Tamil Islamic Media

பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்

பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்

பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் விருந்தோம்பல் முறைக்கென்று ஒரு தனி பாரம்பரியம் உள்ளது. தொன்று தொட்டு பல காலங்களாக மிக சிற் சில மாற்றங்களுடன் இந்த தாவத்து என்ற விருந்தோம்பும் முறை நடைபெற்று வருகிறது.

அது, கூட்டாக தரையில், பாயில் அமர்ந்து வட்டமான சஹனில் இரண்டு அல்லது மூன்று பேராக அமர்ந்து உண்ணும் முறை. இஸ்லாமிய மரபில் இவ்வாறு கூட்டாக அமர்ந்து உண்பதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. "எங்களுக்கு சாப்பிட்ட (திருப்தி) உணர்வே வருவதில்லை" என்று சஹாபாக்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டதற்கு "நீங்கள் தனியாக சாப்பிடுகிறீர்கள் போலும், ஒன்றாக கூட்டாக அமர்ந்து உணவருந்துங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை நாம் அறிவோம்.

எல்லாவற்றிலும் பழையன கழிதலும், புதியன புகுதலும் உண்டுதானே! ஆனால், தற்போது புதிதாக பெருகி வரும் டேபிள் சேர், பிளாஸ்டிக் வாழையிலை, பணிபுரிய கூலிக்கு ஆட்கள் என்ற இந்த முறையை அப்படி ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோருக்கு முடிவதில்லை.

காலம் காலமாக ஹாயாக பாயில் இடம்பிடித்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் ஒரு ஜமாவாக பேசிக்கொண்டு, இரண்டு பேராகவோ மூன்று பேராகவோ ஒரு சஹானை சுற்றி பகிர்ந்து உண்டு எழுவதில் கிடைக்கும் திருப்தியும் நிம்மதியும் இதில் இல்லையென்பதுதான் அவர்கள் சொல்லும் முதல் காரணம்.

மேலும், பாரம்பரிய விருந்துண்ணும் முறையில் டேபிள் சேர், பிளாஸ்டிக் வாழையிலை, ஆட்கள் கூலி செலவெல்லாம் இல்லை. டேபிள் சேர் முறை எல்லாம் (அவசியமே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரங்களை இறக்குமதி செய்துக் கொள்ளும் ஆடம்பர இந்தியர்களை போல) பக்கத்து வீட்டுக்காரரை கூட அறிந்து வைத்திராத நகரவாசிகளிடமிருந்து இம்போர்ட் செய்து கொண்டதாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.

திருமணத்தை எளிமையாக நடத்த வலியுறுத்துகிறது இஸ்லாம். திருமண விருந்து ஒன்றும் பர்ள் அல்ல. மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தும் அல்ல. ஆனால் சமுதாயம் அதுபோல தற்போது ஆக்கிவிட்டது. இதனால் எளிமையாக திருமணம் முடிக்க நினைப்பவர்களுக்கும் பெரும் சங்கடம் விளைகிறது. அது போல டேபிள் சேர் கலாச்சாரமும் வருங்காலத்தில் ஆகிவிடும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் இவர்கள்.

இது இப்படி என்றால், இந்த டேபிள் சேர் முறை, விருந்தில் ஒரு முறைப்பாட்டை கொண்டு வருகிறது; திருமண வீட்டாருக்கு சுமை குறைகிறது; வருபவர்களை வரவேற்பதை மட்டும் நாம் பார்த்துக்கொண்டால் போதும் என்று இந்த பக்க நியாயத்தையும் சிலர் அடுக்குகின்றனர்.

