Tamil Islamic Media

இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்

 

தொகுப்பு
-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

இமாம் அவர்களின் முன்னூறுக்கும் அதிகமான புத்தகங்கள் அரபு மொழியிலும் உருது, ஆங்கிலம் போன்ற பல உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, இவர்களை கண்ணியப் படுத்தும் விதத்தில் சவுதி அரசாங்கம் கஃபாவின் திறவுகோலை வழங்கி கதவை திறந்து இவர்களுக்கு உள்ளே தொழுக அனுமதித்தது, இவர்கள் மரணித்த பின்பு ஹரம் ஷரீபில் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது, உலக தரமிக்க மன்னர் ஃபைஸல் அவார்டும் இவருக்கு வழங்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதில் கிடைத்த பல லட்சம் ரூபாய்களை ஏழை எளியவர்களுக்கு பிரித்துக் கொடுத்தது நம்மை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.

அரபு நாடுகளில் கல்வியை பயிலாத இவர்கள் அரபுலக அறிஞர்களுக்கு மிகப்பெரிய ஆசானாக ஆனார்கள்,

பாலஸ்தீன பைத்துல் மக்திஸ் இமாம் அப்துஸ் ஸமத், உலகப் புகழ்பெற்ற அறிஞர் யூசுப் அல் கர்ளாவி போன்ற சமகால அறிஞர்களுக்கு ஆன்மீக ஆசானாக கருதப்படுபவர்கள்.

அறிஞர் யூசுப் அல் கர்ளாவி அவர்களால் 'நானறிந்த அஷ்ஷைய்க் அபுல் ஹஸன் நத்வி',
என்ற தலைப்பில் 300க்கும் அதிகமான பக்கங்களில் அரபு மொழியில் ஒரு புத்தகம் எழுதப்பட்டது.

அரபு தேசியத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அரபுகளின் உள்ளத்தில் இஸ்லாமிய அரபு இலக்கிய லீக் என்ற சர்வதேச அமைப்பை நிறுவியவர்கள், இன்று இதன் தலைமை அலுவலகம் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா முகர்ரமாவில் இருக்கிறது,

அரபுகளே சற்று கேளுங்கள் !!

என்ற பல அரபு நாடுகளின் பெயர்களை தாங்கிய இவர்களின் புத்தகங்கள் மிகவும் பிரபலமானது,

'இஸ்லாமியர்கள் வீழ்ச்சியினால் உலகத்துக்கு ஏற்படும் நஷ்டம் என்ன ?',
என்ற இவர்களின் மிக பிரபலமான புத்தகம் இவர்களின் 33 வயதில் எழுதப்பட்டு அதே புத்தகம் இவர்களுடைய ஹஜ்ஜுடைய காலத்தில் ஜும்மா குதுபாவில் இவர்களுக்கு முன்பாகவே ஓதப்படுகிறது,

இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தை உருவாக்கியவர்கள்

ஷியா -ஸுன்னத் ஜமாத் மத்தியில்
காலம் காலமாக நிலவி வரும் பிளவுகளை அகற்றி ஒற்றுமையை ஏற்படுத்த கடினமாக முயற்சித்தார்கள்,

காவி அரசாங்கம் அவர்கள் காலத்தில் இஸ்லாமியர்களுக்கு அளித்து வந்த தொல்லைகள் தைரியமாக தட்டி கேட்டார்கள்,

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தங்களின் எழுத்துக்களால் குரல் கொடுத்தார்கள்,

இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கல்விப் பிரிவில் யூதர்கள் ஆதிக்கம் செய்து வந்த காலத்தில் தங்களது பொறுப்பில் இஸ்லாமிய கல்வி நிலையத்தை எடுத்துக்கொண்டார்கள்,

ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாத் போன்ற இஸ்லாமிய அமைப்புகளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்,

ஆன்மீக சீர்திருத்தங்கள் மற்றும் இஸ்லாமிய வரலாறுகளில் மிகவும் ஆர்வம் கொண்டு பல புத்தகங்களை சமூகத்திற்கு வழங்கியுள்ளார்கள்,

இவர்கள் எழுதிய சிறார்கள் இஸ்லாமிய இலக்கியங்கள் இன்றும் பல பல்கலைக்கழகங்களில் புத்தகங்களாக படித்து தரப்படுகின்றன,

