Tamil Islamic Media

முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்

முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்

➖➖➖➖➖➖➖➖➖

அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி)

முதியோர் பராமரிப்பு தொடர்பான சில கருத்துக்களை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

 ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை பல நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுவது வழக்கமாகும். இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 மில்லியன் வயோதிபர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 258 பேர் 100 வயதைத் தாண்டியவர்களாவர். 2012ல் இலங்கையின் சனத் தொகையில்12.4% ஆக விருந்த முதியோர் சனத் தொகை 2048 ஆகும் போது 24.8. ஆகும் என புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் மிகப் பெரும்பாலான முதியோர்கள் வீடுகளில் வைத்து பராமரிக்கப்பட்டாலும் இலங்கையில் 302 முதியோர் இல்லங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் சுமார் 6000 முதியோர்கள் இருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கவில்லை.ஒரு சில மாத்திரமே சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆனால் பொருளாதார வசதிகளுக்குக் குறைவில்லை.

சிந்திக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன.

  அடிப்படையில் இஸ்லாம் முதியோர் இல்லங்கள் என்ற நடைமுறையை வரவேற்பதில்லை. இஸ்லாமிய சமூக அமைப்பில் வீட்டு சூழலில் ஒருவர் மரணம்வரைக்கும் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன. பல வீடுகளில் முதியோர் ராஜாக்களையும் ராணீக்களையும் போல் கவனிக்கப்பட்டு வருவதனை மறுப்பதற்கில்லை.

   ஆனால், இஸ்லாமிய போதனைகள் நடைமுறையில் இல்லாத மேலைத்தேய, சடவாத, ஆன்மா இல்லாத,வரண்ட வாழ்வொழுங்குக்கு அடிமையான சமூக அமைப்பில் வயோதிபர்கள் பல்வேறு அவஸ்த்தைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். பெற்ற பிள்ளைகளது ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களுக்கும் உள்ளாவது, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது,பேரப்பிள்ளைகளை கவனிக்க நிர்ப்பந்திக்கப்படுவது, வீட்டு வேலைகள் சுமத்தப்படுவதுபொருத்தமற்ற உறையுள்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

   எனவே, எமது வீடுகளில் வைத்துக்கொண்டு துன்புறுத்துவது முதியோர் இல்லங்களில் சென்று ஒப்படைத்து விட்டு திரும்பியும் பார்க்காமல் இருப்பது என்ற இரு துருவ நிலைகளில் இல்லாமல் அவர்களுக்கே உரிய மரியாதையுடன் மனது நோகாமல் அவர்களைக் கவனித்துகொள்வது அனைவரதும் கடமையாகும்.

   இஸ்லாம் பெற்றோர்களை துன்புறுத்துவதை இறைவனுக்கு இணைவைப்பதற்கு அடுத்த பெரும் பாவமாக கருதுகிறது. உதவி உபகாரம் செய்வது (இஹ்சான்),இங்கிதமாகப் பேசுவது(கவ்லுன் கரீம்) விரட்டாதிருப்பது (நஹர்),சீ என்று கூட(உஃப்ஃபின்) கூறாதிருப்பது, பணிந்து குனிந்து (கப்ளுள் ஜனாஹ்)நடந்து கொள்வது, அவர்களுக்காக(ரப்பிர்ஹம் ஹுமா ) பிரார்த்திப்பது என்பன அவர்களுக்கான பிள்ளைகளது நீங்காக் கடமைகளாகும்.

وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا )الإسراء 23- 24
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்;அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!”
  பெற்றார் தான் தோணி, ஏணி, மெழுகுவர்த்தி, பிள்ளைகளது உயர்ச்சிக்காகவே தமது சுக துக்கங்களை தியாகம் செய்து மாடாக உழைத்து ஓடாகிப் போனவர்கள்,பிள்ளைகளது உயர்ச்சியை தமது உயர்ச்சியாகவும், அவர்களது வீழ்ச்சியை தமது வீழ்ச்சியாகவும் கருதும் சுயநலத்தை பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுப்பவர்கள்.பிள்ளைகளை உலகத்தில் உளமாற நேசிப்போர் பெற்றாரைத் தவிர வேறு இருக்க முடியாது.

