அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை – கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல், பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் ‘ஆண் – பெண்’ ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும். இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் கொண்டே வருவதை பத்திரிகைச் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது.
சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் விடுதிகளிலும், உல்லாச மாளிகைகளிலும் ஒடுங்கிக் கிடந்த விபச்சாரம் இந்நாளில் ‘செல்போன்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சாலையோரத்தில் மாருதி கார்களில் நடைபெறுமளவிற்கு மலிந்து விட்டது. ‘இன்டர்நெட்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் அளவு சமீபத்தில் மேலும் பெருகி விட்டது விபச்சாரம். இந்த விபச்சாரம் வெறும் கண்பார்வையால் கூட நிகழாமல் தடுக்கத் தீய ஆசைப் பார்வையை விலக்கிய விந்தை மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தம்முடைய பாலியல் ஆசையுணர்வுகளையெல்லாம் கணவனுக்குள்ளேயோ தன் மனைவியர்களுக்கிடையேயோ கட்டுப்படுத்தி வாழ்வதே ஒழுக்கமான வாழ்வு!” என்பது உலக நீதி ஒத்துக் கொண்ட உண்மையாகும். குர்ஆனும் நபி மொழியும் கற்பிக்கும் இத்தகைய ஒழுக்க நெறிக்கு ‘கற்பு’ என்று பெயர்.
‘கற்பு’ எனும் சொல் இந்நாளில் பெண்களுக்கு மட்டுமே உரியது போல் பெரும்பாலோரும் எண்ணியுள்ளனர். உண்மை நிலை அதுவல்ல. ‘கற்பு’ எனும் மூன்றடுக்கு மாளிகை, பெண் எனும் ஒரு பாலரின் தனியுடைமையா? இல்லை. இருபாலரின் பொதுவுடைமையாகும். எனவே தான் திருமறை மூலம் இறைவன் நபியை நோக்கி, “(பிற ஆண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தம் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள பெண்களை நோக்கிக் கூறுவீராக!” (குர் ஆன் 24:31) என்று குறிப்பிட்டதுடன் (பிற பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள ஆண்களை நோக்கிக் கூறுவீராக!” என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், “தம் மறைவிடங்களைப் பாதுகாக்கும் ஆண்களும் பெண்களும் (குர்ஆன் 33:35) அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கும் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் பெறுவதற்கு தகுதியுள்ள பத்து சாராரில் ஒரு சாரார் ஆவர்.’ (குர்ஆன் 24:31) என்றுதான் இறைமறை இயம்புகிறதேயல்லாமல் வெறும் பெண்களை மட்டும் தனியாகச் சொல்லவில்லை.
ஓர் ஆண், தன் மனைவியல்லாத அந்நியப் பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டு விட்டால் மட்டும் ‘பெண் கற்பழிக்கப்பட்டாள்’ என உலகம் பேசுகிறதே தவிர அந்தப் பெண் காதலன் என்ற பெயரில் அந்நிய ஆணுடன் உடலுறவு கொள்ள இணங்கும்போது ‘அவள் கற்பழிக்கப்பட்டாள்’ என் யாரும் குறிப்பிடுவதில்லை. கணவன் அல்லாதவன் பலவந்தமாக உடலுறவு கொண்டால் அழிகின்ற கற்பு ஒரு பெண்ணின் இசைவோடு நிகழும் உடலுறவினால் மட்டும் அழியாமல் நீடித்திருக்குமா என்ன? மனைவியல்லாத பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய கற்பு அவனாலேயே அழிக்கப்படுகிறதல்லவா? எனவே, ‘ஆண் கற்பழிக்கப்பட்டான்’ என்றும் சொல்வதில்லையே !
கற்பு பெரும்பாலும் நான்கு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறதெனக் கணிக்கலாம். தன் ஆசை தணிக்கப்படும் விஷயத்தில் போதிய திருப்தியைக் கணவன் மூலம் அடையவியலாத பெண்களாலும், மனைவியின் மூலம் போதிய திருப்தியை அடையவியலாத ஆண்களாலும் அவரவர் கற்பு அழிக்கப்படுகிறது. இவ்வாறு கற்பை இழப்பதில், பெண்களை விட ஆண்கள்தான் பெரும்பாலும் தீவிரமாக உள்ளனர். திருமணம் புரியும் நிலையிலுள்ள இரு தரப்பைச் சார்ந்த இளைய வயதினர் ‘காதல்’ எனும் காந்தத்தால் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்கும் போது புதிய அனுபவத்தினால் பூரிப்படைய தம் கற்பை விடுகின்றனர். இவ்வகையைச் சார்ந்த கற்பிழப்பில் இரு தரப்பினரும் சமமான பங்கை வகிக்கின்றனர்.
வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், வாழ்வில் ஓரளவுக்குக் கிடைக்கும் வசதிகளை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் பெண்களில் சிலர் தம் கற்பைத் தாமே அழித்து விடுகின்றனர். இத்தகைய நோக்கில் கற்பை இழப்பது பெண்களுக்கிடையேதான் காணப்படுகிறது. ஆசை வெறி பிடித்த மிருகங்கள் அப்பாவிப் பெண்களைச் சில நேரங்களில் அத்து மீறித் தூக்கிச் சென்று பலவந்தமாகக் கற்பழித்து விடுகின்றனர். இம்முறையிலுள்ள கற்பழிப்பு செய்வோர்களோடு மட்டுமே தொடர்புடையதாகவுள்ளது.
இத்தகைய நான்கு விதமான கற்பழிப்புகளில் நான்காவதாகக் கூறப்பட்ட வகையில் சிக்கிக் கொண்ட பெண்களைத் தவிர ஏனைய அனைத்து வகைக் கற்பழிப்புகளில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் அல்லாஹ்வின் கடுமையான கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்களாவர்.
‘விபச்சாரம்’ எனப்படும் இத்தகைய கற்பழிப்பினைக் குறித்து இறைவன் “விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்” நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் அது (பல்வேறு கேடுகளுக்கான) தீய பாதையாகவும் இருக்கிறது” என்று திருமறை மூலம் எச்சரிக்கிறான (குர்ஆன் 17:32) இறைவன் மனிதர்களை நோக்கி “விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில் ’விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்’ என்று விலக்கியிருப்பது எத்துணை அழுத்தமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘நெருப்பைத் தொடாதே!’ என்பதை விட ‘நெருப்பின் பக்கமே நெருங்காதே!’ என்றுரைப்பது வலிவு மிக்கதல்லவா? வார்த்தைச் சித்தர் வலம்புரியார் உவமைப்படுத்துவது போல் ‘விபச்சாரம்’ எனும் கொசுக்களை ஒழிக்க வேண்டும்’ என்று மட்டும் இஸ்லாம் கூறாமல் இந்தக் கொசுக்கள் உருவாவதற்குக் காரணமான ‘ஆசைப்பார்வை’ எனும் சாக்கடையையே அகற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. ‘விபச்சாரம் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்து விடும் அந்நிய ஆண் – பெண் தனிமையாக இருக்கும் நிலை கூட மேற்கண்ட வசனத்தின் மூலம் மறைமுகமாக விலக்கப்பட்டிருக்கிறது.
ஒருவன் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கும் போது அங்கே அவர்களோடு மூன்றாம் நபராக ஷைத்தானும் இருக்கிறான் எனும் நபிமொழி (உமர் (ரளி), திர்மிதீ) மேற்கண்ட திருவசனத்தின் கருத்தை மேலும் விளக்குகிறது.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் மிகப் பெரியதாகக் கருதப்படும் பாவம் எது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி, அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அவனை வணங்குவதில் வேறு ஒருவனை அல்லது ஒன்றை அவனுக்கு இணைகற்பிப்பது’ என்றார்கள். ‘இதற்குப் பின் எந்தப் பாவம் மிகப் பெரியது? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘உன்னோடு உணவருந்துவதை (வறுமையை) அஞ்சி உம் குழந்தையைக் கொலை செய்வது!’ என்றார்கள். ‘இதற்குப் பின் எந்தப் பாவம் பெரியது? என்று அவர் மீண்டும் கேட்டதும், நபியவர்கள் அவரை ‘உம் அண்டை வீட்டாரின் மனைவியோடு நீர் விபச்சாரம் செய்வது பெரிய பாவம்!’ என்று பதிலளித்தார்கள். அந்நேரம் அண்ணலாரின் மேற்கண்ட பதிலை உண்மைப்படுத்தும் நிலையில் – அருளாளனின் நல்லடியார்களான அவர்கள்) அல்லாஹ்வுடன் இன்னொரு இறைவனை வணங்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் விலக்கிய உயிரை அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள்.’ விபச்சாரமும் செய்ய மாட்டார்கள்’ எனும் திருவசனத்தை (குர்ஆன் 25:68) அல்லாஹ் அருளினான். (இப்னு மஸ்வூத் (ரளி), புகாரீ, முஸ்லிம்) அண்டை வீட்டாரின் மனைவியிடம் விபச்சாரம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பொதுவாகக் கொடிய பாவமான விபச்சாரம் அண்டை வீட்டானின் மனைவியோடு அமையும் போது பாவம் இன்னும் கொடியதாகி விடுகிறது எனும் உண்மையினைக் குறிப்பிடுவதேயாகும். ஏனெனில் அண்டை வீட்டானிடம் அணுக வேண்டிய நல்லன்பும் நம்பிக்கையும் இதனால் தகர்த்தப்படுகிறது.
