Tamil Islamic Media

அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்

அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது.
எனவே அதை நிவர்த்தி செய்யும் வகையில் நம் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள், இஸ்லாமிய பொது அறிவு, மற்றும் குண நலன்கள் என மூன்று தலைப்புகளாக இத்தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம். அந்த அன்புச் செல்வங்கள் ஈருலகிலும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.


1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.

2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ?

என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ்.

3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.

4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்?

மலக்குகள்

5 . உனது நபியின் பெயர் என்ன?

எனது நபியின் பெயர் முஹம்மது (ஸல்) ஆவார்கள்.

6 . உனது மார்க்கத்தின் பெயர் என்ன?

எனது மார்க்கத்தின் பெயர் (தீனுல்) இஸ்லாம்.

7 . நீ எப்படி ஈமான் கொண்டாய்?

'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையயும் தூதரும் ஆவார்கள்' என்று நான் ஈமான் கொண்டேன்.

8 . உனது ஆதி தந்தை தாய் பெயர் கூறு ?

எனது ஆதி தந்தைப் பெயர் ஆதம் (அலை) தாய் பெயர் ஹவ்வா (அலை) ஆகும்.

9 . நம் மார்க்கத்தின் தந்தை யார்?

நம் மார்க்கத்தின் தந்தை நபி இப்ராஹிம் (அலை) ஆகும்.

10 . உன் வேதத்தின் பெயர் என்ன?

என் வேதத்தின் பெயர் திருக்குர்ஆன்.

11. திருக் குர்ஆன் யாருக்கு யார் மூலம் அருளப்பட்டது?

திருக்குர்ஆன் இறைவனால் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. (மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உலகப் பொதுமறையே திருக்குர்ஆன்)

12 . குர் ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?

ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.

13. நாம் எதற்காக ரமழானில் நோன்பு வைக்கின்றோம் ?

நாம் ரமழானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் நோன்பு வைக்கின்றோம்.

14 . இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை? அவை யாவை?

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை. 1. கலிமா 2. தொழுகை 3. நோன்பு 4. ஜகாத் 5. ஹஜ்

15. மறுமையின் முதல் கேள்வி எதைப்பற்றியது?

மறுமையின் முதல் கேள்வி தொழுகையை பற்றிதாய் இருக்கும்.

16. கடமையான தொழுகைகள் எத்தனை? அவை யாவை?

அல்லாஹ் நமக்கு ஐந்து வேளை தொழுகைகளை கடமையாக்கி உள்ளான் . அவை. 1.ஃபஜர், (காலை நேரத் தொழுகை) 2. ளுஹர்(மதிய தொழுகை) 3. அஸர்(மாலை நேரத் தொழுகை) 4.மஹ்ரிப் (சூரியன் மறையும் நேரத் தொழுகை) 5. இஷா (இரவுத் தொழுகை)

17. தொழாமல் இருந்தால் என்ன கிடைக்கும்?

தொழாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை ஸகர் என்னும் நரகத் தீயில் எறிந்து விடுவான். தீ நம் தோல்களை சுட்டுக்;;;;;;;;கரித்து விடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து ஐவேளைதொழுது கொள்ள வேண்டும்.

18. நோன்பு என்றால் என்ன?

இறைவனுக்காக ரமழான் மாதத்தில் சுபுஹ் முதல் மஹ்ரிப் வரை உண்ணாமல், பருகாமல் எவ்வித தீய காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு நோன்பு எனப்படும்.

19 . ஜகாத் என்றால் என்ன?

ஜகாத் என்றால் செல்வந்தர்கள் தங்களது செல்வத்திலிருந்து 2.5 சதவிகிதம் தேவையுடையோருக்கு கொடுப்பதாகும். (பார்க்க : அல்குர்ஆன் 9:60)

20 . ஹஜ்; என்றால் என்ன?

செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காநகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ்; எனப்படும்.


21 . ஈமான் என்றால் என்ன?

அல்லாஹ்வை நம்புவது, அவன் படைத்த மலக்குகளை நம்புவது ரசூல்மார்களை நம்புவது, அவன் நமக்கு அளித்த வேதங்களையும் நம்பிக்கை கொள்வது மேலும் கியாமநாளை நம்புவது, நன்மை தீமையாவும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிக்கைக் கொள்வதற்கு ஈமான் எனப்படும்.