அலிமியான் சாஹிப் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட கூடிய அல்லாமா அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் ஒருமுறை தங்களது தவாஃபை முடித்து வெளிவந்த பொழுது அறிஞர் அலி ஸாபூனி ,நத்வி ரஹிமஹுமுல்லாஹ் அவர்களை சிறிது நேரம் சந்தித்து பேசுகிறார்,
அவர் அங்கிருந்து சென்ற பின்
தனது மாணவர்களுக்கு ஒரு நபிமொழியை சுட்டிக்காட்டுகிறார்

'மறுமை நாளின் அடையாளம் அறிஞர்களுடைய மரணத்தின் மூலமாக கல்வி உயர்த்தப்பட்டு விடும் '

(இந்த நபிமொழி அப்துல்லா இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு மூலமாக அறிவிக்கப்படும் ஸஹீஹான ஒரு நபிமொழி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது)

அலீ மியான் ரஹிமஹுல்லாஹ் இப்படிப்பட்ட அறிஞர்களில் ஒருவர் என்று சிலாகித்துக் கூறுகிறார்,

சவுதி அரேபியாவின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரான பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
உதவியாளர்களில் ஒருவரான இஸ்மாயில் பின் சஃது பின் அல்அதீக்
கூறுகிறார்
'பொதுவாக புத்தக எழுத்தாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தங்களது மூளையில் இருந்து பதிவார்கள்,

ஆனால் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களது உள்ளத்திலிருந்து எழுதுவார், ஆன்மீக ரீதியாக, இறை அச்சத்தை எழுச்சியூட்டும் விதத்தில் அவருடைய எழுத்துக்கள் இருக்கும்,

சவுதி அரேபியா ஆசிரியப் பயிற்சி கல்லூரி
சார்பாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகம்
'உஸூலுத் தர்பிய்யா', அதில் இஸ்லாமிய அறிஞர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்ற தலைப்பில் ஹிஜ்ரிஆறாம் நூற்றாண்டுக்குப் பின்பு மிக சிறந்த முறையில் இஸ்லாமிய சேவைகள் புரிந்த நான்கு முக்கியமான உலமாக்களை குறிப்பிடப்பட்டுள்ளது
அவர்களின் பெயர்கள் வருமாறு

1) பத்ருத் தீன் அல்ஜமாஆ -(இமாம் இப்னு கதீர்,தஹபி,இப்னுல் கய்யூம் அல்ஜவ்ஸிய்யா,தகியுத்தீன் அஸ்ஸுபுகி போன்ற தலைசிறந்த அறிஞர்களின் ஆசிரியர்)

2) அஹ்மத் இப்னு தைமிய்யா -
நூற்றுக்கும் அதிகமான தலைப்புகளில் பல புத்தகங்களை இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்கிய
இஸ்லாமிய புரட்சியாளர், ஷெய்குல் இஸ்லாம் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.

3) அபூ ஹாமித் அல்கஸ்ஸாலி-
ஹிஜ்ரி 5ஆம் நூற்றாண்டின் முஜத்தித் ,புரட்சியாளர்,ஹுஜ்ஜதுல் இஸ்லாம் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் அறிஞர்
இமாம் அப்துல் காதிர் ஜெய்லானி,
அபுபக்கர் பின் அல்அரபி,அபுல் அப்பாஸ் அல்அக்லீஷி போன்ற பெரும் அறிஞர்களின் ஆசிரியர்.

4) அபுல் ஹஸன் அலி நத்வி
ரஹிமஹுமுல்லாஹ் .

(புத்தகம் -உஸூலுத் தர்பிய்யா-பக்கம்-104)








1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்

பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்

கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு

பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம்

கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
15 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
16 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
21 திருநெல்வேலி வரலாறு...!
22 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
23 அந்த இரண்டணா ......
24 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
31 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
32 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
33 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
34 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
35 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
36 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
44 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
45 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
46 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
47 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
48 சூஃபிக்களும் புனித போர்களும்
49 யார் தேச விரோதி?
50 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
51 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
52 விடுதலைப்போரில் வீரமங்கையர்
53 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
54 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
55 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
56 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
57 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
58 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
59 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
60 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
61 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
62 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 தமிழகத்தில் முஸ்லீம்கள்
65 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
66 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
67 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
68 பாடலியில் ஒரு புலி
69 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
70 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
71 முதல் சுதந்திரப் பிரகடனம்
72 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
73 காலித் பின் வலீத் (ரலி)
74 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
75 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
76 முதல் வாள்!
77 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
78 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
79 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்