மறுமை
ஹஜரத் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரசங்கத்தில்,
'' கவனமாகக் கேட்டு கொள்ளுங்கள். உலகம் தற்காலிகமான வியாபாரப் பொருளாகும். (அதற்கு எவ்வித விலையும் மதிப்பும் கிடையாது) ஏனெனில், அதில் நல்லோர், தீயோர் அனைவருக்கும் பங்குண்டு. அனைவரும் அதிலிருந்து உண்கின்றனர். நிச்சயமாக மறுமையானது குறித்த நேரத்தில் வர இருக்கின்ற அந்தரங்கமான உண்மையாகும். அதில் சக்தி மிக்க அரசன் தீர்ப்பு வழங்குவான்.
கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்! எல்லா நலவுகளும், அதன் அனைத்து வகைகளும் சொர்க்கத்தில் உள்ளன. சகலவித கெடுதிகளும், அதன் எல்லா வகைகளும் நரகத்தில் உள்ளன.
நன்றாக அறிந்து கொள்ளுங்கள். எதைச் செய்தாலும் அல்லாஹுத்தஆலாவை பயந்தவர்களாகச் செய்யுங்கள். நீங்கள் தத்தமது செயல்களுடன் அல்லஹுத்தஆலாவிடத்தில் கொண்டுவரப்படுவீர்கள்.
அணுவளவு நன்மையைச் செய்தவரும் அதைக் கண்டு கொள்வார். அணுவளவு தீமை செய்தவரும் அதைக் கண்டு கொள்வார்.'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்னத் ஷாபிஇய்யீ)
இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு¢ அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை. (குர்ஆன் 6:51)
இன்னும் அவர்களில் சிலர், 'ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக¢ மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக¢ இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (குர்ஆன் 2:201)
இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு¢ தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (குர்ஆன் 2:202)
1 | ஒற்றைச்செறுப்பு ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள். | |
2 | திரைகள் விலகட்டும் “முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது" | |
3 | உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும் உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்) | |
4 | நன்மை தீமையும் அதன் அளவுகோலும் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள். | |
5 | வலிபோக்கும் ஆன்மீக வழிகள் நபித்தோழர்கள் தங்களின் குடும்ப செய்திகள், பொருளாதாரம், மார்க்கம் போன்றவற்றில் சந்தேகம் ஏற்படும் போது எப்படி நபி பெருமான் அவர்கள் பக்கம் திரும்பினார்களோ அது போன்று உடல் ரீதியான நோய்களும், அசவுரியங்களும் ஏற்படும் போதும் நபியிடம் வந்து அதற்கான தீர்வை வேண்டி நின்றார்கள் அதன் மூலம் இந்த சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தான் நபி மருத்துவம். | |
6 | முஜாஹிர்களும் மன்னிப்பும் | |
7 | நன்மை தீமையும் அதன் அளவுகோலும் | |
8 | தங்க ஓடை: மனிதனின் பேராசை | |
9 | பயணியே சற்று நில் | |
10 | அக்கம் பக்கம் / அண்டை வீட்டார் | |
11 | என் கண்ணாடி எங்கே? | |
12 | நன்மைக்கு வழிகாட்டினால் | |
13 | பொறாமைக்குரியோர் .... | |
14 | நபியின் மீது பிரியம் | |
15 | அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர் | |
16 | ஈமானின் கிளைகள் | |
17 | வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம் | |
18 | ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை | |
19 | நற்செயல் எது? | |
20 | பட்டாடை | |
21 | நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்... | |
22 | பரிபூரணமான முஸ்லிம் | |
23 | பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான் | |
24 | சுவர்க்கத்தின் சாவி | |
25 | மக்களில் சிறந்தவர் | |
26 | மறைவானவற்றை நம்புவது | |
27 | அழகிய துஆ |

Kottai Masjid ( Moulana Ismail Hasani)