திருமண நிகழ்வு என்பது உறவுகள் கூடி களிப்பதற்கான ஒரு பொழுதுதான். திருமண வீட்டில் தங்கள் பங்களிப்பின் மூலம் தங்கள் உரிமையை, அன்பை வெளிப்படுத்திக்காட்டிட விரும்பாத உறவுகளே இருக்க முடியாது. பல இடங்களில் குறையாக போய் விடும் அபாயம் உள்ள சென்சிடிவான செண்டிமெண்ட் இது. பாரம்பரிய சஹான் விருந்து முறையில், "கலரி உலம்புவது(களரி விளம்புவது)" என்ன அழகிய சொல்லாடல்...! என்ற பெயரில் ஒவ்வொருவர் கையிலும் சஹான் சென்று வருவது முதல், தெரிந்தவர்களை பெயர் சொல்லி அழைத்து, "சாப்பிடுங்க" என்று சஹானை கொடுத்து உபசரிப்பது என்று உறவுகளின் நேரடி பங்களிப்பு நீக்கமற இருக்கும். இது தனது வீட்டு வைபோகம் என்ற எண்ணம் வீட்டில் குஞ்சுகுளுவான்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் திளைக்கும். திருமணத்தின் உண்மையான சாரமான 'உறவுகளின் ஒன்றுகூடல்' அழகாக இயல்பாக நிகழும்.

பிஸ்மில்லாஹ் சொன்ன பிறகே அனைவரும் ஒருசேர சாப்பிட ஆரம்பிப்பதும், ஒரு சிலர் முன்பின் சாப்பிட்டு முடித்தாலும் அனைவரும் ஒருசேர எழுந்திருப்பதும் ஒரு தனி அழகு. "பிஸ்மில்லாஹ்" என்று சொல்லி முடித்தவுடனேயே "மறுசோறு" என்ற குரல்கள் வருவது அது ஒரு அழகு.

டேபிள் சேர் கலாச்சாரத்தில் இதற்க்கு சாத்தியமே இல்லை. மாறாக, ''அதுதான் ஆளுங்க இருக்காங்களே '' என்ற எண்ணத்தில் உறவுகள் யாரும் களத்திற்கு வருவதே இல்லை. பெரும்பாலான உறவுகள் சாப்பிட்டு விட்டு 15 நிமிடத்தில் இடத்தை காலி செய்து விடுகின்றனர். கடந்த காலத்தில், திருமணம் சார்ந்த பல நிகழ்வுகள் மார்க்க அனாச்சாரம் என்றும் இஸ்ராப் (வீண்விரயம்) என்றும் புறம்தள்ளப்பட்டு பெரிதாக எந்தவிதமான கொண்டாட்டங்களும் இல்லாத ஒரு நிகழ்வாக தற்போதைய திருமண வைபவங்கள் ஆகிவிட்ட இந்த காலத்தில் உறவுகள் கூடி இயங்கும் 'கலரி உலம்புவதற்கு (களரி விளம்புவது)'' வேட்டு வைக்கும் இந்த டேபிள் சேர் முறையில் என்ன இஸ்லாமிய கலாச்சாரம் இருக்கிறது?. உறவுகளை ''உங்கள் வேலையை பார்த்துகிட்டு போங்க'' என்று ஒதுக்குதல் தான் மறைமுகமாக இருக்கிறது என்று கொஞ்சம் காட்டமாகவே முகம் காட்டுகின்றனர் பலர்.

நின்று கலரி உலம்ப குடும்பத்தில் ஆள் இல்லாத, அத்தனை உன்னத குடும்ப பாரம்பரியம் இல்லாதவர்களும், குடும்பத்தில் பிணக்குகள் எற்படுத்திக்கொண்டவர்களும்தான் முதன்முதலில் பயந்து போய் இந்த டேபிள் / ஆட்கள் முறையை யோசித்து இருக்க வேண்டும்'' என்று வேறு பகீர் கிளப்புகின்றனர்.