படித்தவர்களது நிலை

  தற்கால உலகில் பாமரர்களை விட படித்து பட்டம் பெற்று உயர் பதவிகளில் இருப்பவர்களே பெற்றோருக்கான உரிமைகளை வழங்குவதில் அதிகம் பின்நிற்பதாக கூறப்படுகிறது. பேராசிரியர் விஸ்வ வர்னபால அவர்கள் அமைச்சராக இருந்த போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது வயோதிபர் மடங்களில் இருக்கும் அனேகரது பிள்ளைகள் உயர்கல்வித் தகைமைகளைப் பெற்ற உயர் பதவிகளில் இருப்பவர்களே என்று கூறியமை பற்பல செய்திகளை எமக்குச் சொல்லுகின்றது.
   “ஒரு மகன் தனது தகப்பனை வீட்டிலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு நாள் காலை வேளையில் அவரைத் தனது காரில் ஏற்றிக் கொண்டு போய் பஸ்தரிப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு மிக அவசரமாக காரில் ஏற முயற்சித்த போது தகப்பன் அவனை அழைத்து “மகனே இன்னும் பொழுது புலரவில்லை. மக்கள் இன்னும் பாதைக்கு வரவில்லை.எனவே அவர்கள் உன்னை கண்டுகொள்ளும் சந்தர்ப்பம் இல்லை. எனவே, காரை மெதுவாகச் செலுத்துக் கொண்டு பத்திரமாகப் போ”. என்று கூறியதாக ஒரு சம்பவத்தை ஒரு பேச்சாளர் கூறியது மனதைத் தொட்டது.”பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்ற கருத்தில் ஆழமான கருத்துக்கள் பொதிந்துள்ளன.


பிள்ளைகள் இல்லாத பெற்றோர்:

வயோதிபர்களை பராமரிப்பதற்கு அவர்களாலேயே பெற்றுடுக்கப்பட்ட பிள்ளைகள் இல்லாத பட்சத்தில் நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்களுக்கு அப்பொறுப்புச் செல்லும்.அது இஸ்லாத்தில் ”சிலதுர் ரஹ்ம்” –இனபந்துக்களது உறவைப் பேணி வாழ்வது– என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்களைப் பராமரிக்காமல் விடுவது உறவு முறிப்பாக அமையும்.

“நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா?என்று அல்லாஹ் கேட்டான். திருப்தி தான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.
’ நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

   நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்களும் இல்லாத போது அது ஊராரின் சமூகத்தின் இஸ்லாமிய அரசு இருந்தால் அரசின் பொறுப்பாக மாறும். அதாவது அது கூட்டுப் பொறுப்பாகும். ஒரு வயோதிபர் எவருமே கவனிக்காத நிலையில் விடப்படும் பட்சத்தில் அது முழு சமூகத்தினதும் பாரிய பாவமாகவே கருதப்படும்.

மனிதாபிமான உறவு:

முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல ஏனைய சமூகங்களிலும் வயோதிபர்களுக்கான உரிமைகள் எந்தளவு பேணப்படுகின்றன என்ற விடயம் ஆழமாக ஆராயப்பட்டு குறைபாடுகளை தீர்க்கப்பட வேண்டும்.

وفي (‏ كتاب الأموال لأبى عبيد)‏ أن عمر بن عبد العزيز رضى الله عنه وهو من خلفاء المسلمين العلماء العاملين كتب إلى عامله على البصرة كتاباً ومما جاء فيه :(‏وانظر من قبلك من أهل الذمة قد كبرت سنه وضعفت قوته وخلت عنه المكاسب، فأجر عليه من بيت مال المسلمين ما يصلحه) ص 46‏
  உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் பஸ்ராவில் இருந்த தனது கவர்னருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்: ”அஹ்லுத் திம்மாக்களில் (அதாவது முஸ்லிம் அரசின் பாதுகாப்பில் வாழும் முஸ்லிம் அல்லாத குடிமக்களில்) எவராவது முதிர்ந்த வயதை அடைந்து, அவரது உடல் பலவீனமுற்று, தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலை உருவாகிவிட்டால் அவருக்கு தேவையான அளவு உதவியை முஸ்லிம்களது பைதுல் மாலில் இருந்து பெற்றுக் கொடுங்கள்.”(கிதாபுல் அம்வால்–அபூஉபைத் , பக்:46)
   எனவே, அனைவரும் அல்லாஹ்வின் படைப்புக்கள் மனிதர்கள் என்ற வகையில் வயோதிபர்களுக்கான எமது சேவைகள் மத,பிரதேச,மொழி எல்லைகளை கடந்து வியாபிக்க பேண்டும்.
மிகமுக்கிய குறிப்பு:

   வயோதிபர்களுக்கான உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுக்கும் எவரும் அதற்கான இஸ்லாத்தின் அணுகுமுறையை நன்கு விளங்க வேண்டும்.

