Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13

முன் யுத்தம்

போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு, கும்பலைக் கூட்டும் திறன் பெற்றிருந்த சொற்பொழிவாளர்கள் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்தார்கள். அவர்களுள் முக்கியமான ஒருவர் துறவி பீட்டர்.


பிரான்சின் வட கிழக்கில் உள்ள ஏமியன்ஸ் நகரைச் சேர்ந்த அவர் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். எளிய ஆடை, காலணி அற்ற வெறுங்கால், வாராத பரட்டைத் தலை, பஞ்சப் பராரித் தோற்றம்; ரொட்டியும் இறைச்சியும் ஆடம்பரம் என்று கூறி, பொது இயல்புக்கு மாறாய் மீனும் மதுவும் மட்டுமே உணவு; நாடோடியைப் போல் வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருந்தார்.

கரடுமுரடான வாழ்க்கை வாழ்ந்த அவருக்குப் பாமர மக்கள் மத்தியில் அளவற்ற அபிமானம் ஏற்பட்டுவிட்டது. இனந்தெரியாக் கவர்ச்சி உருவானது. அவர்கள் அவரைத் துறவியாகக் கருதினர்; தேவனின் தூதர் என்று கொண்டாட ஆரம்பித்தனர். அவர் ஒரு புனிதர் என்று வெறித்தனமாக நம்பிய மக்கள் அவரது கோவேறுக் கழுதையின் உரோமங்களைக் கூடப் புனிதப் பொருளாகப் பத்திரப்படுத்தத் தொடங்கினர்.

மக்களிடம் அந்தளவிற்குச் செல்வாக்குப் பெற்றிருந்த துறவி பீட்டர், போப் அர்பனின் உரையைச் செவியுற்றதும் அதில் மிகவும் கவரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டுப் போனார். கழுதை ஒன்றில் ஏறிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று, அங்குள்ள பட்டிதொட்டிகள் எல்லாம் நுழைந்து போப்பின் உரையை அவர் எடுத்துரைக்க, மூலை முடுக்கெல்லாம் தீ பரவியது. போதாததற்கு, தாம் தேவனால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வேறு அறிவித்துக்கொண்டார். அவர்மீது ஏற்கெனவே எக்கச்சக்கமான நல் அபிப்ராயத்தில் இருந்த மக்களுக்கு அது பக்திப் பரவசத்தை அதிகப்படுத்த, அவரது வீரியமிக்கச் சொற்பொழிவுகள் அவர்களுக்கு வேத வாக்காக ஒலிக்க ஆரம்பித்தன.



அழுகையும் விம்மலும் சரியான விகிதத்தில் கலந்திருந்த அவரது உரைகள், தேவனின் விரோதிகள் என்று முஸ்லிம்களை வர்ணித்து, அவர்கள்மீது அவர் விடுத்த சாபம், கிறிஸ்துவின் கல்லறையைக் காக்க அணிவகுப்பவர்கள்மீது தேவனின் மன்னிப்பு நிச்சயம் என்ற வாக்குறுதி எல்லாமாகச் சேர்ந்து அவர்களை வேறு எந்தப் பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை. அவருடைய நாவன்மை அவர்களை அப்படியே கட்டிப்போட்டது. பின்பற்றியவர்கள் பாமரக் கூட்டம் என்பதால் அவர்கள் அவர் சொன்னதை அப்படியே நம்பினர்.

‘அனைவரும் உங்களது ஆயுதங்களைத் தூக்குங்கள்; போர்த் தளவாடங்கள் அனைத்தையும் சித்தப்படுத்துங்கள்; ஒன்று கூடுங்கள்; குதிரைகளில் ஏறி வந்து சேருங்கள்’, என்று மக்களுக்குப் போர் வெறியை ஊட்ட ஆரம்பித்தார். க்ளெர்மாண்ட் உரை நிகழ்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கும். ஆனால் அதற்குள் பிரான்சில் 15,000 பேர் அடங்கிய படை அவரால் திரண்டது. அனைவரும் அவரது சொல்லுக்குக் கட்டுண்டு கிளம்பிய ஏழை எளிய மக்கள். குதிரையேற்றமோ, போர்ப் பயிற்சியோ, ஆயுதப் பயிற்சியோ அறியாதவர்கள். ஆயினும் பேரார்வத்துடனும் உத்வேகத்துடனும் அவர்கள் அவரைப் பின்பற்றித் தொடர்ந்தனர்.

அதற்குள் ஜெர்மனியில் பல்வேறு பரிவாரங்கள் திரண்டிருந்தன. அவர்களும் இவர்களும் ஒன்று சேர்ந்து, படையாக உருமாறி, அதற்கு ‘மக்களின் சிலுவைப் போர்’ என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. போர் வெறி அவர்களை உந்தித்தள்ள, கி.பி. 1096ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில், அந்தக் கூட்டம் ஜெருசலத்தை நோக்கிக் கிளம்பிவிட்டது. போப் அர்பனின் அதிகாரபூர்வமான சிலுவைப் படைக்கு முந்தைய அந்தப் படை, கான்ஸ்டன்டினோபிளை நோக்கி நகர்ந்தது. ஆர்வமும் ஆர்வக் கோளாறும் ஒழுங்கீனமும் கொண்ட அந்தப் படை அடுத்து நிகழ்த்திய அட்டகாசங்கள் பின்னால் வரவிருக்கும் ஆபத்திற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.


