Tamil Islamic Media

கட்டுரைகள்

1. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
  பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார். Read 943 Times
 
2. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
  ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது. Read 918 Times
 
3. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
  கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை. Read 910 Times
 
4. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
  பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள். Read 946 Times
 
5. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம்
  கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான். Read 694 Times
 
6. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
  முதலாம் சிலுவைப் படையுடன் மோதிய முதல் முஸ்லிம் மன்னர் ரோம ஸல்தனத்தின் சுல்தான் கிலிஜ் அர்ஸலான். அதை முந்தைய அத்தியாயங்களில் நாம் கடந்து வந்திருக்கின்றோம். அவர் அப்பொழுது பரங்கியர்களுடன் நிகழ்த்திய போர்கள் மூன்று. முதலாம் சிலுவைப் போர்ப் படைக்கு முன்னோட்டமாய் வந்த ‘மக்களின் சிலுவைப்போர்’ என்ற பெருங்கூட்டத்தைத் தோற்கடித்து விரட்டியடித்தது முதலாவது. அடுத்தது நைஸியா போர், மூன்றாவது டொரிலியம் போர். Read 963 Times
 
7. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
  சிரியாவில் அலீ இப்னு தாஹிர் அஸ்-ஸுலைமி என்றொரு மார்க்க அறிஞர் வாழ்ந்து வந்தார். முஸ்லிம் உலகை ஈசலாய்ச் சூழ்ந்த சிலுவைப் படை, புனித நகரைக் கைப்பற்றி, இப்பொழுது சிரியா உட்பட முஸ்லிம்களின் நிலப் பகுதியை ஆக்கிரமிக்கத் திட்டங்களும் வியூகங்களும் வகுக்கின்றது, பேராபத்துச் சூழ்ந்துள்ளது என்பதை உணர்ந்து விரைந்து செயல்பட ஆரம்பித்த மார்க்கப் போராளி அவர். ஜிஹாது வேட்கையை மீளெழுச்சியுற வைக்கக் களமிறங்கிய மார்க்க அறிஞர்களுள் முதலாமவர் அவர். Read 950 Times
 
8. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
  இவற்றுடன் சேர்த்து நாம் இதுவரை சந்தித்த சிலுவை யுத்த தலைவர்களின் பெயர்களையும் அவர்களுக்கு இடையேயான உறவு முறையையும் இங்குச் சுருக்கமாக மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம். ஏனெனில் இனி அவர்களுக்குள் நடைபெறப்போகும் அரசியல் நகர்வுகள், பிணக்குகள், ஆகியவற்றைப் புரிந்துகொள்ள அவை அவசியமாகின்றன. Read 949 Times
 
9. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
  ஃபாத்திமீக்கள் தோல்வியுற்றதும் அச்சத்தில் மூழ்கிய அஸ்கலான் நகரம் பரங்கியர்களிடம் சரணடைந்து விடுவோம் என்றுதான் தயாரானது. ஆனால் உங்களின் தலைவர் ரேமாண்டிடம்தான் நாங்கள் அதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்றார்கள். Read 1151 Times
 
10. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
  அதையடுத்து அந்நூற்றாண்டு முழுவதும் பெரும்பாலும் அந்த அடிப்படையிலேயே அவர்கள் தங்களது இராணுவ நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள். பெரும் திரளாக முஸ்லிம் படை வருகிறது என்றதும் உடனே பரங்கியர்கள் ஒன்றிணைவார்கள்; தற்காப்புக்கு உகந்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்; அங்கு அவர்களது ஒருங்கிணைந்த படை திரண்டு நிற்கும். அடுத்து, முஸ்லிம் படை எந்த இலக்கைக் குறிவைத்து வருகிறதோ அங்கு பரங்கியர்களின் காவல் படையின் கண்காணிப்பு அதிகரிக்கும். Read 1072 Times
 
11. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
  அன்றைய படுகொலைகளின் கொடூரம் எந்தளவு இருந்ததென்றால், ‘பீய்ச்சிப் பாய்ந்த சூடான இரத்தங்களின் ஆவியைக் கொலை செய்துகொண்டிருந்த சிலுவைப் படையைச் சேர்ந்தவனால்கூடத் தாங்க முடியவில்லை’ என்று பரங்கியன் ஒருவன் விவரித்துள்ளான். Read 1134 Times
 
12. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
  மும்முரமான இந்த ஏற்பாடுகளுக்கு இடையே இரு தரப்பும் தத்தம் எதிர்தரப்பை முரட்டுத்தனமாகச் சீண்டுவதும் அவர்களது மனவுறுதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதும் என்று அந்தக் களேபரங்களும் தீவிரமாக நடைபெற்றன. Read 1140 Times
 
13. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
  அர்ஸுஃப் (Arsuf) நகரின் அருகே வந்ததும் கரையோரப் பாதையிலேயே வந்துகொண்டிருந்த படை உள்நோக்கித் திரும்பியது. ஜெருஸலம் நகரத்திற்குச் செல்லும் சாலையில் கடைசியில் உள்ள ரம்லாவை அணுகியதும் அதுவரை விறுவிறுவென்று முன்னேறி வந்திருந்த படை அங்குதான் சற்றுத் தாமதித்தது. அங்கு, தங்களுக்கு எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரம்லாவில் இருந்த கோட்டையும் ஃபாத்திமீக்களால் கைவிடப்பட்டு இருந்ததால், அங்கும் அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. Read 1143 Times
 
14. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
  பிரச்சினை முற்றுவதையும் உச்சத்தை எட்டுவதையும் உணர்ந்தார் பீட்டர். சாமர்த்தியம் என்று நினைத்துக்கொண்டு அடுத்து ஒரு காரியம் புரிந்தார். “எனது நேர்மையையும் நாணயத்தையும் நிரூபிப்பேன். தீ புகுவேன். வெளிவருவேன். தீ என்னைத் தீண்டாது. உடம்பில் புண் என்று எதுவும் ஏற்படாது. அது உங்களுக்கு அறிவிக்கும் என் வாக்குச் சுத்தத்தை. அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்” என்று அறிவித்துவிட்டு நான்கு நாள் விரதம் இருந்தார். Read 1154 Times
 
15. வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
  பொருளாதார நெருக்கடியில் இருந்த தங்களது எகிப்து நாடு எவ்வாறு இத்தகைய செல்வ செழிப்பான நாடாக உருமாறியது என்று மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். Read 1009 Times
 
16. தர்ம கற்கள் - அழகிய தர்மம்
  துருக்கி நாட்டில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான கடைவீதி, பள்ளிவாசல், மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒரு குறிப்பிட்ட வடிவிலான இரண்டு மீட்டர் உயரத்தைக் கொண்ட மார்பில் கல்லை காண இயலும்,அதன் தலை பகுதியில் குழி இருக்கும்.அதில் இது ஸதகா தாஸி (ஈகை கல்) என்று எழுதப்பட்டிருக்கும் Read 936 Times
 
17. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
  ஜுன் 1098. அந்தாக்கியாவின் வடக்கே சில மைல்கள் தொலைவில், தமது படையின் முக்கியமான பகுதியை கெர்போகா பாடியிறக்கினார். நகரின் உச்சியில் இருந்த கோட்டையை முஸ்லிம்கள் தக்க வைத்திருந்தார்கள் அல்லவா, அவர்களுடன் தொடர்பு கொண்டார். கோட்டையைச் சுற்றி முஸ்லிம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். Read 1092 Times
 
18. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
  சிலுவைப் படையைச் சேர்ந்த பீட்டர் பார்த்தோலொமெவ் (Peter Bartholomew) என்பவர் தலைமையில் சிறு கூட்டமொன்று தோண்ட ஆரம்பித்தது. கடப்பாரை, மண்வெட்டி என்று கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, வியர்க்க விறுவிறுக்கத் தரையைத் தோண்டி, பள்ளம் பறித்துக்கொண்டிருந்தார்கள். Read 1084 Times
 
19. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
  நகரின் ஒவ்வொரு தெருவிலும் சடலக் குவியில்கள். நடப்பதற்கே இடமில்லாமல் அவற்றின்மேல்தான் நாங்கள் நடக்கும்படி இருந்தது. எழுந்த பிண நாற்றத்தைச் சகித்துக் கொள்ள யாராலும் முடியவில்லை’ என்று சிலுவைப் படையினருள் ஒருவன் அந்நிகழ்வை விவரித்த தகவல் வரலாற்றில் பதிவாகியுள்ளது. Read 1087 Times
 
20. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
  அந்தாக்கியா என்பது பழம்பெருமை மிக்க நகரம். கிழக்கத்திய தேசத்தின் மாபெரும் நகரங்களுள் ஒன்று. கி.மு. 300ஆம் ஆண்டு அலெக்ஸாண்டரின் தளபதிகளுள் ஒருவரான அண்டியோகஸ் உருவாக்கிய நகரம் Read 1022 Times
 
21. திருநெல்வேலி வரலாறு...!
  திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000 ஆண்டு பழமையான இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. Read 13175 Times
 
22. மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
  1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. Read 15395 Times
 
23. அந்த இரண்டணா ......
  சற்றுப் பொறுங்கள்! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா. ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார்... Read 12602 Times
 
24. சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
 

குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சாதனை செய்துள்ளனர். நீண்ட நெடிய அந்தப் பட்டியலில் நாம் வாழும் இந்திய மண்ணிற்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் இஸ்லாம் வேரூன்ற காரணமாக இருந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சாதனைகளைக் காண்போம்.

Read 12004 Times
 
25. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
  டொரிலியம் அருகே இரு பள்ளத்தாக்குகள் சந்திக்கும் இடத்தில் பரந்த நிலம் இருந்தது. அங்கு பொஹிமாண்ட், ராபர்ட் தலைமையிலான சிலுவைப் படையின் முதல் அணி வந்து சேர்ந்தது. ஜுலை 1ஆம் நாள். அதிகாலை நேரம். அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில், கிலிஜ் அர்ஸலானின் படை குதிரைகளில் புயல்போல் வந்து, சுழல் காற்றைப் போல் சிலுவைப் படையைச் சூழ்ந்தது. Read 1128 Times
 
26. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
  நகரின் தெற்கு, கிழக்கு, வடக்கு – முப்புறத்தையும் சுற்றி அமைந்திருந்த வலுவான அரணைச் சிலுவைப் படையினர் சுற்றிவளைத்து முற்றுகை இட்டுவிட்டாலும் அவர்களுக்குப் பெரும் தலைவலி அளித்த விஷயம் ஒன்று இருந்தது. Read 1103 Times
 
27. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
  சிலுவைப்படை கைப்பற்றும் அனைத்தும் பைஸாந்தியர்கள் வசம் வந்தாக வேண்டும். இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு காட்ஃப்ரெ சத்தியப் பிரமாணம் அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. வேறு வழியின்றி, குத்தகைதாரர் நில உரிமையாளருக்கு அளிப்பதைப்போன்ற சத்தியப் பிரமாணம் அளித்தார் காட்ஃப்ரெ. சிலுவைப் போரை வழிநடத்தும் உரிமையை அலக்ஸியஸுக்கு அளிக்கும் விசுவாசப் பிரமாணம் உருவானது. ஆனால் பதிலுக்கு அலக்ஸியஸ் காட்ஃப்ரெவுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஆலோசனையையும் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தமானது. Read 1147 Times
 
28. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
  அந்த அரசியல் வினோதங்களைப் பார்க்கத்தான் போகிறோம். அதற்குமுன், திரண்டெழுந்த சிலுவைப் படையினருக்குத் தலைமை ஏற்ற ஐவரை நாம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாம் சிலுவை யுத்தத்தில் அவர்கள் வெகு முக்கிய பாத்திரங்கள். Read 1115 Times
 
29. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
  அதற்குள் ஜெர்மனியில் பல்வேறு பரிவாரங்கள் திரண்டிருந்தன. அவர்களும் இவர்களும் ஒன்று சேர்ந்து, படையாக உருமாறி, அதற்கு ‘மக்களின் சிலுவைப் போர்’ என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. போர் வெறி அவர்களை உந்தித்தள்ள, கி.பி. 1096ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில், அந்தக் கூட்டம் ஜெருசலத்தை நோக்கிக் கிளம்பிவிட்டது. Read 1135 Times
 
30. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
  கடந்த பதினோரு அத்தியாயங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகளையும் எக்கச்சக்கத் தகவல்களையும் மூச்சு முட்டக் கடந்து, இப்பொழுதுதான் முதலாம் சிலுவை யுத்தத்தை நெருங்கியிருக்கின்றோம். Read 4622 Times
 
31. ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
  சரித்திராசிரியர் ரிச்சர்ட் ஈடன் காட்டியுள்ளபடி, இந்தியாவில் உள்ள முஸ்லீம் ஆட்சியாளர்களின் கோவில்களின் அழிவு மிகவும் அரிதாக இருந்தது, அது நடந்தபோதும் கூட, இது ஒரு அரசியல் செயல் அன்றி அது ஒரு மதபோக்கு அல்ல. Read 2419 Times
 
32. இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
  அரபு நாடுகளில் கல்வியை பயிலாத இவர்கள் அரபுலக அறிஞர்களுக்கு மிகப்பெரிய ஆசானாக ஆனார்கள், பாலஸ்தீன பைத்துல் மக்திஸ் இமாம் அப்துஸ் ஸமத், உலகப் புகழ்பெற்ற அறிஞர் யூசுப் அல் கர்ளாவி போன்ற சமகால அறிஞர்களுக்கு ஆன்மீக ஆசானாக கருதப்படுபவர்கள். Read 2751 Times
 
33. இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
  இதுவல்லவா நபி நேசம்!!!!!!! ஹஸன் அல் இக்திர்லி.யார் இவர்? நமது கர்ஜனைகளில் மட்டும் வெளிப்படும் நபி நேசம் அவர்களது கற்பனைகளில் கூட வெளிப்பட்டது. Read 3232 Times
 
34. தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
  இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது.......... Read 3234 Times
 
35. உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
  ஹிஜ்ரி 1325 இல் முதன் முதலாக மதீனத்துப் பூங்காக்குள் மின் விளக்குகள் வருகைத் தந்தது.வரவழைத்தது வேறு யாருமில்லை, உஸ்மானியா பேரரசின் கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்)அவர்கள் தான். Read 3003 Times
 
36. உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
  அதாவது எல்லா கடைகளிலும் கூடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.ஒரு செல்வந்தர் அந்த கடைக்கு வந்து தனக்கு தேவையான நான்கு ரொட்டிகளுக்கு பணம் செலுத்தாமல் எட்டு ரொட்டிக்களுக்கான பணத்தை கொடுக்கிறார். Read 3101 Times
 
37. நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
  சுமார் எழுநூறு ஆண்டுகள் இங்கு தான் நான் அயராமல் நிற்கிறேன். இந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட இதுவரை நான் நகர்ந்தது இல்லை. என் இரு கண்களை ஒரு வினாடி கூட நான் மூடியதும் இல்லை. காலத்தின் ஓட்டம், அதிகாரத்தின் மாற்றம் என அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். Read 3256 Times
 
38. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
  தன் கூட்டத்திலிருந்து ஆளைத் தேர்ந்தெடுத்துப் பணியை ஒப்படைப்பான். தனியாளாகவோ ஓரிருவராகவோ நாலைந்து பேர் கொண்ட சிறு குழுவாகவோ அவர்கள் கிளம்புவார்கள். கத்தி, வாள், குறுவாள் என்று ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்திக்கொள்வார்கள். குறி வைத்தவரைத் தொழில் நேர்த்தியுடன் கனக் கச்சிதமாகத் தாக்கி அவரின் கதையை முடித்துவிடுவார்கள். Read 4257 Times
 
39. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
  ஸலாஹுத்தீன் ஐயூபி மன்னராய் உருவான காலத்திலிருந்தே ஜெருசலம்தான் அவரது இலட்சியமாய் இருந்தது. நெடுக நடைபெற்ற ஒவ்வொரு போருக்கும் அரசியல் நகர்வுகளுக்கும் சண்டைக்கும் சமாதானத்திற்கும் அந் நகரின் விடுதலைதான் அடிநாதமாய்த் திகழ்ந்தது. Read 6359 Times
 
40. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
  டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில் புழுதியைப் பரப்பி வேகவேகமாக வந்து கொண்டிருந்தது. Read 6470 Times
 
41. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
  நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு, “கிளம்புங்கள். செல்வோம் களத்திற்கு” என்று இமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரைக் கைப்பற்றப் படையெடுத்தார். Read 7022 Times
 
42. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
  ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன. Read 6639 Times
 
43. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
  பைஸாந்தியச் சக்ரவர்த்தி ஏழாம் மைக்கேலின் கோரிக்கைக்கு, போப் கிரிகோரியினால் படையை அனுப்பி வைக்க முடியாமல் போனதல்லவா? அதன் பிறகு, இரு தரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. Read 7004 Times
 
44. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
  கி.பி. 1095ஆம் ஆண்டு. நவம்பர் மாத இறுதியில் ஒருநாள், காலை நேரம். பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள க்ளெர்மாண்ட் நகரத் திடலொன்றில் மக்கள் குழுமியிருந்தனர். Read 7380 Times
 
45. கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
  எளிய தோற்றம், வலிய கருத்துகள், போட்டி, பொறாமை, சூதுவாது இவற்றின் பொருள் தெரியா குழந்தை உள்ளம். அச்சாணி என்று புலவர்கள் வர்ணிப்பார்களே, அவ்விலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். Read 5709 Times
 
46. இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
  கவர்னருக்கு வேறு வழி தெரியவில்லை. மறுநாள் காலை முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தூது விட்டார். தூதுவர் ஸஈதிடம் வந்தவுடன் சாஷ்டாங்கம் செய்து வணங்க முற்பட்டார். ஆனால் முஸ்லிம்கள் அதனைத் தடுத்து விட்டனர். Read 5384 Times
 
47. தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
  பிரான்சிஸ் டே(Francis Day), ரௌலண்சன்(Rowlandson), ஸ்டுராக் (Stu-rrpck) போன்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இஸ்லாம் தமிழ் மண்ணில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே தழைக்கத் தொடங்கி விட்டது. Read 6791 Times
 
48. சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
  திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும், அவர் இந்துக்களை கொன்றார், மதமாற்றம் செய்தார், இந்து பெண்கள் மீது பாலியல் கொடுமைகளை ஏவினார் என்று பல கதைகளை சொல்லிவரும் இவர்கள் கூறும் கூற்றுக்களுக்கு ஏதும் வரலாற்று சான்று இருக்கிறதா என்றால், இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதெல்லாம் செவிவழிக் கதைகள் மட்டுமே. Read 6906 Times
 
49. சூஃபிக்களும் புனித போர்களும்
  பத்தொன்பதாம் நூற்றாண்டில் முஸ்லிம் வரலாறு அதிமுக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருந்தது. எகிப்து மீதான நெப்போலியனின் படையெடுப்போடு துவங்கிய மேற்கத்தேய காலனித்துவம், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அந்த நாடுகளில் இருந்த முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம் இப்புதிய சவாலை எதிர்கொள்வதற்கு திராணி பெற்றதாக இல்லை. Read 6263 Times
 
50. யார் தேச விரோதி?
  காந்தி யுத்த பிரகடனம் செய்துவிட்டார். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போர் துவங்கிவிட்டது. அது இந்தியர்களின் இதயத்தில் புது உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டது. Read 7498 Times
 
51. இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
 

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

Read 16202 Times
 
52. ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
 

ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர்.