1.பொதுவாக  வயோதிபர்களையும் குறிப்பாக பெற்றாரையும் பராமரிப்பது வாஜிப்–கட்டாயக் கடமை. அதில் பொடுபோக்காக இருப்பது சிறிய பாவமல்ல.’கபாஇர்’எனப்படும் அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகும் பெரும் பாவமாகும். ஆனால், அவர்கள் விடயமாக ஈடுபாட்டோடு நடந்துகொள்வது அளப்பரிய நன்மைகளையும் இம்மை மறுமை நலன்களையும் பெற்றுத்தரும்.இந்த ஆத்மீக,பசுமையான கண்ணோட்டமும் மனப்பதிவும் சமூகத்தில் வந்துவிடும் போது அந்த சமூகத்தில் வயோதிபர்கள் மிகுந்த மன நிம்மதியோடு வாழ்வார்கள்.எனவே, முதலில் தக்வா–அல்லாஹ் தண்டிப்பான் என்ற பயமே ஏற்படுத்தப்பட வேண்டும்.

2.மனிதர்களிடம் நன்றி உணர்வை வளர்க்க வேண்டும்.’செய்நன்றி மறப்பது நன்றன்று’.அல்லாஹ்வுக்கு அடுத்ததாக எமக்கு எமது பெற்றாரை விட உதவி செய்தோர் யாரும் இருக்க முடியாது.
   எனவே, அல்லாஹ் أن اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ ”எனக்கும் உனது பெற்றார் இருவருக்கும் நன்றி செலுத்துவீராக” என்றான். அல்லாஹ்வுக்கு அடுத்தாக நாம் கடமைப்பட்டிருப்பது எமது பெற்றோருக்காகும். {وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا} அல் இஹ்சானுஇலல் வாலிதைன்’ ’பிர்ருல் வாலிதைன்’என்ற சொற்களை அல்லாஹ் குர்ஆனிலும் நபியவர்கள் ஹதீஸ்களிலும் இதற்காகப் பயன்படுத்தியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும் .பெற்றார் தமது  பிள்ளைகளது உடல் வளர்ச்சி,ஆளுமை விருத்தி,அறிவு வளர்ச்சி போன்றவற்றில் அதிகமான பங்கை வகித்திருக்கிறார்கள்.தாய் ’பத்தியன்’கள் பல இருந்து பாரமான கருவை சுமந்தது முதல் மலம்,சலம் கழுவியது உணவு தீத்தியது வரை தகப்பன் வியர்வை சிந்தி உழைத்தது முதல்பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்க படாது பட்டது வரை செய்த ஈடிணையற்ற உதவிகளை பிள்ளைகள்  அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

3.மூன்றாவது கட்டமாகவே முதியோர் பரமரிப்புக்கான திட்டங்கள் பற்றி யோசிக்க வேண்டும். அதாவது முதலில் மனப்பாங்கு மாற்றம் அதன்பிறகு தான் ஏனைய திட்டமிடல்கள் தேவை.இல்லாத போது காய்ந்த வரண்ட திட்டங்களாகவே அவை அமையும்.
  இஸ்லாத்தின் முதியோர் குறிப்பாக பெற்றார் பற்றிய அருமையான போதனைகளை குத்பாக்கள்,சொற்பொழிவுகள்,அஹதியாக்கள்,பாடசாலைகள்,மத்ரஸாக்கள் திரைப்படங்கள் ,நாடகங்கள் போன்ற ஊடகங்கள் வாயிலாக இளம் வயதினரதும் ஏன் வளர்ந்தவர்களதும் உள்ளங்களில் பதிக்க எம்மாலான முயற்சிகளைச் செய்வோமாக! அதன் மூலம் அல்லாஹ்வின் அபரிமிதமான நன்மைகளை பெற்றுக்கொள்வோமாக.






1 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்

சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.

2 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!

3 உணரப் படாத தீமை சினிமா

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.

4 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது.

5 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!

செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.

