Tamil Islamic Media

பராஅத் இரவின் சிறப்புகள்

 

 

இப்பெயர்கள் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. 

குறிப்பாக இமாம் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.

நூல் ரூஹுல் பயான் பாகம் 13,பக்கம் 110,111

 ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் (பராஅத்) நோன்பு வைப்பது சுன்னத்தா?

سنن ابن ماجه –  1388 – حدثنا الحسن بن علي الخلال . حدثنا عبد الرزاق . أنبأنا ابن أبي سبرة عن إبراهيم بن محمد عن معاوية بن عبد الله بن جعفر عن أبيه عن علي بن أبي طالب قال  : – قال رسول الله صلى الله عليه و سلم ( إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها . فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا . فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். இப்படி  சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை  கேட்டுக் கொண்டேயிருப்பான்.

அறிவிப்பவர்: ஸையிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு) 
நூல்கள் இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822

பராஅத் இரவில் ஜியாரத்

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள் ;

ஒரு நாள் இரவு  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள். 

நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களின் பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்கள் திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299) 

ஆகவே இதிலிருந்து பராஅத் இரவைப்போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத்தக்கது என்பதும் தெளிவாகின்றது.

பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது. 

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல் மிஷ்காத் 1 305

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஜிப்ரயீல் அலைஹி வஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.

இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837

إن الله ليطلع في ليلة النصف من شعبان . فيغفر لجميع خلقه . إلا لمشرك أو مشاحن
روي عن معاذ بن جبل -ابن حبان (1980)، وأبي ثعلبة الخشني-الكبير(590)، وعبدالله بن عمرو- أحمد (6642)، وأبي موسى الأشعري-ابن ماجه(1390)، وأبي هريرة- البزار في مسنده (ص245-زوائده) ، وأبي بكر الصديق-البزار(80)، وعوف بن مالك-البزار(2754)، وعائشة-ابن ماجه(1389)وأحمد(26060) .

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 
ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள்: இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776 அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா 1390

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1.பகைமை பாராட்டுபவன் 2. கொலை செய்தவன். 

அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் அஹ்மத் 6642

 

ஹா மீம், தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள  ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன. 

அல் குர்ஆன் 44:1, 2, 3, 4

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு கருத்து என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா? இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபாடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழிகள் தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்தும் நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள். 

மிஷ்காத் 1305 விரிவுரை மிர்காத், தப்ஸீர் அஸ்ஸாவி பாகம் 4,பக்கம் 57,58

♦ அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடம் கேட்டு விட்டு கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும். 

நூல் பைஹகி, மிஷ்காத்: 1302

♦ ஹளரத் அதா இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், ஷஃபான் பதினைந்தாவது இரவன்று மலக்குல் மௌத் இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாமை அழைத்து ஷஃபானிலிருந்து எதிர்வரும் ஷஃபான் வரையிலான காலப்பகுதிக்குள்ள மரணிக்க இருப்பவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்படும்.ஒருவர் மரம் நாட்டுவார், திருமணம் முடிப்பார், உயர் கட்டிடம் கட்டுவார். ஆனால், அவர் பெயர் மரணிப்பவரின் பட்டியலிலிருக்கும். மலக்குல் மௌத் ஆகிய இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவரின் உயிரை எடுப்பதற்கு, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். 

நூல் முகாஷபத்துல் குலூப் 

ஆகவே இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன, 

ஷஃபான் மாதம் பிறை 15 ம் (பராஅத்) நாளென்று சூரா யாஸீன் ஓதுவதன் அகமியம்

ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் மஃரிப் தொழுகையின் பிறகு மூன்று தடவைகள் சூரா யாஸீனை : முதலாவது தடவை ஓதும் போது 'பாவமன்னிப்புத் (பிழை பொறுக்கத்) தேடியும், இரண்டாவது தடவை ஓதும் போது ரிஸ்க் எனும் உணவு விஸ்தீரணம்  பெறவும், மூன்றாவது தடவை ஓதும் போது சரீர சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வேண்டி ஸாலிஹான அமல்கள் செய்வதற்கு நீண்ட ஆயுளை கேட்டு பிராத்தனை செய்து ஓத வேண்டும்'.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது. குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியதற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான். 

நூல் திர்மிதீ 2812, தாரமி 3282

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: யார் இறைவனின் திருப்பொருத்தம் நாடி யாசீன் (சூராவை) ஒதுகிறாறோ அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார். 

அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜுன்துப் ரலியல்லாஹு அன்ஹு. 
நூல் தாரமி 3322, இப்னு ஹிப்பான் 2639

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள். 

