Tamil Islamic Media

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!

பற்றி எரிகிறது
...பாலஸ்தீன் காசாவில்
வெற்றிக் கிடைத்திடவே
...வேண்டும்தீன் நேசர்காள்!

காலமும் காணாக்
...காட்சித்தான் பின்ன 
பாலகர் செய்த
... பாவம்தான் என்ன?

கொடுமையிலும் கொடுமை
...கொலைசெயுமிவ் வன்மை
கடுமையுடன் தடுத்தால்
...களைந்துவிடும் தீமை

இறைவனின் கோபம் ....இஸ்ரவேலர் அடைவர் விரைவுடன் தீர்ப்பு ...வந்திடவும்; மடிவர்

இறுதிநாள் வருகைக்கு ....இக்கொடுமை ஒருசான்றா? உறுதியாய்க் கொடுமைக்கு ...உள்ளமெலாம் உருகாதா?

கொத்துக் கொலைகண்டு ...குழந்தைகள் நிலைகண்டு கத்தும் கடல்கூட ...கதறுமே பழிதீர்க்க

தீர்ப்புநாள் வராதென்று ....தீதைச் செய்தாயோ? யார்க்குமே அடங்காத ...யூத ஷைத்தானே!

அர்ஷில் எட்டும் ....அலறல் சத்தம் குர்ஸி தட்டும் ...குழந்தை ரத்தம்

பாதிக்கப் பட்ட ...பாலஸ்தீன் மக்கள் நீதிக்கு முன்பு ...நிற்கின்ற வேளை

கூட்டுச் சதியால் ..கூடிக் குலாவி வேட்டு வெடித்தல் ..வேடிக் கையே!

பொய்நாக் கூட்டம் ...புரிய வில்லையா? ஐநா சபையோர் ...அறிய வில்லையா?

-- அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

 

 

 








1 இருக்கு ஆனால் இல்லை...!

காற்று வெறும் காற்றுதான்! கண்ணுக்குத் தெரிவதில்லை! கைகளுக்கும் கட்டுப்படுவதில்லை!

2 ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !

நடுவண் அரசே! நாசகாரக் கூட்டமே! நானிலமே நகைக்குது நல்லறமெலாம் கரையுது! நாடிது ஆளவா? நாங்களென்ன மாளவா?

3 பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்

ஷரீஅத்தைக் காக்க சதிகாரர்த் தோற்க சகோதர உணர்வில் சங்கமித்து உழைப்போம்

4 வெள்ளைப் பூக்களின் … பயணம் !

ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள்

5 திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது

6 செவி கொடு ; சிறகுகள் கொடு !
7 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
8 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
9 மரணம்.. ஒரு விடியல்..
10 சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
11 வேதம் தந்த மாதம்
12 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
13 சொந்தமாகட்டும் சொர்க்கம் !
14 விரக்திக்கு விடைகொடு!
15 வெயிலும் தங்கும் விந்தை நிழல் !
16 பெருமானே பெருந்தலைவர்
17 கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
18 கஅபா - அத்தாவுல்லா
19 போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........