Tamil Islamic Media

வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)

*வீழ்ந்தெழுவோம்* : *பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம்.*
(தொடர்-45)

*இத்தகைய ஆட்சிக்கு அல்லவா மானுடம் ஏங்குகிறது!!!!!!*
*மன்னர் ஸைஃபுத்தீன் குதுஸ்* *எகிப்து* மன்னராக பொறுப்பேற்று சில மாதங்கள் கூட கழியவில்லை. எகிப்தை துவம்சம் செய்ய *தாத்தாரியர்கள்* தங்களது படையை எகிப்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில நாட்களில் படை எகிப்தை நெருங்கிவிடும். *அந்த நேரத்தில் எகிப்து நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தது*. என்ன செய்வதென்று தெரியாமல், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ஆகிய அனைவரையும் அழைத்து மன்னர் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
*எகிப்து நாட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் எதிரிகள் ஒரு பக்கம்*.
*மறு பக்கம் கடுமையான பொருளாதார* *நெருக்கடியை*
*நாடு சந்தித்து வருகிறது* என இந்த இரண்டையும் விளக்கினார் மன்னர்.இந்த சூழ்நிலையில் *'மக்கள் அனைவரின் மீதும் ஜகாத்தை விட அதிகமான வரி வசூலிக்க வேண்டும்.அப்பொழுது தான் எதிரிகளை வீழ்த்துவதற்கு நமது படைக்கு தேவையானவற்றை தயார் செய்ய இயலும்'*.இது ஒன்றே இதற்கான தீர்வு *உலமாக்களாகிய நீங்களே இதற்கான மார்க்க தீர்பை* வழங்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவுச் செய்தார்.
உடனே அந்த சபையில் இருந்த *சுல்தானுல் உலமா இஸ் இப்னு அப்துஸ் ஸலாம் (ரஹ்)* அவர்கள் கூறினார்கள்:மன்னரே தாங்கள் கூறியது சரியே!!
*ஓர் இஸ்லாமிய நாட்டை நோக்கி எதிரிகள் போர் தொடுக்க தயாராகும் போது அந்த இஸ்லாமிய நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தால் போரை எதிர்கொள்வதற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மக்களிடமிருந்து வரியை ஜகாத்திற்கும் அதிகமாக வசூலிக்கலாம்.*
ஆனால் அவ்வாறு மார்க்க தீர்ப்பை வெளியிட வேண்டுமென்றால் *இரண்டு நிபந்தனைகள்* பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
1ஆவது நிபந்தனை *அரசின் பைத்துல்மால் காலியாக இருக்க வேண்டும்*.
2ஆவது நிபந்தனை (இது மிகவும் கடுமையான நிபந்தனை) *மன்னர், அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் என அனைவரும் தங்களது அடிப்படை தேவைகளுக்கு தேவையானவற்றை தவிர மற்ற அனைத்தையும் விற்று மக்களும் இவர்களும் சமமானவர்களாக மாற வேண்டும்*.இதன் மூலம் நாட்டின் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் *இவ்வாறு செய்தும் இயலவில்லை எனும் போது. தாராளமாக மக்களிடம் ஜகாத்தை விட அதிகமாக வரி வசூலிக்கலாம் என்ற மார்க்க தீர்பை நாங்கள் வெளியிடுவோம்.*
*இந்த இரண்டாவது நிபந்தனையை விட ஆச்சரியமானது இதனை மன்னர் ஸைஃபுத்தீன் குதுஸ் (ரஹ்) அவர்கள் நடைமுறைப்படுத்தியது*. *மன்னர், அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவருமே தேவைக்கு அதிகமாக தாங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் விற்றார்கள்*.
இதனால் போர் செய்வதற்கு *இஸ்லாமியப் படைக்கு தேவையான அனைத்தும் பூர்த்தியானது*. *இன்னும் பணம் மீதம் இருந்தது, அதனை கொண்டு நாட்டின் கடன்கள் அடைக்கப்பட்டது.* *இன்னும் மீதம் இருந்தது அது ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டது.*
பொருளாதார நெருக்கடியில் இருந்த தங்களது எகிப்து நாடு எவ்வாறு இத்தகைய செல்வ செழிப்பான நாடாக உருமாறியது என்று மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
*இந்த அருமையான நிகழ்வை இஸ்லாமிய ஆட்சியை தவிர வேறெங்கு நாம் பெற்றுக் கொள்ள இயலும்!!!!!!*
*المصدر:*
كتاب *التتار من البداية إلى عين جالوت*
*راغب السرجاني*
*தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி*

குறிப்பு:

சுல்தான் ஸைஃபுத்தீன் குதுஸ் அவர்களின் தலைமையில் எகிப்து மம்லுக் படையினர் மங்கோலியர்களை 3 செப்டம்பர் 1260 அன்று நடந்த வரலாறு பிரசித்திபெற்ற ”அய்ன் ஜலூத்” போரில் தோற்கடித்தது. சென்ற இடமெல்லாம் அழிவையும், நாசத்தையும், கொலைகளையும் செய்து தோல்வியையே சந்தித்திராத மங்கோலியர்களை முதல் முதலில் வீழ்த்தி வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதை மீண்டும் நிரூபித்தார். சுல்தான் சுல்தான் ஸைஃபுத்தீன் குதுஸ். மங்கோலியர்களின் அட்டகாசங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது இந்தப் போர்.

 








1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்

பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்

கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு

பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம்

கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
15 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
20 திருநெல்வேலி வரலாறு...!
21 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
22 அந்த இரண்டணா ......
23 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
30 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
31 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
32 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
33 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
34 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
35 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
36 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
44 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
45 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
46 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
47 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
48 சூஃபிக்களும் புனித போர்களும்
49 யார் தேச விரோதி?
50 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
51 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
52 விடுதலைப்போரில் வீரமங்கையர்
53 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
54 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
55 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
56 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
57 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
58 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
59 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
60 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
61 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
62 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 தமிழகத்தில் முஸ்லீம்கள்
65 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
66 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
67 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
68 பாடலியில் ஒரு புலி
69 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
70 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
71 முதல் சுதந்திரப் பிரகடனம்
72 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
73 காலித் பின் வலீத் (ரலி)
74 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
75 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
76 முதல் வாள்!
77 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
78 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
79 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்