டேபிள் சேர் கலாச்சாரத்தால் விழுந்த பெரு அடி

பாரம்பரிய விருந்து முறையில் அனைவரும் உணவு வரும் வரை காத்திருந்து பிறகு விருந்து தரும் வீட்டார் '' பிஸ்மில்லாஹ், சாப்பிடுங்கள் '' என்று சொன்ன பிறகே உணவருந்த துவங்கும் அழகிய ஒரு மரபு பின்பற்றப்பட்டுவருகிறது பரங்கிபேட்டை உள்ளிட்ட மிக சில முஸ்லிம் ஊர்களில் மட்டுமே நடைமுறையில் இன்றும் இருக்கும் இந்த அழகிய மரபு ஆகச்சிறந்த சகிப்புனர்வுக்கு ஒரு இயல்பான உதாரணமாகும். டேபிள் சேர் முறையில் விழுந்த முதல் அடி இந்த 'பிஸ்மில்லாஹ்'சொல்லி கூட்டாக அனைவரும் உண்ணத்துவங்கும் இந்த மரபுக்குத்தான். ஆனால், பாரம்பரிய விருந்து முறையில் இந்த மரபு இன்னும் உயிர்ப்போடு உள்ளது.

வயதானவர்கள் உட்கார்ந்து உணவருந்த டேபிள் சேர் முறையே சிறந்தது என்ற வாதமும் முன்வைக்கபடுகிறது. உடனே , '' அந்த காலத்தில் எந்த வயதானவர்கள், எந்த சேரில் உட்கார்ந்து உணவருந்தினார்கள் ? போன வருடம் வரை கூட எவருமே டேபிள் சேரை விருந்துகளில் பார்த்தது கூட இல்லையே ? அவ்வளவு ஏன், மாற்றுமதத்தினர் கூட நமது இந்த பாரம்பரிய கூட்டு விருந்துண்ணும் முறையை கண்டு சிலாகித்து அதைதானே விரும்புகின்றனர்? '' என்று உடனே அதற்கான பதிலையும் தருகின்றனர் இந்த தரப்பினர்.

பாரம்பரியமே ஆரோக்கியமானது

காய்கறி, மருந்து என்று அனைத்திலும் '' ஆர்கானிக்'' என்ற இயற்கை முறைக்கு உலகமே ஆர்வத்துடன் மாறிவரும் இந்த சூழலில், இரும்பு சஹானுக்கு பதில் பிளாஸ்டிக் வாழை இலை, வீணாக போகப்போகும் தினசரி பேப்பருக்கு பதில், இதற்காகவே தயாரிக்கப்படும் பேப்பர் என்று ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் முறை இது என்று பொருமும் இவர்களின் வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் வாழை இலைக்கு மேல்புறத்தில் பேப்பர் ஊறி விடாமல் இருக்க பூசப்படும் மெலிதான மெழுகு கோட்டிங், சூடான உணவு பட்டு உருகி நம் வயிற்ருக்கு போய் ஏற்படுத்தும் உபாதைகள் சில சமயம் பெரிய நோய்களுக்கு வித்திடும் என்று எச்சரிக்கிறது விஞ்ஞானம்.

பாரம்பரிய முறையில் எக்ஸ்ட்ரா கறி / ஸ்வீட் / கோழி என்று அவரவர் இஷ்டத்திற்கு புகுந்து விளையாடி உணவு / இறைச்சி தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கிறது. டேபிள் சேர் முறை அதை தடுத்து முறைபடுத்துகிறது என்று தங்களின் முக்கிய துருப்புச்சீட்டை இறக்கி பேசுகின்றனர் இந்த தரப்பு. '' இதெல்லாம் ஒரு காரணமே அல்ல. அதெல்லாம் காலம் காலமாக நடைபெறுகிறது. எந்த முறையாக இருந்தாலும் அதை முழுதாக தவிர்க்க முடியாது. ஏன்? டேபிள் சேர் முறையில் சோறு தட்டிக்கொண்டு போனதற்கு பல உதாரணங்கள் உள்ளதே ! எல்லாம், சரியாக பிளான் பன்னி, சரியான ஆட்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதிலும் இருக்கிற விஷயம். யாரோ முகம் தெரியாத ஒரு டீமிடம் நமது உணவையும் உறவுகளின் புன்னகையையும் ஒப்படைப்பதை விட நமக்கு நன்கு தெரிந்த, கண்டிப்பான உறவு ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பதுதானே சிறந்தது? என்று போகிற போக்கில் நச் அடிக்கின்றனர் அந்த தரப்பினர்.