22 . முஸ்லிம் என்றால் யார்?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் என்று ஏற்றுக் கொண்டு நடைமுறைபடுத்துபவருக்கு முஸ்லிம் என்று பெயர்.

23. மலக்குமார்கள் என்றால் யார்?

அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனது கட்டளைகளை நிறை வேற்றுவதற்காகவும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களை அல்லாஹ் ஒளியினால் படைத்தான்.

24 . நபிமார்கள் என்பவர் யார்?

அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளையும், கட்டளைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், மனிதர்களை நேர்வழி படுத்துவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மனிதர்களுக்கு நபிமார்கள், ரசூல்மார்கள் என்று பெயர்.

25. முதல் மனிதரும் முதல் நபியும் யார்?

ஆதம் நபி (அலை)

26. ஆதம் நபி எதனால் படைக்கப் பட்டார்கள் ? ஆதம் நபியின் மனைவி பெயர் என்ன?

ஆதம் நபியை மண்ணால் அல்லாஹ் படைத்தான். ஆதம் நபியின் மனைவி பெயர் ஹவ்வா (அலை).

27. திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதங்கள் எத்தனை? ஆவை யாவை?

திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்ட வேதங்கள் மொத்தம் நான்கு ஆகும். அவை 1.தவ்ராத், 2. ஜபூர், 3.இன்ஜீல், 4.புர்கான் (திருக்குர்ஆன்).

28. வேதங்கள் யார் யாருக்கு எந்தெந்த பாஷைகளில் அருளப்பட்டது?

தவ்ராத்து வேதம் நபி முஸா(அலை) அவர்களுக்கு அப்ரானி பாஷையிலும்

ஜபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கு யுனானி பாஷையிலும்

இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி பாஷையிலும்

புர்கான்(குர்ஆன்)வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபிப் பாஷையிலும் வழங்கப்பட்டது.

29 . இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் எது?

இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன்.

30. குர்ஆனில் மொத்தம் எத்தனை பகுதிகளும், எத்தனை அத்தியாயங்களும் உள்ளன?

குர் ஆனில் மொத்தம் 30 பகுதிகளும் 114 அத்தியாயங்களும் உள்ளன.

31. குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நபிமார்கள் எத்தனை?

குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மொத்தம் 25 ஆகும்.

32. அல்லாஹ்வைப் பற்றி கூறு?

அல்லாஹ் ஒருவன், அவன் பரிசுத்தமானவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவனுக்கு உணவு, உறக்கம், மறதி, மயக்கம் நிச்சயமாக கிடையாது. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவு மில்லை. அவன் நித்திய ஜீவன். எந்த தேவையுமற்றவன் . அவனுக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமே இல்லை.

33. நபி (ஸல் ) அவர்களைப் பற்றி கூறுக?

நபி (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் மக்காவில் பிறந்து தனது 63-ம் வயதில் மதினாவில் மரண மடைந்தார்கள். தம் இளம் வயதிலேயே ஒழுக்கம், நேர்மை, உண்மை, அமைதி, கண்ணியம் போன்ற நல்லகுணங்களைக் கொண்டிருந்தார்கள். இவர்களை அன்னாரின் 40-ம் வயதில் அல்லாஹ் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அன்னாரின் தாய் பெயர் ஆமினா, தந்தை பெயர் அப்துல்லாஹ்.

34. யாரிடம் நாம் பிராத்திக்க வேண்டும்?

எந்நேரமும், எந்த இடத்திலும் அல்லாஹ்வை நம்பி, அவனிடம் மட்டும்தான் பிரார்த்திக்க வேண்டும்.

35. அல்லாஹ்வை நீ எவ்வாறு அறிவாய்?

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் படைப்புகளான இரவு பகலைக் கொண்டும், சூரியன் சந்திரனைக் கொண்டும், வானம், பூமியைக் கொண்டும், அதற்கிடைப்பட்ட அவனது படைப்புகளைக் கொண்டும் நான் அல்லாஹ்வை அறிகிறேன்.

36. அல்லாஹ்வின் குணம் எத்தகையது?

