Tamil Islamic Media

பொறாமைக்குரியோர் ....

இப்னு மஸ்வூத் அவர்கள் அறிவிக்கிறார்கள் '' இரண்டு பேரின் மீதே தவிர பொறாமைக் கொள்ளக்கூடாது, 1. ஒருவருக்கு இறைவன் செல்வத்தை கொடுத்தான் அதை சத்திய வழியில் செலவழிக்க வாய்ப்பளிக்கப்பட்டார் 2. இன்னொரு மனிதன் அல்லாஹ் அவனுக்கு ஞானத்தை வழங்கி அவன் அதைக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறான் இன்னும் அதை கற்றுக் கொடுக்கிறார் என்று உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளிக்கும் போது '' பொறாமையை என்பது இரு வகைப்படும் ''

1. வெறுக்கத்தக்கது இன்னும் தடுக்கப்பட்டது அது ஒருவருக்கு இறைவனால் வழங்கப்பட்ட நிஃமத்தை( மார்க்க சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் / உலக சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் ) பார்த்து பொறாமை கொண்டு அது அவரை விட்டு நீங்கிவிட வேண்டும் என்று ஆசை படுவது (அது தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை), அல்லது அது அவரைவிட்டு நீங்குவதற்குரிய பணிகளை மேற்கொள்வது. முதலில் இது வெறுக்கத்தக்கது இன்னும் இது அநீதமாகும். இதன் போனற செயல்கள் மூலமாகத்தான் ஒருவரின் நன்மைகள் அழிக்கப்படும் எவவாறு விறகை நெருப்பு அழிக்குமோ அது போன்று என்று கூறப்பட்டுள்ளது.

2. அடுத்து, இன்னொரு மனிதனுக்கு கொடுக்கப்பட்ட நிஃமத் நீங்க நினைக்காது அதை போன்று தனக்கும் கிடைக்கவேண்டும் என்று எண்ணுவதில் இரு நிலை உண்டு 1. விரும்பத்தக்கது 2. விரும்பத்தகாதது
1. விரும்பத்தக்கது: ஒருவர் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட பொருளையும், ஞானத்தையும் இறை பொருத்ததிற்கு செலவு செய்வதைப்பார்த்து தனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவேண்டுமே அப்படி கிடைத்தால் தானும் அப்படி செலவு செய்வேன் என்று எண்ணுவது.இன்னும் அது போன்று ஒரு வாய்ப்பு அவருக்கு வந்து அது போன்று அவர் செயல் பட்டால் அது சாலச்சிறந்தது.இப்படிப்பட்ட நல்ல எண்ணங்களை வளர்க்கவேண்டும் என்று இந்த ஹதீஸில் தூண்டப்பட்டுள்ளது. அவரின் எண்ணம் உண்மையானதாக இருந்தால் இறைவனின் அருளால் அந்த எண்ணத்தின் அளவு கண்டிப்பாக அவருக்கு கூலி உண்டு.

2. விரும்பத்தகாதது: உலகாதாயங்கள் கொடுக்கப்பட்ட ஒருவரை பார்த்து தனக்கும் இப்படி கிடைக்கவேண்டுமே அப்படி கிடைத்தால் தானும் அது போன்று ஆடம்பரமாக வாழலாமே என்று பெறாமைக்கொள்வது.'' அந்தோ எங்களுக்கும் காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று கொடுக்கப்பட்டிருக்கவேண்டுமே'' என்று குர் ஆன் இந்த எண்ணம் கொண்டவர்களைக் குறித்தே பேசுகிறது.

- ஹஸனீ






1 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை

அல்லாஹுதஆலாவுக்கு இணைவைக்காத நிலைவில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு.'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்ஜஇய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2 ஒற்றைச்செறுப்பு

ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள்.

3 திரைகள் விலகட்டும்

“முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது"

4 உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்)

5 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6 வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
7 முஜாஹிர்களும் மன்னிப்பும்
8 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
9 தங்க ஓடை: மனிதனின் பேராசை
10 பயணியே சற்று நில்
11 அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்
12 என் கண்ணாடி எங்கே?
13 நன்மைக்கு வழிகாட்டினால்
14 நபியின் மீது பிரியம்
15 அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்
16 ஈமானின் கிளைகள்
17 வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்
18 நற்செயல் எது?
19 பட்டாடை
20 நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...
21 பரிபூரணமான முஸ்லிம்
22 பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
23 சுவர்க்கத்தின் சாவி
24 மக்களில் சிறந்தவர்
25 மறுமை
26 மறைவானவற்றை நம்புவது
27 அழகிய துஆ