எல்லாவற்றையும் விட ரொம்பவும் உறுத்தும் விஷயம்... நமது பெண்களுக்கு யாரோ வெளியூர் அந்நிய ஆண்கள் சென்ற பரிமாறுவதும் அவர்களின் தேவையை கவனிக்கையில் நடைபெறும் ஆண்பெண் கலப்பும் தான். ''ரொம்ப சரியற்ற விஷயமாக இதனை பார்க்கிறேன்'' என்கிறார் ஆலிம் ஒருவர்.

இப்படி அமர்ந்து உண்பதற்கு தயங்கி, உணவருந்துவதையே தவிர்த்து விட்டு செல்கிற பெண்களை பற்றி இப்போதெல்லாம் அதிகம் கேள்விபடமுடிகிறது. இந்த கட்டுரை எழுதபடுவதற்கு அவர்களும் ஒரு காரணம்.

நமது நெருங்கிய உறவு பெண்களை நாமே கூட நெருங்கி பரிமாறாத பாரம்பரிய விருந்துமுறை எங்கே? முகம் திறந்து உணவருந்தும் வெட்கும் பெண்களின் மத்தியில் சென்று அந்நியர்கள் பரிமாறும் இந்த டேபிள் சேர் முறை எங்கே ? என்று இவர்கள் பொறும ... 'அவர்கள் ஜஸ்ட் உணவை வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.. ஏன், இவர்கள் வெளியூரில் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவதில்லையா? என்று எதிர் கேள்வி கேட்கின்றனர் இந்த தரப்பு. நிர்பந்த நிலையில் ஹோட்டல்களில் சாப்பிடுவதும், உறவுகளின் அன்பிற்காக விருந்தில் சாப்பிடுவதும் ஒன்றல்ல என்றாலும், மார்க்கம் எந்த நிலையிலும் தவிர்க்கும் ஆன் பெண் கலப்பை நாமும் தவிர்ப்பதே சிறந்தது.

பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக எவர்சில்வர் கிண்ணங்கள், வாட்டர் பாகெட், பாட்டில்களுக்கு பதிலாக மீண்டும் ஜக்கு, டம்பளர்கள், சிறிய சஹான்களுக்கு பதிலாக 6 பேர் அமர்ந்து உண்ணும் பெரிய சஹன் என்று பாரம்பரிய விருந்துமுறையை இன்னும் செழுமையாக, இன்னும் இயற்கையாக, ஆரோக்கியமாக ஆக்கிட இளைஞர்கள் நாம் இங்கே திட்டமிட்டு பேசிக்கொண்டு இருக்கும் வேளையில், டேபிள் சேர் கலாச்சாரம் நிலைமையை மேலும் மோசமாக்குகிறதே என்று நாம் பேசிய சில இளைஞர்கள் நொந்துக்கொண்டதையும் காண முடிந்தது.

பாரம்பரிய விருந்தோம்பும் முறை வரலாற்றில், இடப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால் மண்டபத்தின் ஒவ்வொரு சதுரடியையும் விருந்தாளிகள் சுதந்திரமாக பயன்படுத்திகொள்வார்கள். டேபிள் சேர் முறையிலோ "எப்படா எழுந்திருப்பார்? எப்படா இடம் பிடிக்கலாம்?" என்று சில சமயம் தள்ளுமுள்ளு நிகழும் சாத்திக்கூறுகள்கூட உள்ளன. கண்ணியமான காத்திருந்து உணவருந்தலாம் என்றெல்லாம் டேபிள் சேர் முறையில் நினைத்துகூட பார்க்க முடியாது என்பதை எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

எப்படி பார்த்தாலும் டேபிள் சேர் முறையை விட அழகானதும் சூழலுக்கும் மரபுக்கும் ஒத்திசைவானதுமாக பாரம்பரிய விருந்தோம்பும் முறை எல்லா வகையிலும் அழகு சேர்க்கும் விடயமாக இருக்கிறது என்பதை எவராலும் தெளிவாக உணர முடிகிறது.