அல்லாஹ் மிக்க கருணையாளன். அளவில்லாமல் அருள் புரிபவன். நிகர் இல்லாத அன்பு உடையவன். அந்த அன்பு எத்தகையது என்றால் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பை விட 70 மடங்கு அதிகமானது. அவனுக்கு இணையாக எவரையாவது, எதையாவது வணங்கினால் மிகுந்த கோபமடைந்து நம்மை நிரந்தர நரகத்தில் எறிந்து விடுவான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)

37. அல்லாஹ் நம்மை கண்காணிப்பானா?

எப்பொழுதும், எந்த நொடியிலும், எங்கே இருந்தாலும் நம்மை கண்காணிப்பவன் அல்லாஹ். அதனால் எப்பொதும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்.

38. அல்லாஹ்வின் நேசர்கள் யார்?

அல்லாஹ்வின் நேசர்கள் அல்லாஹ்வின் மீது பயபக்தி கொள்வார்கள் நேரான சத்திய வழியில் நடப்பார்கள். அவனுக்கு அதிகம் அஞ்சுவார்கள். எல்லா வகையான பாவங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். அனைத்து விதமான நல்ல அமல்களையும் செய்து வருவார்கள். திருமறைக் குர்ஆனையும், நபி (ஸல்)அவர்களின் சுன்னத் தான வழிமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வருவார்கள்.

39. ஈமானின் நிலையில் மாறுபாடு ஏதேனும் ஏற்பட சாத்தியம் உண்டா?

நாம் பேசக்கூடிய சில வார்த்தைகளாலும், செய்யக் கூடிய சில செயல்களாலும், நம் ஈமானின் நிலை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.

40. ஈமானின் கூடுதல், குறைவு என் பதன் பொருள் என்ன?

அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமும் நல்ல செயல்களைச் செய்வதன் மூலமும் ஈமான் கூடுகிறது. பாவங்கள் மற்றும் தீய செயல்களால் ஈமான் குறைகிறது.


41 . இறுதி நாள் மீது நம்பிக்கைக் கொள்வது என்பதன் பொருள் என்ன?

இந்த உலகத்திற்கும், மற்ற அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தவணையை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். மண்ணறைகளிலிருந்து இறந்தவர்களை அவன் எழுப்புவான். மேலும் ஒவ்வொருவரையும் அவர்கள் இந்த உலகில் செய்த செயல்களைப் பற்றி விசாரிப்பான். இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பும் அந்த மறுமைநாளில் நற்கூலிகளையும், தண்டனைகளையும் பாரபட்சமின்றி மிகவும் நியாயமாக அல்லாஹ் வழங்குவான். மேலேகுறிப்பிட்ட அனைத்தையும் உறுதியாக நம்புவதுதான் இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வது என்பதன் பொருளாகும்.

42 . முஹம்மது நபி (ஸல் ) அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதன் பொருள் என்ன?

இதன் பொருள் 'அவர்கள் எவற்றை கட்டளையிட்டார்களோ அவற்றை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுவதும், அவர்கள் எவற்றையெல்லாம் தடுத்தார்களோ அவற்றிலிருந்து முழுமையாக தவிர்ந்து கொள்வதும், அவர்கள் எதைப்பற்றியெல்லாம் அறிவித்தார்களோ அவற்றை அப்படியே நம்புவதும்' ஆகும்.

43. இறைவன் மன்னிக்காத மிகப் பெரும் பாவம் எது?

ஷிர்க் (இணைவைத்தல்) இறைவால் மன்னிக்கப்படாத மிகப் பெரும் பாவம் ஆகும்.

44. இணைவைக்கும் நிலையில் செய்யப்படும்நற்செயல்கள் அல்லாஹ்வினால் ஏற்கப்படுமா?

இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதைக் கீழ்காணும் திருமறையின் இரண்டு வசனங்கள் மூலம் அறியலாம்.

'அவர்கள் இணைவைத்தல் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழித்து விடும்' (காண்க அல்குர்ஆன் 6.88)

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத வேறு பாவங்களை, தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (காண்க அல்குர்ஆன் 4.116)

45. அனைத்து முஸ்லீம்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் யாவை?

1. இவ்வுலகைப் படைத்து பாதுகாத்து, பரிபாலித்து வருபவனும், இந்த உலகின் எல்லா விதமான, நிகழ்வுகளுக்கும் காரணமானவனுமான தம் இரட்சகனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

2. தம் மார்க்கத்தைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளுதல்.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

46. நமக்குத் தெரியாத மறைவான ஐந்து விஷயங்கள் யாவை?