6 விரக்தி விஷத்தை விட கொடியது
7 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
8 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
9 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
10 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
11 அந்தப் பெண்களாக நாம்...
12 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
13 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
14 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
15 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
16 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
17 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
18 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
19 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
20 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
21 இளையான்குடியில் உருது மக்கள்
22 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
23 மரணம் நோக்கி...
24 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
25 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
26 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
27 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
28 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
29 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
30 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
31 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
32 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
33 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
34 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
35 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
36 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
37 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
38 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
39 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
40 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
41 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
42 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
43 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
44 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
45 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
46 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
47 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
48 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
49 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
50 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
51 எது வணக்கம்..?
52 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
53 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
54 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
55 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
56 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
57 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
58 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
61 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
62 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
63 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
64 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
65 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
66 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
67 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
68 மனைவியை_நேசிங்கள்..
69 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
70 அம்மா! அம்மா!
71 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
72 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
73 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
74 இமாம்களும் மத்கபுகளும்.
75 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
76 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
77 பராஅத் இரவின் சிறப்புகள்
78 வாப்பா!
79 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
80 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
81 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
82 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
83 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
84 இதிலென்ன வெட்கம்?
85 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
86 பழையன கழிதலும் புதியன புகுதலும்
87 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
88 கற்பில் கவனம் தேவை
89 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
90 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
91 இஸ்திஃகாராவின் சிறப்பு
92 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
93 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
94 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
95 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
96 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
97 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
98 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
99 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
100 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
101 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
102 இறுக்கமும் இரக்கமும்
103 இஷா தொழுகையும் இரவு உணவும்
104 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
105 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
106 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
107 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
108 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
109 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
110 பெயர்களை நினைவில் வைப்போம்
111 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
112 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
113 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
114 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
115 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
116 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
117 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
118 ஒரு 2.5 கதை
119 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
120 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
121 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
122 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
123 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
124 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
125 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
126 குறைகளை மறைத்தல்
127 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
128 நல்ல பெண்மணி
129 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
130 💥 யார் அந்த மாமனிதர்..?
131 ஈர்ப்பை விதைப்போம்!
132 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
133 யார் இந்த துலுக்கன்?
134 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
135 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
136 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
137 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
138 நிம்மதி - சிறுகதை
139 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
140    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
141 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
142 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
143  வாழ்க்கை வாழ்வதற்கே !
144 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
145 விற்கப்படும் மார்க்கம்
146 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
147 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
148 பார்வைகள் பலவிதம் !
149 நேர மேலாண்மை / திட்டமிடல்
150 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
151 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
152 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
153 தந்தைகளே! கவனியுங்கள்
154 வரலாறு புகட்டும் பாடம்
155 அல்குர்ஆன் என்னும் மதுரம்
156 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
157 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
158 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
159 நாம் தான் முயல வேண்டும்.
160 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
161 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
162 கற்பா? கல்லூரியா?
163 கசாப்புத் தொழில் சிறந்தது....
164 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
165 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
166 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
167 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
168 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
169 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
170 என் ஹிஜாப் என் உரிமை!!!
171 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
172 முகமாகும் பெண்கள்!!
173 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
174 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
175 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
176 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
177 செல்போன்கள்... ஜாக்கிரதை!
178 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
179 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
180 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
181 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
182 ஈமானே-உன் விலையென்ன?
183 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
184 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
185 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
186 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
187 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
188 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
189 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
190 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
191 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
192 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
193 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
194 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
195 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
196 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
197 அறிவைத் தேடுவோம்!
198 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
199 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
200 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
201 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
202 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
203 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
204 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
205 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
206 “வேர்கள்” வரலாறு!
207 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
208 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
209 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
210 மனிதனின் தேவை ! – மன அமைதி
211 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
212 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
213 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
214 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
215 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
216 பேச்சு,மெளனம்
217 ஜனாஸா - மைய்யத்
218 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
219 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
220 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
221 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
222 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
223 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
224 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
225 வலிமார்கள் என்பவர்கள் யார்?
226 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
227 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
228 மனித குல விரோதி
229 எனது பெயர் ஜனாஸா!
230 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
231 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
232 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
233 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
234 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
235 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
236 தமிழரும் இசுலாமியரும்
237 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
238 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
239 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
240 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
241 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
242 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
243 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
244 கற்பனைகளும் இஸ்லாமும்
245 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
246 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
247 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
248 மது ஒரு பெரும் பாவம்
249 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
250 பெற்றோர்களைப் பேணுவோம்!
251 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
252 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
253 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
254 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
255 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
256 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
257 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
258 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
259 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
260 மறுமை வாழ்வை நேசிப்போம்!
261 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
262 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
263 சுதேசி சிந்தனைகள்.......
264 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
265 கல்வி நல்லோர்களின் சொத்து!
266 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
267 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
268 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
269 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
270 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
271 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
272 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
273 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
274 அறிவைத் தேடுவோம்!
275 ஆக்காதீர் ஆசனங்களாக
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
277 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
279 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
280 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
281 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
282 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
283 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
284 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
285 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
286 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
287 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
288 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
289 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
290 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
291 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
292 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
293 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
294 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
295 விசுவரூபம் ஒரு விளக்கம்
296 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
297 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
298 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
299 கண்ணாடிகள் கவனம்
300 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
301 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
302 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
303 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
304 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
305 கருத்து வேறுபாடுகள்.
306 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
307 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
308 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
309 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
310 ஓ! என் இளைய சமுதாயமே!
311 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
312 வீண் செலவு வேண்டாமே