மாற்றம் என்ற ஒன்று மட்டும்தான் மாறாததுதான். ஆனால், தேவையான மாற்றமாக இருந்தால் மனம் இனிக்கும்; வரவேற்கலாம். ஒப்புநோக்கில் எந்த வகையிலும் ஒத்துவராத டேபிள் சேர் கலாசாரம் போன்ற மாற்றங்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் தேவைதானா என்ற கேள்வி நமக்கு முன்னால்.. என்ன விடை சொல்லப் போகிறோம் ? இவற்றையெல்லாம் இனியும் தொடராமல் வரதட்சிணை ஒழிப்புக்கு தீர்மானம் இயற்றி முன்னுதாரணமாக இருந்த பரங்கிப்பேட்டையில், திருமணங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட்டு பாரம்பரியத்தோடு கூடிய இயற்கை முறைக்கு திரும்பி இன்னொரு அழகிய முன்னுதாரணத்தை ஏற்படுத்த ஆவணச் செய்யப்பட வேண்டும்.

குறிப்பு: இந்த கட்டுரை எந்தவிதத்திலும் குறை சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, பொதுமக்களின் மத்தியில் இதுபற்றி நிலவும் எண்ணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

http://mypno.com/index.php?option=com_content&view=article&id=8820:2016-01-26-14-33-25&catid=36:mytown&Itemid=76

 






1 அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்

ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்

2 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?

மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"

3 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அக்காலகட்டத்தில் எகிப்தின் மொழி அறபி அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகே அங்கு அறபு மொழி பரவத் தொடங்கியது.

4 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.

எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் காட்டும் ஒரு சிறு கருணை அல்லது சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.

5 ரமலானை வரவேற்கும் துஆ

நோன்பும் இரவுத் தொழுகையும் நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருள்வாயாக. இம்மாதத்தை எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் மாதமாகவும், தவறான எண்ணங்களை அழிக்கும் மாதமாகவும் ஆக்குவாயாக.