1. இறுதி நாளின் வருகை (நேரம்) பற்றியது

2. மழை பொழியும் நேரம் பற்றியது

3. தாய் தன் கர்ப்பத்தில் சுமப்பவைகளைக் குறித்து

4. தினம் நாம் செய்வது (சம்பாதிப்பது) குறித்து

5. நாம் இறக்கப் போகும் பூமி பற்றியது

(மேலும் காண்க அல் குர்ஆன் 31:34)

47. நம்மை தவறு செய்ய தூண்டுவது யார்?

நம்மை தவறு செய்யத் தூண்டுவது ஷைத்தான். ஷைத்தானைப் பின்பற்றினால் நரகம் நிச்சயம்.

48. நரகம் என்றால் என்ன?

மிகமோசமான இருப்பிடம் இன்னும் எரியும் நெருப்பு.

49. தீமை செய்தால் என்ன கிடைக்கும் ?

இறைவனிடமிருந்து தண்டனை.

50. நன்மை செய்தால் என்ன கிடைக்கும்?

இறைவனிடமிருந்து சுவர்க்கம் கிடைக்கும்.

51. சுவர்க்கம் என்றால் என்ன?

மிகவும் நல்ல இடம். நாம் சுகமாக ஓய்வெடுக்கலாம். விரும்பியவைகள் அங்கே கிடைக்கும்.

52. உலகம் எப்பவும் இப்படியே இருக்குமா?

இல்லை. ஒரு நாள் உலகம் எல்லாமே அழிந்துவிடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.

53. ஹலால் என்றால் என்ன?

அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் அனுமதித்த அனைத்துக் காரியங்களும் ஹலால் ஆகும்.

54. ஹராம் என்றால் என்ன?

அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் தடை செய்த விஷயங்கள் அனைத்தும் ஹராம் ஆகும்.

55. கொலையைவிட கொடிய செயல் எது?

பித்னா (குழப்பம் - கலகம் உண்டாக்குதல்) (காண்க அல்குர்ஆன் 2:191ஃ 2:217)

56. பிறரிடம் நாம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?

நாம் பிறரிடம் மிகவும் அன்பாகவும், பிறருக்கு உதவி செய்யும் முகமாக இரக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். சுடு சொல் பேசக்கூடாது. தவறான செயலும் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் எவர் ஒருவர் தன் சொல்லாலும் செயலாலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறாரோ அவர் தான் உண்மையான முஸ்லீமாவார்.

57. நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்?

நல்ல குணம் உடையவர்களையும், இறைவனுக்கு அஞ்சி அடிபணிந்து நடப்பவர்களையும் நாம் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வதும், அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளனின்) மேலான செயலாகும். (அறிவிப்பவர்: அபுதா (ரலி) நூல்:அபுதாவூத்)



(நூல்கள் புகாரி, அபு தாவூத்)

மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபி மொழி. (நூல்:திர்மிதி)









1 பாலஸ்தீனத்தின் பெருமை

பல நபிமார்கள் வாழ்ந்த இடம். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம்

2 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்

சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.

3 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!

4 உணரப் படாத தீமை சினிமா

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.

5 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது.