கற்பைக் காப்பவர்கள் சுவனத்தில் கண்ணியப்படுத்தப்படும் எட்டு சாராரில் ஒரு சாரார் என்று குர்ஆன் 23:29 கூறுகிறது. பிர்தவ்ஸ் என்ற உயர் சுவனத்தின் வாரிசுக்காரர்களாய் அமைந்து வெற்றி பெறும் மூமின்களின் ஆறு சாராரில் கற்பைக் காப்போரும் ஒரு சாரார் ஆவர் என்றும் அருள்மறை (23:5) உணர்த்துகிறது. ஒருவர் இரு தொடைகளுக்கிடையில் இருக்கும் இன உறுப்பையும் இரு தாடைகளுக்கிடையில் இருக்கும் நாவையும் (தீய வழியிலிருந்து) காத்துக் கொள்வதாக என்னிடம் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவருக்கு நான், சுவனத்தைப் பெற்றுத் தர பொறுப்பேற்கிறேன்” எனும் நபிமொழியும் (ஸஹ்லிப்னு ஸஃது (ரளி, புகாரீ) மேற்கண்ட மறைமொழிகளும் இம்மையில் கற்பைக் காப்போர் மறுமையில் பெறவிருக்கும் இனிய வாழ்வை உறுதிப்படுத்துகிறது. எனவே இம்மையின் அற்ப ஆசைக்காகக் கற்பை இழந்துவிட்டு மறுமையின் அற்புத ஆனந்தங்களை இழக்க நேரிடும் இழிநிலையிலிருந்து நம்மை நாம் காப்போம்! நாயனருள் பெற்றிட முனைவோம்.
1 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் இமாம் அவர்களின் முன்னூறுக்கும் அதிகமான புத்தகங்கள் அரபு மொழியிலும் உருது, ஆங்கிலம் போன்ற பல உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, |
2 | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், இந்த துஆக்களை நபியவர்கள் தினந்தோறும் கேட்பார்கள்.