படையெடுத்துப் போகிற போக்கில், பிரான்ஸ், ஜெர்மனி பகுதிகளில், ஏசு கிறிஸ்துவின் விரோதிகள் என்று தாங்கள் கருதியவர்களை எல்லாம் அடித்துக் கொன்று தூக்கி எறிந்துகொன்டே சென்றனர். அப்படி அவர்கள் கொன்றதெல்லாம் யூதர்கள். எண்ணிக்கை ஏராளம். பெல்கிரேட், ஹங்கேரி பகுதிகளெல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டன. கொன்று, துவம்சம் செய்து, அராஜகம் புரிந்து ஒருவழியாக, கி.பி. 1096 ஆகஸ்ட் முதல் தேதி, கான்ஸ்டன்டினோபிள் வந்து சேர்ந்தது அந்தக் கூட்டம்.

எதிர்பாராமல் வந்து சேர்ந்த இந்த ஒழுங்கீனர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று பைஸாந்தியச் சக்ரவர்த்தி அலெக்ஸியஸ் யோசித்தார். துருக்கியர்களின் பெரும்படையுடன் இந்தக் கற்றுக்குட்டிப் படை மோத முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் ஒரு காரியம் செய்தார். ‘சிலுவைப் படையினர் வரட்டும், அதுவரை காத்திருங்கள். வேறு எதுவும் செய்ய வேண்டாம்’ என்று அறிவுறுத்தி, ஆசியா மைனர் பகுதிக்கு அவர்களை அனுப்பி வைத்தார். ஆசியா மைனர் என்பது அனடோலியாவின் பீடபூமி. இன்றைய துருக்கியின் முழுப் பகுதியையும் அது உள்ளடக்கியிருந்தது. ஆசியா மைனரையும் ஐரோப்பாவையும் டார்டாநெல்லெஸ், பாஸ்போரஸ் ஜலசந்தி பிரிக்கிறது.

அறிவுரையையும் சொல் பேச்சையும் கேட்கிற படையா அது? அப்படியானவர்களாய் இருந்திருந்தால் இப்படி ஏன் முந்திக்கொண்டு வருகிறார்கள்? ஐரோப்பாவைக் கடந்து ஆசியா மைனர் பகுதியை வந்தடைந்த அந்தக்கூட்டம் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தது. அங்கிருந்த சிறு கிராமங்களையும் நகரங்களையும் தாக்கிக் கொள்ளையடித்தனர். ஏக களேபரம். இத்தனைக்கும் நடுவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஜெர்மனியர்கள், இத்தாலியர்கள் ஒரு பிரிவாகவும் பிரஞ்சுக்காரர்கள் ஒரு பிரிவாகவும் பிரிந்து ஆளுக்கொரு தலைவரை ஏற்படுத்திக்கொண்டார்கள். தத்தம் போக்கில் அவர்கள் நகர்ந்து, சென்ற திக்கில் இருந்த புறநகர்ப் பகுதிகளைக் கொள்ளையடித்தனர். ஜெர்மனியர்களின் அணி அனடோலியாவில் உள்ள அரணைக் கைப்பற்றியது.

அல்ப் அர்ஸலானின் பெரிய பாட்டனாரின் பேரன் சுல்தான் ரோம ஸல்தனத்தை உருவாக்கினார் என்பதை, ‘சுல்தான்களின் ராஜாங்கம்’ என்ற எட்டாவது அத்தியாயத்தில் வாசித்தோம். அவர் மரணமடைந்து அவருடைய மகன் கிலிஜ் அர்ஸலான்-I அங்கு சுல்தான் ஆகியிருந்தார். அவருடைய ஆட்சியில் இருந்த பகுதிகள்தாம் அவை. தகவல் வந்ததும் தம் படையைக் கிளப்பினார் அவர். பைஸாந்தியக் கிறிஸ்தவர்கள் அன்றி லத்தீன் கிறிஸ்தவர்களுடன் முதன்முறையாக முஸ்லிம்களுக்கு இப்பொழுது போர் அறிமுகம் ஏற்பட்டது.

ஜெர்மனியர்கள் கைப்பற்றியிருந்த அனடோலியாவின் கோட்டையை கிலிஜ் அர்ஸலானின் படை முற்றுகையிட்டது. உள்ளிருப்பவர்களின் நீர் ஆதாரங்களுக்கான வாயில்களைத் தடுத்து நெருக்கியது. நீரின்றித் தவித்துப்போன சிலுவைப் படையினர் வேறு வழியின்றிக் கழுதையின் இரத்தத்தைக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இறுதியில் கிலிஜ் அர்ஸலானின் தளபதிகள் வெகு இலகுவாக அரணை அவர்களிடமிருந்து மீட்டனர். சிலுவைப் படையினர் போர்க் கைதிகள் ஆனார்கள். கைதானவர்களுள் சிலர் இஸ்லாத்தை ஏற்று உயிர் பிழைக்க, மற்றவர்கள் கொல்லப்பட்டனர்.

