Tamil Islamic Media

அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர் மூவர் 1. இஸ்லாமிய போர்வீரன் 2. ஹஜ் செய்பவர் 3. உம்ரா செய்பவர்.

 இந்த ஹதீஸில் வப்துல்லாஹ் என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளார்கள். வப்து என்று சொன்னால் (Delegation /Deputation ) அரசு முறை விருந்தாளியாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பிரயாணிப்பவர், பொதுவாக இவ்வார்த்தை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்க்கு செல்லு அரசு குழுவிற்கு சொல்லப்படும்.அவர்கள் அரசனை சந்திப்பதற்கோ அல்லது ஒரு தலைவரை சந்திப்பதற்குகோ செல்லும் குழுவினர் ஆவர்.

 இந்த ஹதீஸில் உள்ள மூன்று பேரும் அல்லாஹ்வின் பாதையில் செல்லக்கூடியவர்கள், அவர்கள் இறைவனின் விருந்தாளிகள் இவர்களுக்கு தக்க மரியாதை தரவேண்டியது ஒவ்வொருவரின் கடமை. எப்படி ஒரு அரசு முறை குழுவினருக்கு ரெட்கார்பேட் வரவேற்பு அளிக்கபப்டுகிறதோ அப்படித்தான் இவர்களும் மரியாதைக்கு உரியவர்கள்.

 ஆகையால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹஜ்ஜிலிருந்து திரும்பி வருபவர்களை சந்தித்து அவர்களிடம் து ஆ செய்ய வேண்டுமாறு நமக்கு கட்டளையிட்டார்கள். ஹதீஸில் வருகிறது '' அல்லாஹும்மஃபிர் லில்ஹாஜ் வ லிமன் இஸ்தஃபர லில் ஹாஜ்''  யா அல்லாஹ் ஹஜ்ஜி செய்தவரை மன்னிப்பாயாக இன்னும் அவர் யாருக்கு மன்னிப்பு தேடுகிறாரோ அவரையும் நீ மன்னிப்பாயாக.






1 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை

அல்லாஹுதஆலாவுக்கு இணைவைக்காத நிலைவில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு.'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்ஜஇய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2 ஒற்றைச்செறுப்பு

ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள்.

3 திரைகள் விலகட்டும்

“முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது"

4 உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்)

5 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6 வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
7 முஜாஹிர்களும் மன்னிப்பும்
8 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
9 தங்க ஓடை: மனிதனின் பேராசை
10 பயணியே சற்று நில்
11 அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்
12 என் கண்ணாடி எங்கே?
13 நன்மைக்கு வழிகாட்டினால்
14 பொறாமைக்குரியோர் ....
15 நபியின் மீது பிரியம்
16 ஈமானின் கிளைகள்
17 வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்
18 நற்செயல் எது?
19 பட்டாடை
20 நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...
21 பரிபூரணமான முஸ்லிம்
22 பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
23 சுவர்க்கத்தின் சாவி
24 மக்களில் சிறந்தவர்
25 மறுமை
26 மறைவானவற்றை நம்புவது
27 அழகிய துஆ