6 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
7 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
8 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
9 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
10 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
11 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
12 ︎நேர்மை என்பது...
13 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
14 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
15 பாலஸ்தீனத்தின் பெருமை
16 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
17 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
18 உணரப் படாத தீமை சினிமா
19 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
20 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
21 விரக்தி விஷத்தை விட கொடியது
22 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
23 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
24 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
25 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
26 அந்தப் பெண்களாக நாம்...
27 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
28 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
29 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
30 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
31 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
32 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
33 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
34 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
35 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
36 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
37 இளையான்குடியில் உருது மக்கள்
38 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
39 மரணம் நோக்கி...
40 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
41 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
42 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
43 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
44 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
45 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
46 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
47 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
48 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
49 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
50 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
51 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
52 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
53 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
54 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
55 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
56 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
57 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
58 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
59 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
60 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
61 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
62 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
63 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
64 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
65 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
66 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
67 எது வணக்கம்..?
68 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
69 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
70 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
71 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
72 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
73 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
74 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
75 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
76 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
77 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
78 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
79 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
80 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
81 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
82 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
83 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
84 மனைவியை_நேசிங்கள்..
85 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
86 அம்மா! அம்மா!
87 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
88 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
89 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
90 இமாம்களும் மத்கபுகளும்.
91 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
92 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
93 பராஅத் இரவின் சிறப்புகள்
94 வாப்பா!
95 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
96 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
97 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
98 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
99 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
100 இதிலென்ன வெட்கம்?
101 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
102 பழையன கழிதலும் புதியன புகுதலும்
103 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
104 கற்பில் கவனம் தேவை
105 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
106 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
107 இஸ்திஃகாராவின் சிறப்பு
108 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
109 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
110 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
111 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
112 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
113 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
114 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
115 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
116 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
117 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
118 இறுக்கமும் இரக்கமும்
119 இஷா தொழுகையும் இரவு உணவும்
120 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
121 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
122 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
123 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
124 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
125 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
126 பெயர்களை நினைவில் வைப்போம்
127 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
128 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
129 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
130 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
131 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
132 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
133 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
134 ஒரு 2.5 கதை
135 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
136 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
137 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
138 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
139 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
140 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
141 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
142 குறைகளை மறைத்தல்
143 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
144 நல்ல பெண்மணி
145 💥 யார் அந்த மாமனிதர்..?
146 ஈர்ப்பை விதைப்போம்!
147 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
148 யார் இந்த துலுக்கன்?
149 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
150 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
151 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
152 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
153 நிம்மதி - சிறுகதை
154 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
155    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
156 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
157 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
158  வாழ்க்கை வாழ்வதற்கே !
159 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
160 விற்கப்படும் மார்க்கம்
161 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
162 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
163 பார்வைகள் பலவிதம் !
164 நேர மேலாண்மை / திட்டமிடல்
165 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
166 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
167 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
168 தந்தைகளே! கவனியுங்கள்
169 வரலாறு புகட்டும் பாடம்
170 அல்குர்ஆன் என்னும் மதுரம்
171 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
172 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
173 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
174 நாம் தான் முயல வேண்டும்.
175 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
176 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
177 கற்பா? கல்லூரியா?
178 கசாப்புத் தொழில் சிறந்தது....
179 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
180 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
181 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
182 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
183 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
184 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
185 என் ஹிஜாப் என் உரிமை!!!
186 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
187 முகமாகும் பெண்கள்!!
188 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
189 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
190 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
191 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
192 செல்போன்கள்... ஜாக்கிரதை!
193 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
194 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
195 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
196 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
197 ஈமானே-உன் விலையென்ன?
198 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
199 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
200 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
201 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
202 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
203 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
204 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
205 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
206 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
207 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
208 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
209 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
210 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
211 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
212 அறிவைத் தேடுவோம்!
213 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
214 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
215 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
216 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
217 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
218 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
219 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
220 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
221 “வேர்கள்” வரலாறு!
222 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
223 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
224 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
225 மனிதனின் தேவை ! – மன அமைதி
226 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
227 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
228 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
229 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
230 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
231 பேச்சு,மெளனம்
232 ஜனாஸா - மைய்யத்
233 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
234 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
235 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
236 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
237 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
238 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
239 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
240 வலிமார்கள் என்பவர்கள் யார்?
241 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
242 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
243 மனித குல விரோதி
244 எனது பெயர் ஜனாஸா!
245 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
246 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
247 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
248 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
249 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
250 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
251 தமிழரும் இசுலாமியரும்
252 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
253 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
254 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
255 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
256 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
257 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
258 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
259 கற்பனைகளும் இஸ்லாமும்
260 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
261 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
262 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
263 மது ஒரு பெரும் பாவம்
264 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
265 பெற்றோர்களைப் பேணுவோம்!
266 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
267 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
268 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
269 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
270 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
271 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
272 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
273 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
274 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
275 மறுமை வாழ்வை நேசிப்போம்!
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
277 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
278 சுதேசி சிந்தனைகள்.......
279 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
280 கல்வி நல்லோர்களின் சொத்து!
281 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
282 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
283 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
284 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
285 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
286 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
287 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
288 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
289 அறிவைத் தேடுவோம்!
290 ஆக்காதீர் ஆசனங்களாக
291 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
292 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
294 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
295 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
296 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
297 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
298 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
299 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
300 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
301 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
302 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
303 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
304 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
305 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
306 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
307 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
308 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
309 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
310 விசுவரூபம் ஒரு விளக்கம்
311 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
312 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
313 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
314 கண்ணாடிகள் கவனம்
315 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
316 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
317 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
318 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
319 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
320 கருத்து வேறுபாடுகள்.
321 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
322 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
323 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
324 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
325 ஓ! என் இளைய சமுதாயமே!
326 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
327 வீண் செலவு வேண்டாமே