சிலுவைப் படையின் மற்றொரு பிரிவு வேறொரு பகுதியில் கொள்ளையடித்துக்கொண்டிருந்தது இல்லையா, அப் பகுதிக்குத் துருக்கிய உளவாளிகள் இருவர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெர்மானியர்கள் அனடோலியா அரணையும் நைஸியா நகரையும் கைப்பற்றிவிட்டனர் என்று அவர்கள் வதந்தியைப் பரப்ப, ‘ஆஹா! வெற்றி’ என்று குதித்தது சிலுவைப் படையின் அந்தப் பிரிவு. ஆனால் அந்த உற்சாகம் வெகு விரைவில் அவர்களுக்குள் பொறாமையைத் தூண்டியது. கைப்பற்றப்பட்ட பகுதிகளின் வளங்கள் ஜெர்மானியர்களுக்கு மட்டும் சொந்தமாகிவிடுமே, செல்வத்தில் தங்களுக்குப் பங்கு ஏதும் கிடைக்காமல் பறிபோகுமே என்ற கவலையும் சோகமும் ஏற்பட்டு, பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் மட்டும் அங்கேயே விட்டுவிட்டு 20,000 பேர் கொண்ட கூட்டம் நைஸியாவுக்கு ஓடியது. முஸ்லிம்களின் திட்டம் சரியாக வேலை செய்தது.

மூன்று மைல் தூரத்தில் பாதை குறுகும் இடத்தில் துருக்கிப் படையினர் காத்திருந்தனர். சிலுவைப் படை அவ்விடத்தை நெருங்கியதும் அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று இடைவிடாத அம்பு மழை பெய்ய ஆரம்பித்தது. திகைத்துப்போய், அச்சத்தில் நிலைகுலைந்து சிலுவைப் படையினர் தட்டுக்கெட்டு ஓட, சரமாரியாக அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் சரணடைந்தவர்களும் மட்டும் உயிர் பிழைத்தனர்.



ஆயிரக்கணக்கில் அவர்கள் கொல்லப்பட்டார்கள் சரி, அவர்களையெல்லாம் படை திரட்டிச் சென்ற துறுவி பீட்டர்? படையினரின் உணவுக்கு ஏற்பாடு செய்ய கான்ஸ்டன்டினோபிள் சென்றிருந்ததால் அவரது உயிர் அச்சமயம் பிழைத்தது.

இப்படியாக, அப்பட்டமான தோல்வியில் முடிவுற்றது ‘மக்களின் சிலுவைப் போர்’. அதன் காலகட்டம் கி.பி. 1096, ஏப்ரல் – அக்டோபர். முதலாம் சிலுவை யுத்தத்திற்கு முன்னோடியாக நிகழ்வுற்ற இந்த யுத்தத்தில் கிலிஜ் அர்ஸலான் அடைந்த வெற்றியே பிற்பாடு சிலுவைப் படையினர் வந்து சேர்ந்தபோது ஒரு பின்னடைவாக ஏற்பட்டுப்போனதுதான் பெருஞ் சோகம். தாம் அடைந்த இந்த எளிய வெற்றியின் அடிப்படையில் பின்னர் வந்த அந்தப் பெரும் படையின் தீவிரத்தையும் அபாயத்தையும் வலிமையையும் குறைத்து மதிப்பிட்டு விட்டார் கிலிஜ் அர்ஸலான். துறவி பீட்டரின் தலைமையில் வந்த கூட்டத்தைப்போல் அவர்களை இலகுவாக நினைத்துவிட்டார் அவர்.

அதற்கு முஸ்லிம்கள் அளித்த விலை?

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 12
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 14

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்






1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்

பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்

கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு

பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம்

கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
15 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
16 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
21 திருநெல்வேலி வரலாறு...!
22 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
23 அந்த இரண்டணா ......
24 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
30 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
31 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
32 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
33 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
34 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
35 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
36 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
44 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
45 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
46 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
47 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
48 சூஃபிக்களும் புனித போர்களும்
49 யார் தேச விரோதி?
50 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
51 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
52 விடுதலைப்போரில் வீரமங்கையர்
53 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
54 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
55 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
56 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
57 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
58 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
59 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
60 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
61 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
62 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 தமிழகத்தில் முஸ்லீம்கள்
65 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
66 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
67 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
68 பாடலியில் ஒரு புலி
69 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
70 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
71 முதல் சுதந்திரப் பிரகடனம்
72 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
73 காலித் பின் வலீத் (ரலி)
74 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
75 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
76 முதல் வாள்!
77 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
78 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
79 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்