Tamil Islamic Media

இருக்கு ஆனால் இல்லை...!

 

காற்று
வெறும் காற்றுதான்!

கண்ணுக்குத்
தெரிவதில்லை!
கைகளுக்கும்
கட்டுப்படுவதில்லை!

இருக்கு
ஆனால்
இல்லை!

இல்லை
ஆனால்
இருக்கு!

காற்று
வெறும் காற்றுதான்!

நீர்
மலை ஏறுவதில்லை!
நெருப்பு
நீரில் படருவதில்லை!

ஆனால்
காற்று
நிலத்திலும்
நீரிலும்
தவழும்;
தாண்டவமாடும்!

மறைவானவனின்
குத்ரத்
மறைபடைப்பாக
காற்று!

காற்று
வெறும் காற்றுதான்!

காற்றின்
குழந்தை முகம்
தென்றலாக!
கன்னி முகம்
பருவக்காற்றாக!
கோர முகம்
புயலாக!

தலைநகரின்
ஒருநாள்
காற்றுத் தாண்டவம்
பல்லாயிரம் கோடி
இழப்பமாம்!

அரசாங்கம்
அறிக்கை வாசிக்கின்றது!
விஞ்ஞானம்
வியாக்கியானம் பேசுகிறது!
மக்களின்
மாமூல்வாழ்வு மாறுகின்றது!

இறைவன்
நாடும்வரை
காற்று
வெறும் காற்றுதான்!

பாவிகளே
காவிகளே!
பயம் கொள்ளுங்கள்
பண்பில் நில்லுங்கள்!

முஸ்லிம்களே!
முஃமின்களே!
முன்ஸப்புக்கு முந்துங்கள்
முழ இஸ்லாமியனாக
முற்படுங்கள்!

படைத்தவன்
தூரமில்லை!

மூச்சுக்காற்று
உள்போவதும்
வெளிவருவதும்
அவனாலே!

அவன் நாடினால்தான்
அது உயிர்க்காற்று!!!

இல்லையெனில்...
காற்று
வெறும் காற்றுதான்!

-- மிஸ்கீன்
(இஸ்லாமிய அறிவகம்)






1 ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !

நடுவண் அரசே! நாசகாரக் கூட்டமே! நானிலமே நகைக்குது நல்லறமெலாம் கரையுது! நாடிது ஆளவா? நாங்களென்ன மாளவா?

2 பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்

ஷரீஅத்தைக் காக்க சதிகாரர்த் தோற்க சகோதர உணர்வில் சங்கமித்து உழைப்போம்

3 வெள்ளைப் பூக்களின் … பயணம் !

ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள்

4 திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது

5 செவி கொடு ; சிறகுகள் கொடு !

பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால்.

6 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
7 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
8 மரணம்.. ஒரு விடியல்..
9 சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
10 வேதம் தந்த மாதம்
11 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
12 சொந்தமாகட்டும் சொர்க்கம் !
13 விரக்திக்கு விடைகொடு!
14 வெயிலும் தங்கும் விந்தை நிழல் !
15 பெருமானே பெருந்தலைவர்
16 பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
17 கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
18 கஅபா - அத்தாவுல்லா
19 போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........