நாமும் கேட்போம். ரமளான் மாதத்தில் தொடர்ந்து கேட்போம் |
3 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. |
4 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? 01. தர்மம், ஸதக்கா, அன்னதானம் எல்லாம் நாம் கொடுப்பது உண்மைதான். ஆனால், நமது வீட்டில் அன்றாடம் எத்தனை கவள உணவு குப்பைத் தொட்டி யில் கொட்டப்படுகிறது என்று யோசித்திருப்போமா? |
5 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... பிறர் கருத்துகளை திருடாமல் தங்களது சுயக் கருத்துக்களைக் கொண்டே எழுதவேண்டும் என்ற தூயவிதியை இஸ்லாமியர்கள் தான் இந்த உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார்கள். |
6 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! |
7 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை |
8 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் |
9 | இளையான்குடியில் உருது மக்கள் |
10 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
11 | மரணம் நோக்கி... |
12 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
13 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
14 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
15 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
16 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
17 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
18 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
19 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
20 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
21 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
22 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
23 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
24 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
25 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
26 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
27 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
28 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
29 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
30 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
31 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
32 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
33 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
34 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
35 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
36 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
37 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
38 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
39 | எது வணக்கம்..? |
40 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
41 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
42 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
43 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
44 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
45 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
46 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
47 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
48 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
49 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
50 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
51 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
52 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
53 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
54 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
55 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
56 | மனைவியை_நேசிங்கள்.. |
57 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
58 | அம்மா! அம்மா! |
59 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
60 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
61 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
62 | இமாம்களும் மத்கபுகளும். |
63 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
64 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
65 | பராஅத் இரவின் சிறப்புகள் |
66 | வாப்பா! |
67 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
68 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
69 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
70 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
71 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
72 | இதிலென்ன வெட்கம்? |
73 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
74 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
75 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
76 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
77 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
78 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
79 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
80 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
81 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
82 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
83 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
84 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
85 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
86 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
87 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
88 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
89 | இறுக்கமும் இரக்கமும் |
90 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
91 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
92 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
93 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
94 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
95 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
96 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
97 | பெயர்களை நினைவில் வைப்போம் |
98 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
99 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
100 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
101 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
102 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
103 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
104 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
105 | ஒரு 2.5 கதை |
106 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
107 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
108 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
109 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
110 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
111 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
112 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
113 | குறைகளை மறைத்தல் |
114 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
115 | நல்ல பெண்மணி |
116 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
117 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
118 | ஈர்ப்பை விதைப்போம்! |
119 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
120 | யார் இந்த துலுக்கன்? |
121 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
122 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
123 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
124 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
125 | நிம்மதி - சிறுகதை |
126 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
127 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
128 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
129 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
130 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
131 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
132 | விற்கப்படும் மார்க்கம் |
133 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
134 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
135 | பார்வைகள் பலவிதம் ! |
136 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
137 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
138 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
139 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
140 | தந்தைகளே! கவனியுங்கள் |
141 | வரலாறு புகட்டும் பாடம் |
142 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
143 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
144 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
145 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
146 | நாம் தான் முயல வேண்டும். |
147 | உணரப் படாத தீமை சினிமா |
148 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
149 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
150 | கற்பா? கல்லூரியா? |
151 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
152 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
153 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
154 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
155 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
156 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
157 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
158 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
159 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
160 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
161 | முகமாகும் பெண்கள்!! |
162 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
163 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
164 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
165 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
166 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
167 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
168 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
169 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
170 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
171 | ஈமானே-உன் விலையென்ன? |
172 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
173 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
174 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
175 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
176 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
177 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
178 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
179 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
180 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
181 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
182 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
183 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
184 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
185 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
186 | அறிவைத் தேடுவோம்! |
187 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
188 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
189 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
190 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
191 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
192 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
193 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
194 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
195 | “வேர்கள்” வரலாறு! |
196 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
197 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
198 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
199 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
200 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
201 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
202 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
203 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
204 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
205 | பேச்சு,மெளனம் |
206 | ஜனாஸா - மைய்யத் |
207 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
208 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
209 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
210 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
211 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
212 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
213 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
214 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
215 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
216 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
217 | மனித குல விரோதி |
218 | எனது பெயர் ஜனாஸா! |
219 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
220 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
221 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
222 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
223 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
224 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
225 | தமிழரும் இசுலாமியரும் |
226 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
227 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
228 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
229 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
230 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
231 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
232 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
233 | கற்பனைகளும் இஸ்லாமும் |
234 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
235 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
236 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
237 | மது ஒரு பெரும் பாவம் |
238 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
239 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
240 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
241 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
242 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
243 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
244 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
245 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
246 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
247 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
248 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
249 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
250 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
251 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
252 | சுதேசி சிந்தனைகள்....... |
253 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
254 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
255 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
256 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
257 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
258 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
259 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
260 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
261 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
262 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
263 | அறிவைத் தேடுவோம்! |
264 | ஆக்காதீர் ஆசனங்களாக |
265 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
266 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
267 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
268 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
269 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
270 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
271 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
272 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
273 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
274 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
275 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
276 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
277 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
278 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
279 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
280 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
281 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
282 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
283 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
284 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
285 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
286 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
287 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
288 | கண்ணாடிகள் கவனம் |
289 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
290 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
291 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
292 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
293 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
294 | கருத்து வேறுபாடுகள். |
295 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
296 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
297 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
298 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
299 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
300 | ஓ! என் இளைய சமுதாயமே! |
301 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
302 | வீண் செலவு வேண்டாமே |