Tamil Islamic Media

தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்

 

' யாதும் ' இயக்குனர் அன்வரின் உழைப்பில் வெளிவந்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். அதை ஒரு ஆவணக் குறும்படமாக தமிழ் முஸ்லிம்களுக்கு தந்திருக்கும் அன்வரின் பணியை பாராட்ட வார்த்தைகள் போதாது.


அன்வரின் சொந்த ஊர் தேனீ மாவட்டத்திலுள்ள கோம்பை. அங்கிருந்தே தனது ' வேர்களை'த்தேடி பயணிக்கிறார் அன்வர். கோம்பை பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங்கொலியோடு அவரது பயணம் தொடர்கிறது.

 ' நாங்கள் நாயிடு வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த முகமது மைதீன் வாத்தியார் வருவார். முகமது மைதீன் வாத்தியாரை எங்கள் ஊரில் தெரியாதவர்கள் யாரும் கிடையாது. நாங்களெல்லாம் அவரை மாமா என்றுதான் அழைப்போம். அவரும் தன்னைவிட வயதில் மூத்தவர்களை மாமா என்றுதான் அழைப்பார். நான் ' வருஷ நாட்டு ஜமீன் ' என்ற எனது நாவலை எழுத எனது சொந்த மாவட்டமான தேனீ மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கெல்லாம் முஸ்லிம்களும் நாயுடுகளும் மாமன் மச்சான் உறவு முறையோடுதான் பாசத்தோடு பழகி வருகிறார்கள். எங்கள் குடும்பத்தில் பெண்பிள்ளைகளின் பூப்புனித நீராட்டுக்கு தாய்மாமன் கொடுக்கும் சீர்வரிசை முக்கியமானது. என் சகோதரியின் பூப்புனித நீராட்டுக்கு முகமது மைதீன் வாத்தியார் பூ, பழம்,தேங்காய்,துணிமணியோடு கருகமணி மாலையும் ஒரு தட்டில் வைத்துத் தந்து தன் தாய்மாமா உறவை உரிமையோடு நிலை நாட்டிக் கொண்டார். இந்த பாசத்தையும் உறவையும் யாராலும் பிரிக்க முடியாது ' என்று சொல்கிறார் பிரபல எழுத்தாளர் பொன்சீ.

 

&nbsp


  அன்வரின் பயணம் கேரளாவின் கொடுங்கல்லூரிலுள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசலின் அழகை நமக்குப் பருகத்தந்து கேரளாவின் மலபார், கோழிக்கோடு கொச்சி போன்ற பகுதிகளுக்கும் நம்மை அழைத்துச் சென்று கலைநயமிக்க பள்ளிவாசல்களைக் காட்டி நம்மை கண்குளிர வைக்கிறது. கோழிக்கோட்டில் ஒரு நாலு அடுக்கு பிரம்மாண்ட பள்ளிவாசல் முழுக்க முழுக்க கேரளத்து மரங்களாலேயே கட்டப்பட்ட அதிசயம்... கோழிக்கோடு சாமிரி மன்னர்களின் கடல் தளபதிகளாக இருந்த குஞ்சாலி மரைக்காயர்கள் என்ற மாப்பிள்ளைமார்களின் வீரம் செறிந்த வராலாறுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. கி.பி. 10 நூற்றாண்டு கல்வெட்டுக்களிலேயே ' அஞ்சுவன்னம்' என்ற சொல் குறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1000 வருசத்திற்கு முந்திய தஞ்சை பெரிய கோயில் சுவர்களில் ராஜராஜ சோழன் செதுக்கி வைத்த கல்வெட்டில் ' சோனகர் ' என்றும் ' துலுக்கர் அகமது ' என்றும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. திருச்சியில் 1000 வருடங்களுக்கு முன்னாலேயே வந்து இஸ்லாத்தைப் பரப்பிய ' நத்தர்ஷா வலியுல்லாஹ் ' வின் அடக்கவிடத்திற்கு இன்றும் ஜாதிமத பேதமின்றி மக்கள் ஏராளமாக வந்து செல்கின்ற காட்சியையும் அவர்கள் அன்பால் மக்களைக் கவர்ந்த வரலாறுகளையும் உணர முடிகிறது. அதுபோல் 16 ம் நூற்றாண்டில் நாகூரில் சாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களால் தஞ்சை மன்னன் நோய் நீங்கப்பெற்றதும் மன்னர் மட்டுமன்றி செட்டியார்களும் அங்கேயுள்ள மக்களும் மகான் அவர்களின் இறைப்பணிக்காக வாரி வழங்கிய சொத்துக்களும் இன்றும் இஸ்லாமியப் பெரியார்களின் மாண்புகளை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மதுரையில் ' புட்டுக்கு மண்சுமந்த சிவபெருமானின் ' திருவிழாவுக்கு மைதீன் என்பவர் பரம்பரை பரம்பரையாக வேள்வி வேலி அமைப்பதும் அவருக்கு கோயில் நிர்வாகமும் மக்களும் மரியாதை செய்வதும் மதநல்லிணக்கத்தின் வெளிப்பாடாக






1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்

பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்

கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு

பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம்

கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
15 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
16 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
21 திருநெல்வேலி வரலாறு...!
22 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
23 அந்த இரண்டணா ......
24 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
31 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
32 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
33 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
34 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
35 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
36 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
37 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
44 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
45 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
46 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
47 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
48 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
49 சூஃபிக்களும் புனித போர்களும்
50 யார் தேச விரோதி?
51 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
52 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
53 விடுதலைப்போரில் வீரமங்கையர்
54 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
55 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
56 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
57 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
58 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
59 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
60 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
61 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
62 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
63 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
64 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
65 தமிழகத்தில் முஸ்லீம்கள்
66 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
67 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
68 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
69 பாடலியில் ஒரு புலி
70 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
71 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
72 முதல் சுதந்திரப் பிரகடனம்
73 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
74 காலித் பின் வலீத் (ரலி)
75 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
76 முதல் வாள்!
77 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
78 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
79 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்