Tamil Islamic Media

இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)

சஹாபாக்களில்...

1) இரண்டு சிறகுகள் உடையவர் என்ற சிறப்பைப் பெற்றவர் யார்?
2) இறைவனின் வாள் என்று அழைக்கப்பட்டவர் யார்?
3) இறைவசனங்களை எழுதும் குழுவில் தலைமையாளர் யார்?
4) அகழ்ப் போரில் அகழ் வெட்டும் யோசனையை அளித்தவர் யார்?
5) தொழுகைக்காக முதன் முதலில் அதான் சொன்னவர் யார்?

6) இஸ்லாத்தை ஏற்பதை மஹராக வழங்கியவர் யார்?
7) தனக்கு விருப்பமானத் தோட்டத்தை தானமாக வழங்கியவர் யார்?
8) தனக்குக் கபனிட முழுமையான ஆடை கூட இல்லாத நிலையில் மரணித்தவர் யார்?
9) அபூஜஹ்லின் மகன் பெயர் என்ன?
10) ஸைய்யிதுஷ் ஷுஹதா ( தியாகிகளின் தலைவர் ) என்று அழைக்கப்பட்டவர் யார்?

 

 

 

 

 

 

 


பதில்கள்...
1) ஹள்ரத் ஜஃபிர் பின் அபுதாலீப்.
2) ஹள்ரத் காலித் பின் வலீத்.
3) ஹள்ரத் ஸைது.
4) ஹள்ரத் ஸல்மானுல் பாரிஸீ.
5) ஹள்ரத் பிலால்.

6) ஹள்ரத் அபுதல்ஹா.
7) ஹள்ரத் அபுதல்ஹா
8) ஹள்ரத் முஸ்அப்
9) ஹள்ரத் இக்ரிமா
10) ஹள்ரத் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப்

( ரலியல்லாஹு அன்ஹூம் )






No articles in this category...