உமர் அழுதார்! மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்!.

Read 13164 Times
 
53. விடுதலைப்போரில் வீரமங்கையர்
  ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.61) Read 11898 Times
 
54. பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
  1929 ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். Read 11670 Times
 
55. இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
  உண்மையான வரலாற்றை ஆதாரங்களோடு ஆராய்ந்து பார்ப்போமானால், இன்று முஸ்லிம்களை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் எங்கிருந்தோ இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். Read 9396 Times
 
56. நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
  ...தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. இவை குறித்த சில வரலாற்றுச் செய்திகளை இங்கு காண்போம். Read 12764 Times
 
57. இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
  நன்றி கொல்வதை வாழ்க்கை வழியாகக் கொண்டவர்கள் மட்டுமே, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கை மறைப்பார்கள் அல்லது மறுப்பார்கள். தேசப் பிரிவினை;க்கு முஸ்லிம்களே காரணம் என்றொரு பொய்யைக்கட்டவிழ்த்து விட்டார்கள் சில பாசிஸ்டுகள். இவர்கள இந்தப் பொய்யை இடைவிடாமல் பரப்பினார்கள். இதை ஒரு பெரும் பகுதி மக்கள் நம்பவும் செய்தார்கள். Read 13564 Times
 
58. கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
  மதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப்பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையம். இப்பகுதியில் பழமையான பள்ளிவாசல் ஒன்றும், தர்கா ஒன்றும் ஒரே வளாகத்தில் உள்ளன. Read 15264 Times
 
59. சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
  இன்றைய இந்தியாவில் இந்து இஸ்லாம் மக்களிடையே நல்லிணக்கமும், நேசமும் வலுப்பெற வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது. இவ்விரு பிரிவினரும் எப்போதுமே மோதிக்கொண்டவர்களாக இல்லை. மாறாக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இரு திறத்தாரின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து வாழ்ந்தனர் என்பதற்குக் குறிப்பாகத் தமிழகத்தில் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. Read 13138 Times
 
60. தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
  முஸ்லிம் இனம் குறித்த இந்தப் புள்ளி விவரங்களோ தகவல்களோ மட்டும் போதாது. இனம் பற்றிய தகவல்கள் புவியியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். Ethno எனப்படும் இனம் குறித்த ஆய்வையும் Geography எனப்படும் நிலவியல் பற்றிய இயலையும் ஒன்று சேர்ந்து Ethnogeography எனப்படும் நிலவியல் பற்றிய இயலையும் ஒன்று சேர்த்து Ehnogeography எனப்படும் சமூகஅறிவியல் துறை வாயிலாகத் தமிழ் முஸ்லிம்களின் Cartographyயைத் தயாரிப்பதே நமது நோக்கம். Read 14266 Times
 
61. விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
  இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும். Read 13968 Times
 
62. தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
  அகிலத்திற்கோர் அருட்கொடையாகத் தோன்றிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த சத்திய சன்மார்க்க இஸ்லாம் அரபு நாட்டில் மட்டுமின்றிக் கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் அகில உலகெங்கிலும் குறிப்பாக தென்கிழக்கு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாக வளர்ந்தோங்கி வேரூன்றத் துவங்கியது. Read 18528 Times
 
63. சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
  தேச விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922 இல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் ஆவேசமாக மக்கள் மத்தியில் பேசுகிறான். விடுதலை உணர்வை; தூண்டும் அந்த மழலைக் குரல் ஒலிக்கும் இடமெல்லாம் மக்கள் திரளாகக் கூடினர். துகவல் ஆங்கிலேயருக்கு செல்கிறது. அந்த 11 வயதுச் சிறுவனைக் கைது செய்து (இன்று பாகிஸ்தானில் உள்ள) ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். Read 12009 Times
 
64. இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
  சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். Read 12957 Times
 
65. தமிழகத்தில் முஸ்லீம்கள்
  அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது. Read 12181 Times
 
66. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
  இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. Read 16570 Times
 
67. இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
  ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. Read 18539 Times
 
68. இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
  இந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்! Read 18856 Times
 
69. பாடலியில் ஒரு புலி
  நீங்கள் இப்போது என்னைத் தூக்கிலிடலாம். என் போன்ற பலரையும் தூக்கிலிடலாம். ஆனால் எங்களுடைய லட்சியத்தை நீங்கள் ஒரு காலத்திலும் தூக்கிலிட முடியாது. நான் இறந்தால் எனது ரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் உதித்து உங்கள் சாம்ராஜயத்தையே அழித்து விடுவார்களென்பது நிச்சயம்! என்று தன் தேசத்தின் எதிர்கால விடியல் கனவைத் தன் இறுதி மூச்சில் வெளிப்படுத்தியவாறு தூக்கு கயிறை முத்தமிடுகிறார். Read 9520 Times
 
70. தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
  26-09-1926- இல் தூக்கு கயிற்றில் தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் அஸ்பாகுல்கான். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் (ஆயுதப் புரட்சி) முன்னோடி ஆவார். Read 9056 Times
 
71. ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
  மௌலவி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் தீரத்தைப் பற்றி ஜெனரல் தாமஸ் என்ற ஆங்கில அதிகாரி, இந்திய சுதந்திரத்திற்காகப் புரட்சி செய்தவருள் இவரைவிட மேலான வீரர் எவருமில்லை. என்கிறார். Read 9152 Times
 
72. முதல் சுதந்திரப் பிரகடனம்
  இந்த மண்ணில் சுதந்திரத்திற்காய் சிந்தப்பட்ட முதல் ரத்தம் - முதல் போராட்ட உத்வேகம் - முதல் மக்கள் இயக்கம் - முதல் சுதந்திரப் பிரகடனம் என பல முதல்களுக்குச் சொந்தக்காரர்களாக, அம்முதல்களுக்கு மட்டுமே சொந்தம் உடையவர்களாக இஸ்லாமிய பரம்பரை உள்ளது. Read 9054 Times
 
73. மவுலானா எனும் மகத்தான இந்தியர்
  நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல் Read 9414 Times
 
74. காலித் பின் வலீத் (ரலி)
  இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனி இடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார். Read 10573 Times
 
75. தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
  ' யாதும் ' இயக்குனர் அன்வரின் உழைப்பில் வெளிவந்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். அதை ஒரு ஆவணக் குறும்படமாக தமிழ் முஸ்லிம்களுக்கு தந்திருக்கும் அன்வரின் பணியை பாராட்ட வார்த்தைகள் போதாது. Read 11474 Times
 
76. இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  Read 10937 Times
 
77. முதல் வாள்!
  Read 10320 Times
 
78. கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
  Read 10557 Times
 
79. இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
 

நீண்ட காலமாக முஸ்லிம்களும் பௌத்தர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணக்கமாகவே வாழ்ந்துவந்தனர். அண்மைக் காலமாக அங்கு சில தீவிரவாத அமைப்புகள் தலைதூக்கிப் பிரச்சினை செய்துவருகின்றன. இந்த அமைப்புகளுக்கு புத்த பிக்குகளே தலைமை தாங்குகின்றனர். 

Read 12004 Times
 
80. மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்
 

இந்தியாவில் சுதந்திற்கு போராடிய முஸ்லிம் போராளிகள் பலர் இருகின்றனர்.அதிகமான போராளிகள் துரோகிகளின் மூலமே ஆங்கிலேயர்களால் கொல்லபட்டனர் .அப்படிபட்ட போராளிகள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் இந்தியாவை கைப்பற்றுவது கேள்வி குறியானது?அப்படி பட்டவர்களின் ஒருவர் தான் இந்த மாவீரன் கான் சாஹிப்.

Read 13368 Times