
229 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
230 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
231 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
232 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
233 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
234 வலிமார்கள் என்பவர்கள் யார்?
235 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
236 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
237 மனித குல விரோதி
238 எனது பெயர் ஜனாஸா!
239 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
240 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
241 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
242 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
243 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
244 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
245 தமிழரும் இசுலாமியரும்
246 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
247 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
248 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
249 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
250 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
251 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
252 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
253 கற்பனைகளும் இஸ்லாமும்
254 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
255 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
256 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
257 மது ஒரு பெரும் பாவம்
258 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
259 பெற்றோர்களைப் பேணுவோம்!
260 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
261 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
262 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
263 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
264 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
265 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
266 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
267 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
268 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
269 மறுமை வாழ்வை நேசிப்போம்!
270 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
271 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
272 சுதேசி சிந்தனைகள்.......
273 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
274 கல்வி நல்லோர்களின் சொத்து!
275 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
276 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
277 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
278 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
279 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
280 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
281 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
282 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
283 அறிவைத் தேடுவோம்!
284 ஆக்காதீர் ஆசனங்களாக
285 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
286 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
287 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
288 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
290 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
291 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
292 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
293 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
294 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
295 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
296 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
297 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
298 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
299 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
300 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
301 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
302 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
303 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
304 விசுவரூபம் ஒரு விளக்கம்
305 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
306 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
307 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
308 கண்ணாடிகள் கவனம்
309 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
310 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
311 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
312 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
313 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
314 கருத்து வேறுபாடுகள்.
315 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
316 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
317 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
318 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
319 ஓ! என் இளைய சமுதாயமே!
320 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
321 வீண் செலவு வேண்டாமே