அறிவிப்பவர்: ஹழ்ரத் மஃகில் ரலியல்லாஹு அன்ஹு, 
நூல்கள் முஸ்னத் அஹ்மத், பைஹகி 2458, மிஷ்காத் 2178

♦ “எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நூல் தாரமி: 3418. மிஷ்காத்: 2171),

“யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள் (நூல் தாரமி)

ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் அன்று (மக்ரிப்) நேரத்தில் துஆவை நாம் கேட்டு வருகிறோம். (நூல் மிஷ்காத் 

அல்லாமா முல்லா அலி காரி ரஹ்மதுல்லஹி அலைஹி அவர்கள் தனது மிர்காதில் ஹதீஸ் எண் 1308 விரிவுரையில், எழுதுவதாவது.,
ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின்வரும் துஆவை ஓதி வந்தார்கள்) 'யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய், நாடுவதை உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது'. இந்த துஆவை ஷஃபான்  15ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (நூல் மிர்காத்)

பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம் ஒவ்வொன்றுக்கும் தவணை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. எனினும் அல்லாஹ் அவன் நாடியதை அதில் அழித்து விடுவான். அவன் நாடியதை உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது” 

(அல் குர்ஆன்.13:38, 39)


எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளை சேர்த்துக்கொள்ளட்டும்.

நூல் புகாரி: 5986, முஸ்லிம்: 1982

மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனம், ஹதீஸில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து உங்களுக்குரிய தவணையை வாழ்நாளைக் குறிப்பிட்டு நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று (அல்குர்ஆன் 6: 2-ல்) கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு அஜலை தவணையை குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை மறுமையில் சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும்.

ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) வழங்கினார்கள். 

நூல் தப்ஸீர் குர்துபி: 1339 விரிவுரை

துஆக்கள் ஏற்கப்படும் இரவு 

عن ابي أمامة الباهلي قال قال رسول الله ( صلى الله عليه وسلم ) خمس ليال لا تر فيهن الدعوة أول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة الجمعة وليلة الفطر وليلة النحر .  (تاريخ دمشق – (ج 10 ص 408

‘ஐந்து நாட்களின் இரவுகளில் கேட்க்கப்படும் துஆக்கள் மறுக்கப்படமாட்டாது: ரஜப் மாதத்தின் முதல் ஜும்ஆ இரவு , ஷஃபானின் 15வது இரவு, நோன்புப் பெருநாள் இரவு, உழ்ஹியாப் பெருநாள் இரவு’ என்று நபியவர்கள் கூறினார்கள்.       (தாரீகு இப்னு அஸாகிர் 10-408)

، عن مروان بن سالم ، عن ابن كردوس ، عن أبيه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « من أحيا ليلتي العيد وليلة النصف من شعبان ، لم يمت قلبه يوم تموت القلوب.

معرفة الصحابة لأبي نعيم الأصبهاني – (ج 17  ص 77

‘யார் இரு பெருநாள் இரவுகளையும் ஷஃபான் 15 வது இரவையும் வணக்கத்தால் உயிர்ப்பிக்கிறாரோ உள்ளங்கள் இறந்துவிடும் நாளில் அவரது உள்ளம் இறக்காமல் இருக்கும்’ என்று நபியவர்கள் கூறினார்கள்.

(மஃரிபதுஸ் ஸஹாபா-5333)

சிறப்புத் தொழுகை;

ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ

நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

நன்றி ; அல் அஸ்ரார் மாத இதழ்






1 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது

போர் நிறுத்தம் வந்ததும் தனது பச்சிளம் பாலகனை தனது கைகளில் சுமந்து கொண்டு வடக்கு திரும்பினாள். தன்னை வரவேற்க கணவன் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. குழந்தையைப் பராமரிக்க தந்தை இல்லையே என்ற சோகம் அவளை தழுவி இருந்தது.

2 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது?

3 ︎நேர்மை என்பது...

நேர்மையால் நீங்கள் நிரந்தரமாக பலரை இழக்கலாம். ஆனால், ஒருபோதும் உங்களது நிம்மதியை இழக்க மாட்டீர்கள். பொய்யுரைத்து பலபேரால் நீங்கள் பகட்டு இன்பம் பெறலாம். ஆனால், ஒருபோதும் உங்களால் நிம்மதியைப் பெறமுடியாது.

4 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்

நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது.

5 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்

காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF)

