Tamil Islamic Media

பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்

உடன்பிறப்பே...!
மார்க்க உடன்பிறப்பே...!!

அண்ணலார் வழியில்
அடிபிறழாது வாழ்வோம்
பொன்னான ஷரீஅத்தை
இன்னுயிராய் மதிக்கும் (உடன்...

ஷரீஅத்தைக் காக்க
சதிகாரர்த் தோற்க
சகோதர உணர்வில்
சங்கமித்து உழைப்போம் (உடன்...

ஷரீஅத்தின் மாண்பை
நாட்டில் குறைக்க
தினந்தோறும் கோர்ட்டின்
கதவைத் தட்டுகிறார்
நாமிணைந்தே தடுப்போம் (உடன்...

காவியும் கலவரம்
                       காணமுற்பட்டால்
கடல்அலையென திரண்டு
                        நின்றிடுவோம்!

சோதனையும் நம்மைச்
                          சூழ்ந்துவிட்டால்
சுனாமியாக வெகுண்டு
                           தடுத்திடுவோம்!

அரைடவுசர் வீழ்த்த
அறம்வழி தன்னில்
போராட்டம் போதாது;
சட்டப்படி நாமும்
சதிகள் முறியடிக்க முனைவோம்
                                   (உடன்...

துன்பங்கள் கோடி
துயரங்கள் கோடி
நமைத்தேடி வரினும்
நாயனை நம்பி
நடைபோடத் துணிவோம் (உடன்...

கடலில் ஆடும் கப்பல்களை
கலங்கரை விளக்கம்
கரைசேர்க்கும்;
களம்காணப் புறப்படும் நம்மை
குர்ஆனும் தொழுகையும்
கைதூக்கும் (உடன்...

பாவிகாவியின் பாதகத்தால்
பாதிப்பைச் சந்திக்கும்
சமுதாயம் பாதுகாப்புத்
தேடுவதும் நம்மிடம்தான் (உடன்...

ஆட்டம்பாட்டம் மறந்து
ஆசாபாசம் துறந்து
இம்மைமறுமை
வெற்றியைத் தேடி...

சமுதாயத்தைக் காப்போம்
சந்ததியைக் காப்போம்
ஷரீஅத்தைக் காப்போம் (உடன்...
-----------
பாடல் : மிஸ்கீன்
              M.ஷாஹுல் முஸ்தபா.
பாடியவர் : காயல் குயில்
S.A.காஜா முய்னுதீன் முத்தொலியான்






1 இருக்கு ஆனால் இல்லை...!

காற்று வெறும் காற்றுதான்! கண்ணுக்குத் தெரிவதில்லை! கைகளுக்கும் கட்டுப்படுவதில்லை!

2 ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !

நடுவண் அரசே! நாசகாரக் கூட்டமே! நானிலமே நகைக்குது நல்லறமெலாம் கரையுது! நாடிது ஆளவா? நாங்களென்ன மாளவா?

3 வெள்ளைப் பூக்களின் … பயணம் !

ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள்

4 திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது

5 செவி கொடு ; சிறகுகள் கொடு !

பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால்.

6 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
7 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
8 மரணம்.. ஒரு விடியல்..
9 சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
10 வேதம் தந்த மாதம்
11 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
12 சொந்தமாகட்டும் சொர்க்கம் !
13 விரக்திக்கு விடைகொடு!
14 வெயிலும் தங்கும் விந்தை நிழல் !
15 பெருமானே பெருந்தலைவர்
16 பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
17 கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
18 கஅபா - அத்தாவுல்லா
19 போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........