6 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
7 விரக்தி விஷத்தை விட கொடியது
8 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
9 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
10 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
11 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
12 அந்தப் பெண்களாக நாம்...
13 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
14 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
15 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
16 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
17 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
18 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
19 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
20 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
21 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
22 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
23 இளையான்குடியில் உருது மக்கள்
24 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
25 மரணம் நோக்கி...
26 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
27 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
28 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
29 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
30 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
31 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
32 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
33 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
34 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
35 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
36 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
37 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
38 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
39 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
40 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
41 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
42 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
43 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
44 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
45 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
46 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
47 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
48 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
49 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
50 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
51 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
52 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
53 எது வணக்கம்..?
54 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
55 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
56 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
57 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
58 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
61 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
62 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
63 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
64 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
65 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
66 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
67 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
68 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
69 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
70 மனைவியை_நேசிங்கள்..
71 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
72 அம்மா! அம்மா!
73 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
74 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
75 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
76 இமாம்களும் மத்கபுகளும்.
77 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
78 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
79 பராஅத் இரவின் சிறப்புகள்
80 வாப்பா!
81 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
82 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
83 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
84 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
85 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
86 இதிலென்ன வெட்கம்?
87 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
88 பழையன கழிதலும் புதியன புகுதலும்
89 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
90 கற்பில் கவனம் தேவை
91 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
92 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
93 இஸ்திஃகாராவின் சிறப்பு
94 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
95 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
96 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
97 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
98 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
99 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
100 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
101 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
102 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
103 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
104 இறுக்கமும் இரக்கமும்
105 இஷா தொழுகையும் இரவு உணவும்
106 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
107 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
108 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
109 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
110 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
111 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
112 பெயர்களை நினைவில் வைப்போம்
113 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
114 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
115 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
116 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
117 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
118 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
119 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
120 ஒரு 2.5 கதை
121 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
122 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
123 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
124 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
125 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
126 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
127 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
128 குறைகளை மறைத்தல்
129 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
130 நல்ல பெண்மணி
131 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
132 💥 யார் அந்த மாமனிதர்..?
133 ஈர்ப்பை விதைப்போம்!
134 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
135 யார் இந்த துலுக்கன்?
136 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
137 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
138 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
139 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
140 நிம்மதி - சிறுகதை
141 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
142    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
143 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
144 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
145  வாழ்க்கை வாழ்வதற்கே !
146 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
147 விற்கப்படும் மார்க்கம்
148 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
149 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
150 பார்வைகள் பலவிதம் !
151 நேர மேலாண்மை / திட்டமிடல்
152 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
153 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
154 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
155 தந்தைகளே! கவனியுங்கள்
156 வரலாறு புகட்டும் பாடம்
157 அல்குர்ஆன் என்னும் மதுரம்
158 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
159 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
160 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
161 நாம் தான் முயல வேண்டும்.
162 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
163 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
164 கற்பா? கல்லூரியா?
165 கசாப்புத் தொழில் சிறந்தது....
166 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
167 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
168 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
169 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
170 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
171 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
172 என் ஹிஜாப் என் உரிமை!!!
173 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
174 முகமாகும் பெண்கள்!!
175 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
176 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
177 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
178 செல்போன்கள்... ஜாக்கிரதை!
179 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
180 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
181 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
182 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
183 ஈமானே-உன் விலையென்ன?
184 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
185 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
186 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
187 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
188 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
189 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
190 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
191 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
192 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
193 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
194 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
195 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
196 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
197 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
198 அறிவைத் தேடுவோம்!
199 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
200 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
201 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
202 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
203 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
204 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
205 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
206 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
207 “வேர்கள்” வரலாறு!
208 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
209 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
210 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
211 மனிதனின் தேவை ! – மன அமைதி
212 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
213 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
214 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
215 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
216 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
217 பேச்சு,மெளனம்
218 ஜனாஸா - மைய்யத்
219 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
220 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
221 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
222 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
223 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
224 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
225 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
226 வலிமார்கள் என்பவர்கள் யார்?
227 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
228 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
229 மனித குல விரோதி
230 எனது பெயர் ஜனாஸா!
231 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
232 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
233 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
234 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
235 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
236 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
237 தமிழரும் இசுலாமியரும்
238 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
239 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
240 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
241 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
242 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
243 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
244 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
245 கற்பனைகளும் இஸ்லாமும்
246 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
247 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
248 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
249 மது ஒரு பெரும் பாவம்
250 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
251 பெற்றோர்களைப் பேணுவோம்!
252 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
253 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
254 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
255 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
256 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
257 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
258 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
259 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
260 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
261 மறுமை வாழ்வை நேசிப்போம்!
262 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
263 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
264 சுதேசி சிந்தனைகள்.......
265 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
266 கல்வி நல்லோர்களின் சொத்து!
267 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
268 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
269 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
270 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
271 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
272 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
273 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
274 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
275 அறிவைத் தேடுவோம்!
276 ஆக்காதீர் ஆசனங்களாக
277 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
280 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
281 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
282 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
283 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
284 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
285 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
286 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
287 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
288 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
289 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
290 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
291 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
292 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
293 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
294 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
295 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
296 விசுவரூபம் ஒரு விளக்கம்
297 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
298 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
299 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
300 கண்ணாடிகள் கவனம்
301 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
302 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
303 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
304 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
305 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
306 கருத்து வேறுபாடுகள்.
307 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
308 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
309 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
310 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
311 ஓ! என் இளைய சமுதாயமே!
312 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
313 வீண் செலவு வேண்டாமே