6 பாலஸ்தீனத்தின் பெருமை
7 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
8 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
9 உணரப் படாத தீமை சினிமா
10 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
11 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
12 விரக்தி விஷத்தை விட கொடியது
13 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
14 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
15 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
16 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
17 அந்தப் பெண்களாக நாம்...
18 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
19 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
20 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
21 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
22 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
23 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
24 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
25 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
26 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
27 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
28 இளையான்குடியில் உருது மக்கள்
29 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
30 மரணம் நோக்கி...
31 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
32 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
33 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
34 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
35 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
36 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
37 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
38 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
39 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
40 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
41 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
42 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
43 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
44 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
45 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
46 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
47 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
48 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
49 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
50 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
51 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
52 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
53 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
54 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
55 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
56 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
57 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
58 எது வணக்கம்..?
59 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
60 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
61 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
62 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
63 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
64 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
65 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
66 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
67 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
68 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
69 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
70 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
71 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
72 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
73 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
74 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
75 மனைவியை_நேசிங்கள்..
76 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
77 அம்மா! அம்மா!
78 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
79 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
80 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
81 இமாம்களும் மத்கபுகளும்.
82 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
83 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
84 வாப்பா!
85 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
86 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
87 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
88 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
89 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
90 இதிலென்ன வெட்கம்?
91 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
92 பழையன கழிதலும் புதியன புகுதலும்
93 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
94 கற்பில் கவனம் தேவை
95 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
96 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
97 இஸ்திஃகாராவின் சிறப்பு
98 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
99 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
100 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
101 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
102 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
103 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
104 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
105 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
106 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
107 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
108 இறுக்கமும் இரக்கமும்
109 இஷா தொழுகையும் இரவு உணவும்
110 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
111 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
112 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
113 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
114 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
115 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
116 பெயர்களை நினைவில் வைப்போம்
117 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
118 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
119 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
120 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
121 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
122 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
123 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
124 ஒரு 2.5 கதை
125 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
126 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
127 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
128 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
129 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
130 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
131 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
132 குறைகளை மறைத்தல்
133 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
134 நல்ல பெண்மணி
135 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
136 💥 யார் அந்த மாமனிதர்..?
137 ஈர்ப்பை விதைப்போம்!
138 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
139 யார் இந்த துலுக்கன்?
140 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
141 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
142 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
143 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
144 நிம்மதி - சிறுகதை
145 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
146    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
147 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
148 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
149  வாழ்க்கை வாழ்வதற்கே !
150 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
151 விற்கப்படும் மார்க்கம்
152 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
153 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
154 பார்வைகள் பலவிதம் !
155 நேர மேலாண்மை / திட்டமிடல்
156 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
157 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
158 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
159 தந்தைகளே! கவனியுங்கள்
160 வரலாறு புகட்டும் பாடம்
161 அல்குர்ஆன் என்னும் மதுரம்
162 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
163 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
164 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
165 நாம் தான் முயல வேண்டும்.
166 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
167 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
168 கற்பா? கல்லூரியா?
169 கசாப்புத் தொழில் சிறந்தது....
170 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
171 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
172 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
173 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
174 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
175 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
176 என் ஹிஜாப் என் உரிமை!!!
177 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
178 முகமாகும் பெண்கள்!!
179 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
180 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
181 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
182 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
183 செல்போன்கள்... ஜாக்கிரதை!
184 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
185 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
186 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
187 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
188 ஈமானே-உன் விலையென்ன?
189 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
190 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
191 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
192 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
193 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
194 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
195 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
196 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
197 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
198 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
199 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
200 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
201 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
202 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
203 அறிவைத் தேடுவோம்!
204 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
205 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
206 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
207 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
208 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
209 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
210 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
211 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
212 “வேர்கள்” வரலாறு!
213 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
214 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
215 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
216 மனிதனின் தேவை ! – மன அமைதி
217 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
218 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
219 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
220 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
221 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
222 பேச்சு,மெளனம்
223 ஜனாஸா - மைய்யத்
224 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
225 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
226 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
227 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
228 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
229 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
230 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
231 வலிமார்கள் என்பவர்கள் யார்?
232 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
233 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
234 மனித குல விரோதி
235 எனது பெயர் ஜனாஸா!
236 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
237 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
238 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
239 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
240 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
241 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
242 தமிழரும் இசுலாமியரும்
243 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
244 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
245 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
246 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
247 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
248 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
249 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
250 கற்பனைகளும் இஸ்லாமும்
251 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
252 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
253 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
254 மது ஒரு பெரும் பாவம்
255 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
256 பெற்றோர்களைப் பேணுவோம்!
257 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
258 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
259 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
260 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
261 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
262 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
263 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
264 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
265 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
266 மறுமை வாழ்வை நேசிப்போம்!
267 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
268 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
269 சுதேசி சிந்தனைகள்.......
270 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
271 கல்வி நல்லோர்களின் சொத்து!
272 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
273 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
274 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
275 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
276 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
277 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
279 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
280 அறிவைத் தேடுவோம்!
281 ஆக்காதீர் ஆசனங்களாக
282 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
283 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
284 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
285 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
286 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
287 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
288 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
289 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
290 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
291 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
292 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
293 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
294 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
295 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
296 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
297 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
298 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
299 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
300 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
301 விசுவரூபம் ஒரு விளக்கம்
302 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
303 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
304 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
305 கண்ணாடிகள் கவனம்
306 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
307 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
308 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
309 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
310 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
311 கருத்து வேறுபாடுகள்.
312 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
313 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
314 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
315 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
316 ஓ! என் இளைய சமுதாயமே!
317 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
318 வீண் செலவு வேண்டாமே