Tamil Islamic Media

அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!


இளமையை சாகடிக்கும் ரியால்களும்,தீனார்களும்!

                             (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

இளமை இருபதில் பாலைதேசம் நோக்கிய பயணங்கள் பல எதிர்பார்ப்புகளோடு?

வருடங்கள் பல உருண்டோடியும் வறுமை நீங்கா குடும்பங்கள் அதிகமுண்டு.

வெளிநாட்டு மாப்பிள்ளை என்னும் மோகத்தில் பெண் கொடுத்தவர் பலர்.

கொடுப்பது ஆயிரமென்றாலும் அரபு நாட்டு பணமென்னும் வரட்டு கவுரவம் பார்ப்பவர் சிலர்.

அதனால் பலரின் இளமை வாழ்க்கை அரபு மண்ணிற்குள் புதைக்கப்பட்டு விட்டன.

ரியால்களும்,தீனார்களுமே பலரது வாழ்க்கைக்கு எதிரியாய் நிற்கிறது.

வெளிநாட்டு பணத்தை நேசிக்கும் அளவுக்கு கூட தம் கணவனை நேசிக்கா மனைவியரின் அணிவகுப்பு அதிகமாகிவிட்டது.

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இரண்டு மாத விடுமுறை கால இல்லற வாழ்க்கையில் யார்?,யாரை புரிந்து கொள்ள முடியும்?

வெளிநாட்டு பொருட்களின் மீதான நேசத்திலேயே இரண்டு மாதங்களும் உருண்டோடி விடுவதால் கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வில் சில இடைவெளி.

அதனால் தான் விவாகரத்து பெருகி விட்டதோ?

ரியால்களும்,தீனார்களும் சிலரது வாழ்வில் வெளிச்சம் கொடுத்தாலும்,பலரது வாழ்வை இருளாக்கி விடுகிறது.

தலையில் வழுக்கையை கொடுத்த ரியால்களே!வயிற்றில் தொப்பையை கொடுத்த தீனார்களே!

உன்னை விட்டு பிரியும்போது மனதில் சோர்வையும்,உடம்பில் நோயையும் அல்லவா உடன் அழைத்து செல்கிறோம்.

என்று தணியும் எங்களின் விடுதலை தாகம்?









1 இருக்கு ஆனால் இல்லை...!

காற்று வெறும் காற்றுதான்! கண்ணுக்குத் தெரிவதில்லை! கைகளுக்கும் கட்டுப்படுவதில்லை!

2 ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !

நடுவண் அரசே! நாசகாரக் கூட்டமே! நானிலமே நகைக்குது நல்லறமெலாம் கரையுது! நாடிது ஆளவா? நாங்களென்ன மாளவா?

3 பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்

ஷரீஅத்தைக் காக்க சதிகாரர்த் தோற்க சகோதர உணர்வில் சங்கமித்து உழைப்போம்

4 வெள்ளைப் பூக்களின் … பயணம் !

ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள்

5 திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது

6 செவி கொடு ; சிறகுகள் கொடு !
7 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
8 மரணம்.. ஒரு விடியல்..
9 சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
10 வேதம் தந்த மாதம்
11 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
12 சொந்தமாகட்டும் சொர்க்கம் !
13 விரக்திக்கு விடைகொடு!
14 வெயிலும் தங்கும் விந்தை நிழல் !
15 பெருமானே பெருந்தலைவர்
16 பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
17 கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
18 கஅபா - அத்தாவுல்லா
19 போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........